ரமதான் திருநாள் ஈகை பெருநாள்! நபிகள் நாயகம் சொன்ன 10 போதனைகள்!

ரமதான் திருநாள் ஈகை பெருநாள்! நபிகள் நாயகம் சொன்ன 10 போதனைகள்!
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on
  • தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன் குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பானவன்.

  • வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண உட்காரும்போது அவனை அமர்த்திக் கொண்டு அவனுக்கும் கொடுத்து உண்ணுங்கள்.

  • நன்மை செய்பவருக்கு நன்மையும் தீமை செய்பவருக்கு தீமையும் செய்வோம் என்று எண்ணாதீர்கள். நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதாகவும் தீமை செய்தோர்க்கு தீமை செய்வதில்லை என்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

  • வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணிக்கும் இளைஞன் எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.

  • நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவர் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

  • நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீய செயல்களை விட்டு விலகி இருங்கள்.

  • நல்ல முறையில் பழக தெரிந்தவனும் நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன்.

  • ஒருவர் தமது சகோதரரின் தேவையை பூர்த்தி செய்து வைக்க முயற்சிப்பாராயின் அதில் அவர் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவரது குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

  • தர்மம் செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். அதற்கு பொருள் இல்லாதவன் ஒரு நல்ல செயலாவது செய்யட்டும். அல்லது தீமை செய்யாமலாவது இருக்கட்டும்.

  • தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. அதனால் தாயை வருந்த விடாதீர்கள்.

ஈகை பெருநாளில் நபிகள் நாயகம் கூறியுள்ள இந்த அருமையான 10 போதனைகளை பின்பற்றி வாழ்வோமாக.

logo
Kalki Online
kalkionline.com