வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.இனிப்பு தேன்குழல் :தேவையானவை : பச்சரிசி மாவு – 1 தம்ளர், வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 2 தம்ளர், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை.செய்முறை : அரிசி மாவுடன், உளுந்த மாவு சேர்த்து நெய்யும் தண்ணீரும் விட்டு, முறுக்கு பதத்திற்கு பிசையவும். தேன்குழல் அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.வெல்லத்தை மண் போக சுத்தம் செய்து, பாகு காய்ச்சி ஏலப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெந்த தேன்குழலை கொதிக்கும் சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்..பிரட் பாசந்தி :தேவையானவை : பால் 1 லிட்டர், பிரட் – 5 துண்டுகள் (ஓரம் நீக்கியது), சர்க்கரை – 1 கப் (பொடித்தது), டூட்டி ஃப்ரூட்டி – அலங்கரிக்க.செய்முறை : அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்க விடவும். தணலைக் குறைத்து வைக்கவும். பால் மேல் ஆடை படிய ஆரம்பிக்கும். இந்த பால் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். முழு பால் மீதும் படியும் ஆடையை எடுத்து போட்டு சர்க்கரையை கலக்கவும். பிரட்டை மிக்ஸியில் போட்டுப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி அடுப்பில் ஐந்து நிமிடங்கள் சர்க்கரை கரையும் வரை கிளறவும். கெட்டிப் பதம் வந்தவுடன் இறக்கி சூடு குறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து டூட்டி ஃப்ரூட்டி தூவி பரிமாறவும். இனிப்பான பிரட் பாசந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..ஆட்டா பால்ஸ் :தேவையானவை : கோதுமை மாவு – 1 கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மில்க் மெய்ட் – எட்டு டேபிள் ஸ்பூன், மெலிதாக சீவிய பாதாம் – 3 ஸ்பூன், உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : கோதுமை மாவில் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகள் ஆறி இளஞ்சூடாக இருக்கும்போது ஒவ்வொன்றின் மேலே மில்க் மெய்ட் ஊற்றி, பாதாம் தூவி, உலர் திராட்சை சேர்க்கவும். சூப்பரான வித்தியாச ஸ்வீட் ரெடி..உலர் விதை போளி :தேவையானவை : கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், உலர் விதைகள் – பூசணி, வெள்ளரி விதைகள், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – தேவைக்கு, எண்ணெய் – மாவு பிசைய, கடலைப் பருப்பு – 1 கப், வெல்லத் துருவல் – 1 கப், மஞ்சள் கலர் – சிறிது, தேங்காய் துருவல் – அரை கப்.செய்முறை : மாவுகளை சலித்து, மஞ்சள் கலர், சிறிது எண்ணெய் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். கடலைப் பருப்பை ஊற வைத்து குக்கரில் நீர் விட்டு மெத்தென்று வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு உலர் விதைகளை வறுத்து எடுக்கவும். வெந்த பருப்புடன் வறுத்த விதைகள், ஏலப்பொடி, தேங்காய் துருவல், வெல்லத் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும்.அடி கனமான வாணலியில் கொட்டி, கெட்டி பூரணமாக வரும் வரை கிளறி எடுக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக ஆக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதன் நடுவே பூரண உருண்டைகளை வைத்து மூடி வட்டமாக வாழை இலையில் எண்ணெய் தடவி, தட்டி தோசைக் கல்லில் நெய் விட்டு சூடானதும் பிரட்டிப்போட்டு வேக வைத்து எடுக்கவும். அருமையான உலர் விதை போளி தயார்..டாஃபி :தேவையானவை : மைதா மாவு – 2 கப், சர்க்கரை – 3 கப், கேரட் துருவல் – 1 கப், டால்டா அல்லது நெய் – அரை கப், சமையல் சோடா – 1 ஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 1 துளி, எண்ணெய் – தேவையானது.செய்முறை : மைதா மாவு, சமையல் சோடா, எசன்ஸ், கேரட் துருவலுடன் நெய் அல்லது டால்டாவை உருக்கி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். கால் மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக இட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி (டைமன், ஆட்டின்) எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரை, ஒன்றரை கப் நீர் சேர்த்து கெட்டிப் பாகு காய்ச்சவும். பொரித்த டாஃபிகளை சர்க்கரை பாகிங் போட்டுப் புரட்டி எடுத்துப் பரிமாறவும்..பாம்பே அல்வா :தேவையானவை : மைதா மாவு, சோள மாவு – தலா 2 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், ஜவ்வரிசி – அரை கப், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், கலர் பவுடர் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், துருவிய பாதாம் – 2 டீஸ்பூன்.செய்முறை : ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவு, சோள மாவையும் தனித்தனியாக கட்டியில்லாமல் நீரில் கரைக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கும்போது எலுமிச்சை சாறு சேர்த்து தீயை அணைக்கவும். பின் ஊறிய ஜவ்வரிசி, கலர் பவுடர், கரைத்த மாவுகளையும் சேர்த்து வாணலியில் மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் சர்க்கரை நீரில் சேர்த்து கிளறவும். பின் நெய் விட்டு ஏலத்தூள் சேர்த்து கிளறி வாணலியில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் தண்டுகள் போட்டு பட்டர் பேப்பரில் சுற்றி வைக்கலாம்..ப்ரூட் டாபி :தேவையானவை : தேங்காய் துருவல் – 1 கப், அன்னாசி, ஆப்பிள், பப்பாளி, கொய்யா, வாழைப்பழம் என ஏதாவது பழக்கூழ் – ஒன்றரை கப், வெல்லத் துருவல் – 1 கப், பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், நெய் – கால் கப், முந்திரி – தேவைக்கு.செய்முறை : அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் சிறிது ஊற்றி ஏதாவது ஒரு பழக்கூழ் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பால் பவுடர், தேங்காய்த் துருவல் சேர்த்து நடு நடுவே நெய் விட்டுக் கிளறவும். வெல்லத் துருவல் சேர்த்து கிளறி, பொடித்த வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும். விருப்பமான வடிவம் செய்து நடுவே முந்திரி வைத்து அலங்காரம் செய்யவும்.– எம்.வசந்தா, சென்னை.—————————–.ஜாக் ஃப்ரூட்ஸ் பர்பி :தேவையானவை : பலாச்சுளைகள் – 15, சர்க்கரை – 1 கப், தேங்காய்த் துருவல் – 1கப், முந்திரிப் பருப்பு – 15, கசகசா – 2 ஸ்பூன், ஏலப்பொடி – அரை ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – சிறிதளவு.செய்முறை : பழுத்த பலாச்சுளைகளை கொட்டை நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி இரண்டு ஸ்பூன் கசகசாவுடன் ஒரு கப் நீரில் வேக விடவும். வெந்தவுடன் நன்கு மசிக்கவும். சர்க்கரை, தேங்காய், அரைத்த விழுது, நெய் சிறிது விட்டு மசித்த பலாப்பழத்தையும் போட்டு நன்கு கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் வறுத்த முந்திரி துண்டுகள், ஏலப்பொடி, ஒரு சிமிட்டு உப்பும் சேர்த்து கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி வில்லைகள் போடவும். வித்தியாசமான ருசியில் சுவையான ஜாக்ஃப்ரூட் பர்பி ரெடி..50 : 50 நாடா :தேவையானவை : பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப் , மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், வெண்ணை – 2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு, சர்க்கரை – ஒரு கப், எண்ணெய் பொரிக்க, அரிசி மாவு.செய்முறை : பொட்டுக்கடலை மாவு, உப்பு, காரப்பொடி, வெண்ணெய் இவற்றுடன் தேவையான நீர் சேர்த்து பிசையவும். நாடா அச்சில் போட்டுப் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுத்து தட்டில் பரவலாகப் பரத்தி வைக்கவும். சர்க்கரையுடன் சிறிது (அரை கப்) நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு முற்றி வரும்போது (இரட்டைக் கம்பிப் பதம் ) இறக்கி தட்டில் பரவலாக வைத்துள்ள ரிப்பன் பக்கோடா மீது ஊற்றவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நாடா மீது சர்க்கரை பாகு பூத்துக் கொண்டு, வெள்ளை வெளேரென்று பார்க்கவும், சுவைக்கவும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவர். இந்த 50 : 50 நாடாவை செய்துதான் பாருங்களேன். இனிப்பு, காரம் இரண்டும் கலந்த சுவையான பட்சணம் ரெடி..பாம்பே காஜா :தேவையானவை : மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 2 கப், சமையல் சோடா – 2 சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் – கால் ஸ்பூன், ஏலப்பொடி – அரை ஸ்பூன்.செய்முறை : உப்பு, மைதா, சோடா ஆகியவற்றை நீர் விட்டு பிசைந்து முக்கோண வடிவில் மடித்து இடவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். சர்க்கரையை பாகு காய்ச்சி, அதில் ஏலப்பொடி, கேசரி பவுடர் கலந்து வைக்கவும். இதில் பொரித்த காஜாக்களை போட்டு ஊற விட்டு எடுக்கவும். ருசியான பாம்பே காஜா தயார்..புழுங்கலரிசி முறுக்கு :பொதுவாக, பச்சரிசியில் மெல்லியதாக முறுக்கு சுற்றுவார்கள். ஆனால், சுவை என்று பார்த்தால் புழுங்கல் அரிசியில் செய்யும் முறுக்குதான் சூப்பராக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் பொரிக்க, 'என்னை சாப்பிடு' என்று கூப்பிடுவது போல் இருக்கும்.தேவையானவை : புழுங்கலரிசி – 5 கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு பிடி, உப்பு – தேவையான அளவு, வெண்ணை – 4 ஸ்பூன், பெருங்காயப்பொடி – அரை ஸ்பூன், தேங்காய் எண்ணெய் பொரிக்க.செய்முறை : அரிசியையும் சிவக்க வறுத்த உளுந்தையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கவும். வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு, தேவையான உப்பு, வெள்ளை எள், வெண்ணெய், பெருங்காயப்பொடி சேர்த்து நீர் கலந்து முறுக்கு மாவு பிசையவும். மாவு காய்ந்து விடாமல் இருக்க மேலாக ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். ஒரு வெள்ளைத் துணியில் கையில் தேங்காய் எண்ணெயை தொட்டுக்கொண்டு முறுக்கு மாவை சிறிது எடுத்து இரண்டு சுற்று அல்லது நான்கு சுற்று சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தேங்காய் எண்ணெய் பொங்கும். ஆதலால் ஒரு கொட்டைப்பாக்களவு புளியை காயும் எண்ணெயில் போட்டு வைக்க எண்ணெய் பொங்காது. முறுக்கு நன்கு வெந்ததும் ஓசை அடங்கிவிடும். அப்போது எடுத்து வைக்கவும். சுவையான தேங்காய் எண்ணெய் மணத்துடன் புழுங்கல் அரிசி கைமுறுக்கு தயார்..தேங்காய் பால் முறுக்கு :தேவையானவை : பச்சரிசி மாவு – 5 கப், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி – ஒரு கப், சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப் பால் – 1 கப், வெண்ணை – 2 ஸ்பூன், எண்ணெய் பொரிக்க.செய்முறை : அரிசி மாவு, உளுத்தம் மாவு, உப்பு, வெண்ணெய், சீரகம், திக்கான தேங்காய்ப்பால் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது தேன்குழல் அச்சில் மாவை போட்டு பிழிந்து எடுக்கவும். இந்த தேங்காய் பால் முறுக்கின் சுவை அலாதியாக இருக்கும். செய்வதும் எளிது..பூண்டு தட்டை :தேவையானவை : அரிசி மாவு – 5 கப், வறுத்து பொடித்த உளுத்தம் மாவு – ஒரு கப், உப்பு – தேவையானது, காரப்பொடி – 2 ஸ்பூன், பூண்டு – 20 பற்கள், வெண்ணை – 2 ஸ்பூன், கருவேப்பிலை – சிறிது, ஊறவைத்த கடலைப் பருப்பு – 4 ஸ்பூன்.செய்முறை : அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, காரப்பொடி, வெண்ணை, அரைத்த பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து தேவையான நீர் விட்டு பிசையவும். அத்துடன் ஊறவைத்த கடலைப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து பிளாஸ்டிக் ஷீட்டில் அல்லது துணியில் தட்டையாகத் தட்டி ஆங்காங்கு குச்சியால் சிறு துளைகள் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான பூண்டு தட்டை ரெடி. பூண்டு சுவை பிடிக்காதவர்கள் வெந்தயக்கீரை பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, புதினா இலைகள் பொடியாக நறுக்கியது ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து தட்டையாகத் தட்ட, இந்த மசாலா தட்டை சுவையாக இருக்கும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி..—————————–.டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….வெல்லப்பாகு காய்ச்சும்போது சிறிது நெய்யில் வெல்லப் பொடியைப் போட்டுக் கிளறினால் பாகு பதமாக வரும்.கேழ்வரகை ஊற வைத்து அரைத்து பால் எடுத்து அல்வா செய்தால் சத்து நிறையக் கிடைக்கும். சுவையாகவும் இருக்கும்.குலோப் ஜாமூன் மாவுடன் முந்திரித் தூள், பாதாம் தூள் கலந்து பிசைந்தால் சுவையும், மணமும் கூடும். சத்தும் கிடைக்கும்.கடலைப் பருப்பு போளிக்கு வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரையைப் பொடித்து சேர்த்தால் போளி சுவை கூடுதலாக, மெலிதாகவும், வெண்மையாகவும் இருக்கும்.பொட்டுக்கடலையைப் பொடித்து வைத்துக் கொண்டால் இனிப்புகள் செய்யப் பயன்படுத்தலாம். நெய்யும் சர்க்கரையும் குறைவாகச் செலவாகும்.– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்..—————————–.கேசரி செய்யும்போது வறுத்த நிலையில் தேவையான சர்க்கரை, தண்ணீர், நெய், கேசரி பவுடர், கொஞ்சம் கோவா சேர்த்துக் கலந்து குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். இதை முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்து கேக் போல் வெட்டி சாப்பிடலாம்.பால் பாயசம் செய்யும்போது ஒரு பிடி கார்ன்பிளேக்ஸ் பொடித்துப் போட்டு ஐந்து நிமிடம் கிளறி இறக்கினால் மில்க் மெய்டு உபயோகித்தது போல் சுவையாக இருக்கும். பாயசம் கெட்டியாகவும் ஆகிவிடும்.இனிப்புகள் செய்த பின் சர்க்கரைப் பாகு மீதமிருந்தால் கொஞ்சம் இஞ்சியை அரைத்துப் பாலில் கலந்து ஒரு கிளறு கிளறி எல்லோரும் சாப்பிடலாம். வயிற்றை இதமாக்கும் இனிப்பு இது.தீபாவளிக்கு செய்யும் பலகாரங்கள் அனைத்துக்கும் பச்சரிசிக்கு பதிலாக, புழுங்கல் அரிசி சேர்த்துச் செய்தால் நன்கு கரகரப்பாக இருக்கும்.மொறு மொறு ரிப்பன் பக்கோடா வேண்டுமா? கடலை மாவும் அரிசி மாவும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் மாவைப் பிசைந்து, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். சிறிது டால்டாவும் போட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் இந்த மாவை அச்சில் போட்டு ரிப்பன் பக்கோடா பொரித்து எடுக்கவும்.முறுக்கு, தட்டை என்று எது செய்தாலும் அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, பிறகு மாவைப் பிசைந்தால் எல்லாம் மொறுமொறுப்பாக இருக்கும்.அல்வாவின் மேல் சர்க்கரை பூக்காமலிருக்கு ஜீரா கிளறும்பேது அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்தால் பூக்காது.மிக்ஸருக்கு கறிவேப்பிலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொரித்துப் போட்டால் கலர்புல்லாக கமகமவென இருக்கும்.பாயசம் செய்யும்போது அதில் கொஞ்சம் பாதாம் மிக்ஸ் சேர்த்தால் பாயசம் திக்காக, சுவையாக இருக்கும்.– எஸ்.சித்ரா, சென்னை..—————————–.தீபாவளிக்கு பட்சணம் செய்ய ஆரம்பிக்கும் முன் மாவை ஒரு சீடை அளவுக்கு எடுத்து பிள்ளையார் போல பாவித்து அதில் குங்குமம் வைத்து மானசீகமாக பிள்ளையாரை வணங்கி பட்சணங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.தேங்காய் பர்பி செய்யும்பேது தேங்காயுடன் ஊற வைத்த நிலக்கடலையையும் சேர்த்து அரைத்துச் செய்தால் அதன் ருசியே அலாதிதான்..பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு பண்ணி சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக இருக்கும்.லட்டு செய்வதற்கான கடலை மாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் வால் இல்லாமல் முத்துமுத்தாக பூந்தி எண்ணெயில் விழும்.அதிரசம் எண்ணெயில் போட்டவுடன் பிரிந்துவிட்டால் அதற்குக் காரணம் பாகில் தண்ணீர் அதிகமாகிவிடுவதுதான். அதேபோல், தண்ணீர் குறைந்தாலும் அதிரசம் கறுத்துவிடும். இதற்கு ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் தண்ணீரில் பாகு எடுக்க வேண்டும்.குலோப்ஜாமூன் செய்யும்போது நடுவில் ஒரு கிஸ்மிஸ் பழத்தை வைத்துவிட்டால் நன்றாக வெந்துவிடும். புதுவிதமகவும் இருக்கும்.மிக்சருக்கு அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதனைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் முக்கி பொரிக்க வேண்டும்.உளுந்து வடை செய்யும்போது உளுந்து ஒரு ஆழாக்கு, ஒரு ஸ்பூன் கெட்டி அவல் சேர்த்து அரைத்து வடை செய்ய, மொறு மொறுப்பாகவும் உப்பலாகவும் வரும்.பக்கோடா செய்யும்போது மாவுடன் கொஞ்சம் ரவையையும் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுக்க, டேஸ்ட்டாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.ரவா உருண்டை, பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டு கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.பலகாரங்கள் செய்த பாத்திரங்கள் அடிபிடித்துக்கொண்டால் சமையல் சோடாவைத் தூவி வெந்நீர் விட்டு சிறிது ஊறியதும் தேய்க்க பளிச் என்றாகிவிடும்.– ச.லெட்சுமி, செங்கோட்டை..—————————–.சீடைக்கான டிப்ஸ்.அரிசியை வறுத்திருந்தாலும், மாவை வாணலியில் கோலம் போடும் பதத்திற்கு வறுத்தால் சீடைகள் வெடிக்காது.தேங்காயில் ஓடு இருந்தாலோ, சீரகம், உப்பு போன்றவற்றில் கல், குப்பை இருந்தாலோ சீடை வெடிக்கலாம். அதனால் தேங்காயை நன்கு துருவி, சீரகத்துடன் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி போடலாம். கர்நாடகாவில் தேங்காயுடன் உப்பு, பெருங்காயத்தையும் அரைத்து செய்வார்கள். இந்த சீடை நன்றாக மொழுமொழுவென்று இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.சீடையை உருட்டி துணியில் போடும்போது தரை பிசுக்காகும் வாய்ப்பு உள்ளது. ஒரு தட்டில் கிச்சன் டிஷ்யூ வைத்து சீடைகளை உருட்டி இதில் போடலாம். அது சீக்கிரம் காய்வதுடன் தரையும் பிசுக்கு ஆகாது.சீடையை மிருதுவாக உருட்ட வேண்டும்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீடைகளை நெருக்கமாகக் கொட்டி விடவும். எண்ணெய் அதிகமிருந்து, சீடைகள் குறைவாக இருந்தால் அனைத்து சீடைகளும் வெடித்துவிடும்.உருட்டிய சீடைகளை ஒரு ஊசியால் குத்தி ஓட்டை போடலாம்.சீடைக்கு வெண்ணெய்தான் போட வேண்டும் என்றில்லாமல், தேங்காய் எண்ணெய் விட்டும் செய்யலாம்.தேங்காய்த் துருவலை வாணலியில் பொன் நிறத்துக்கு வறுத்துப் போட்டு செய்தால் சீடை நன்றாக வரும்.மாவை சற்று கரகரப்பாக அரைத்து செய்தாலும் வாயில் போட்டால் சீடை கரையும்.உருட்டிய சீடைகளை சற்று நேரம் காற்றில் ஆற விட, ஒட்டிக்கொள்ளாமல் வருவதுடன் வெடிக்கவும் வெடிக்காது.எண்ணெய் நன்கு சூடான பின் சீடைகளைப் போட்டு, பின் சிம்மில் வைத்துப் பொரித்தால் உள்ளே நன்கு வறுபடுவதுடன் ருசியும் கூடும்.சீடைக்குப் போடும் சீரகமோ, எள்ளோ நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் ஓட்டிப் போட, நன்கு உருட்ட வருவதுடன் ருசியும் கூடும்.– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.இனிப்பு தேன்குழல் :தேவையானவை : பச்சரிசி மாவு – 1 தம்ளர், வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 2 தம்ளர், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – 1 சிட்டிகை.செய்முறை : அரிசி மாவுடன், உளுந்த மாவு சேர்த்து நெய்யும் தண்ணீரும் விட்டு, முறுக்கு பதத்திற்கு பிசையவும். தேன்குழல் அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.வெல்லத்தை மண் போக சுத்தம் செய்து, பாகு காய்ச்சி ஏலப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெந்த தேன்குழலை கொதிக்கும் சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்..பிரட் பாசந்தி :தேவையானவை : பால் 1 லிட்டர், பிரட் – 5 துண்டுகள் (ஓரம் நீக்கியது), சர்க்கரை – 1 கப் (பொடித்தது), டூட்டி ஃப்ரூட்டி – அலங்கரிக்க.செய்முறை : அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்க விடவும். தணலைக் குறைத்து வைக்கவும். பால் மேல் ஆடை படிய ஆரம்பிக்கும். இந்த பால் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். முழு பால் மீதும் படியும் ஆடையை எடுத்து போட்டு சர்க்கரையை கலக்கவும். பிரட்டை மிக்ஸியில் போட்டுப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி அடுப்பில் ஐந்து நிமிடங்கள் சர்க்கரை கரையும் வரை கிளறவும். கெட்டிப் பதம் வந்தவுடன் இறக்கி சூடு குறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து டூட்டி ஃப்ரூட்டி தூவி பரிமாறவும். இனிப்பான பிரட் பாசந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..ஆட்டா பால்ஸ் :தேவையானவை : கோதுமை மாவு – 1 கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மில்க் மெய்ட் – எட்டு டேபிள் ஸ்பூன், மெலிதாக சீவிய பாதாம் – 3 ஸ்பூன், உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : கோதுமை மாவில் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகள் ஆறி இளஞ்சூடாக இருக்கும்போது ஒவ்வொன்றின் மேலே மில்க் மெய்ட் ஊற்றி, பாதாம் தூவி, உலர் திராட்சை சேர்க்கவும். சூப்பரான வித்தியாச ஸ்வீட் ரெடி..உலர் விதை போளி :தேவையானவை : கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், உலர் விதைகள் – பூசணி, வெள்ளரி விதைகள், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – தேவைக்கு, எண்ணெய் – மாவு பிசைய, கடலைப் பருப்பு – 1 கப், வெல்லத் துருவல் – 1 கப், மஞ்சள் கலர் – சிறிது, தேங்காய் துருவல் – அரை கப்.செய்முறை : மாவுகளை சலித்து, மஞ்சள் கலர், சிறிது எண்ணெய் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். கடலைப் பருப்பை ஊற வைத்து குக்கரில் நீர் விட்டு மெத்தென்று வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு உலர் விதைகளை வறுத்து எடுக்கவும். வெந்த பருப்புடன் வறுத்த விதைகள், ஏலப்பொடி, தேங்காய் துருவல், வெல்லத் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும்.அடி கனமான வாணலியில் கொட்டி, கெட்டி பூரணமாக வரும் வரை கிளறி எடுக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக ஆக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதன் நடுவே பூரண உருண்டைகளை வைத்து மூடி வட்டமாக வாழை இலையில் எண்ணெய் தடவி, தட்டி தோசைக் கல்லில் நெய் விட்டு சூடானதும் பிரட்டிப்போட்டு வேக வைத்து எடுக்கவும். அருமையான உலர் விதை போளி தயார்..டாஃபி :தேவையானவை : மைதா மாவு – 2 கப், சர்க்கரை – 3 கப், கேரட் துருவல் – 1 கப், டால்டா அல்லது நெய் – அரை கப், சமையல் சோடா – 1 ஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 1 துளி, எண்ணெய் – தேவையானது.செய்முறை : மைதா மாவு, சமையல் சோடா, எசன்ஸ், கேரட் துருவலுடன் நெய் அல்லது டால்டாவை உருக்கி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். கால் மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக இட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி (டைமன், ஆட்டின்) எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரை, ஒன்றரை கப் நீர் சேர்த்து கெட்டிப் பாகு காய்ச்சவும். பொரித்த டாஃபிகளை சர்க்கரை பாகிங் போட்டுப் புரட்டி எடுத்துப் பரிமாறவும்..பாம்பே அல்வா :தேவையானவை : மைதா மாவு, சோள மாவு – தலா 2 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், ஜவ்வரிசி – அரை கப், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், கலர் பவுடர் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், துருவிய பாதாம் – 2 டீஸ்பூன்.செய்முறை : ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவு, சோள மாவையும் தனித்தனியாக கட்டியில்லாமல் நீரில் கரைக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கும்போது எலுமிச்சை சாறு சேர்த்து தீயை அணைக்கவும். பின் ஊறிய ஜவ்வரிசி, கலர் பவுடர், கரைத்த மாவுகளையும் சேர்த்து வாணலியில் மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் சர்க்கரை நீரில் சேர்த்து கிளறவும். பின் நெய் விட்டு ஏலத்தூள் சேர்த்து கிளறி வாணலியில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் தண்டுகள் போட்டு பட்டர் பேப்பரில் சுற்றி வைக்கலாம்..ப்ரூட் டாபி :தேவையானவை : தேங்காய் துருவல் – 1 கப், அன்னாசி, ஆப்பிள், பப்பாளி, கொய்யா, வாழைப்பழம் என ஏதாவது பழக்கூழ் – ஒன்றரை கப், வெல்லத் துருவல் – 1 கப், பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், நெய் – கால் கப், முந்திரி – தேவைக்கு.செய்முறை : அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் சிறிது ஊற்றி ஏதாவது ஒரு பழக்கூழ் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பால் பவுடர், தேங்காய்த் துருவல் சேர்த்து நடு நடுவே நெய் விட்டுக் கிளறவும். வெல்லத் துருவல் சேர்த்து கிளறி, பொடித்த வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும். விருப்பமான வடிவம் செய்து நடுவே முந்திரி வைத்து அலங்காரம் செய்யவும்.– எம்.வசந்தா, சென்னை.—————————–.ஜாக் ஃப்ரூட்ஸ் பர்பி :தேவையானவை : பலாச்சுளைகள் – 15, சர்க்கரை – 1 கப், தேங்காய்த் துருவல் – 1கப், முந்திரிப் பருப்பு – 15, கசகசா – 2 ஸ்பூன், ஏலப்பொடி – அரை ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – சிறிதளவு.செய்முறை : பழுத்த பலாச்சுளைகளை கொட்டை நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி இரண்டு ஸ்பூன் கசகசாவுடன் ஒரு கப் நீரில் வேக விடவும். வெந்தவுடன் நன்கு மசிக்கவும். சர்க்கரை, தேங்காய், அரைத்த விழுது, நெய் சிறிது விட்டு மசித்த பலாப்பழத்தையும் போட்டு நன்கு கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் வறுத்த முந்திரி துண்டுகள், ஏலப்பொடி, ஒரு சிமிட்டு உப்பும் சேர்த்து கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி வில்லைகள் போடவும். வித்தியாசமான ருசியில் சுவையான ஜாக்ஃப்ரூட் பர்பி ரெடி..50 : 50 நாடா :தேவையானவை : பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப் , மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், வெண்ணை – 2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு, சர்க்கரை – ஒரு கப், எண்ணெய் பொரிக்க, அரிசி மாவு.செய்முறை : பொட்டுக்கடலை மாவு, உப்பு, காரப்பொடி, வெண்ணெய் இவற்றுடன் தேவையான நீர் சேர்த்து பிசையவும். நாடா அச்சில் போட்டுப் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுத்து தட்டில் பரவலாகப் பரத்தி வைக்கவும். சர்க்கரையுடன் சிறிது (அரை கப்) நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு முற்றி வரும்போது (இரட்டைக் கம்பிப் பதம் ) இறக்கி தட்டில் பரவலாக வைத்துள்ள ரிப்பன் பக்கோடா மீது ஊற்றவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நாடா மீது சர்க்கரை பாகு பூத்துக் கொண்டு, வெள்ளை வெளேரென்று பார்க்கவும், சுவைக்கவும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவர். இந்த 50 : 50 நாடாவை செய்துதான் பாருங்களேன். இனிப்பு, காரம் இரண்டும் கலந்த சுவையான பட்சணம் ரெடி..பாம்பே காஜா :தேவையானவை : மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 2 கப், சமையல் சோடா – 2 சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் – கால் ஸ்பூன், ஏலப்பொடி – அரை ஸ்பூன்.செய்முறை : உப்பு, மைதா, சோடா ஆகியவற்றை நீர் விட்டு பிசைந்து முக்கோண வடிவில் மடித்து இடவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். சர்க்கரையை பாகு காய்ச்சி, அதில் ஏலப்பொடி, கேசரி பவுடர் கலந்து வைக்கவும். இதில் பொரித்த காஜாக்களை போட்டு ஊற விட்டு எடுக்கவும். ருசியான பாம்பே காஜா தயார்..புழுங்கலரிசி முறுக்கு :பொதுவாக, பச்சரிசியில் மெல்லியதாக முறுக்கு சுற்றுவார்கள். ஆனால், சுவை என்று பார்த்தால் புழுங்கல் அரிசியில் செய்யும் முறுக்குதான் சூப்பராக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் பொரிக்க, 'என்னை சாப்பிடு' என்று கூப்பிடுவது போல் இருக்கும்.தேவையானவை : புழுங்கலரிசி – 5 கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு பிடி, உப்பு – தேவையான அளவு, வெண்ணை – 4 ஸ்பூன், பெருங்காயப்பொடி – அரை ஸ்பூன், தேங்காய் எண்ணெய் பொரிக்க.செய்முறை : அரிசியையும் சிவக்க வறுத்த உளுந்தையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கவும். வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு, தேவையான உப்பு, வெள்ளை எள், வெண்ணெய், பெருங்காயப்பொடி சேர்த்து நீர் கலந்து முறுக்கு மாவு பிசையவும். மாவு காய்ந்து விடாமல் இருக்க மேலாக ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். ஒரு வெள்ளைத் துணியில் கையில் தேங்காய் எண்ணெயை தொட்டுக்கொண்டு முறுக்கு மாவை சிறிது எடுத்து இரண்டு சுற்று அல்லது நான்கு சுற்று சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தேங்காய் எண்ணெய் பொங்கும். ஆதலால் ஒரு கொட்டைப்பாக்களவு புளியை காயும் எண்ணெயில் போட்டு வைக்க எண்ணெய் பொங்காது. முறுக்கு நன்கு வெந்ததும் ஓசை அடங்கிவிடும். அப்போது எடுத்து வைக்கவும். சுவையான தேங்காய் எண்ணெய் மணத்துடன் புழுங்கல் அரிசி கைமுறுக்கு தயார்..தேங்காய் பால் முறுக்கு :தேவையானவை : பச்சரிசி மாவு – 5 கப், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி – ஒரு கப், சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப் பால் – 1 கப், வெண்ணை – 2 ஸ்பூன், எண்ணெய் பொரிக்க.செய்முறை : அரிசி மாவு, உளுத்தம் மாவு, உப்பு, வெண்ணெய், சீரகம், திக்கான தேங்காய்ப்பால் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது தேன்குழல் அச்சில் மாவை போட்டு பிழிந்து எடுக்கவும். இந்த தேங்காய் பால் முறுக்கின் சுவை அலாதியாக இருக்கும். செய்வதும் எளிது..பூண்டு தட்டை :தேவையானவை : அரிசி மாவு – 5 கப், வறுத்து பொடித்த உளுத்தம் மாவு – ஒரு கப், உப்பு – தேவையானது, காரப்பொடி – 2 ஸ்பூன், பூண்டு – 20 பற்கள், வெண்ணை – 2 ஸ்பூன், கருவேப்பிலை – சிறிது, ஊறவைத்த கடலைப் பருப்பு – 4 ஸ்பூன்.செய்முறை : அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, காரப்பொடி, வெண்ணை, அரைத்த பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து தேவையான நீர் விட்டு பிசையவும். அத்துடன் ஊறவைத்த கடலைப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து பிளாஸ்டிக் ஷீட்டில் அல்லது துணியில் தட்டையாகத் தட்டி ஆங்காங்கு குச்சியால் சிறு துளைகள் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான பூண்டு தட்டை ரெடி. பூண்டு சுவை பிடிக்காதவர்கள் வெந்தயக்கீரை பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, புதினா இலைகள் பொடியாக நறுக்கியது ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து தட்டையாகத் தட்ட, இந்த மசாலா தட்டை சுவையாக இருக்கும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி..—————————–.டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….வெல்லப்பாகு காய்ச்சும்போது சிறிது நெய்யில் வெல்லப் பொடியைப் போட்டுக் கிளறினால் பாகு பதமாக வரும்.கேழ்வரகை ஊற வைத்து அரைத்து பால் எடுத்து அல்வா செய்தால் சத்து நிறையக் கிடைக்கும். சுவையாகவும் இருக்கும்.குலோப் ஜாமூன் மாவுடன் முந்திரித் தூள், பாதாம் தூள் கலந்து பிசைந்தால் சுவையும், மணமும் கூடும். சத்தும் கிடைக்கும்.கடலைப் பருப்பு போளிக்கு வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரையைப் பொடித்து சேர்த்தால் போளி சுவை கூடுதலாக, மெலிதாகவும், வெண்மையாகவும் இருக்கும்.பொட்டுக்கடலையைப் பொடித்து வைத்துக் கொண்டால் இனிப்புகள் செய்யப் பயன்படுத்தலாம். நெய்யும் சர்க்கரையும் குறைவாகச் செலவாகும்.– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்..—————————–.கேசரி செய்யும்போது வறுத்த நிலையில் தேவையான சர்க்கரை, தண்ணீர், நெய், கேசரி பவுடர், கொஞ்சம் கோவா சேர்த்துக் கலந்து குக்கரில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். இதை முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்து கேக் போல் வெட்டி சாப்பிடலாம்.பால் பாயசம் செய்யும்போது ஒரு பிடி கார்ன்பிளேக்ஸ் பொடித்துப் போட்டு ஐந்து நிமிடம் கிளறி இறக்கினால் மில்க் மெய்டு உபயோகித்தது போல் சுவையாக இருக்கும். பாயசம் கெட்டியாகவும் ஆகிவிடும்.இனிப்புகள் செய்த பின் சர்க்கரைப் பாகு மீதமிருந்தால் கொஞ்சம் இஞ்சியை அரைத்துப் பாலில் கலந்து ஒரு கிளறு கிளறி எல்லோரும் சாப்பிடலாம். வயிற்றை இதமாக்கும் இனிப்பு இது.தீபாவளிக்கு செய்யும் பலகாரங்கள் அனைத்துக்கும் பச்சரிசிக்கு பதிலாக, புழுங்கல் அரிசி சேர்த்துச் செய்தால் நன்கு கரகரப்பாக இருக்கும்.மொறு மொறு ரிப்பன் பக்கோடா வேண்டுமா? கடலை மாவும் அரிசி மாவும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் மாவைப் பிசைந்து, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். சிறிது டால்டாவும் போட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் இந்த மாவை அச்சில் போட்டு ரிப்பன் பக்கோடா பொரித்து எடுக்கவும்.முறுக்கு, தட்டை என்று எது செய்தாலும் அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, பிறகு மாவைப் பிசைந்தால் எல்லாம் மொறுமொறுப்பாக இருக்கும்.அல்வாவின் மேல் சர்க்கரை பூக்காமலிருக்கு ஜீரா கிளறும்பேது அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்தால் பூக்காது.மிக்ஸருக்கு கறிவேப்பிலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொரித்துப் போட்டால் கலர்புல்லாக கமகமவென இருக்கும்.பாயசம் செய்யும்போது அதில் கொஞ்சம் பாதாம் மிக்ஸ் சேர்த்தால் பாயசம் திக்காக, சுவையாக இருக்கும்.– எஸ்.சித்ரா, சென்னை..—————————–.தீபாவளிக்கு பட்சணம் செய்ய ஆரம்பிக்கும் முன் மாவை ஒரு சீடை அளவுக்கு எடுத்து பிள்ளையார் போல பாவித்து அதில் குங்குமம் வைத்து மானசீகமாக பிள்ளையாரை வணங்கி பட்சணங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.தேங்காய் பர்பி செய்யும்பேது தேங்காயுடன் ஊற வைத்த நிலக்கடலையையும் சேர்த்து அரைத்துச் செய்தால் அதன் ருசியே அலாதிதான்..பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு பண்ணி சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக இருக்கும்.லட்டு செய்வதற்கான கடலை மாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் வால் இல்லாமல் முத்துமுத்தாக பூந்தி எண்ணெயில் விழும்.அதிரசம் எண்ணெயில் போட்டவுடன் பிரிந்துவிட்டால் அதற்குக் காரணம் பாகில் தண்ணீர் அதிகமாகிவிடுவதுதான். அதேபோல், தண்ணீர் குறைந்தாலும் அதிரசம் கறுத்துவிடும். இதற்கு ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் தண்ணீரில் பாகு எடுக்க வேண்டும்.குலோப்ஜாமூன் செய்யும்போது நடுவில் ஒரு கிஸ்மிஸ் பழத்தை வைத்துவிட்டால் நன்றாக வெந்துவிடும். புதுவிதமகவும் இருக்கும்.மிக்சருக்கு அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதனைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் முக்கி பொரிக்க வேண்டும்.உளுந்து வடை செய்யும்போது உளுந்து ஒரு ஆழாக்கு, ஒரு ஸ்பூன் கெட்டி அவல் சேர்த்து அரைத்து வடை செய்ய, மொறு மொறுப்பாகவும் உப்பலாகவும் வரும்.பக்கோடா செய்யும்போது மாவுடன் கொஞ்சம் ரவையையும் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுக்க, டேஸ்ட்டாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.ரவா உருண்டை, பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டு கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.பலகாரங்கள் செய்த பாத்திரங்கள் அடிபிடித்துக்கொண்டால் சமையல் சோடாவைத் தூவி வெந்நீர் விட்டு சிறிது ஊறியதும் தேய்க்க பளிச் என்றாகிவிடும்.– ச.லெட்சுமி, செங்கோட்டை..—————————–.சீடைக்கான டிப்ஸ்.அரிசியை வறுத்திருந்தாலும், மாவை வாணலியில் கோலம் போடும் பதத்திற்கு வறுத்தால் சீடைகள் வெடிக்காது.தேங்காயில் ஓடு இருந்தாலோ, சீரகம், உப்பு போன்றவற்றில் கல், குப்பை இருந்தாலோ சீடை வெடிக்கலாம். அதனால் தேங்காயை நன்கு துருவி, சீரகத்துடன் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி போடலாம். கர்நாடகாவில் தேங்காயுடன் உப்பு, பெருங்காயத்தையும் அரைத்து செய்வார்கள். இந்த சீடை நன்றாக மொழுமொழுவென்று இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.சீடையை உருட்டி துணியில் போடும்போது தரை பிசுக்காகும் வாய்ப்பு உள்ளது. ஒரு தட்டில் கிச்சன் டிஷ்யூ வைத்து சீடைகளை உருட்டி இதில் போடலாம். அது சீக்கிரம் காய்வதுடன் தரையும் பிசுக்கு ஆகாது.சீடையை மிருதுவாக உருட்ட வேண்டும்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீடைகளை நெருக்கமாகக் கொட்டி விடவும். எண்ணெய் அதிகமிருந்து, சீடைகள் குறைவாக இருந்தால் அனைத்து சீடைகளும் வெடித்துவிடும்.உருட்டிய சீடைகளை ஒரு ஊசியால் குத்தி ஓட்டை போடலாம்.சீடைக்கு வெண்ணெய்தான் போட வேண்டும் என்றில்லாமல், தேங்காய் எண்ணெய் விட்டும் செய்யலாம்.தேங்காய்த் துருவலை வாணலியில் பொன் நிறத்துக்கு வறுத்துப் போட்டு செய்தால் சீடை நன்றாக வரும்.மாவை சற்று கரகரப்பாக அரைத்து செய்தாலும் வாயில் போட்டால் சீடை கரையும்.உருட்டிய சீடைகளை சற்று நேரம் காற்றில் ஆற விட, ஒட்டிக்கொள்ளாமல் வருவதுடன் வெடிக்கவும் வெடிக்காது.எண்ணெய் நன்கு சூடான பின் சீடைகளைப் போட்டு, பின் சிம்மில் வைத்துப் பொரித்தால் உள்ளே நன்கு வறுபடுவதுடன் ருசியும் கூடும்.சீடைக்குப் போடும் சீரகமோ, எள்ளோ நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் ஓட்டிப் போட, நன்கு உருட்ட வருவதுடன் ருசியும் கூடும்.– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.