– பே.சண்முகம்.எது மௌன விரதம்?.ஒருவர் மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு நல்ல விரதம்தான். ஆனால், வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமேயானால் அது மௌன விரதம் ஆகாது. அதனால் எந்தப் பலனும் இல்லை..– பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி உரையிலிருந்து….உயிர்களை நடத்தும் கடவுள்!.வண்டிக்குள் மாடு தானே நுழையாது. வண்டியும் தானாகச் சென்று மாட்டின் மேல் ஏறிக்கொள்ளாது. இரண்டையும் பூட்டி ஓட்டுகிறான் மனிதன். அந்த வண்டி போன்றது நம் உடம்பு. மாடு போன்றது உயிர். மூக்குக் கயிற்றைப் போன்றது சுவாசம். கயிற்றைப் பிடித்து மாட்டை மனிதன் ஓட்டுவது போல சுவாசம் என்ற கயிற்றைப் பிடித்து உயிர்களை நடத்துகிறார் கடவுள்..– திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து….இளமையில் இறைவனைத் தேடு!.இறைவன் மீது அன்பு செலுத்த இளமையிலேயே நேரம் ஒதுக்கி இறைவனைச் சார்ந்து வாழ்ந்து பக்திப்பயிர் வளர்ப்பவர்கள் முதுமையை உற்சாகமாக வரவேற்று ஏற்றுக்கொள்கிறார்கள். கூடம் நிறைய இறைந்து கிடக்கும் உயிரற்ற விளையாட்டுப் பொருட்களில் மயங்கும் குழந்தை, தாயை சிறிது நேரத்துக்கு மறந்து விடுகிறது. விளையாட்டு சலித்ததும் தாயை நோக்கி அழுது கொண்டே வருகிறது. இதேபோல், உலகப் பொருட்களில் மயங்கி இறைவனை மறந்து விடுகிறோம். உலகப் பொருட்கள் சலித்துப்போனதும் இறைவனைத் தேடுகிறோம்..– சுவாமி ஓங்காரனந்தா அருளுரையிலிருந்து….வாழ்க்கை சூத்திரம்.பரந்த உலகில் பணிவும் துணிவும்தான் வாழ்வதற்கான சூத்திரம். தேவைப்படும்போது நிமிர்ந்தெழுந்து சிங்கமாக முழங்கினால்தான் தீமைகளை அகற்ற முடியும். அதேபோல், வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையும், சவால்களையும் மௌனமாக, ஆனால் உறுதியான நெஞ்சுடன் இருந்து அவற்றை வெற்றிக் கனிகளாக மாற்றும் திறமைதான் நமக்கு வேண்டும்..– சுவாமி விமூர்த்தானந்தர் சொற்பொழிவிலிருந்து….குருவருள் இருக்க திருவருள் நிச்சயம்!.நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து அது நிலைத்திருக்க வேண்டுமா? முதலில் குருவைத் தேடுங்கள். ஏக்கமும் ஆர்வமும் பொங்கத் தேடுங்கள். குரு கிடைக்கவும் குருவருள் வேண்டும். அந்தக் குருவிடம் உங்களைப் பரிபூரணமாக ஒப்படையுங்கள். பிறகு, குருவருள் இருக்க திருவருள் நிச்சயம் என்பதை உணருவீர்கள்..– வேம்பத்தூர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உபன்யாசத்திலிருந்து…
– பே.சண்முகம்.எது மௌன விரதம்?.ஒருவர் மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு நல்ல விரதம்தான். ஆனால், வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமேயானால் அது மௌன விரதம் ஆகாது. அதனால் எந்தப் பலனும் இல்லை..– பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி உரையிலிருந்து….உயிர்களை நடத்தும் கடவுள்!.வண்டிக்குள் மாடு தானே நுழையாது. வண்டியும் தானாகச் சென்று மாட்டின் மேல் ஏறிக்கொள்ளாது. இரண்டையும் பூட்டி ஓட்டுகிறான் மனிதன். அந்த வண்டி போன்றது நம் உடம்பு. மாடு போன்றது உயிர். மூக்குக் கயிற்றைப் போன்றது சுவாசம். கயிற்றைப் பிடித்து மாட்டை மனிதன் ஓட்டுவது போல சுவாசம் என்ற கயிற்றைப் பிடித்து உயிர்களை நடத்துகிறார் கடவுள்..– திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து….இளமையில் இறைவனைத் தேடு!.இறைவன் மீது அன்பு செலுத்த இளமையிலேயே நேரம் ஒதுக்கி இறைவனைச் சார்ந்து வாழ்ந்து பக்திப்பயிர் வளர்ப்பவர்கள் முதுமையை உற்சாகமாக வரவேற்று ஏற்றுக்கொள்கிறார்கள். கூடம் நிறைய இறைந்து கிடக்கும் உயிரற்ற விளையாட்டுப் பொருட்களில் மயங்கும் குழந்தை, தாயை சிறிது நேரத்துக்கு மறந்து விடுகிறது. விளையாட்டு சலித்ததும் தாயை நோக்கி அழுது கொண்டே வருகிறது. இதேபோல், உலகப் பொருட்களில் மயங்கி இறைவனை மறந்து விடுகிறோம். உலகப் பொருட்கள் சலித்துப்போனதும் இறைவனைத் தேடுகிறோம்..– சுவாமி ஓங்காரனந்தா அருளுரையிலிருந்து….வாழ்க்கை சூத்திரம்.பரந்த உலகில் பணிவும் துணிவும்தான் வாழ்வதற்கான சூத்திரம். தேவைப்படும்போது நிமிர்ந்தெழுந்து சிங்கமாக முழங்கினால்தான் தீமைகளை அகற்ற முடியும். அதேபோல், வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையும், சவால்களையும் மௌனமாக, ஆனால் உறுதியான நெஞ்சுடன் இருந்து அவற்றை வெற்றிக் கனிகளாக மாற்றும் திறமைதான் நமக்கு வேண்டும்..– சுவாமி விமூர்த்தானந்தர் சொற்பொழிவிலிருந்து….குருவருள் இருக்க திருவருள் நிச்சயம்!.நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து அது நிலைத்திருக்க வேண்டுமா? முதலில் குருவைத் தேடுங்கள். ஏக்கமும் ஆர்வமும் பொங்கத் தேடுங்கள். குரு கிடைக்கவும் குருவருள் வேண்டும். அந்தக் குருவிடம் உங்களைப் பரிபூரணமாக ஒப்படையுங்கள். பிறகு, குருவருள் இருக்க திருவருள் நிச்சயம் என்பதை உணருவீர்கள்..– வேம்பத்தூர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உபன்யாசத்திலிருந்து…