
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே