தஞ்சை கோயில் உருவானதில் கருவூர் சித்தரின் பங்கு என்ன தெரியுமா?

Do you know the role of Karuvurar Siddha in the formation of Tanjore Temple?
Do you know the role of Karuvurar Siddha in the formation of Tanjore Temple?Image Credits: Quora
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ஞ்சை கோயிலுக்கும் கருவூர் சித்தருக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கின்றது. கருவூர் சித்தருக்கென்று தனிச் சன்னிதி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கொன்றை மரத்தின் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தஞ்சை பெரிய கோயிலில் லிங்கப் பிரதிஷ்ட்டை செய்யும்போது அஷ்டபந்தன மருந்தை சாத்துகிறார்கள். அஷ்டபந்தன மருந்து இறுக்கமாக இருந்தால்தான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை பண்ண முடியும். ஆனால், அந்த மருந்து இறுகாமல் இளகிக்கொண்டே இருந்தது. இதனால், கருவறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யவே முடியவில்லை. எத்தனையோ சிவாச்சாரியார்கள் முயன்றும் முடியவில்லை. இதைக் கேட்ட ராஜராஜ சோழன் மிகவும் மன வருத்தம் அடைந்தார்.

இதை அறிந்த போகர் சித்தர், தனது சீடனின் மகிமையை உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்து கருவூராரை தஞ்சைக்கு வரச் சொல்கிறார். தனது குருவின் ஆணைப்படி தஞ்சைக்கு வருகிறார் கருவூர் சித்தர். அதுவரை இறுகாமல் இருந்த அஷ்டபந்தன மருந்தை சிவ சிந்தனையோடு கையில் எடுக்கிறார் கருவூரார். என்ன ஒரு அதிசயம்! அதுவரை இறுகாமல் இருந்த அஷ்டபந்தன மருந்து அப்போது இறுகியது. எனவே, லிங்க பிரதிஷ்டையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் கருவூர் சித்தர்.

‘பந்தனம்’ என்பது இணைப்பதைக் குறிக்கிறது. இதில் எட்டு பொருட்களின் கலவை அடங்கி உள்ளதால், அஷ்ட பந்தனம் என்று சொல்லப்படுகிறது. இது பீடத்தையும், சிலையையும் உறுதியாக இணைக்க உதவுகிறது. பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக அஷ்ட பந்தன மருந்தை சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து தெய்வ மூர்த்தத்தை பீடத்துடன் அழுத்திப் பிடித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி நடராஜர் கால்களை மாற்றி ஆடியக் கதை தெரியுமா?
Do you know the role of Karuvurar Siddha in the formation of Tanjore Temple?

கொங்குநாட்டின் கரூரில் பிறந்தவர் கருவூர் தேவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது பெயரை கருவூர் தேவர் என்று அழைப்பார்கள். இவர் அந்தணக் குலத்தில் பிறந்து வேதாகமக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இவர் மிகபெரிய யோக சித்தர். போக முனிவரின் ஆலோசனையைப் பெற்று நூல்கள் பலவற்றை ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயக்கல்பம் உண்டவர். இவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டை நாடு, நடுநாடு ஆகிய இடங்களில் இருக்கும் கோயில்களை தரிசித்துவிட்டு கடைசியாக திருப்புடைமருதூர் சென்று இறைவனின் திருவடி தீட்சை பெற்றார் என்பது வரலாறு.

logo
Kalki Online
kalkionline.com