– பொ.பாலாஜிகணேஷ்.வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்வது அவளது தொழில். அந்தப் பெண்ஸ்ரீ கிருஷ்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். அதோடு, அவள் தினமும் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டுஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து, கோயில் வாசலில் கூடையை வைத்து பகவானை வணங்கிய பிறகே வியாபாரத்துக்குச் செல்வது வழக்கம். தான் பறித்து வந்த பூக்களை மாலையாகக் கட்டி வியாபாரம் செய்வாள். மேலும், தினமும் அந்தக் கோயில் நடை அடைக்கப்படுவதற்கு முன் ஒரு மாலையைக் கட்டி எடுத்துச் சென்று அர்ச்சகரிடம் கொடுப்பாள். அதை அவர் பகவானுக்குச் அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். பிறகு அந்தக் பூக்காரி மிகுந்த மனநிறைவுடன் தனது வீட்டுக்குப் போய்ச் சேர்வாள். இது தினமும் நடைபெறுவது வழக்கம். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு ஆலயம் மூடப்பட்டு விடும்..அன்று விசேஷ தினம் என்பதால், வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்முரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்ததால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. கோயிலிலிருந்து திடீரென்று ஒலித்த மணி சத்தத்தைக் கேட்டு கோயில் நடையை மூடப்போகிறார்கள் என்பதை உணர்ந்தாள். 'வியாபாரத்தில் கவனமாக இருந்து, பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே' என்று பரபரப்புடன் ஒரு அழகான மாலையைக் கட்டி எடுத்துக்கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள். அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னிதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தனர்.."ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து, தீபாராதனை செய்யுங்கள்" என்று வேண்டினாள்..ஆனால் அர்ச்சகர்களோ, "பூஜை முடிந்து, 'யதாஸ் தானம்' செய்து விட்டோம். இனிமேல் சன்னிதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உனது விருப்பப்படியே பகவானுக்கு மாலையைச் சாத்துகிறோம்" என்றனர்.."ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு சாத்துங்கள்" என்று மன்றாடினாள் அந்தப் பூக்காரப் பெண்.."இந்த மாலையை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிக்கொண்டு வா" என்றார் அர்ச்சகர்.."பகவானுக்கு என்றே கட்டப்பட்ட காணிக்கை மாலை இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்" என்று வேண்டினாள் அந்தப் பெண்..எவ்வளவோ கேட்டும் அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். அந்தப் பூக்காரப் பெண் கோயிலின் வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதாள். 'இன்று தனது மாலையை ஸ்வாமிக்கு அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே' என்று வருந்தினாள்..மூடப்பட்ட ஆலயக் கதவில் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பூக்காரப் பெண், பகவானைப் பிரார்த்தனை செய்துவிட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தனது இருப்பிடம் சேர்ந்தாள்..மறுநாள் விடியற்காலை அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் ஸ்வாமி திருமேனியில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை..'மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றினால்தானே ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய முடியும். ஆனால், ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே' என்று அர்ச்சகர் தவித்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலரும் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர். அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயித்தனர். 'ஏதோ அபசாரம் நடந்திருக்கிறது. அதனால்தான் பகவான் சோதனை செய்கிறார்' என்று எண்ணினார்கள்..அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரப் பெண்ணின் நினைவு வந்தது. 'அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக்கொண்டு சென்று விட்டோமே… எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது?' என்று புரியாமல் தவித்தனர். அதை அங்கு வந்த பக்தர்களிடமும் கூறினர். அதைக்கேட்ட பக்தர்கள், "அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்" என்றனர். அர்ச்சகர் பூக்காரியைத் தேடிச் சென்றார்..அன்றும் வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறி, "நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை நின்று விடும்" என்றார்..அதைக்கேட்ட அந்தப் பூக்காரப் பெண் ஆலயத்திற்கு ஓடி வந்து நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியாமல் தவித்தாள். "உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவான் தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது" என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினர்..அர்ச்சகர் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தார். தீபத்தின் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது. தீபாராதனைக்குப் பிறகு பூக்காரப் பெண்ணுக்கு துளசி தீர்த்தம் கொடுத்த அர்ச்சகர், "பகவனே, இனியாவது தடையின்றி அபிஷேகம் நடைபெற அனுக்கிரகம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அந்த மாலை சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. அந்தப் பூக்காரப் பெண்ணின் உண்மையான பக்தியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர்.
– பொ.பாலாஜிகணேஷ்.வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்வது அவளது தொழில். அந்தப் பெண்ஸ்ரீ கிருஷ்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். அதோடு, அவள் தினமும் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டுஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து, கோயில் வாசலில் கூடையை வைத்து பகவானை வணங்கிய பிறகே வியாபாரத்துக்குச் செல்வது வழக்கம். தான் பறித்து வந்த பூக்களை மாலையாகக் கட்டி வியாபாரம் செய்வாள். மேலும், தினமும் அந்தக் கோயில் நடை அடைக்கப்படுவதற்கு முன் ஒரு மாலையைக் கட்டி எடுத்துச் சென்று அர்ச்சகரிடம் கொடுப்பாள். அதை அவர் பகவானுக்குச் அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். பிறகு அந்தக் பூக்காரி மிகுந்த மனநிறைவுடன் தனது வீட்டுக்குப் போய்ச் சேர்வாள். இது தினமும் நடைபெறுவது வழக்கம். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு ஆலயம் மூடப்பட்டு விடும்..அன்று விசேஷ தினம் என்பதால், வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்முரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்ததால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. கோயிலிலிருந்து திடீரென்று ஒலித்த மணி சத்தத்தைக் கேட்டு கோயில் நடையை மூடப்போகிறார்கள் என்பதை உணர்ந்தாள். 'வியாபாரத்தில் கவனமாக இருந்து, பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே' என்று பரபரப்புடன் ஒரு அழகான மாலையைக் கட்டி எடுத்துக்கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள். அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னிதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தனர்.."ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து, தீபாராதனை செய்யுங்கள்" என்று வேண்டினாள்..ஆனால் அர்ச்சகர்களோ, "பூஜை முடிந்து, 'யதாஸ் தானம்' செய்து விட்டோம். இனிமேல் சன்னிதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உனது விருப்பப்படியே பகவானுக்கு மாலையைச் சாத்துகிறோம்" என்றனர்.."ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு சாத்துங்கள்" என்று மன்றாடினாள் அந்தப் பூக்காரப் பெண்.."இந்த மாலையை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிக்கொண்டு வா" என்றார் அர்ச்சகர்.."பகவானுக்கு என்றே கட்டப்பட்ட காணிக்கை மாலை இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்" என்று வேண்டினாள் அந்தப் பெண்..எவ்வளவோ கேட்டும் அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். அந்தப் பூக்காரப் பெண் கோயிலின் வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதாள். 'இன்று தனது மாலையை ஸ்வாமிக்கு அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே' என்று வருந்தினாள்..மூடப்பட்ட ஆலயக் கதவில் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பூக்காரப் பெண், பகவானைப் பிரார்த்தனை செய்துவிட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தனது இருப்பிடம் சேர்ந்தாள்..மறுநாள் விடியற்காலை அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் ஸ்வாமி திருமேனியில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை..'மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றினால்தானே ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய முடியும். ஆனால், ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே' என்று அர்ச்சகர் தவித்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலரும் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர். அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயித்தனர். 'ஏதோ அபசாரம் நடந்திருக்கிறது. அதனால்தான் பகவான் சோதனை செய்கிறார்' என்று எண்ணினார்கள்..அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரப் பெண்ணின் நினைவு வந்தது. 'அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக்கொண்டு சென்று விட்டோமே… எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது?' என்று புரியாமல் தவித்தனர். அதை அங்கு வந்த பக்தர்களிடமும் கூறினர். அதைக்கேட்ட பக்தர்கள், "அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்" என்றனர். அர்ச்சகர் பூக்காரியைத் தேடிச் சென்றார்..அன்றும் வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறி, "நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை நின்று விடும்" என்றார்..அதைக்கேட்ட அந்தப் பூக்காரப் பெண் ஆலயத்திற்கு ஓடி வந்து நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியாமல் தவித்தாள். "உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவான் தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது" என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினர்..அர்ச்சகர் பகவானுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தார். தீபத்தின் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது. தீபாராதனைக்குப் பிறகு பூக்காரப் பெண்ணுக்கு துளசி தீர்த்தம் கொடுத்த அர்ச்சகர், "பகவனே, இனியாவது தடையின்றி அபிஷேகம் நடைபெற அனுக்கிரகம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அந்த மாலை சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. அந்தப் பூக்காரப் பெண்ணின் உண்மையான பக்தியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர்.