காஷ்மீர் - 5: 'புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனி மழை பொழிகிறது...'

காஷ்மீரில் எல்லோரும் தங்கள் மாநிலத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்களிடம் நாம் கற்க வேண்டிய மிகமுக்கியமான பாடம் இது.
Gulmarg Rope Car - Kashmir Travel Series (1)
Gulmarg Rope Car - Kashmir Travel Series (1)
ஆர்.வி.பதி

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் அனைத்து முன்னணி இதழ்களில் சிறுகதை, கவிதை, நாவல், சிறுவர் இலக்கியம், பக்தி இலக்கியம், அறிவியல் என 500 க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தவர். இவர் எழுதி இதுவரை 125 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதிபக்தி (PathyBakthi) என்ற யுடியூப் சேனலில் கோவில்கள் பற்றிய விரிவான தகவல்களை பதிவு செய்து வருகிறார். தனது படைப்புகளுக்காக கலைமகள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. விருது உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

Updated on

சிறிது தூரம் சென்றதும் கண்களுக்குப் பனியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எங்களுடன் வந்த நண்பர்கள், குடும்பத்தினர் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு எங்கும் வெள்ளை வெளேரென்று பனி வியாபித்திருந்தது. சற்று நேர பயணத்திற்குப் பின்னர் பழைமையான ஒரு சர்ச்சை காண்பித்தார்கள். அருகே செல்ல முடியவில்லை. தொலைவிலிருந்தே சர்ச்சைப் பார்த்தோம்.

கோடைக் காலங்களில் இந்த குல்மார்க் முழுவதும் பச்சைப்பசேலென்று இருக்கும் என்றார்கள். அங்கே ஒரு சிறிய தேநீர் கடை இருந்தது. குளிருக்கு இதமாக ஆளுக்கு ஒரு தேநீர் அருந்தினோம். ஸ்லெட்ஜ் வண்டியை இழுப்பவர்களுக்கு நன்றாக ஓய்வு கொடுத்தோம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com