– எ.எஸ்.கோவிந்தராஜன்.தேங்காய் மூடிகளில் தீபம் ஏற்றும் பழக்கம் அக்காலங்களில் பரவலாக எங்கும் காணப்படவில்லை. காவல் தெய்வம், குல தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய விளக்காக தேங்காய் தீபம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, பெண் தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய இந்தத் தேங்காய் தீபம், மிகவும் சக்தி வாய்ந்த பலன்களை நல்குமாம். மனம் உருகி தேங்காய் தீபம் ஏற்றி, பெண் தெய்வங்களை வழிபட்டால் வேண்டிய வரங்கள் வேண்டியபடியே கிடைக்கும் என்பது ஐதீகம்..ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும் என்கிற நம்பிக்கை இருந்து வந்துள்ளது. நல்ல முற்றிய தேங்காயாகப் பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். அதை இரண்டாக சரி சமமாக உடைத்து அதன் மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி தேங்காய் மூடியின் உள்ளே நெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாகத் திரித்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்..அதேபோல, மிகவும் சக்தி வாய்ந்த வாராஹி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் வியப்புக்கு உரியவையாக இருக்கின்றன. நாள்பட்ட நோய்கள் நீங்க, வீடு, பூமி சார்ந்த பிரச்னைகளுக்கு முடிவுகள் கிடைக்க, வருடக் கணக்கில் தீராத பிரச்னைகள் தீர, குழந்தை பாக்கியம், திருமணத் தடை, சொத்து பிரச்னை, குடும்பப் பிரச்னை என அனைத்து வகையான பிரச்னைகளையும் நொடியில் தீர்க்க வல்ல அற்புத ஆற்றல் வாராஹி அம்மனுக்கு ஏற்றக்கூடிய தேங்காய் தீபத்துக்கு உண்டு..ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டை பாதியில் முடிக்க முடியாமல் விட்டு விடுபவர்கள் உண்டு. சில பேர் அதை விற்று விடுவதும் உண்டு. ஒரு வீடு கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல! அப்படியே கட்டி ஆசையாகக் குடி போனாலும் அங்கு ஏதாவது ஒரு பிரச்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நிம்மதியாக வாழ முடியாது. துர் மரணங்கள், இழப்புகள், நோய்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இதுபோல அமானுஷ்ய பிரச்னைகள் இருக்கக்கூடிய வீடுகளில் உள்ளவர்கள் வாராஹி அம்மனை நினைத்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம்..எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான பரிகாரத்தைச் செய்யும்பொழுது அதற்குரிய பலன்களும் சரியான விதத்தில் கிடைக்கும். அந்த வகையில் மேற்கூறிய இந்த பிரச்னைகளுக்கு வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து அவருக்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து வழிபட வேண்டும். கலசம் உங்களுடைய குலதெய்வ அழைப்பிற்கானது. ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் பச்சரிசியை நிரப்பி அதில் சூலம் ஒன்றை சுருக்கி வையுங்கள். அதை மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக ஒரு பெரிய தாம்பூல தட்டில் சுத்தமான பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்..பின்னர் தேங்காயை இரண்டாக உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு வெள்ளைத் திரிகளை அதனுள் போட்டு ஒன்றாக முனைப்பகுதியை மட்டும் திருகி எண்ணெயில் முக்கி வையுங்கள். பின்னர் திரியை வான் நோக்கி மேலே பார்க்குமாறு திருகிவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி வாராஹி அம்மனை மனமுருகி வேண்டி தீபம் ஏற்றி வழிபடுங்கள். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஏற்றுங்கள். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏற்றுவது சிறப்பு. நல்ல நேரம் பார்த்து ஏற்றினால் போதும். இப்படி வாராஹி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் தீராத பிரச்னைகளும் சுலபமாகத் தீர்ந்துவிடும்.
– எ.எஸ்.கோவிந்தராஜன்.தேங்காய் மூடிகளில் தீபம் ஏற்றும் பழக்கம் அக்காலங்களில் பரவலாக எங்கும் காணப்படவில்லை. காவல் தெய்வம், குல தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய விளக்காக தேங்காய் தீபம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, பெண் தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய இந்தத் தேங்காய் தீபம், மிகவும் சக்தி வாய்ந்த பலன்களை நல்குமாம். மனம் உருகி தேங்காய் தீபம் ஏற்றி, பெண் தெய்வங்களை வழிபட்டால் வேண்டிய வரங்கள் வேண்டியபடியே கிடைக்கும் என்பது ஐதீகம்..ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும் என்கிற நம்பிக்கை இருந்து வந்துள்ளது. நல்ல முற்றிய தேங்காயாகப் பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். அதை இரண்டாக சரி சமமாக உடைத்து அதன் மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி தேங்காய் மூடியின் உள்ளே நெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாகத் திரித்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்..அதேபோல, மிகவும் சக்தி வாய்ந்த வாராஹி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் வியப்புக்கு உரியவையாக இருக்கின்றன. நாள்பட்ட நோய்கள் நீங்க, வீடு, பூமி சார்ந்த பிரச்னைகளுக்கு முடிவுகள் கிடைக்க, வருடக் கணக்கில் தீராத பிரச்னைகள் தீர, குழந்தை பாக்கியம், திருமணத் தடை, சொத்து பிரச்னை, குடும்பப் பிரச்னை என அனைத்து வகையான பிரச்னைகளையும் நொடியில் தீர்க்க வல்ல அற்புத ஆற்றல் வாராஹி அம்மனுக்கு ஏற்றக்கூடிய தேங்காய் தீபத்துக்கு உண்டு..ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டை பாதியில் முடிக்க முடியாமல் விட்டு விடுபவர்கள் உண்டு. சில பேர் அதை விற்று விடுவதும் உண்டு. ஒரு வீடு கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல! அப்படியே கட்டி ஆசையாகக் குடி போனாலும் அங்கு ஏதாவது ஒரு பிரச்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நிம்மதியாக வாழ முடியாது. துர் மரணங்கள், இழப்புகள், நோய்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இதுபோல அமானுஷ்ய பிரச்னைகள் இருக்கக்கூடிய வீடுகளில் உள்ளவர்கள் வாராஹி அம்மனை நினைத்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம்..எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான பரிகாரத்தைச் செய்யும்பொழுது அதற்குரிய பலன்களும் சரியான விதத்தில் கிடைக்கும். அந்த வகையில் மேற்கூறிய இந்த பிரச்னைகளுக்கு வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து அவருக்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து வழிபட வேண்டும். கலசம் உங்களுடைய குலதெய்வ அழைப்பிற்கானது. ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் பச்சரிசியை நிரப்பி அதில் சூலம் ஒன்றை சுருக்கி வையுங்கள். அதை மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக ஒரு பெரிய தாம்பூல தட்டில் சுத்தமான பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்..பின்னர் தேங்காயை இரண்டாக உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு வெள்ளைத் திரிகளை அதனுள் போட்டு ஒன்றாக முனைப்பகுதியை மட்டும் திருகி எண்ணெயில் முக்கி வையுங்கள். பின்னர் திரியை வான் நோக்கி மேலே பார்க்குமாறு திருகிவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி வாராஹி அம்மனை மனமுருகி வேண்டி தீபம் ஏற்றி வழிபடுங்கள். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஏற்றுங்கள். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏற்றுவது சிறப்பு. நல்ல நேரம் பார்த்து ஏற்றினால் போதும். இப்படி வாராஹி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் தீராத பிரச்னைகளும் சுலபமாகத் தீர்ந்துவிடும்.