-ராஜி ரகுநாதன்.நவீன உலகம் ஒரு மெய்நிகர் கிரகத்தில் பரபரப்பாக உழலத் தொடங்கியுள்ளது. மனிதன் தனக்காக அன்றி பிறருக்காக வாழும்போது அவன் வாழ்க்கை சிறக்கிறது. 'தேசமண்ட்டே மட்டிகாதோய்! தேசமண்ட்டே மனுஷுலோய்!' என்றார் தெலுங்கு மொழியின் பாரதியார் குரஜாட அப்பாராவு. 'சுயநலத்தை விட்டு சிறிது பிறருக்கும் உதவு. தேசம் என்றால் வெறும் மண்ணல்ல. தேசம் என்றால் மனிதர்களடா!' என்று பாடினார்..சிங்கமேயானாலும் தன் குகையில் சோம்பலாக படுத்திருந்தால் மான்கள் வந்து அதன் வாயில் விழாதல்லவா? மான்களை விட வேகமாக ஓடித்தானே தன் இரையைத் தேடியாக வேண்டும்? சிங்கத்தை காட்டிலிருக்கும் பிற விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யவில்லை. அதற்கிருக்கும் சக்தி சாமர்த்தியத்தால் சிங்கம் விலங்குகளின் அரசனாகப் புகழப்படுகிறது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க வேண்டுமானால் வேலையைத் தொடங்கும் முன் பணியின் இடையில் ஏற்படக்கூடிய தடைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். வீடு பற்றி எரியும்போது நீருக்காக கிணறு தோண்டுபவனை அறிவாளி என்று கூற மாட்டோமல்லவா?.புதிதாக மனித பிறவி எடுத்தது போல அதற்கு முன்னெடுத்திருந்த விலங்குகளின் இயல்புகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான் மனிதன். 'நான்' என்பது மூன்று பேர். நான் என்று என்னை நான் நினைப்பது. என்னைப் பற்றி பிறர் நினைப்பது. குற்ற மனப்பான்மைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை விலக்குவதன் மூலம் மனச் சலனம் நீங்கி முகத்தில் தேஜஸ் ஏற்படும். எந்த வேலையையும் முயற்சியையும் தொடங்க விடாமல் ஏற்படும் மனத் தடையும் மன விலக்கும் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதன் மூலம் பணியில் தடையின்றி இறங்க முடியும்..மந்திரம் இல்லாத எழுத்து இல்லை. மூலிகை அல்லாத தாவரம் இல்லை. பயனில்லாத மனிதனே இல்லை. குற்றம் பொருட்களில் இல்லை. மனித மனத்தில் உள்ளது என்பதை உணர வேண்டும். தவறை மறைக்க முகத்தை தூக்கி வைத்துக் கொள்வோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை மறக்க வேண்டாம். அது இன்னும் முகத்தை களையிழக்கச் செய்யும். கண்ணைக் கெடுத்த தெய்வம் நடப்பதற்கு கோலைக் கொடுத்தது என்று ஒரு கூற்று உண்டு. வாழ்வில் ஒரு வழி மூடினால் பல வழிகள் திறக்கும் என்பதை மறக்க வேண்டாம்..தனி மனித உயர்வோ தேசத்தின் வளர்ச்சியோ ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. மலர் போல சிறிது சிறிதாக மலர வேண்டும். பூ முதலில் மொட்டாக இருக்கும். பலவந்தமாக அதன் இதழ்களைப் பிரிக்க முயற்சித்தால் அதிலிருந்து பச்சை வாசனை வரும். ஆனால், அதே மொட்டு சூரிய ஒளிக் கதிர்களால் வருடப்பட்டு மலராகும்போது இதழ்கள் ஒரு வரிசைக் கிரமத்தில் அழகாக மலரும். அந்த மலரிலிருந்து சுகந்த மணம் வீசும். அவ்வாறு சில நல்ல இயல்புகளை வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளும்போது தனி மனிதன் எந்த பதவியில் அமர்ந்துள்ளான் என்பதோடு தொடர்பின்றி அவன் எங்கிருந்தாலும் அவன் பலருக்கும் வழிகாட்டியாக விளங்குவான். அவனோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும்..நல்ல குணங்கள் அனைவருக்கும் பிறவியிலேயே ஏற்பட்டு விடுவதில்லை. சிலவற்றை சமுதாயத்திலிருந்து முயற்சித்து அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், அது இல்லாதபோது கல்வியறிவு எத்தனை இருந்தாலும் அதனால் பயன் இல்லாதததோடு கூட ஆபத்தும் அதிகம். கல்வி அறிவு பெற்றிருப்பது ஒரு தகுதி என்றால் நற்குணங்களைப் பெற்றிருப்பது அதைவிடச் சிறந்த தகுதி. காரிய சாதனைக்கு இன்றியமையாத சில அளவுகோல்கள் உள்ளன. உடல்நலம் பேண வேண்டும். நுட்பமான சிந்தனை வேண்டும். பிரச்னைகளின் போது சமநிலை வேண்டும். அதோடு நிரூபிக்கப்பட்ட வழிமுறையான ஆன்மீக நாட்டம் அவசியம் வேண்டும்..நாம் யாரைப் பார்த்தாலும் சௌக்கியமா? என்று கேட்போம். உடல்நலத்தோடு மனநலமும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும். புத்தி கூர்மை, உணர்ச்சிவசப்படாமல் சமநிலை வகிப்பது, ஆன்மிகத்தில் முழு நம்பிக்கையோடு இருப்பது ஆகியவை உலகியல் வாழ்வில் ஒருவன் எடுத்த செயலை சிறப்பாக முடிப்பதற்கான சாதனங்கள். கடவுள் நமக்கு அளித்த அற்புதமான கருவி மனித உடல். படைப்பில் 84 லட்சம் உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் மிகச் சிறந்த உடல் மனிதனுடையது. ஏனென்றால் நம் உடலில் இரண்டு உயர்ந்த கருவிகள் உள்ளன. முதலாவது பேசும் குரல். இரண்டாவது புத்தி..பேச முடிவதால் பிறருக்கு ஆறுதல் அளிக்க முடிகிறது. அறிவுரை கூற முடிகிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்றால் பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதல்ல. ஒரு நல்ல சொல் போதும். தற்கொலை செய்துகொண்டு உயிரை விட நினைப்பவனுக்குக் கூட வாழ்வின் மேல் ஆசை பிறக்கும்படி செய்யக்கூடியது இனிமையான பேச்சு. அன்பான பேச்சு பேசக் கூடியவராக இருப்பது தனி மனித சிறப்புக்கு இன்றியமையாத முதல் தகுதி. தேவையில்லாத கிளர்ச்சியை பிறரிடம் ஏற்படுத்தாத நல்ல பேச்சு சிறந்தது. அது நன்மையை ஏற்படுத்த வேண்டும். பிறரைக் காப்பாற்றுவதாகவும் பிறருக்கு மன அமைதி கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்..பிற உயிரினங்களிடம் இருக்கும் சாமர்த்தியங்களை எல்லாம் மனிதன் தன்னுடைய புத்தியால் கற்றுக்கொண்டு முன்னேறுகிறான். மீனைப் பார்த்து நீந்தக் கற்றான். பறவையைப் பார்த்துப் பறக்கவும், மயிலைப் பார்த்து நடனம் ஆடவும் கற்றான். அத்தனையும் கற்றுத் தேறும் திறன் கொண்டது மனித அறிவும் உடலும். ஆனால், உடலுக்கு ஒரு இயல்பு உள்ளது. அதை சரியாக கவனித்து வளர்க்காவிட்டால் உடல் நலம் கெட்டு நோயுறும். இதனை நிரந்தரமாக ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மனிதன் தனக்கும் பிறருக்கும் உலகில் பயன்படுபவனாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான உடல் அவசியம் தேவை. உடற்பயிற்சி நடைபயிற்சி, பிராணாயாமம், யோகாப்பியாசம் போன்றவற்றைச் செய்து, கண்ட கண்ட உணவுகளை உண்ணாமல் உடலை பேணிக்காக்க வேண்டும். உடலுக்கு தேவையான ஓய்வளித்தால் அறிவு கூர்மையாக இருக்கும். உறங்க வேண்டிய நேரத்தில் உறங்க வேண்டும். பகலில் உடலுழைப்பும் இரவில் ஓய்வும் உடல் நலனுக்கு இன்றிமையாதது..கோபம் வந்தால் நாம் கேட்கும் முதல் கேள்வி அறிவிருக்கா? என்பதுதான். நாம் எங்கே செல்கிறோம்? எந்த வேலையில் ஈடுபடுகிறோம்? அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பவை பற்றிய நுட்பமான அறிவோடு செயல்பட வேண்டும். எந்த நேரமும் மனதின் ஓட்டத்தை பரிசீலனை செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்யும் வேலையில் மனதை நிறுத்த வேண்டும். பூஜை செய்யும்போது அலுவலகம் பற்றி நினைக்கக் கூடாது. அதேபோல் அலுவலக வேலையில் இருக்கும்போது வீட்டைப் பற்றி நினைக்கக் கூடாது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வில் இது குறித்த ஒரு நிகழ்வு உள்ளது. காளி பூஜைக்கு வந்த மகாராணி வழக்கு குறித்து மனதில் நினைத்ததை அறிந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாராணி என்றும் பாராமல் அவரைக் கடிந்து கொண்டார்..அலாரம் வைப்போம். காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று. உயிரற்ற அந்த ஜடப் பொருள் சரியாகத் தன் வேலையைச் செய்யும். ஆனால், ஆறறிவுள்ள மனிதன் அதை அணைத்து விட்டு உறங்குவான். வாழ்க்கையில் தெளிவான இலக்கோடு செயலாற்ற வேண்டும். வெறும் கல்வியறிவு காரிய சாதனைக்கு உதவாது. நல்ல நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர், அப்துல்கலாம், ஆபிரகாம் லிங்கன் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்க வேண்டும். நம் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தைப் படிக்க வேண்டும். பொழுது போகவில்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. நேரத்தை நாம் கொன்றால், நேரம் நம்மைக் கொல்லும்..பொங்குவது பாலின் இயல்பு. பொங்கினால்தான் நாம் அதை உபயோகப்படுத்த முடியும். ஆனால், அதிகமாகப் பொங்கி கீழே வழிந்தால் பயனளிக்காது. அதேபோல் மனித வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்றாலும் ஒரு உற்சாகம் தேவை. நான் இதைச் செய்வேன் என்ற உணர்ச்சி தேவை. ஆனால், அதே நேரத்தில் அதிக உற்சாகம் கூடாது. இடம்பொருள் காலத்தை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்வதில் ஒரு நுட்பம் தேவை. பிரச்னைகள் ஏற்படும்போது சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றிய புரிதல் இல்லாதபோது பயம் ஏற்படுகிறது. எந்த பணியில் ஈடுபட்டாலும் அது குறித்த ஆழ்ந்த அறிவு பயத்தைப் போக்குகிறது..செய்யும் பணியில் நுட்பமான திறன் உள்ளவர் அப்துல் கலாம். அவர் ஒருமுறை வேலைக்காக முயற்சித்தபோது வேறொரு பணி கிட்டியது. ஏமாற்றத்தோடு ரிஷிகேஷ் சென்று அங்கிருந்த ஒரு சுவாமிஜியிடம் தன் ஏமாற்றத்தைத் தெரிவித்தார். "கடவுள் நீ என்னவாக வேண்டும் என்று முன்பே தீர்மானித்து விட்டார். மனதை அலைய விடாதே. கடவுளின் முடிவை ஏற்றுக்கொள்!" என்றார். அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியானார்..கோபம், ஆத்திரம், உணர்ச்சிக் கொந்தளிப்பு வராதவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். கோபத்திற்கு நாம் வசமாகிப்போனால் வாயில் வரக்கூடாத வார்த்தைகள் வந்து விழும். எது வரையில் தேவையோ அது வரைதான் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். பாம்பு தன் தோலை உரித்து விடுகிறது. ஏனென்றால் அதற்கு அந்த தோல் கண்ணை மறைக்கும். அதனால் கரகரப்பான இடத்திற்கு சென்று உடலை தேய்த்து உரசி தன் சட்டையை உரித்துக் கொள்கிறது. அதேபோல் கோபம் வருவது தவறல்ல. ஒரு மிகச் சிறந்த பலனைப் பெற வேண்டுமானால் கோபம் வந்தாற்போல் நடிக்க வேண்டும். அது நிறைவேறிய பின் பாம்பு தன் சட்டையை உறித்து விடுவது போல் கோபத்தை விட்டு விட வேண்டும் என்கிறது வால்மீகி ராமாயணம்..கட்டுப்பாடு இல்லாத கோபத்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பாலும் அழிவுதான் ஏற்படும். எதுவும் எல்லை மீறக் கூடாது. ஒரு சிறு தவறைச் சுட்டிக்காட்டி நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. நட்பை காத்துக்கொள்ள வேண்டும். தனிமையில் நண்பனின் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டும். நண்பனின் உயர்வைப் பலர் முன்னிலையில் புகழ வேண்டும். உணர்ச்சிப் பிழம்பாகும்போது பலவீனம் ஏற்படுகிறது..சின்னச் சின்ன விஷயங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றக் கூடாது. தேர்வில் தோல்வியடைந்தால் செத்து விடுவேன் என்பான் மாணவன். அப்துல் கலாம் 'ஃபெயில்' என்றால் First Attempt In Learning என்று விளக்குகிறார். கற்பதற்கான முதல் முயற்சியே தோல்வி. அடுத்த முயற்சியில் வென்றுவிடலாம். நேர்மறை எண்ணத்தோடு வாழ வேண்டும். அப்பா அடித்தார், அம்மா திட்டினாள், ஆசிரியர் முறைத்துப் பார்த்தார் அவமானமாகி விட்டது என்று ஏரியில் குதித்தோ, மாடியிலிருந்து குதித்தோ சாகக்கூடாது. ஒருவர் நேர்மறை வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ வேண்டுமே தவிர, எதிர்மறையாக வாழக் கூடாது. அது வெறுப்பை ஊட்டும். முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..நல்ல பண்பாட்டிலிருந்து நற்சிந்தனைகள் உதிக்கும். மண்ணுருண்டை கையிலிருந்து கீழே விழுந்தால் மண்ணோடு ஒட்டிக்கொள்ளும். பந்து கீழே விழுந்தாலும் மீண்டும் மேலே எழும். மனிதன் பந்து போல் இருக்க வேண்டும். மண்ணுருண்டை போல் இருக்கக்கூடாது..நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகள் சிறிய அறையில் தன் உயரத்திற்குக் கூட போதாத சிறையில் அடைக்கப்பட்டார். A long walk to Freedom என்ற நூலை எழுதினார். பகலில் எழுதினால் கண்டுபிடித்து அடிப்பார்கள் என்பதால் இரவில் சிறுசிறு காகிதத் துண்டுகளில் எழுதினார். சான்றோர்களின் வாழ்க்கை பல துன்பங்களோடு கூடியது. இன்று உலகம் போற்றும் விதமாக பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்..அப்துல் கலாம் விண்வெளிப் பரிசோதனையில் பல தோல்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அது குறித்து விங்ஸ் ஆஃப் ஃபயர் என்ற நூலில் எழுதியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த போது அவர் பெயரை மாற்றி எழுதி பத்திரிகைகள் ஏளனம் செய்தன. 'வாயால் அல்ல பேட்டால் பதில் கூறுவேன்' என்ற திடமான சங்கல்பத்தோடு காயங்களுக்கு அறுவை சிகிச்சை பெற்று திரும்ப வந்து வென்றபோது, அதே பத்திரிகைகள் எவ்வாறு புகழ்ந்து எழுதின என்பதை Playing it my way என்ற தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்..வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி பாதையில் பயணிப்பது என்பது இயலாது. கீழே விழுவதும் எழுவதும் இயல்புதான். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு கை விளக்காக வேண்டும்..வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்பதை போதிப்பது ஆன்மிகம். யானை, பாகனின் அங்குசத்திற்கு அடங்கியிருப்பதால், அதன் கும்பஸ்தலத்தில் கடவுளின் உத்ஸவ விக்ரகத்தை ஏற்றிச் செல்கிறார்கள். மதம் பிடித்து ஓடினால் இரும்பு சங்கிலியால் கட்டி வைப்பார்கள்..வாழ்க்கை என்பது சம்பவங்களின் தொகுப்பு அல்ல. துயரமும் மகிழ்ச்சியும் இல்லாத வாழ்க்கை ஏது? ஸ்ரீராமனுக்கு துன்பம் வரவில்லையா? ஸ்ரீ கிருஷ்ணனுக்கு துயரம் வரவில்லையா? நாம் அவர்களை விடப் பெரியவர்களா என்ன? சிறந்த வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது வெறும் சம்பவங்களைப் படித்து விட்டு மூடி வைக்காமல் அந்தத் துயரத்திலும் மகிழ்ச்சியிலும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? எப்படி எதிர்வினை ஆற்றினார்கள்? என்பதை கவனித்து உணர்வது நமக்குப் பயனளிப்பதாக இருக்கும்..நம்பிக்கையோடு வாழ வேண்டும். சுகமும் துக்கமும் வாழ்வில் மாறி மாறி வரும். இலையுதிர் காலத்தில் பழுத்த இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக நிற்பதைப் பார்க்கும்போது மனம் திகிலடையும். இந்த மரம் மீண்டும் துளிர்க்குமா என்று சந்தேகம் வரும். ஆனால், கட்டாயமாக வசந்த காலம் வரும். மீண்டும் இளம் தளிர்களும் கிளிகளுமாக மரம் செழிக்கும். மானுட வாழ்விலும் இதுபோன்ற நிலை ஏற்படும். தொட்டதற்கெல்லாம் மனம் தளரக்கூடாது. வாழ்க்கையில் ஒரு அடி விழுந்ததுமே ஓய்ந்து போய் விடத் தேவையில்லை. மீண்டும் வசந்தம் வந்தே தீரும். அது இயற்கையின் ஆணை..அவமானத்திற்கும் சன்மானத்திற்கும் பொங்குவதோ கிறங்குவதோ தேவையற்றது. ஏதோ ஒரு சிறிய அவமதிப்பு நேர்ந்தாலே பத்து நாட்கள் அழுகிறோம் அனாவசியமாக. மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆயிரம் சந்தோஷங்கள் நம்மிடம் இருந்தாலும் ஒரு சிறு துயரம் வந்து சந்தோஷங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து விடுகிறது. ஆனால், துயரத்தோடு இருக்கும்போது ஆயிரம் சந்தோஷங்கள் வந்தாலும் அந்த ஒரு துயரத்தைத் தீர்க்க இயலவில்லை. அதுதான் விந்தை. துயரத்தின் பாதிப்பு அதிகம்..இதனையே, 'ப்ரக்ருதி மாயா' என்கிறார் ஆதிசங்கரர். 'மாயா' என்பதைத் திருப்பிப் போட்டால் 'யாமா' என்றாகிறது. 'யாமா' என்றால் சம்ஸ்கிருதத்தில் 'எதுவுமற்றது' என்று பொருள். ஒன்றுமில்லாததே மாயை என்று விளக்கமளிக்கிறார். நாம் கண்ணால் பார்க்கும் படைப்பு மாயை. அதாவது, இது எதிர்மறை. கடவுள் ஒருவரே நேர்மறை. இதனையே 'பிரம்ம சத்யம். ஜகன் மித்யை' என்று குறிப்பிடுவார்கள்..ஓர் ஆண்டின் பத்து மாத காலம் மவுனமாக இருக்கும் குயில், வசந்த காலமான இரு மாதங்கள் மட்டுமே தன் இனிய குரலால் கீதம் இசைக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு புதிர். அதனை விடுவிப்பதற்கான முயற்சியே நம் வாழ்க்கை என்று கூறுவது போல் உள்ளது குயிலின் பாட்டு. பரமபத விளையாட்டு போல வாழ்க்கையில் பாம்பு கடித்து கீழே விழுவதும் ஏணியில் ஏறி மேலே போவதும் இயல்பானதே. தாழ்ந்தாலும் மேலேறும் வழி உண்டு என்னும் தன்னம்பிக்கையை ஊட்டும் விளையாட்டு இது..விருப்பு வெறுப்புகளை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மனித மனம் என்பது பணிவான சேவகன். ஆனால், அது அறியாமையில் மூழ்கிய மிக மோசமான எஜமானன். அதை சேவகனாக அடக்கி ஆள வேண்டுமே தவிர, அதனை நமக்கு உரிமையாளர் ஆக்கி விடக்கூடாது. தட்சிணாமூர்த்தி, நடராஜர் சிலைகளைப் பார்த்தால் காலின் கீழ் ஒரு அசுரனைக் காணலாம். அவனே அறியாமை..மனிதனைத் தாக்கும் முன்வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை விதி என்கிறோம். ஆனால், இங்கு யோக வாசிஷ்டம் கூறும் உபாயம் ஒன்று உண்டு. 'பூர்வ கர்மாவும் தற்போதைய நம் முயற்சியும் இரு செம்மறி ஆடுகளைப் போல மோதிக் கொள்கின்றன. அவை ஒரு பந்தயத்தில் ஈடுபடுகின்றன. எது பலமானதோ அது வெல்கிறது' என்கிறார் வசிஷ்டர் ஸ்ரீராமனிடம். அதனால்தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறோம். தவிர்க்க முடியாதது என்பது எதுவும் இல்லை. பாரதிய வேதாந்த நூல்களில் மனித முயற்சிக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதனையே, 'புருஷ பிரயத்தனம் இருந்தால் தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்' என்று குறிப்பிடுகிறார்கள்..இவை முழுமையாக அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. இவற்றை பெறுவது என்பது முன்னேற நினைக்கும் மனிதனுடைய நிரந்தர முயற்சியாகவே இருக்கிறது. உயிர் வாழும் நாட்கள் முழுவதும் இந்த முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவே முன்னேற்றத்துக்கான வழிமுறை. காணும் கனவை நனவாக்க முயற்சிப்போம்! வாழ்வில் திட்டமிட்ட செயல் முறையோடு எடுத்தக் காரியத்தை சிறப்பாக முடிப்போம்!
-ராஜி ரகுநாதன்.நவீன உலகம் ஒரு மெய்நிகர் கிரகத்தில் பரபரப்பாக உழலத் தொடங்கியுள்ளது. மனிதன் தனக்காக அன்றி பிறருக்காக வாழும்போது அவன் வாழ்க்கை சிறக்கிறது. 'தேசமண்ட்டே மட்டிகாதோய்! தேசமண்ட்டே மனுஷுலோய்!' என்றார் தெலுங்கு மொழியின் பாரதியார் குரஜாட அப்பாராவு. 'சுயநலத்தை விட்டு சிறிது பிறருக்கும் உதவு. தேசம் என்றால் வெறும் மண்ணல்ல. தேசம் என்றால் மனிதர்களடா!' என்று பாடினார்..சிங்கமேயானாலும் தன் குகையில் சோம்பலாக படுத்திருந்தால் மான்கள் வந்து அதன் வாயில் விழாதல்லவா? மான்களை விட வேகமாக ஓடித்தானே தன் இரையைத் தேடியாக வேண்டும்? சிங்கத்தை காட்டிலிருக்கும் பிற விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யவில்லை. அதற்கிருக்கும் சக்தி சாமர்த்தியத்தால் சிங்கம் விலங்குகளின் அரசனாகப் புகழப்படுகிறது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க வேண்டுமானால் வேலையைத் தொடங்கும் முன் பணியின் இடையில் ஏற்படக்கூடிய தடைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். வீடு பற்றி எரியும்போது நீருக்காக கிணறு தோண்டுபவனை அறிவாளி என்று கூற மாட்டோமல்லவா?.புதிதாக மனித பிறவி எடுத்தது போல அதற்கு முன்னெடுத்திருந்த விலங்குகளின் இயல்புகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான் மனிதன். 'நான்' என்பது மூன்று பேர். நான் என்று என்னை நான் நினைப்பது. என்னைப் பற்றி பிறர் நினைப்பது. குற்ற மனப்பான்மைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை விலக்குவதன் மூலம் மனச் சலனம் நீங்கி முகத்தில் தேஜஸ் ஏற்படும். எந்த வேலையையும் முயற்சியையும் தொடங்க விடாமல் ஏற்படும் மனத் தடையும் மன விலக்கும் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதன் மூலம் பணியில் தடையின்றி இறங்க முடியும்..மந்திரம் இல்லாத எழுத்து இல்லை. மூலிகை அல்லாத தாவரம் இல்லை. பயனில்லாத மனிதனே இல்லை. குற்றம் பொருட்களில் இல்லை. மனித மனத்தில் உள்ளது என்பதை உணர வேண்டும். தவறை மறைக்க முகத்தை தூக்கி வைத்துக் கொள்வோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை மறக்க வேண்டாம். அது இன்னும் முகத்தை களையிழக்கச் செய்யும். கண்ணைக் கெடுத்த தெய்வம் நடப்பதற்கு கோலைக் கொடுத்தது என்று ஒரு கூற்று உண்டு. வாழ்வில் ஒரு வழி மூடினால் பல வழிகள் திறக்கும் என்பதை மறக்க வேண்டாம்..தனி மனித உயர்வோ தேசத்தின் வளர்ச்சியோ ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. மலர் போல சிறிது சிறிதாக மலர வேண்டும். பூ முதலில் மொட்டாக இருக்கும். பலவந்தமாக அதன் இதழ்களைப் பிரிக்க முயற்சித்தால் அதிலிருந்து பச்சை வாசனை வரும். ஆனால், அதே மொட்டு சூரிய ஒளிக் கதிர்களால் வருடப்பட்டு மலராகும்போது இதழ்கள் ஒரு வரிசைக் கிரமத்தில் அழகாக மலரும். அந்த மலரிலிருந்து சுகந்த மணம் வீசும். அவ்வாறு சில நல்ல இயல்புகளை வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளும்போது தனி மனிதன் எந்த பதவியில் அமர்ந்துள்ளான் என்பதோடு தொடர்பின்றி அவன் எங்கிருந்தாலும் அவன் பலருக்கும் வழிகாட்டியாக விளங்குவான். அவனோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும்..நல்ல குணங்கள் அனைவருக்கும் பிறவியிலேயே ஏற்பட்டு விடுவதில்லை. சிலவற்றை சமுதாயத்திலிருந்து முயற்சித்து அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், அது இல்லாதபோது கல்வியறிவு எத்தனை இருந்தாலும் அதனால் பயன் இல்லாதததோடு கூட ஆபத்தும் அதிகம். கல்வி அறிவு பெற்றிருப்பது ஒரு தகுதி என்றால் நற்குணங்களைப் பெற்றிருப்பது அதைவிடச் சிறந்த தகுதி. காரிய சாதனைக்கு இன்றியமையாத சில அளவுகோல்கள் உள்ளன. உடல்நலம் பேண வேண்டும். நுட்பமான சிந்தனை வேண்டும். பிரச்னைகளின் போது சமநிலை வேண்டும். அதோடு நிரூபிக்கப்பட்ட வழிமுறையான ஆன்மீக நாட்டம் அவசியம் வேண்டும்..நாம் யாரைப் பார்த்தாலும் சௌக்கியமா? என்று கேட்போம். உடல்நலத்தோடு மனநலமும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும். புத்தி கூர்மை, உணர்ச்சிவசப்படாமல் சமநிலை வகிப்பது, ஆன்மிகத்தில் முழு நம்பிக்கையோடு இருப்பது ஆகியவை உலகியல் வாழ்வில் ஒருவன் எடுத்த செயலை சிறப்பாக முடிப்பதற்கான சாதனங்கள். கடவுள் நமக்கு அளித்த அற்புதமான கருவி மனித உடல். படைப்பில் 84 லட்சம் உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் மிகச் சிறந்த உடல் மனிதனுடையது. ஏனென்றால் நம் உடலில் இரண்டு உயர்ந்த கருவிகள் உள்ளன. முதலாவது பேசும் குரல். இரண்டாவது புத்தி..பேச முடிவதால் பிறருக்கு ஆறுதல் அளிக்க முடிகிறது. அறிவுரை கூற முடிகிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்றால் பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதல்ல. ஒரு நல்ல சொல் போதும். தற்கொலை செய்துகொண்டு உயிரை விட நினைப்பவனுக்குக் கூட வாழ்வின் மேல் ஆசை பிறக்கும்படி செய்யக்கூடியது இனிமையான பேச்சு. அன்பான பேச்சு பேசக் கூடியவராக இருப்பது தனி மனித சிறப்புக்கு இன்றியமையாத முதல் தகுதி. தேவையில்லாத கிளர்ச்சியை பிறரிடம் ஏற்படுத்தாத நல்ல பேச்சு சிறந்தது. அது நன்மையை ஏற்படுத்த வேண்டும். பிறரைக் காப்பாற்றுவதாகவும் பிறருக்கு மன அமைதி கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்..பிற உயிரினங்களிடம் இருக்கும் சாமர்த்தியங்களை எல்லாம் மனிதன் தன்னுடைய புத்தியால் கற்றுக்கொண்டு முன்னேறுகிறான். மீனைப் பார்த்து நீந்தக் கற்றான். பறவையைப் பார்த்துப் பறக்கவும், மயிலைப் பார்த்து நடனம் ஆடவும் கற்றான். அத்தனையும் கற்றுத் தேறும் திறன் கொண்டது மனித அறிவும் உடலும். ஆனால், உடலுக்கு ஒரு இயல்பு உள்ளது. அதை சரியாக கவனித்து வளர்க்காவிட்டால் உடல் நலம் கெட்டு நோயுறும். இதனை நிரந்தரமாக ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மனிதன் தனக்கும் பிறருக்கும் உலகில் பயன்படுபவனாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான உடல் அவசியம் தேவை. உடற்பயிற்சி நடைபயிற்சி, பிராணாயாமம், யோகாப்பியாசம் போன்றவற்றைச் செய்து, கண்ட கண்ட உணவுகளை உண்ணாமல் உடலை பேணிக்காக்க வேண்டும். உடலுக்கு தேவையான ஓய்வளித்தால் அறிவு கூர்மையாக இருக்கும். உறங்க வேண்டிய நேரத்தில் உறங்க வேண்டும். பகலில் உடலுழைப்பும் இரவில் ஓய்வும் உடல் நலனுக்கு இன்றிமையாதது..கோபம் வந்தால் நாம் கேட்கும் முதல் கேள்வி அறிவிருக்கா? என்பதுதான். நாம் எங்கே செல்கிறோம்? எந்த வேலையில் ஈடுபடுகிறோம்? அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பவை பற்றிய நுட்பமான அறிவோடு செயல்பட வேண்டும். எந்த நேரமும் மனதின் ஓட்டத்தை பரிசீலனை செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்யும் வேலையில் மனதை நிறுத்த வேண்டும். பூஜை செய்யும்போது அலுவலகம் பற்றி நினைக்கக் கூடாது. அதேபோல் அலுவலக வேலையில் இருக்கும்போது வீட்டைப் பற்றி நினைக்கக் கூடாது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வில் இது குறித்த ஒரு நிகழ்வு உள்ளது. காளி பூஜைக்கு வந்த மகாராணி வழக்கு குறித்து மனதில் நினைத்ததை அறிந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாராணி என்றும் பாராமல் அவரைக் கடிந்து கொண்டார்..அலாரம் வைப்போம். காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று. உயிரற்ற அந்த ஜடப் பொருள் சரியாகத் தன் வேலையைச் செய்யும். ஆனால், ஆறறிவுள்ள மனிதன் அதை அணைத்து விட்டு உறங்குவான். வாழ்க்கையில் தெளிவான இலக்கோடு செயலாற்ற வேண்டும். வெறும் கல்வியறிவு காரிய சாதனைக்கு உதவாது. நல்ல நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர், அப்துல்கலாம், ஆபிரகாம் லிங்கன் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்க வேண்டும். நம் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தைப் படிக்க வேண்டும். பொழுது போகவில்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. நேரத்தை நாம் கொன்றால், நேரம் நம்மைக் கொல்லும்..பொங்குவது பாலின் இயல்பு. பொங்கினால்தான் நாம் அதை உபயோகப்படுத்த முடியும். ஆனால், அதிகமாகப் பொங்கி கீழே வழிந்தால் பயனளிக்காது. அதேபோல் மனித வாழ்க்கையில் எதை சாதிக்க வேண்டும் என்றாலும் ஒரு உற்சாகம் தேவை. நான் இதைச் செய்வேன் என்ற உணர்ச்சி தேவை. ஆனால், அதே நேரத்தில் அதிக உற்சாகம் கூடாது. இடம்பொருள் காலத்தை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்வதில் ஒரு நுட்பம் தேவை. பிரச்னைகள் ஏற்படும்போது சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றிய புரிதல் இல்லாதபோது பயம் ஏற்படுகிறது. எந்த பணியில் ஈடுபட்டாலும் அது குறித்த ஆழ்ந்த அறிவு பயத்தைப் போக்குகிறது..செய்யும் பணியில் நுட்பமான திறன் உள்ளவர் அப்துல் கலாம். அவர் ஒருமுறை வேலைக்காக முயற்சித்தபோது வேறொரு பணி கிட்டியது. ஏமாற்றத்தோடு ரிஷிகேஷ் சென்று அங்கிருந்த ஒரு சுவாமிஜியிடம் தன் ஏமாற்றத்தைத் தெரிவித்தார். "கடவுள் நீ என்னவாக வேண்டும் என்று முன்பே தீர்மானித்து விட்டார். மனதை அலைய விடாதே. கடவுளின் முடிவை ஏற்றுக்கொள்!" என்றார். அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியானார்..கோபம், ஆத்திரம், உணர்ச்சிக் கொந்தளிப்பு வராதவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். கோபத்திற்கு நாம் வசமாகிப்போனால் வாயில் வரக்கூடாத வார்த்தைகள் வந்து விழும். எது வரையில் தேவையோ அது வரைதான் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். பாம்பு தன் தோலை உரித்து விடுகிறது. ஏனென்றால் அதற்கு அந்த தோல் கண்ணை மறைக்கும். அதனால் கரகரப்பான இடத்திற்கு சென்று உடலை தேய்த்து உரசி தன் சட்டையை உரித்துக் கொள்கிறது. அதேபோல் கோபம் வருவது தவறல்ல. ஒரு மிகச் சிறந்த பலனைப் பெற வேண்டுமானால் கோபம் வந்தாற்போல் நடிக்க வேண்டும். அது நிறைவேறிய பின் பாம்பு தன் சட்டையை உறித்து விடுவது போல் கோபத்தை விட்டு விட வேண்டும் என்கிறது வால்மீகி ராமாயணம்..கட்டுப்பாடு இல்லாத கோபத்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பாலும் அழிவுதான் ஏற்படும். எதுவும் எல்லை மீறக் கூடாது. ஒரு சிறு தவறைச் சுட்டிக்காட்டி நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. நட்பை காத்துக்கொள்ள வேண்டும். தனிமையில் நண்பனின் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டும். நண்பனின் உயர்வைப் பலர் முன்னிலையில் புகழ வேண்டும். உணர்ச்சிப் பிழம்பாகும்போது பலவீனம் ஏற்படுகிறது..சின்னச் சின்ன விஷயங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றக் கூடாது. தேர்வில் தோல்வியடைந்தால் செத்து விடுவேன் என்பான் மாணவன். அப்துல் கலாம் 'ஃபெயில்' என்றால் First Attempt In Learning என்று விளக்குகிறார். கற்பதற்கான முதல் முயற்சியே தோல்வி. அடுத்த முயற்சியில் வென்றுவிடலாம். நேர்மறை எண்ணத்தோடு வாழ வேண்டும். அப்பா அடித்தார், அம்மா திட்டினாள், ஆசிரியர் முறைத்துப் பார்த்தார் அவமானமாகி விட்டது என்று ஏரியில் குதித்தோ, மாடியிலிருந்து குதித்தோ சாகக்கூடாது. ஒருவர் நேர்மறை வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ வேண்டுமே தவிர, எதிர்மறையாக வாழக் கூடாது. அது வெறுப்பை ஊட்டும். முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..நல்ல பண்பாட்டிலிருந்து நற்சிந்தனைகள் உதிக்கும். மண்ணுருண்டை கையிலிருந்து கீழே விழுந்தால் மண்ணோடு ஒட்டிக்கொள்ளும். பந்து கீழே விழுந்தாலும் மீண்டும் மேலே எழும். மனிதன் பந்து போல் இருக்க வேண்டும். மண்ணுருண்டை போல் இருக்கக்கூடாது..நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகள் சிறிய அறையில் தன் உயரத்திற்குக் கூட போதாத சிறையில் அடைக்கப்பட்டார். A long walk to Freedom என்ற நூலை எழுதினார். பகலில் எழுதினால் கண்டுபிடித்து அடிப்பார்கள் என்பதால் இரவில் சிறுசிறு காகிதத் துண்டுகளில் எழுதினார். சான்றோர்களின் வாழ்க்கை பல துன்பங்களோடு கூடியது. இன்று உலகம் போற்றும் விதமாக பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்..அப்துல் கலாம் விண்வெளிப் பரிசோதனையில் பல தோல்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அது குறித்து விங்ஸ் ஆஃப் ஃபயர் என்ற நூலில் எழுதியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த போது அவர் பெயரை மாற்றி எழுதி பத்திரிகைகள் ஏளனம் செய்தன. 'வாயால் அல்ல பேட்டால் பதில் கூறுவேன்' என்ற திடமான சங்கல்பத்தோடு காயங்களுக்கு அறுவை சிகிச்சை பெற்று திரும்ப வந்து வென்றபோது, அதே பத்திரிகைகள் எவ்வாறு புகழ்ந்து எழுதின என்பதை Playing it my way என்ற தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்..வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி பாதையில் பயணிப்பது என்பது இயலாது. கீழே விழுவதும் எழுவதும் இயல்புதான். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு கை விளக்காக வேண்டும்..வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்பதை போதிப்பது ஆன்மிகம். யானை, பாகனின் அங்குசத்திற்கு அடங்கியிருப்பதால், அதன் கும்பஸ்தலத்தில் கடவுளின் உத்ஸவ விக்ரகத்தை ஏற்றிச் செல்கிறார்கள். மதம் பிடித்து ஓடினால் இரும்பு சங்கிலியால் கட்டி வைப்பார்கள்..வாழ்க்கை என்பது சம்பவங்களின் தொகுப்பு அல்ல. துயரமும் மகிழ்ச்சியும் இல்லாத வாழ்க்கை ஏது? ஸ்ரீராமனுக்கு துன்பம் வரவில்லையா? ஸ்ரீ கிருஷ்ணனுக்கு துயரம் வரவில்லையா? நாம் அவர்களை விடப் பெரியவர்களா என்ன? சிறந்த வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது வெறும் சம்பவங்களைப் படித்து விட்டு மூடி வைக்காமல் அந்தத் துயரத்திலும் மகிழ்ச்சியிலும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? எப்படி எதிர்வினை ஆற்றினார்கள்? என்பதை கவனித்து உணர்வது நமக்குப் பயனளிப்பதாக இருக்கும்..நம்பிக்கையோடு வாழ வேண்டும். சுகமும் துக்கமும் வாழ்வில் மாறி மாறி வரும். இலையுதிர் காலத்தில் பழுத்த இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக நிற்பதைப் பார்க்கும்போது மனம் திகிலடையும். இந்த மரம் மீண்டும் துளிர்க்குமா என்று சந்தேகம் வரும். ஆனால், கட்டாயமாக வசந்த காலம் வரும். மீண்டும் இளம் தளிர்களும் கிளிகளுமாக மரம் செழிக்கும். மானுட வாழ்விலும் இதுபோன்ற நிலை ஏற்படும். தொட்டதற்கெல்லாம் மனம் தளரக்கூடாது. வாழ்க்கையில் ஒரு அடி விழுந்ததுமே ஓய்ந்து போய் விடத் தேவையில்லை. மீண்டும் வசந்தம் வந்தே தீரும். அது இயற்கையின் ஆணை..அவமானத்திற்கும் சன்மானத்திற்கும் பொங்குவதோ கிறங்குவதோ தேவையற்றது. ஏதோ ஒரு சிறிய அவமதிப்பு நேர்ந்தாலே பத்து நாட்கள் அழுகிறோம் அனாவசியமாக. மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆயிரம் சந்தோஷங்கள் நம்மிடம் இருந்தாலும் ஒரு சிறு துயரம் வந்து சந்தோஷங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து விடுகிறது. ஆனால், துயரத்தோடு இருக்கும்போது ஆயிரம் சந்தோஷங்கள் வந்தாலும் அந்த ஒரு துயரத்தைத் தீர்க்க இயலவில்லை. அதுதான் விந்தை. துயரத்தின் பாதிப்பு அதிகம்..இதனையே, 'ப்ரக்ருதி மாயா' என்கிறார் ஆதிசங்கரர். 'மாயா' என்பதைத் திருப்பிப் போட்டால் 'யாமா' என்றாகிறது. 'யாமா' என்றால் சம்ஸ்கிருதத்தில் 'எதுவுமற்றது' என்று பொருள். ஒன்றுமில்லாததே மாயை என்று விளக்கமளிக்கிறார். நாம் கண்ணால் பார்க்கும் படைப்பு மாயை. அதாவது, இது எதிர்மறை. கடவுள் ஒருவரே நேர்மறை. இதனையே 'பிரம்ம சத்யம். ஜகன் மித்யை' என்று குறிப்பிடுவார்கள்..ஓர் ஆண்டின் பத்து மாத காலம் மவுனமாக இருக்கும் குயில், வசந்த காலமான இரு மாதங்கள் மட்டுமே தன் இனிய குரலால் கீதம் இசைக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு புதிர். அதனை விடுவிப்பதற்கான முயற்சியே நம் வாழ்க்கை என்று கூறுவது போல் உள்ளது குயிலின் பாட்டு. பரமபத விளையாட்டு போல வாழ்க்கையில் பாம்பு கடித்து கீழே விழுவதும் ஏணியில் ஏறி மேலே போவதும் இயல்பானதே. தாழ்ந்தாலும் மேலேறும் வழி உண்டு என்னும் தன்னம்பிக்கையை ஊட்டும் விளையாட்டு இது..விருப்பு வெறுப்புகளை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மனித மனம் என்பது பணிவான சேவகன். ஆனால், அது அறியாமையில் மூழ்கிய மிக மோசமான எஜமானன். அதை சேவகனாக அடக்கி ஆள வேண்டுமே தவிர, அதனை நமக்கு உரிமையாளர் ஆக்கி விடக்கூடாது. தட்சிணாமூர்த்தி, நடராஜர் சிலைகளைப் பார்த்தால் காலின் கீழ் ஒரு அசுரனைக் காணலாம். அவனே அறியாமை..மனிதனைத் தாக்கும் முன்வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை விதி என்கிறோம். ஆனால், இங்கு யோக வாசிஷ்டம் கூறும் உபாயம் ஒன்று உண்டு. 'பூர்வ கர்மாவும் தற்போதைய நம் முயற்சியும் இரு செம்மறி ஆடுகளைப் போல மோதிக் கொள்கின்றன. அவை ஒரு பந்தயத்தில் ஈடுபடுகின்றன. எது பலமானதோ அது வெல்கிறது' என்கிறார் வசிஷ்டர் ஸ்ரீராமனிடம். அதனால்தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறோம். தவிர்க்க முடியாதது என்பது எதுவும் இல்லை. பாரதிய வேதாந்த நூல்களில் மனித முயற்சிக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதனையே, 'புருஷ பிரயத்தனம் இருந்தால் தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்' என்று குறிப்பிடுகிறார்கள்..இவை முழுமையாக அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. இவற்றை பெறுவது என்பது முன்னேற நினைக்கும் மனிதனுடைய நிரந்தர முயற்சியாகவே இருக்கிறது. உயிர் வாழும் நாட்கள் முழுவதும் இந்த முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவே முன்னேற்றத்துக்கான வழிமுறை. காணும் கனவை நனவாக்க முயற்சிப்போம்! வாழ்வில் திட்டமிட்ட செயல் முறையோடு எடுத்தக் காரியத்தை சிறப்பாக முடிப்போம்!