மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரீக்கை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில்,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கல் https://madurai.nic.in/என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
–இவ்வாறூ அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ,ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளாக, ஜல்லிக்கட்டு வீரர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில விதிமுறைக;ள்:
அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.