ஏழையும் அரசனாகலாம்! வறுமையை விரட்டி அடிக்க சாணக்கியர் காட்டும் 5 எளிய வழிகள் - மிஸ் பண்ணிடாதீங்க!

Chanakya and money
5 Chanakya rules for money earning
Published on

னைவரும் பணக்காரர்கள் ஆக ஆசைப்படுகிறார்கள். ஆனால், இந்த ஐந்து குணங்கள் உள்ளவர்கள் மட்டுமே செல்வந்தர்களாக மாறுகிறார்கள், மாறுவார்கள் என சாணக்கியர்(Chanakya rules for money) கூறுகிறார்.

1. அறிவு, அனுபவம்

அறிவே ஒருவரின் உண்மையான நண்பன் ஆகும். அது புத்தக அறிவாக இருந்தாலும் அல்லது சில வேலைகளை செய்வதன் மூலம் பெற்ற பயிற்சி அறிவாக இருந்தாலும், அது ஒருபோதும் வீணாகாது. "அறிவும், அனுபவமும் இல்லாத ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம்!" என்கிறார் சாணக்கியர்.

2. புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்

பணத்தை எங்கே செலவிடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. தேவை இல்லாத செலவுகளை குறைத்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில் முதலீடு செய்யுங்கள்.

3. பொறுமை அவசியம்

கடினமான காலங்களில் பொறுமையாக இருப்பவர்கள் உணர்ச்சிகளுக்கு பதிலாக பிரச்னைகளுக்கு தீர்வுகளை தேடுபவர்கள். ஒருநாள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். கடினமான காலங்களில் பொறுமையை இழப்பது, ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம், உண்மையான வேலையை கெடுத்துவிடும். உங்கள் இலக்கை அடைய மாட்டீர்கள்.

4. சுயநம்பிக்கை வேண்டும்

சுயநம்பிக்கை மற்றும் கருணையை உடையவர்களாக இருக்க வேண்டும். தொடர்ந்து கடவுளிடம் அடைக்கலம் புகுந்து நீதியின் பாதையை பின்பற்றுபவர், தனது சுய நம்பிக்கை அவர்கள் எந்த வேலையையும் மனப்பூர்வமாக செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் அந்த வேலையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வேலையை தெய்வீகமாக கருதுகிறார்கள். இந்த வெற்றியின் மூலம் அவர்களுக்கு செல்வமும் அதிகரிக்கிறது.

5. ரகசியம் காக்க கற்றுக் கொள்ளுங்கள்

எதிர்காலத் திட்டங்களை தீட்டி யாருடனும் விவாதிக்காமல் ரகசியமாக அவற்றை அடைபவர்கள் ஒருநாள் செல்வந்தர்களாக மாறுவார்கள். நமது திட்டங்களை வெளிப்படுத்தினால், அவர்கள் நமது பணிகளில் தடைகளை உருவாக்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
தேர்வுனா பயமா? எதுக்கு? மாணவர்களே! மதிப்பெண் குவிக்க இதோ உங்களுக்கான 'வெற்றி ஃபார்முலா'!
Chanakya and money

எனவே, எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இலக்குகளை அடைய பயப்படாதவர்கள் பணக்காரர்களாக விரும்புவார்கள். எப்போதும் காகம் அல்லது கழுகு போல தங்கள் இலக்குகளில் அடைய பாடுபடுகிறவர்கள் எந்த பிரச்னைக்கும் பயப்படுவதில்லை. அவர்களே விரைவில் செல்வந்தர்களாக மாறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com