– லதானந்த்.மஹாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் நகருக்குச் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் பஞ்சவடி. இந்தத் திருத்தலம் கோதாவரி புனித நதியின் இடது கரையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்திருக்கும் ஐந்து ஆலமரங்களின் பெயரைக் கொண்டே இந்தத் திருத்தலம் பஞ்சவடி என அழைக்கப்படுகிறது. பஞ்சவடி எனும் தலப்பெயர், 'பாஞ்ச்' மற்றும் 'வடி' என்ற இரு வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்ததாகும். பாஞ்ச் என்றால் ஐந்து என்று பொருள். வடி என்றால் ஆலமரம். இந்த ஐந்து ஆலமரங்களில் இருந்து ஏராளமான மரங்கள் உற்பத்தியானதாகப் புராணக் குறிப்புகள் உள்ளன. இந்த மரங்கள் ராமாயணக் காலமான திரேதா யுகத்தில் இருந்து இங்கே இருப்பதாக ஐதீகம்..அயோத்தி அரசன் தசரதனின் மனைவியருள் ஒருத்தியான கைகேயி, பணிப்பெண் மந்தரையின் சூழ்ச்சிக்குப் பலியாகிறாள். தனது மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் தசரதனிடம் இரு வரம் பெற்றது ராமாயணம் படித்தவர் அனைவரும் அறிந்ததே. அதன்படி ஸ்ரீராமன் தனது மனைவி சீதா தேவி மற்றும் தம்பி லட்சுமணனோடு வனவாசம் சென்றபோது, 'ஜனஸ்தானம்' என்னும் இடத்துக்கு வருகையில், அகத்தியரின் ஆலோசனையின்படி அங்கேயே தங்குகிறார். அங்கே ஐந்து ஆலமரங்கள் அழகுற வளர்ந்திருந்தன. அதனால் இந்த இடத்தை, 'பஞ்சவடி' என அழைத்தனர்..ராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் துண்டித்த இடமும் இங்குதான் உள்ளது. அதற்குப் பழிவாங்கவே இங்கிருந்து சீதையை இலங்கைக்கு ராவணன் கடத்திச் சென்றதாக ராமாயணம் சொல்கிறது. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே, 'சீதா குகை' என்ற இடம் உள்ளது. இந்த ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கபாலீஸ்வரர், கங்கை – கோதாவரி, தபோவனம், சுந்தர நாராயணர், தால்குடேஸ்வரர், நரசிங்கர், ராமகுண்டம், பஞ்சமுக அனுமன், பத்ரகாளி ஆகியோருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் அருகிலேயே காந்தி நினைவு மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..இந்தக் கோயிலின் அருகிலேயே வெள்ளை ராமர் மற்றும் கருப்பு ராமர் என இரு ஸ்ரீராமர் சன்னிதிகள் உள்ளன. வெள்ளை ராமர் கோயிலில் வெண் சலவைக் கல்லால் ஸ்ரீராமரின் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருப்பு ராமர் கோயில் முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீராமபிரானுக்கு எள், குங்குமம், மஞ்சள் மற்றும் சர்க்கரை ஆகியவை படைக்கப்படுகின்றன. ஸ்ரீராமரின் வனவாசத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயிலில் பதினான்கு படிக்கட்டுகள் அமைந்துள்ளன. தவிர, கோயிலில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு..இந்தக் கோயிலின் அருகிலேயே அருணா, வருணா, கோதாவரி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. இம்மூன்று நதிகளில் அருணா மற்றும் வருணா ஆகியன பூமிக்கடியில் பாய்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் ஓடும் கோதாவரி நதியில்தான் தசரதனின் அஸ்தியை ஸ்ரீராமர் கரைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இறந்துபோன உறவினர்களின் அஸ்தியை பலரும் இங்கு பாயும் கோதாவரி நதியில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர்களின் ஆன்மா மோட்ச கதியை அடையும் என்பது பக்தர்களின் கருத்து..அமைவிடம்: நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. நாசிக் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
– லதானந்த்.மஹாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் நகருக்குச் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் பஞ்சவடி. இந்தத் திருத்தலம் கோதாவரி புனித நதியின் இடது கரையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்திருக்கும் ஐந்து ஆலமரங்களின் பெயரைக் கொண்டே இந்தத் திருத்தலம் பஞ்சவடி என அழைக்கப்படுகிறது. பஞ்சவடி எனும் தலப்பெயர், 'பாஞ்ச்' மற்றும் 'வடி' என்ற இரு வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்ததாகும். பாஞ்ச் என்றால் ஐந்து என்று பொருள். வடி என்றால் ஆலமரம். இந்த ஐந்து ஆலமரங்களில் இருந்து ஏராளமான மரங்கள் உற்பத்தியானதாகப் புராணக் குறிப்புகள் உள்ளன. இந்த மரங்கள் ராமாயணக் காலமான திரேதா யுகத்தில் இருந்து இங்கே இருப்பதாக ஐதீகம்..அயோத்தி அரசன் தசரதனின் மனைவியருள் ஒருத்தியான கைகேயி, பணிப்பெண் மந்தரையின் சூழ்ச்சிக்குப் பலியாகிறாள். தனது மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் தசரதனிடம் இரு வரம் பெற்றது ராமாயணம் படித்தவர் அனைவரும் அறிந்ததே. அதன்படி ஸ்ரீராமன் தனது மனைவி சீதா தேவி மற்றும் தம்பி லட்சுமணனோடு வனவாசம் சென்றபோது, 'ஜனஸ்தானம்' என்னும் இடத்துக்கு வருகையில், அகத்தியரின் ஆலோசனையின்படி அங்கேயே தங்குகிறார். அங்கே ஐந்து ஆலமரங்கள் அழகுற வளர்ந்திருந்தன. அதனால் இந்த இடத்தை, 'பஞ்சவடி' என அழைத்தனர்..ராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் துண்டித்த இடமும் இங்குதான் உள்ளது. அதற்குப் பழிவாங்கவே இங்கிருந்து சீதையை இலங்கைக்கு ராவணன் கடத்திச் சென்றதாக ராமாயணம் சொல்கிறது. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே, 'சீதா குகை' என்ற இடம் உள்ளது. இந்த ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கபாலீஸ்வரர், கங்கை – கோதாவரி, தபோவனம், சுந்தர நாராயணர், தால்குடேஸ்வரர், நரசிங்கர், ராமகுண்டம், பஞ்சமுக அனுமன், பத்ரகாளி ஆகியோருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் அருகிலேயே காந்தி நினைவு மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..இந்தக் கோயிலின் அருகிலேயே வெள்ளை ராமர் மற்றும் கருப்பு ராமர் என இரு ஸ்ரீராமர் சன்னிதிகள் உள்ளன. வெள்ளை ராமர் கோயிலில் வெண் சலவைக் கல்லால் ஸ்ரீராமரின் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருப்பு ராமர் கோயில் முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீராமபிரானுக்கு எள், குங்குமம், மஞ்சள் மற்றும் சர்க்கரை ஆகியவை படைக்கப்படுகின்றன. ஸ்ரீராமரின் வனவாசத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயிலில் பதினான்கு படிக்கட்டுகள் அமைந்துள்ளன. தவிர, கோயிலில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு..இந்தக் கோயிலின் அருகிலேயே அருணா, வருணா, கோதாவரி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. இம்மூன்று நதிகளில் அருணா மற்றும் வருணா ஆகியன பூமிக்கடியில் பாய்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் ஓடும் கோதாவரி நதியில்தான் தசரதனின் அஸ்தியை ஸ்ரீராமர் கரைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இறந்துபோன உறவினர்களின் அஸ்தியை பலரும் இங்கு பாயும் கோதாவரி நதியில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர்களின் ஆன்மா மோட்ச கதியை அடையும் என்பது பக்தர்களின் கருத்து..அமைவிடம்: நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. நாசிக் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.