இந்த 7 விஷயங்களை பள்ளிகள் மாணவர்களுக்குக் கற்பிக்கலாமே! 

 Students
Schools Can Teach Students These 7 Things!
Published on

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த யுகத்தில், கல்வி முறையும் அதற்கு ஏற்ப மாறி வருகின்றது. இப்போது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் மாறி இருந்தாலும், மாணவர்களுக்கு வாழ்க்கையில் தேவைப்படும் சில முக்கியமான விஷயங்கள் இன்றளவும் கற்பிக்கப்படாமல் உள்ளன. இந்தப் பதிவில் இன்றைய காலத்தில் பள்ளிகளில் கற்பிக்கத் தவறும் 7 முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

  1. பள்ளிகளில் பாடத்திட்டங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நேர்மை, கருணை, பொறுப்புணர்வு போன்ற நெறிமுறைகளைக் கற்பிப்பதற்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதிரியான மதிப்புகளை வளர்ப்பதில் பள்ளிகள் பங்களிக்க வேண்டும். 

  2. வாழ்க்கையில் நேரும் பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி உணர்ச்சிகளை கையாள்வது என்பதை மாணவர்களுக்கு கற்பிப்பது முக்கியம். இது மாணவர்கள் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். 

  3. சமூக ஊடகங்களின் வருகையால் மனிதர்களின் நேரடி தொடர்புகளை மாணவர்கள் குறைத்து வருகின்றனர். பள்ளிகள் மாணவர்களுக்கு திறமையான தகவல் தொடர்பு, குழுப் பணி, போன்ற திறன்களை வளர்க்க உதவ வேண்டும். 

  4. பணத்தை எப்படி நிர்வகிப்பது, முதலீடு செய்வது போன்ற அடிப்படை பொருளாதாரக் கருத்துக்களை பள்ளிகளில் கற்பிப்பது அவசியம். இது மாணவர்கள் எதிர்காலத்தில் நிதி சுதந்திரத்தை அடைய உதவும். 

  5. பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சனைகள் இன்று மிகவும் முக்கியமானவை. பள்ளிகள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்க வேண்டும். 

  6. எல்லா மாணவர்களாலும் தொழில் முனைவோராக இருக்க முடியாது என்றாலும், தங்கள் சொந்த கருத்துக்களை செயல்படுத்தும் திறன், புதிய யோசனைகளை உருவாக்கும் திறன் போன்ற தொழில்முனைவோர் திறன்கள் அனைவருக்கும் அவசியமானது. இது எல்லா இடங்களிலும் மாணவர்களுக்கு பயன்படும். 

  7. வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுதல், மன அமைதியை பெறுதல் போன்றவை மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தியானம் பற்றிய அறிவை கட்டாயம் கற்பிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது… பிரபஞ்சம் அனுப்பும் 5 சிக்னல்கள்! 
 Students

இன்றைய கல்விமுறை மாணவர்களை வெறும் தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்துகிறது. ஆனால், வாழ்க்கை என்பது தேர்வுகளை மட்டும் கொண்டதல்ல. மாணவர்கள் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, ஒரு நல்ல மனிதராக வளர வேண்டும். இதற்கு பள்ளிகள் மேற்கூறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கற்பிக்க வேண்டும். மாணவர்களின் மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றையும் வளர்க்கும் வகையில் கல்விமுறை மாற்றப்பட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com