ஏன் பங்குனி மாதத்தை 'தெய்வீக மாதம்' என்கிறோம்? நீங்கள் அறியாத சுவாரசியத் தகவல்கள்!


Divine month
Divine month panguni
Published on

னிரெண்டு மாதங்களுக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. அதன் வகையில் பங்குனி மாதமானது தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. தெய்வங்களின் திருமணங்கள் நடந்த சிறப்பு பெற்ற மாதமாகிறது.

பாா்வதி -பரமேஸ்வரன்

முருகன் -தெய்வாணை

சீதாதேவி -ஶ்ரீராமபிரான் போன்ற குறிப்பிடத்தக்க தெய்வங்களின் திருமணங்கள் நடந்த மாதமாக பங்குனி விளங்குகிறது.

இந்த மாதமானது மகிழ்சியும் சந்தோஷமும் செல்வவளமும் நிறைந்த மாதமாகும்.

பங்குனி மாதத்தின் தொடக்கமே சத்தியவான் சாவித்திாி வரலாறு மற்றும் அது தொடர்பான காரடையாா் நோன்பு மாதத்தின் முதல் நாளிலேயே வருவதும் அதன் சிறப்பும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே.

அதேபோல பங்குனி பெளா்ணமியுடன் கூடிய உத்திர நட்சத்திரத்தில் கல்யாண விரதமும் கடைபிடிக்கலாம். இது ஒரு வசந்த மாதமாகும்.

முருகனுக்கு காவடி எடுத்தல், பங்குனி உத்திரம் நிகழ்வு நடைபெறுவதும் பங்குனியில்தான்.

பங்குனி உத்திர விழாவானது பழனி போன்ற கோவில்களில் சிறப்பு வாய்ந்தது. வசந்த காலத்தை நினைவுபடுத்துவதால் வசந்த நவராத்திாியும் பங்குனியில் கொண்டாடப்படுகிறது.

இதே மாதத்தில் ஆலமிகி ஏகாதசியும் வருகிறது. அதேபோல விஜய ஏகாதசி காரைக்கால் அம்மையாா் குருபூஜையும் இந்த மாதத்தில் நடபெறுகிறது.

மேலும் சாஸ்தா, மகாலெட்சுமி, அர்ஜூனன், போன்றவர்களின் அவதார மாதமாகவும் கருதப்படுகிறது. அதோடு வசந்த நவராத்திாி விழா கொண்டாடவும் உகந்த மாதமே பங்குனியாகும்.

சாரதா நவராத்திாி, ஆஷாட நவராத்திாி, சியாமளா நவராத்திாி, வசந்த நவராத்திாி, என நான்கு நவராத்திாி விழாக்கள் ஒரு வருடத்தில் கொண்டாடுகிறோம்,

இதில் சாரதா மற்றும் வசந்த நவராத்திாி முக்கியமானவை.

இதையும் படியுங்கள்:
கணவரின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பு: தாலி சரடு மாற்ற உகந்த நேரம் எது?

Divine month

வசந்த நவராத்திாியானது. பங்குனி அமாவாசையை அடுத்துவரும் வளா்பிறை, பிரதமை முதல் நவமிவரை கொண்டாடப்படுகிறது.

வளா்பிறையில் வரும் ஆலமிகி ஏகாதசி விரதமும் நல்ல பலன்களைக் கொடுக்குமாம். இந்நாளில் திருமாலை வழிபட (பசு) கோ தானம் செய்த பலன் வந்து சேரும். இதனில் தேய்பிறையில் வரும் விஜய ஏகாதசி விரதமும் வெற்றியைத்தேடித்தரும்.

விஜய என்றால் வெற்றி என பொருள்படும்.

ஶ்ரீராமபிரான் ராவணனுடன் போாா் புாிந்து வெற்றியடைந்து சீதாதேவியை மீட்டதும் விஜய ஏகாதசி விரதம் இருந்ததால்தான் என புராணங்கள் கூறுகின்றன.

இப்படி அனைத்து வகையிலும் பங்குனி மாதமானது சிறப்பு வாய்ந்த மாதமாக தெய்வீக மாதமாக கருதப்படுவதால் இந்த மாதத்தில் வரும் விரத மற்றும் பூஜை முறைகளை பின்பற்றி கடைபிடித்து, இறைவனின் அருளுக்கு பாத்திரமாவோம்.

வசந்தகால பங்குனி மாதத்தில் அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசட்டுமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com