கவிதை - கனவு மெய்ப்படுவது எப்போது?

Motivation Image
Motivation Imagepixabay.com
Updated on

னவு விழிமூடக்

காண்பது அன்று.

அன்றன்று உறக்கத்தில்

வருவது விழிப்பில் மறையும்.

மறைந்ததை நினைந்திட

உறையும் மனம்.

மனந்தனில்  இலக்கினை

மனதார நினைந்திடு.

நினைத்ததைச் செயலாற்றிடச்

சோராது உழைத்திடு.

உழைத்திட வந்திடும்

களைப்பை அகற்றிடு.

அகற்றிடு எதிர்மறை

எண்ண அலைகளை.

அலைகள் அடங்கினால்

அமைதியாகும்  மனம்.

மனம் தெளிவாகிட

மெய்ப்படும் நம் கனவு.

செ.கலைவாணி

மெல்போர்ன்.

logo
Kalki Online
kalkionline.com