
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே, கடலமுதே, கரும்பே, விரும்பும் அடியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே