சுவிஸ் செல்வோமே 1: சென்னை - டெல்லி - மிலான் - சூரிக்! அனுபவம் புதுமை...

Switzerland Travel
Switzerland Travel
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

பலமுறை சுவிசின் சூரிக் சென்றாலும், ஒவ்வொரு முறை அனுபவமும் வேறு வேறாகவே இருக்கும்! அரபு நாடுகள் வழியாகவே பெரும்பாலும் சென்று வந்ததால், இம்முறை தலைநகர் டெல்லி சென்று, பின்னர் இத்தாலியின் ‘மிலான்’ சென்று அங்கிருந்து காரில் சூரிக் செல்ல ஏற்பாடாயிற்று! அதற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது புது வழியில் செல்வது; இரண்டாவது நமது ‘ஏர் இந்தியா’ விமானங்களில் பயணிப்பது!

காலை எட்டு மணிக்கு ‘ப்ளைட்’ என்பதால் வீட்டை விட்டு நான்கரை மணிக்கே கிளம்பினோம். நமது நாட்டில் பிரம்ம முகூர்ததம் (4.30-6.00) விசேஷமானது அல்லவா?

இந்தக் கோடையில் அந்த நேரத்தில்கூட வியர்க்கவே செய்தது!சாலையெங்கும் ஆடோமாடிக் சிக்னல்கள் வேலை செய்தாலும், நமது ஓட்டுனர்கள் யாருமே அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது! இவ்வளவுக்கும் அந்த அதிகாலை, சுறுசுறுப்பான நேரம்! மிட் நைட் 12ஓ 2 ஓ அல்ல!தனி மனித ஒழுக்கம் இல்லாத எந்த நாடும் முன்னேறுவது கடினமே! நமக்குப் பயமுறுத்தும் போலீஸ் தேவைப்படுகிறதோ?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com