– ராஜி ராதா.உத்தரகான்ட் மாநிலம், ராம் நகரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கர்ஜியா எனும் கிராமத்தில், கோசி ஆற்றின் நடுவே உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது கர்ஜியா தேவி திருக்கோயில்..ஒருசமயம் இப்பகுதியில் சன்யாசி ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கு ஓடும்கோசி ஆற்றைக் கடந்து, அருகில் அமைந்த குன்றின் மீது தவம் செய்வது வழக்கம். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயம் அவரால் அந்த மலைக்குச் சென்று தவம் செய்ய முடியாது. இதனால் வருத்தமுற்ற சன்யாசி தமது மனக்குறையை சக்தி தேவியிடம் முறையிட்டார்..ஒரு நாள் இரவு அவரது கனவில் தோன்றிய சக்தி தேவி, "ஆற்றின் வெள்ளப் பெருக்கில் களி மண் மற்றும் ஈரம் குழைந்த மண்ணால் ஆன மிகப்பெரிய உருண்டை ஒன்று அடித்து வரும். அந்த உருண்டையின் மண்ணை நீக்கிப் பார்த்தால் அதனுள் ஒரு சிலை இருக்கும். அந்த சிலைக்கு, 'கிரிஜா' எனப் பெயர் சூட்டி, அதை இந்தக் குன்றின் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா" எனக் கூறி மறைந்தாள்..இந்தத் தகவலை சன்யாசி அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனிடம் கூறினார். மன்னனும், அடுத்த முறை ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண் உருண்டையை எடுக்கவும், சிலையை பிரதிஷ்டை செய்து உதவுவதாகவும் வாக்குக் கொடுத்தான்..அதன்படியே அடுத்த முறை ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஒரு பெரிய மண் உருண்டை அடித்து வந்தது. அதனை மன்னனின் பணியாட்கள் தடுத்து நிறுத்தி அதன் மீது இருந்த மண்ணை நீக்கிப் பார்த்தபோது அதனுள் ஒரு அம்பிகையின் சிலை இருக்கக் கண்டார்கள். சக்தி தேவியின் ஆணைப்படி அந்தச் சிலையை குன்றின் உச்சியில் பிரதிஷ்டை செய்து, ஒரு சிறிய கோயிலையும் எழுப்பினான் மன்னன். அதோடு, அந்தக் குன்றின் மீது ஏறிச் சென்று அம்பிகையை வழிபட வசதியாக 70 படிகள் அமைத்துக் கொடுத்தான். பிற்காலத்தில் இக்கோயில் பலமுறை புனருத்துவம் செய்யப்பட்டது..மேலும், மழைக்காலத்தில் கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்ல சிரமமாக இருந்ததால் கோயில் கமிட்டியினர் ஆற்றின் கரையிலிருந்து குன்றுக்குச் செல்ல ஒரு பாலம் கட்டினர். இதனால் தற்போது வரை பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வர இந்தப் பாலம் மிகவும் உதவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால், குன்றின் மீது கிரிஜா தேவியை பிரதிஷ்டை செய்த பிறகு இன்று வரை ஆற்றில் பெரிய வெள்ளப்பெருக்கே ஏற்படவில்லை என்பதுதான்..இந்தக் கோயில் 1840ம் ஆண்டு வாக்கில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் வழிபாடு இன்றி பாழடைந்த நிலையில் இருந்த இக்கோயில் மீண்டும் 1940ம் ஆண்டு முதல் புத்துயிர் பெற்று வழிபாடுகள் நடைபெறலாயின என்கிறது இக்கோயில் வரலாறு,.கோசி நதியில் நீராடி விட்டு பாலத்தின் மீது வந்து, குன்றின் அடிவாரத்தை அடைந்தால் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல தொடங்குகிறது 70 படிகள். வழி நெடுகிலும் கடைகள் உண்டு. அவற்றில் அம்பிகை அர்ச்சனைக்குரிய அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. கோயிலுக்குள் நுழைந்தால் நேராக கருவறைதான்..வடநாட்டிற்கே உரிய சலவைக் கல்லால் ஆன அழகான அம்பிகையின் திருச்சிலை!தங்க வண்ண பார்டர் போட்ட சிவப்புத் துணிகளைக் கொண்டு அம்மனை அலங்காரம் செய்துள்ளனர். மலர் மாலைகள் அன்னைக்கு அழகு செய்ய ஒரு முறைக்கு இருமுறை அம்பிகையை நின்று நிதானமாக தரிசிக்கலாம். அருகிலேயே சிவபெருமான், சரஸ்வதி தேவி, கணேஷ் மூர்த்தி ஆகியோருக்கும் திருச்சிலைகள் உள்ளன! மேலும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமி நாராயண் சிலை ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இது கருப்பு கருங்கல்லால் ஆன மிக அழகான சிலையாகும்..அம்பிகையின் தரிசனம் முடித்து கோயிலை விட்டு வெளியே வந்தால் கீழே நதியின் அழகுத் தோற்றத்தையும், சுற்றிலும் காட்சி தரும் இயற்கைக் காட்சியையும், பறவைகளின் இனிய கூக்குரலையும் கேட்டு ரசிக்கலாம். இந்தக் கோயிலில் அவல்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி இந்தக் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதுசமயம் இக்கோயில் சார்ந்து மேளா ஒன்றும் நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை தரிசிக்க வருகை தருகின்றனர். நவராத்திரி விழாவும் இக்கோயிலில் மிகவும் விசேஷம். இந்தக் கோயிலின் அருகிலேயே, 'ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம்' உள்ளது. அதனைப் பார்க்க வருபவர்களும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்..அமைவிடம்: நைநிடாவிலிருந்து 75 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. ராம் நகரிலிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் பேருந்து மூலம் கோயிலை அடையலாம்..தரிசன நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.
– ராஜி ராதா.உத்தரகான்ட் மாநிலம், ராம் நகரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கர்ஜியா எனும் கிராமத்தில், கோசி ஆற்றின் நடுவே உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது கர்ஜியா தேவி திருக்கோயில்..ஒருசமயம் இப்பகுதியில் சன்யாசி ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கு ஓடும்கோசி ஆற்றைக் கடந்து, அருகில் அமைந்த குன்றின் மீது தவம் செய்வது வழக்கம். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயம் அவரால் அந்த மலைக்குச் சென்று தவம் செய்ய முடியாது. இதனால் வருத்தமுற்ற சன்யாசி தமது மனக்குறையை சக்தி தேவியிடம் முறையிட்டார்..ஒரு நாள் இரவு அவரது கனவில் தோன்றிய சக்தி தேவி, "ஆற்றின் வெள்ளப் பெருக்கில் களி மண் மற்றும் ஈரம் குழைந்த மண்ணால் ஆன மிகப்பெரிய உருண்டை ஒன்று அடித்து வரும். அந்த உருண்டையின் மண்ணை நீக்கிப் பார்த்தால் அதனுள் ஒரு சிலை இருக்கும். அந்த சிலைக்கு, 'கிரிஜா' எனப் பெயர் சூட்டி, அதை இந்தக் குன்றின் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா" எனக் கூறி மறைந்தாள்..இந்தத் தகவலை சன்யாசி அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனிடம் கூறினார். மன்னனும், அடுத்த முறை ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண் உருண்டையை எடுக்கவும், சிலையை பிரதிஷ்டை செய்து உதவுவதாகவும் வாக்குக் கொடுத்தான்..அதன்படியே அடுத்த முறை ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஒரு பெரிய மண் உருண்டை அடித்து வந்தது. அதனை மன்னனின் பணியாட்கள் தடுத்து நிறுத்தி அதன் மீது இருந்த மண்ணை நீக்கிப் பார்த்தபோது அதனுள் ஒரு அம்பிகையின் சிலை இருக்கக் கண்டார்கள். சக்தி தேவியின் ஆணைப்படி அந்தச் சிலையை குன்றின் உச்சியில் பிரதிஷ்டை செய்து, ஒரு சிறிய கோயிலையும் எழுப்பினான் மன்னன். அதோடு, அந்தக் குன்றின் மீது ஏறிச் சென்று அம்பிகையை வழிபட வசதியாக 70 படிகள் அமைத்துக் கொடுத்தான். பிற்காலத்தில் இக்கோயில் பலமுறை புனருத்துவம் செய்யப்பட்டது..மேலும், மழைக்காலத்தில் கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்ல சிரமமாக இருந்ததால் கோயில் கமிட்டியினர் ஆற்றின் கரையிலிருந்து குன்றுக்குச் செல்ல ஒரு பாலம் கட்டினர். இதனால் தற்போது வரை பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வர இந்தப் பாலம் மிகவும் உதவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால், குன்றின் மீது கிரிஜா தேவியை பிரதிஷ்டை செய்த பிறகு இன்று வரை ஆற்றில் பெரிய வெள்ளப்பெருக்கே ஏற்படவில்லை என்பதுதான்..இந்தக் கோயில் 1840ம் ஆண்டு வாக்கில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் வழிபாடு இன்றி பாழடைந்த நிலையில் இருந்த இக்கோயில் மீண்டும் 1940ம் ஆண்டு முதல் புத்துயிர் பெற்று வழிபாடுகள் நடைபெறலாயின என்கிறது இக்கோயில் வரலாறு,.கோசி நதியில் நீராடி விட்டு பாலத்தின் மீது வந்து, குன்றின் அடிவாரத்தை அடைந்தால் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல தொடங்குகிறது 70 படிகள். வழி நெடுகிலும் கடைகள் உண்டு. அவற்றில் அம்பிகை அர்ச்சனைக்குரிய அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. கோயிலுக்குள் நுழைந்தால் நேராக கருவறைதான்..வடநாட்டிற்கே உரிய சலவைக் கல்லால் ஆன அழகான அம்பிகையின் திருச்சிலை!தங்க வண்ண பார்டர் போட்ட சிவப்புத் துணிகளைக் கொண்டு அம்மனை அலங்காரம் செய்துள்ளனர். மலர் மாலைகள் அன்னைக்கு அழகு செய்ய ஒரு முறைக்கு இருமுறை அம்பிகையை நின்று நிதானமாக தரிசிக்கலாம். அருகிலேயே சிவபெருமான், சரஸ்வதி தேவி, கணேஷ் மூர்த்தி ஆகியோருக்கும் திருச்சிலைகள் உள்ளன! மேலும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமி நாராயண் சிலை ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இது கருப்பு கருங்கல்லால் ஆன மிக அழகான சிலையாகும்..அம்பிகையின் தரிசனம் முடித்து கோயிலை விட்டு வெளியே வந்தால் கீழே நதியின் அழகுத் தோற்றத்தையும், சுற்றிலும் காட்சி தரும் இயற்கைக் காட்சியையும், பறவைகளின் இனிய கூக்குரலையும் கேட்டு ரசிக்கலாம். இந்தக் கோயிலில் அவல்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி இந்தக் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதுசமயம் இக்கோயில் சார்ந்து மேளா ஒன்றும் நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை தரிசிக்க வருகை தருகின்றனர். நவராத்திரி விழாவும் இக்கோயிலில் மிகவும் விசேஷம். இந்தக் கோயிலின் அருகிலேயே, 'ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம்' உள்ளது. அதனைப் பார்க்க வருபவர்களும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்..அமைவிடம்: நைநிடாவிலிருந்து 75 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. ராம் நகரிலிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் பேருந்து மூலம் கோயிலை அடையலாம்..தரிசன நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.