நான்கு முக முருகப்பெருமான்!.திண்டுக்கல் அருகிலுள்ள சின்னாளம்பட்டியில் நான்கு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால் பிரம்ம தேவரை சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே ஏற்று நடத்தி வந்தார். அந்த சமயத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் இருந்ததாக புராணம் கூறுகிறது..திருவண்ணாமலை பெருமை!.திருவண்ணாமலையை சிவபெருமானின் திருவுருவாக சிவ பக்தர்களும், சுதர்சனகிரியாக வைணவர்களும், ஸ்ரீ சக்கர மேருவாக சாக்தரும், ஜோதி லிங்கமாக அக்னியைத் தெய்வமாக வணங்குபவர்களும் வழிபடுகின்றார்கள்..இரட்டை தட்சிணாமூர்த்திகள்!.கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகங்காதரேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். வழக்கமாக சிவாலயங்களில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இவர்களில் ஒருவர் கல் திருமேனியும், மற்றொருவர் செம்பு திருமேனியும் கொண்டு அருள்கின்றனர். கல் தட்சிணாமூர்த்திக்கு மேல் பகுதியில் செப்புத் திருமேனி தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்..பஞ்சமுக விநாயகர்!.திருவானைக்கா ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னை அகிலாண்ட நாயகியின் சன்னிதிக்கு தென்மேற்கு மூலையில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகப் பெருமானுக்கு தலை மீது ஒரு முகமும், இரு காதுகளின் புறம் இரு முகங்களும், பின்புறம் மற்றும் முன்புறம் தலா ஒரு முகம் என பஞ்சமுக விநாயகராக அருள்பாலிப்பது விசேஷம்..உருவமில்லா நவக்கிரகங்கள்!.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அமைந்துள்ளது அணைப்பட்டி என்ற தலம். இங்குள்ள ஆஞ்சனேயர் ஆலயத்தில் உருவமில்லாமல் ஒன்பது பீடங்களே நவக்கிரகங்களாய் அருள்பாலிக்கின்றன. நவக்கிரகங்கள் அனைத்தும் ஆஞ்சனேயரின் வாலில் அடக்கம் என்பது ஐதீகம். எனவே, இங்கு நவக்கிரகங்களுக்கு உருவம் இல்லை..– நெ.இராமன்.சங்கீஸ்வரங்கள்.இறை வழிபாட்டில் சங்குக்கு பெரும்பங்கு உண்டு. வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வரிசையில் தேவர்களும் அசுரர்களும் வழிபட்ட சங்கு வடிவிலான சிவாலயங்கள் குறித்த தகவல்களும் உண்டு. இந்த ஆலயங்களை சங்கீஸ்வரங்கள் என்பார்கள். கும்பகோணத்தை அடுத்த பழையாறையில் சங்கீச்சரம் எனும் ஆலயம் இருந்ததை ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. கோயம்புத்தூரில் கோட்டை சங்கமேசுவரர் ஆலயம் கல்வெட்டுக்களில் சங்கீசுவரம் என்றே குறிக்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயமும் சங்கு கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது சங்கு வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. அதேபோன்று, துதிக்கையில் சங்கு ஏந்திய விநாயகரை சங்குபாணி விநாயகர் என்பார்கள். காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கு பாணி விநாயகர் அருள்புரியும் திருக்கோயில் உள்ளது..வெற்றியைத் தரும் வன்னி மரம்!.விநாயகப் பெருமானுடைய ஐம்பெரும் வடிவத்தை உணர்த்தும், ஐந்து வகையான மரங்களுள் அக்னி வடிவமாகக் கருதப்படுவது வன்னி மரம். இது வெற்றி தேவதையின் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வன்னி மரம் சில கோயில்களில் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. இம்மரத்தை வணங்கி வழிபடுபவர்களுக்கு வழக்குகளிலும், தேர்வுகளிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது, தங்களது ஆயுதங்களை வன்னி மரப்பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தனர். மேலும் அவர்கள் போருக்குச் செல்லும்போது, வன்னி மரத்தை வணங்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றதால்தான், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.– கவிதா பாலாஜிகணேஷ்
நான்கு முக முருகப்பெருமான்!.திண்டுக்கல் அருகிலுள்ள சின்னாளம்பட்டியில் நான்கு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால் பிரம்ம தேவரை சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே ஏற்று நடத்தி வந்தார். அந்த சமயத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் இருந்ததாக புராணம் கூறுகிறது..திருவண்ணாமலை பெருமை!.திருவண்ணாமலையை சிவபெருமானின் திருவுருவாக சிவ பக்தர்களும், சுதர்சனகிரியாக வைணவர்களும், ஸ்ரீ சக்கர மேருவாக சாக்தரும், ஜோதி லிங்கமாக அக்னியைத் தெய்வமாக வணங்குபவர்களும் வழிபடுகின்றார்கள்..இரட்டை தட்சிணாமூர்த்திகள்!.கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகங்காதரேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். வழக்கமாக சிவாலயங்களில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இவர்களில் ஒருவர் கல் திருமேனியும், மற்றொருவர் செம்பு திருமேனியும் கொண்டு அருள்கின்றனர். கல் தட்சிணாமூர்த்திக்கு மேல் பகுதியில் செப்புத் திருமேனி தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்..பஞ்சமுக விநாயகர்!.திருவானைக்கா ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னை அகிலாண்ட நாயகியின் சன்னிதிக்கு தென்மேற்கு மூலையில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகப் பெருமானுக்கு தலை மீது ஒரு முகமும், இரு காதுகளின் புறம் இரு முகங்களும், பின்புறம் மற்றும் முன்புறம் தலா ஒரு முகம் என பஞ்சமுக விநாயகராக அருள்பாலிப்பது விசேஷம்..உருவமில்லா நவக்கிரகங்கள்!.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அமைந்துள்ளது அணைப்பட்டி என்ற தலம். இங்குள்ள ஆஞ்சனேயர் ஆலயத்தில் உருவமில்லாமல் ஒன்பது பீடங்களே நவக்கிரகங்களாய் அருள்பாலிக்கின்றன. நவக்கிரகங்கள் அனைத்தும் ஆஞ்சனேயரின் வாலில் அடக்கம் என்பது ஐதீகம். எனவே, இங்கு நவக்கிரகங்களுக்கு உருவம் இல்லை..– நெ.இராமன்.சங்கீஸ்வரங்கள்.இறை வழிபாட்டில் சங்குக்கு பெரும்பங்கு உண்டு. வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வரிசையில் தேவர்களும் அசுரர்களும் வழிபட்ட சங்கு வடிவிலான சிவாலயங்கள் குறித்த தகவல்களும் உண்டு. இந்த ஆலயங்களை சங்கீஸ்வரங்கள் என்பார்கள். கும்பகோணத்தை அடுத்த பழையாறையில் சங்கீச்சரம் எனும் ஆலயம் இருந்ததை ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. கோயம்புத்தூரில் கோட்டை சங்கமேசுவரர் ஆலயம் கல்வெட்டுக்களில் சங்கீசுவரம் என்றே குறிக்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயமும் சங்கு கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது சங்கு வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. அதேபோன்று, துதிக்கையில் சங்கு ஏந்திய விநாயகரை சங்குபாணி விநாயகர் என்பார்கள். காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கு பாணி விநாயகர் அருள்புரியும் திருக்கோயில் உள்ளது..வெற்றியைத் தரும் வன்னி மரம்!.விநாயகப் பெருமானுடைய ஐம்பெரும் வடிவத்தை உணர்த்தும், ஐந்து வகையான மரங்களுள் அக்னி வடிவமாகக் கருதப்படுவது வன்னி மரம். இது வெற்றி தேவதையின் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வன்னி மரம் சில கோயில்களில் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. இம்மரத்தை வணங்கி வழிபடுபவர்களுக்கு வழக்குகளிலும், தேர்வுகளிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது, தங்களது ஆயுதங்களை வன்னி மரப்பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தனர். மேலும் அவர்கள் போருக்குச் செல்லும்போது, வன்னி மரத்தை வணங்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றதால்தான், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.– கவிதா பாலாஜிகணேஷ்