நம்முடைய கஷ்டங்கள் தீர என்ன வழி?

What is the solution to our problems?
Motivation
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

‘நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை போக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா?’ என்று யோசித்துப் பார்த்தால் கண்டிப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் பிரச்னைகளை எதிர்த்து போராடி ஜெயிப்பதாகும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.

ஒருநாள் கஷ்டங்களால் வாழ்க்கையை வெறுத்த இளைஞன் ஒருவன் ஒரு முனிவரை சந்தித்து கஷ்டங்களை போக்க வழிக்கேட்கிறான். அந்த முனிவரோ வழியை சொல்லாமல் கதையை சொல்கிறார். அந்த கதை என்னவென்றால், ஒரு ஏரியில் நிறைய மீன்கள் இருந்தது. ஒருநாள் அந்த ஏரியில் உள்ள பெரிய மீன் எந்த உணவுமே இல்லாமல் ஒரு சிறிய மீனை சாப்பிட வந்தது.

அப்போது அந்த சிறிய மீன் கேட்டது, ‘நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?’ என்று நியாயம் கேட்டது சிறிய மீன். அதற்கு அந்த பெரிய மீன் சொன்னது, ‘உனக்கு பாவம் பார்த்தால் பசியால் நான் இறந்துப் போய்விடுவேன். உனக்கு இப்போது இரண்டே வழிகள்தான் உள்ளது. ஒன்று இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு அப்படியில்லை என்றால், தோல்வியை ஒப்புக்கொண்டு வாய்க்குள்ளே போய்விடு’ என்று கூறி வாயைப் பிளந்துக் காட்டியது அந்த பெரிய மீன்.

அது வாயை திறந்ததும் கீழே கிடந்த குச்சியை கொண்டு வந்து அதனுடைய வாயில் வைத்து வாயை மூட முடியாதப்படி செய்துவிட்டது சிறிய மீன். இப்படி கதையை சொல்லி முடித்துவிட்டு, ‘இந்தக் கதையில் இருந்து உனக்கு என்ன புரிந்தது?’ என்று முனிவர் கேட்க அதற்கு அந்த இளைஞர் கூறினான், ‘கஷ்டங்களை போக்க இன்னொரு வழிக்கூட இருக்கிறது. அதுதான் பிரச்னைகளை எதிர்த்து போராடுவது’ என்று சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் சென்றான் அந்த இளைஞன்.

இதையும் படியுங்கள்:
உலகம் சுழல்வது அன்பினால் மட்டுமே!
What is the solution to our problems?

இந்தக் கதையில் சொன்னதுபோல, நம்முடைய கஷ்டங்கள் கண்டு பயப்படாமல் எதிர்த்துப் போராட துணியும்போது அதை சரிசெய்ய ஆயிரம் வழிகள் நமக்கு கிடைக்கும். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

logo
Kalki Online
kalkionline.com