மார்கழி 'பீடை' மாதமா? உண்மையான காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!

Glory of the month of Margazhi
Glory of the month of Margazhi
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

மார்கழி மாதத்தை ‘பீடை மாதம்’ என்றுதான் நாம் அனைவருமே கூறுகிறோம். மார்கழி மாதத்தில் எந்தவிதமான சுப காரியங்களும் செய்யக் கூடாது என்ற கருத்தும் காலம் காலமாகவே நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் மார்கழி மாதம் என்பது பீடை மாதமா அல்லது புண்ணிய மாதமா என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மார்கழி மாதம் என்றால் பீடுடைய மாதம் என்று பொருள். காலப்போக்கில் இந்த பீடுடைய மாதம்தான் பீடை மாதமாக மாறி விட்டது. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே ‘பீடு’ என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது. மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.

இதையும் படியுங்கள்:
திருப்பாவையின் 30 பாசுரங்களில் கிளி பாசுரம் ஏன் முக்கியமானது?
Glory of the month of Margazhi

மார்கழி மாதத்தில் தினமும் விடியற்காலையில், பெருமாள் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டுக்காகவே உருவான மாதம் என்பதால் இந்த மாதத்தில் மங்கல காரியங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை.

மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள் என்னவென்றால், வீதி எங்கும் புள்ளி வைத்த கோலங்களும் கோயில்களில் விடியற்காலையிலே ஒலிக்கும் பஜனை பாடல்களும்தான். ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் திருப்பாவையில் ஆராதனை செய்த மாதம் இது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களை பொறுத்தவரையில் வெறும் ஒருநாள் கால அளவே ஆகும். அந்த வகையில், கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்றால் தேவர்களுக்கு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதாவது ஒரு மாதத்திற்கு இரண்டு மணி நேரம் விகிதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம், அதாவது ஒரு நாள்.

இதையும் படியுங்கள்:
ஆண்டாள் நாச்சியார் மேற்கொண்ட மார்கழி மாத பாவை நோன்பின் ரகசியம்!
Glory of the month of Margazhi

இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்திராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை 6 மாத காலம் இரவு பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று அழைகிறோம்.

தேவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பி வரவேற்கும் விதமாகதான், மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் ஆறு மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலம் இட்டு, கோலத்தின் நடுவே விளக்கேற்றி, சாணத்தில் பூசணிப்பூவை வைப்பார்கள். இந்த அதிகாலை நேரத்தில் வீசும் காற்று உடலுக்குப் பல நன்மைகளை தரக் கூடியது என்கிற காரணத்தினால்தான், நம் முன்னோர்கள் அந்த வேளையில் எழுந்து கோலமிட்டு, நீராடி, கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல், பாற்கடல் கடையப்பட்டதும், மகாலட்சுமி அவதரித்ததும், அமுதம் பெற்றதும் இந்த மார்கழியில்தான். ஆகவே, நாமும் இந்த மார்கழியில் விடியற்காலையில் நீராடி, பெருமாளை தொழுதால், நிச்சயமாக மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெற முடியும் என்பது ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com