
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே