சுவிஸ் செல்வோமே - 2: புறநகர்ப் பகுதிகள் - பாரம்பரிய வீடுகள் - தூய்மை பழக்கங்கள்!

Switzerland Travel
Switzerland Travel
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கடந்த 'எபிசோடில்', இரவு நேரப் பயணத்தைப் பற்றிப் பேசினோம்! இரவோ, பகலோ எந்நேரமும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இங்குள்ளவர்களின் வழக்கமாகி விட்டது. அவற்றை ஒழுங்காகப் பின்பற்றாததாலேயே நம்மூரில் ஆண்டுக்கு லட்சக் கணக்கில் விபத்துக்களில் மனிதர்கள் இறக்கும் நிலை உள்ளது! என்ன? எதையும் எளிதாகக் கடந்து போகும் மனநிலை நம்மிடம் உண்டு. இங்குள்ளவர்கள் எதற்கும் தீர்வு தேடி, அதனை நடைமுறைப்படுத்தி, அல்லல்களைக் குறைத்து, அமைதியாக வாழ்கிறார்கள்.

இந்தத் தொடரில் பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலையையோ, அழகிய ரைன் நதியையோ பற்றிப் பேசுவதை விடுத்து, புற நகர்ப்பகுதி எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றியும், பாரம்பரிய வீடுகள் பற்றியும் சற்று பார்ப்போம்! சுவிஸ் நாட்டின் முழு இயற்கை அழகையும் ரசிக்கவேண்டுமென்றால் புற நகர்ப் பகுதிகளில் மட்டுமே வசித்தால்தான் அது சாத்தியமாகும். அதிலும் பாரம்பரிய வீடுகளை அவர்கள் பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com