– தஞ்சை இரா.சுரேஷ்.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாக, தஞ்சாவூர் வடக்கு வீதியின் அருகில் அமைந்த ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. பல்வேறு சரித்திரச் சம்பவங்கள் நிகழப்பெற்ற ஆலயமாகவும், ஏராளமான தெய்வ கற்சிலைகள் அமைந்த ஒரே கோயிலாக இது திகழ்கிறது. தஞ்சையில் இந்தக் கோயிலுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும் மராட்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கியது. தஞ்சையின் கோட்டை தெய்வமாக இக்கோயில் அம்மன் திகழ்வது சிறப்பு..கோயில் ராஜகோபுர வாயில் வழியே சென்றால் வலதுபுறத்தில் அருள்மிகுஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதி வளாகத்தில் தஞ்சாவூரில் மிக உயரமான கீர்த்தி பெற்ற சிவ துர்கை அம்மன் மற்றும் விஷ்ணுதுர்கை அம்மன் மற்றும் கோலாலம்பூர் மகாலெட்சுமி அம்மன் மற்றும் மார்த்தாண்ட பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. அருள்மிகு ஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மன் எட்டு திருக்கரங்களுடன் மகிஷனை தனது காலால் வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்..நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் தங்களது இஷ்டதெய்வமாக இந்த அம்மனை வழிபட்டார்கள். அதோடு, போருக்குச் செல்லும் முன்னர் இந்த அம்மனை வழிபட்டுச் சென்று வெற்றிகளைக் குவித்தார்கள். எதிரிகள் தொல்லை நீங்க இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், அமாவாசை, பௌர்ணமி தேய்பிறையில் இந்தச் சன்னிதியில் ஒன்பது எலுமிச்சை பழ தீபமேற்றி ஒன்பது வாரங்கள் வழிபட்டு வர, எண்ணியவை எண்ணியபடி கைகூடும் என்பது ஐதீகம். மேலும், ராகு-கேது தோஷங்கள், களத்திர தோஷம், திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும். எதிரிகள் தொல்லை ஒழியும். உடல் ஆரோக்கியம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..தஞ்சையில் இக்கோயிலில் மட்டுமே விஷ்ணு துர்கை, கோலாலம்பூர் மகாலெட்சுமி, சிவதுர்கை மற்றும் பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி மற்றும் மார்த்தாண்ட பைரவர் ஆகியோருக்கு ஒருசேர சன்னிதி அமைந்துள்ளது. பொதுவாக, துர்கை சன்னிதி வடக்கு நோக்கிய வண்ணமே இருக்கும். ஆனால், இக்கோயிலில் துர்கை திசை மாறி கிழக்கு நோக்கி காட்சி தருவது சிறப்பு. தஞ்சை சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கையம்மன் திருச்சிலைகள் இந்தக் கோயிலில் மட்டுமே காட்சி தருவது சிறப்பம்சம்..பிறவிக்கடன்கள் நீங்கவும், கர்மவினைகள் அகலவும் ராகு காலத்தில் பகுளாமுகி காளியம்மன், சிவதுர்கை, விஷ்ணுதுர்கை, கோலாலம்பூர் மகாலெட்சுமி அம்மன் மார்த்தாண்ட பைரவர் ஆகியோரை ஒருசேர ஒரே சன்னிதியில் தரிசனம் செய்ய முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். திசை மாறிய இந்த துர்கை அம்மன் தரிசனத்தால் பக்தர்கள் பலரது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலை பக்தர்கள் காளியம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர். கோயில் கருவறையில் சுதர்சனவல்லி மற்றும் விஜயவல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்..மாதந்தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதுசமயம் பக்தர்களுக்கு அபிஷேகத் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தம் ஏவல், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அருமருந்தாக விளங்குகிறது. சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது குறிப்பிட்டதக்கது. சன்னிதிக்கு எதிரே ஒன்பது தீபங்கள் ஏற்றி ஒன்பது வாரங்கள் வழிபாடு செய்தால், நினைத்த நல்ல காரியங்கள் யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்..கோயிலின் பின்புறம் மராட்டிய மன்னர்களின் வழிபாட்டு தெய்வமான சிவேந்திரர் சன்னிதி அமைந்துள்ளது. அறுகோண வடிவிலான கற்சிலையில் சிவபெருமான்தேவியருடன் இருக்கும் அமைப்பே சிவேந்திரர் ஆகும். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் சிவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி மற்றும் தை மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அருள்மிகு ஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனை வழிபட்டால் வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும் என்பது திண்ணம்..அமைவிடம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ., தஞ்சாவூர் அரண்மனை மற்றும் சரஸ்வதி மகாலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது..தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8.30 மணி வரை.
– தஞ்சை இரா.சுரேஷ்.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாக, தஞ்சாவூர் வடக்கு வீதியின் அருகில் அமைந்த ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. பல்வேறு சரித்திரச் சம்பவங்கள் நிகழப்பெற்ற ஆலயமாகவும், ஏராளமான தெய்வ கற்சிலைகள் அமைந்த ஒரே கோயிலாக இது திகழ்கிறது. தஞ்சையில் இந்தக் கோயிலுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும் மராட்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கியது. தஞ்சையின் கோட்டை தெய்வமாக இக்கோயில் அம்மன் திகழ்வது சிறப்பு..கோயில் ராஜகோபுர வாயில் வழியே சென்றால் வலதுபுறத்தில் அருள்மிகுஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதி வளாகத்தில் தஞ்சாவூரில் மிக உயரமான கீர்த்தி பெற்ற சிவ துர்கை அம்மன் மற்றும் விஷ்ணுதுர்கை அம்மன் மற்றும் கோலாலம்பூர் மகாலெட்சுமி அம்மன் மற்றும் மார்த்தாண்ட பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. அருள்மிகு ஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மன் எட்டு திருக்கரங்களுடன் மகிஷனை தனது காலால் வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்..நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் தங்களது இஷ்டதெய்வமாக இந்த அம்மனை வழிபட்டார்கள். அதோடு, போருக்குச் செல்லும் முன்னர் இந்த அம்மனை வழிபட்டுச் சென்று வெற்றிகளைக் குவித்தார்கள். எதிரிகள் தொல்லை நீங்க இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், அமாவாசை, பௌர்ணமி தேய்பிறையில் இந்தச் சன்னிதியில் ஒன்பது எலுமிச்சை பழ தீபமேற்றி ஒன்பது வாரங்கள் வழிபட்டு வர, எண்ணியவை எண்ணியபடி கைகூடும் என்பது ஐதீகம். மேலும், ராகு-கேது தோஷங்கள், களத்திர தோஷம், திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும். எதிரிகள் தொல்லை ஒழியும். உடல் ஆரோக்கியம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..தஞ்சையில் இக்கோயிலில் மட்டுமே விஷ்ணு துர்கை, கோலாலம்பூர் மகாலெட்சுமி, சிவதுர்கை மற்றும் பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி மற்றும் மார்த்தாண்ட பைரவர் ஆகியோருக்கு ஒருசேர சன்னிதி அமைந்துள்ளது. பொதுவாக, துர்கை சன்னிதி வடக்கு நோக்கிய வண்ணமே இருக்கும். ஆனால், இக்கோயிலில் துர்கை திசை மாறி கிழக்கு நோக்கி காட்சி தருவது சிறப்பு. தஞ்சை சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கையம்மன் திருச்சிலைகள் இந்தக் கோயிலில் மட்டுமே காட்சி தருவது சிறப்பம்சம்..பிறவிக்கடன்கள் நீங்கவும், கர்மவினைகள் அகலவும் ராகு காலத்தில் பகுளாமுகி காளியம்மன், சிவதுர்கை, விஷ்ணுதுர்கை, கோலாலம்பூர் மகாலெட்சுமி அம்மன் மார்த்தாண்ட பைரவர் ஆகியோரை ஒருசேர ஒரே சன்னிதியில் தரிசனம் செய்ய முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். திசை மாறிய இந்த துர்கை அம்மன் தரிசனத்தால் பக்தர்கள் பலரது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலை பக்தர்கள் காளியம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர். கோயில் கருவறையில் சுதர்சனவல்லி மற்றும் விஜயவல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்..மாதந்தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதுசமயம் பக்தர்களுக்கு அபிஷேகத் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தம் ஏவல், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அருமருந்தாக விளங்குகிறது. சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது குறிப்பிட்டதக்கது. சன்னிதிக்கு எதிரே ஒன்பது தீபங்கள் ஏற்றி ஒன்பது வாரங்கள் வழிபாடு செய்தால், நினைத்த நல்ல காரியங்கள் யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்..கோயிலின் பின்புறம் மராட்டிய மன்னர்களின் வழிபாட்டு தெய்வமான சிவேந்திரர் சன்னிதி அமைந்துள்ளது. அறுகோண வடிவிலான கற்சிலையில் சிவபெருமான்தேவியருடன் இருக்கும் அமைப்பே சிவேந்திரர் ஆகும். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் சிவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி மற்றும் தை மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அருள்மிகு ஶ்ரீ பகுளாமுகி காளியம்மன் என்கிற மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனை வழிபட்டால் வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும் என்பது திண்ணம்..அமைவிடம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ., தஞ்சாவூர் அரண்மனை மற்றும் சரஸ்வதி மகாலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது..தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8.30 மணி வரை.