– முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. 'கன்னியர் கோயில்' என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். கோயிலில் உட்புறம் 15 கன்னியர்களின் சிலைகள் வரிசையாக அமைந்துள்ளன. கருவறையில் மூலவராக பச்சைவாழி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் உருவானதற்கான காரணம் மிகவும் வியப்புக்குரியது..ஒரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாக, அதனால் கோபம் கொண்ட ஈசன் கடுங்கோபமடைந்து பார்வதி தேவியிடம், "என்னுடன் வாதம் புரிந்ததற்காக மண்ணுலகம் சென்று சில காலம் மண்ணால் லிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் என்னை பூஜித்து, உரிய காலத்தில் என்னை வந்தடைவாய்" என சாபமிட்டார்..இதையடுத்து, பார்வதி தேவி தற்போது கோயில் இருக்குமிடத்திற்கு வந்து, மண்ணால் லிங்கம் அமைத்து பூஜை செய்து வந்தாள். பூஜையின்போது வெய்யில் அதிகமாக இருந்ததால், அதன் கொடுமையிலிருந்து தப்பிக்க தமக்குக் கிடைத்த பச்சை வாழை இலைகளைக் கொண்டு பெரிய பந்தல் அமைக்க முயற்சித்தாள். அன்னை பார்வதி தேவிக்கு உதவி செய்ய, 'சப்த கன்னியர்' ஏழு பேர்களும், 'அஷ்ட கன்னியர்' எட்டு பேர்களும் என மொத்தம் பதினைந்து பேர் அன்னை பார்வதி தேவி பந்தல் அமைக்க உதவினர்..இதனால் மகிழ்ச்சியடைந்த பார்வதி தேவி, அவர்களுடன் தினமும் பந்தலின் கீழமர்ந்து ஈசனை நோக்கி பூஜை செய்தாள். இதைக்கண்ட ஏழு அசுரர்கள் அன்னை பார்வதிக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தனர். மேலும், பூஜை செய்ய விடாமல் தடுத்தனர். எதிர்த்து நின்ற 15 கன்னியரையும் விரட்டினர். கன்னியர் அனைவரும் மானிடப் பிறவியில் இருந்ததால் அசுரரைத் தடுக்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. எனவே பார்வதி தேவி, தனது சகோதரன் ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து மனமுருக வேண்டினார். ஸ்ரீ கிருஷ்ணர் தனியே வந்து ஏழு அசுரர்களுடன் போர் புரிந்தார். ஆனால், அவராலும் அசுரர்களை அடக்க முடியவில்லை. இதனால் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்முனி, வேதமுனி, தவமுனி, வில்முனி, கொடிமுனி, செம்முனி, பச்சைமுனி என ஏழு முனிகளாக அவதாரம் எடுத்து, அந்த ஏழு அசுரர்களையும் சம்ஹாரம் செய்தார். இதனால் அமைதியடைந்த பார்வதி தேவி மன நிம்மதியுடன் சிவ பூஜை செய்து மீண்டும் ஈசனை அடைந்தார்..அன்னை பார்வதி தேவி மண்ணால் லிங்கம் அமைந்து வழிபட்டதால் இத்தலம் மண்ணாதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்பட்டது. நிழலுக்காக பச்சைவாழை இலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டதால் அன்னைக்கு, 'பச்சைவாழி அம்மன்' என்ற பெயர் உண்டாயிற்று. அன்னை பார்வதி தேவிக்கு உடன் இருந்து பதினைந்து கன்னியர்களும் உதவி செய்ததால் இது, 'கன்னியர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. ஒருபுறம் ஏழு முனிகளுக்கும் சிலைகள் உள்ளன..ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்தத் திருக்கோயில் திருவிழாக்கோலம் பூண்டு களைகட்டுகிறது. ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையன்று பெருந்திருவிழா நடைபெறுகிறது. அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அன்னை பார்வதி தேவியையும், கன்னியர்களையும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். அச்சமயம் பெரிய அளவில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் கடும் விரதமிருந்து பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மேல் தீ மிதித்துச் செல்வது காண்பதற்கரிய பக்தி அனுபவமாகும்.
– முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. 'கன்னியர் கோயில்' என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். கோயிலில் உட்புறம் 15 கன்னியர்களின் சிலைகள் வரிசையாக அமைந்துள்ளன. கருவறையில் மூலவராக பச்சைவாழி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் உருவானதற்கான காரணம் மிகவும் வியப்புக்குரியது..ஒரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாக, அதனால் கோபம் கொண்ட ஈசன் கடுங்கோபமடைந்து பார்வதி தேவியிடம், "என்னுடன் வாதம் புரிந்ததற்காக மண்ணுலகம் சென்று சில காலம் மண்ணால் லிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் என்னை பூஜித்து, உரிய காலத்தில் என்னை வந்தடைவாய்" என சாபமிட்டார்..இதையடுத்து, பார்வதி தேவி தற்போது கோயில் இருக்குமிடத்திற்கு வந்து, மண்ணால் லிங்கம் அமைத்து பூஜை செய்து வந்தாள். பூஜையின்போது வெய்யில் அதிகமாக இருந்ததால், அதன் கொடுமையிலிருந்து தப்பிக்க தமக்குக் கிடைத்த பச்சை வாழை இலைகளைக் கொண்டு பெரிய பந்தல் அமைக்க முயற்சித்தாள். அன்னை பார்வதி தேவிக்கு உதவி செய்ய, 'சப்த கன்னியர்' ஏழு பேர்களும், 'அஷ்ட கன்னியர்' எட்டு பேர்களும் என மொத்தம் பதினைந்து பேர் அன்னை பார்வதி தேவி பந்தல் அமைக்க உதவினர்..இதனால் மகிழ்ச்சியடைந்த பார்வதி தேவி, அவர்களுடன் தினமும் பந்தலின் கீழமர்ந்து ஈசனை நோக்கி பூஜை செய்தாள். இதைக்கண்ட ஏழு அசுரர்கள் அன்னை பார்வதிக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தனர். மேலும், பூஜை செய்ய விடாமல் தடுத்தனர். எதிர்த்து நின்ற 15 கன்னியரையும் விரட்டினர். கன்னியர் அனைவரும் மானிடப் பிறவியில் இருந்ததால் அசுரரைத் தடுக்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. எனவே பார்வதி தேவி, தனது சகோதரன் ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து மனமுருக வேண்டினார். ஸ்ரீ கிருஷ்ணர் தனியே வந்து ஏழு அசுரர்களுடன் போர் புரிந்தார். ஆனால், அவராலும் அசுரர்களை அடக்க முடியவில்லை. இதனால் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்முனி, வேதமுனி, தவமுனி, வில்முனி, கொடிமுனி, செம்முனி, பச்சைமுனி என ஏழு முனிகளாக அவதாரம் எடுத்து, அந்த ஏழு அசுரர்களையும் சம்ஹாரம் செய்தார். இதனால் அமைதியடைந்த பார்வதி தேவி மன நிம்மதியுடன் சிவ பூஜை செய்து மீண்டும் ஈசனை அடைந்தார்..அன்னை பார்வதி தேவி மண்ணால் லிங்கம் அமைந்து வழிபட்டதால் இத்தலம் மண்ணாதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்பட்டது. நிழலுக்காக பச்சைவாழை இலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டதால் அன்னைக்கு, 'பச்சைவாழி அம்மன்' என்ற பெயர் உண்டாயிற்று. அன்னை பார்வதி தேவிக்கு உடன் இருந்து பதினைந்து கன்னியர்களும் உதவி செய்ததால் இது, 'கன்னியர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. ஒருபுறம் ஏழு முனிகளுக்கும் சிலைகள் உள்ளன..ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்தத் திருக்கோயில் திருவிழாக்கோலம் பூண்டு களைகட்டுகிறது. ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையன்று பெருந்திருவிழா நடைபெறுகிறது. அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அன்னை பார்வதி தேவியையும், கன்னியர்களையும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். அச்சமயம் பெரிய அளவில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் கடும் விரதமிருந்து பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மேல் தீ மிதித்துச் செல்வது காண்பதற்கரிய பக்தி அனுபவமாகும்.