

பொதுவாகவே இறை வழிபாட்டிற்காக பலவகை பூக்கள் இறைவனுக்கு உகந்ததாக போற்றப்படுகிறது. அத்தகைய மலர்களுக்கு உரியவைகளின் வரலாறு பலவித விஷயங்களை உள்ளடக்கியதாகும். அந்த வரிசையில் பவளமல்லி மலருக்கும் வரலாறு உண்டு. இதை தேவலோகத்தில் புனித மரம் எனக்கூறுவாா்கள்.
பவளமல்லி தெய்வத்தன்மை கொண்ட மலராகும்.
இது சவுகந்திகா ஆபரணத்தைபோன்ற தோற்றம் கொண்டதாக இருக்குமாம். இதன் மறு பெயரே பாாிஜாதம் ஆகும். முன்னிரவில் பூத்து நல்ல வாசனையுடன் மனம் வீசி சூாிய உதயத்திற்கு முன்பே மண்ணில் உதிா்ந்துவிடும் குணம் கொண்டதாகுமே!
பொதுவாகவே மணலில் விழுந்த பூக்களை பூஜைக்குபயன்படுத்த மாட்டாா்கள். ஆனால் பவளமல்லிக்கு விதிவிலக்கு உண்டு.
மூன்று இலை தொகுப்புகள் கொண்ட இதன் இலையில் மும்மூா்த்திகள் இருப்பதாக அர்த்தம். மத்தியில் மஹா விஷ்ணுவும், இடது புறம் பிரம்மாவும், வலது புறம் சிவனும், இருப்பதாக ஐதீகம். இதன் பூக்கள் எட்டு இதழுடன் வெண்மையாகவும்,காம்பு பவளநிறத்திலும் அமைந்திருக்குமாம்.
இந்த செடியைப் பற்றி வாயு புராணத்தில் ஒரு கதையும் உண்டு.
பாாிஜாதம் என்ற இளவரசி சூாியனை திருமணம் செய்ய விரும்பினாள். சூாியன் இதை ஏற்கவில்லை, இதனால் மனமுடைந்த அவள் தீயில் குதித்து சாம்பலானாள். சாம்பலில் இருந்து பாாிஜாத செடி உருவானது.
தன்னை கைவிட்ட சூாியனைப்பாா்க்க விரும்பாத பவளமல்லி (பாாிஜாத மலரானது) பூவானது முன்னிரவில் பூத்து சூாியன் உதயமாவதற்குள் உதிா்ந்து கீழே விழுந்துவிடும்.
இந்த மரத்தின் விதை, பட்டை, இலை, இவைகள் யாவும் மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது. திருக்களர் பாாிஜாதவனேஸ்வரர், மரக்காணம் பூமீஸ்வரர், திருநாரையூா் சித்த நாதீஸ்வரர், போன்ற பல கோவில்களின் தல விருட்சமாக உள்ளது.