– சிவ.அ.விஜய் பெரியசுவாமி.சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று..ஒருமுறை திருக்கயிலாயத்தில் பளிங்கு போல் காட்சி தந்த பனிப்படலத்தில் தனது பிம்பத்தைக் காண்கிறார் சிவபெருமான். ஆம்! ஒன்றானவன் அங்கே இரண்டாகக் காட்சியளித்தான். தமது சுந்தர அழகில் தாமே மயங்கி எதிரில் தோன்றிய தம் பிம்பத்தை 'சுந்தரா! வா' என அழைக்க, அந்த பிம்பம் உயிர் பெற்று தனது நிஜ உருவான ஈசனை நோக்கி வந்தது. மகிழ்ந்த ஈசன் தம் அழகிய உருவில் தோன்றியதால் அழகன் எனும் பொருள்தரும் சுந்தரன் எனும் திருநாமத்தில் அழைத்து தம் அருகில் அணுக்கத்தொண்டராய் அதை அமர்த்திக் கொண்டார்..அதுசமயம் பாற்கடலைக் கடைந்ததால் அதிலிருந்து வந்தக் கொடிய ஆலகால விஷம் தேவர்களையும், அசுரர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. அந்த நஞ்சு வெளியே வந்தால் வையகமே அழிந்து விடும் என்ற நிலையில் அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். அப்போது சிவபெருமான் தம் அருகிலிருந்த சுந்தரனை நோக்க, புரிந்துகொண்ட சுந்தரர் உடனே பாற்கடல் சென்று அங்கு மிதந்த ஆலகால விஷத்தைத் திரட்டி, உருட்டி சிறு பந்து போல ஆக்கி சிவபெருமானிடம் உண்ணக் கொடுக்கிறார். இப்படி தேவர்களும் அருகில் செல்ல பயந்த ஆலகால விஷத்தை ஈசனுக்குக் கொடுத்ததால் சுந்தரன் அன்றுமுதல் ஆலாலசுந்தரர் ஆனார்..ஒரு நாள் சிவ பூஜைக்காக பூப்பறிக்க நந்தவனத்திற்குச் சென்றார் ஆலாலசுந்தரர். அங்கே பூ பறித்துக்கொண்டிருந்த கமிலினி, அனிந்ததை எனும் பார்வதி தேவியின் தோழியர்கள்பால் அவரது கவனம் சென்றது. அப்பெண்களும் ஆலாலசுந்தரர் மீது நாட்டம் கொண்டனர். இதனைக் கண்ட ஈசன் தம் அடியவர்களான ஆலாலசுந்தரர், கமிலினி, அனிந்ததை மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து வாழ்ந்து பின்னர் திருக்கயிலாயம் வந்தணையும்படி அருளினார். உடனே ஆலாலசுந்தரர் ஈசனை வேண்டி, 'தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ளவும்' என விண்ணப்பித்தார். ஈசனும் சம்மதிக்க, பூலோகத்தில் திருநாவலூரில் சடையனார்-இசைஞானியார் எனும் தம்பதிகளுக்கு நம்பி ஆரூரர் எனும் திருநாமத்தில் வந்துதித்து, அப்பகுதியின் மன்னனான நரசிங்கமுனையர் வளர்ப்பில் வளர்ந்தார்..அவரது பதினாறாவது அகவையில் அருகிலுள்ள புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் பெண்ணை மணம் முடிக்கப் பேசினர். இத்திருமணத்தை நிறுத்தவேண்டிய சூழல் ஈசனுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், தக்க சமயத்தில் தன்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என சுந்தரர் ஈசனிடம் திருக்கயிலையில் வேண்டுதல் வைத்திருந்ததால் அதன் பொருட்டு சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஓர் அந்தணக் கிழவராக வடிவெடுத்து திருமணம் நடைபெறப்போகும் புத்தூர் திருத்தலத்திற்கு ஈசன் வந்தார். நம்பி ஆரூரரான சுந்தரரைப் பார்த்துவிட்டு அருகில் நின்றோரிடம், 'இவன் என் அடிமை. எனவே இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்விக்காதீர்கள். இவனது பாட்டன் எழுதிக்கொடுத்த ஓலையில் அவனும், அவனது சந்ததியினரும் இந்த திருவெண்ணைய்நல்லூர் அந்தணனுக்கு அடிமை' என்று கூறி சுந்தரரின் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை அங்கிருந்த பெரியவர்களிடம் கொடுத்தார்..இதனைப் பார்த்த சுந்தரர், 'உமக்கு என்ன பித்தா பிடித்திருக்கிறது' என அம்முதியவரிடம் கேட்டு அவரது கரத்தில் இருந்த அடிமை ஓலையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. 'இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய்நல்லூருக்குச் செல்வோம் வா! அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்' என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர். சுந்தரரோ, 'அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்த பின்னரே நான் இங்கு வந்து மணம் முடிப்பேன்' எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்..இந்த வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே, அங்கிருந்த மறையவர்கள் சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என அறிவித்து தீர்ப்பளித்து, சுந்தரரை அந்த முதியவரிடம் ஒப்படைத்தனர். சுந்தரரும் ஒப்புக்கொண்டு அந்த முதியவருடன் நடக்கலானார். இதனால்தான். 'தீராத வழக்குக்கு திருவெண்ணெய் நல்லூர் தீர்ப்பு' என்று சொல்வார்கள்..அப்போது முதியவரிடம் சுந்தரர், 'அய்யா! உமது வீடு திருவெண்ணைய்நல்லூரில் எங்கு இருக்கிறது?' என வினவினார். உடனே அந்த முதியவர், 'அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது' என திருவெண்ணைய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார். 'அய்யா! அங்கே தெரிவது திருவெண்ணைய்நல்லூர் ஆலயம் அன்றோ?' என சுந்தரர் மீண்டும் கேட்க, முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணைய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் அழைத்துச் சென்று சிவலிங்கத்துக்கு முன்பு தமது பாதக்குறடுகளைக் கழற்றி விட்டு, சிவலிங்கத்துக்குள் சென்று மறைந்தார்..சுந்தரருக்கு ஒன்றும் புரியாமல் திகைக்க, அப்போது கருவறை லிங்கத்தில் இருந்து சிவபெருமான், 'சுந்தரா! நீ நம் பிம்பத்தில் இருந்து திருக்கயிலையில் தோன்றியவன். அங்கு உமையவள் தோழியர் இருவர் பால் மையல் கொண்டீர். எனவே உன்னை யாம் பூலோகத்தில் அப்பெண்களுடன் வாழ்ந்து பின்னர் திருக்கயிலாயம் வரும்படி பணித்தோம். அதுசமயம் நீ உன்னை தக்கச் சமயத்தில் பூலோகத்தில் தடம் மாறி, தடுமாறும்போது வந்து ஆட்கொண்டு அருள விண்ணப்பித்தாய். அதன்படி யாம் தற்போது உன்னை தடுத்தாட்கொண்டோம். இனி நம்மை உன் சுந்தரத் தமிழால் பாடிடுக! பூவுலகில் உனக்காகத் தோன்றி வளர்ந்திருக்கும் நம் உமையவளின் தோழிகளான திருஆரூர் பரவையையும், திருஒற்றியூர் சங்கிலியையையும் மனம் போல் மணம் முடித்து நம்மை வந்தணைக. அதுமட்டுமல்ல; எம்முடன் நீ வம்புகள் செய்ததால் உனக்கு, 'வன்தொண்டர்' என்ற பெயரையும் வழங்குகிறேன்' என அருளினார்..ஆனந்தித்த சுந்தரர், 'அய்யனே! உம்மை எப்படித் துவங்கிப் பாடுவேன்?' என வியந்து சொல்ல, 'எம்மை நீ முதலில் திட்டி அழைத்த, 'பித்தா' எனும் சொல்லையே முதலாய் கொண்டு எம்மைப் பாடிடுக' என அருளி சிவலிங்கத்துக்குள் மறைந்தார்..'பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.'.என சுந்தரர் தனது முதல் பதிகத்தைப் பாடத் தொடங்கினார். சுந்தரரை ஈசன் வலியச் சென்று தாமே தோழனாக்கிக் கொண்டதால் சுந்தரர் 'தம்பிரான் தோழர்' என்றும் அழைக்கப்பட்டார். பின்னர் திருநாவலூர், திருத்துறையூர், சீர்காழி எனப் பல சிவத்தலங்களைத் தரிசித்து ஈசனைப் பதிகம் பாடித் துதித்து அற்புதங்கள் பல நிகழ்த்தினார். பொன், பொருள் பெற்றார்..திருவதிகையில் திருவடி தீட்சை பெற்று, திருவாரூரில் பரவையாரையும், திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணக்க ஈசனையே தூதுவிட்டு இருமணம் புரிந்துகொண்டார் சுந்தரர். கூடவே சேரமான் பெருமானையும் நட்பாக்கிக்கொண்டு ஒரு ஆடி மாத சுவாதி நட்சத்திர நாளில் ஈசன் அனுப்பிய அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் யானையில் தாம் திருக்கயிலை செல்லும்போது தம்முடன் சேரமான் பெருமானையும் அழைத்துச்சென்று திருக்கயிலாயம் சென்றடைந்தார் சுந்தரர் என்பது வரலாறு. திருவெண்ணைய்நல்லூரில் ஈசன் சுந்தரருடன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணைய்நல்லூரில் உள்ளது..தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என்கிறார்கள். சடையப்ப வள்ளல் கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணிய பூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார் சிவஞான போதம் அருளிய திருத்தலமும் இதுவேயாம். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் வரப்பிரசாதி ஆவார். பேச்சு சரியாக வராத குழந்தைகள் இவரைத் தொடர்ந்து வழிபட்டுவர பேச்சு வரும் என்கிறார்கள்..முருகப்பெருமான் தேவர்களுக்கும், அருணகிரிநாதருக்கும் இங்கு மயில் மீது நடனக்காட்சி நல்கியுள்ளார். இத்தல மங்களாம்பிகை சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் யாவும் கிட்டும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பு. அறுபத்து மூவர், சப்த கன்னியர் சன்னிதிகளும் உள்ளன..இத்தல ஈசனின் திருநாமம் கிருபாபுரீஸ்வரர். இங்கு கருவறையில் சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் உள்ளது. தடுத்தாட்கொண்ட நாதர் என்ற பெயரும் இவருக்குண்டு. சுந்தரரின் திருமணத்தை முதியவர் வேடத்தில் சென்று தடுத்து அவரை ஆட்கொண்டதால் இத்தல ஈசன் தடுத்தாட்கொண்ட நாதர் ஆனார்..வறுமை, தரித்திரம், தடைபட்ட மற்றும் சிக்கலான திருமணம், குழந்தை பாக்கியத் தடை, கொடிய வியாதி, மனநிலை பாதிப்புகள் போன்ற முன்ஜன்ம வினைப்பயன், பித்ரு தோஷம், குலதெய்வ பூஜை வழிபாடு செய்யாமையால் உண்டான பிரச்னைகளை அகற்றி, நல்லொளி வழங்கி திருவெண்ணைநல்லூர் ஈசன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் தங்கள் ஜாதகத்தையும், தங்களைச் சார்ந்தோர் ஜாதகத்தையும் ஈசன் சன்னிதியில் வைத்து தொடர்ந்து 11 திங்கட்கிழமைகளில் கருவறைத் தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து வழிபடவேண்டும்..இத்தலத்திலுள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கும் வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள். கூடவே இத்தல சுந்தரரின் 'பித்தா பிறைசூடி' எனும் திருப்பாட்டையும் அனுதினமும் பாராயணம் செய்துவர, வெகு விரைவில் தங்கள் பிரச்னைகள் சூரியனைக் கண்ட பனிபோல விலகிடக் காணலாம். இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்டுள்ளனர். அர்ச்சுனன் வழிபட்ட விஜய லிங்கம் இங்குள்ளது. சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. திருமால் வழிபட்ட சங்கர லிங்கமும் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதி லிங்கமும் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு. இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில் மேலே சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார்..ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குரு பூஜை விழா இங்கு இரு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இங்குள்ள வழக்குரைத்த மண்டபத்தில் சுந்தரரின் திருமணத்தை ஈசன் ஓலையுடன் சென்று தடுத்தாட்கொண்டது, சுந்தரருக்கு ஈசன் உமையவளுடன் காட்சி கொடுத்தது, பின்னர் ஆலயக் குளத்தில் முதலை உண்ட பாலகனை அவிநாசியில் மீட்டது என அனைத்து நிகழ்வுகளும் பெரியபுராணம் வழியில் பாவனையாக நடத்திக்காட்டப்படுகிறது..மகாசிவராத்திரி இத்தலத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அன்று நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. இன்று விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர பிரம்மோத்ஸவமும் வெகு சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகிறது. இன்று கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபடுவதால் குலதெய்வ வழிபாடு செய்யாமையால் உண்டான பாவங்கள், தோஷங்கள் அகலும்..அமைவிடம்: விழுப்புரத்தில் இருந்து அரசூர் வழியில் 19 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது.
– சிவ.அ.விஜய் பெரியசுவாமி.சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று..ஒருமுறை திருக்கயிலாயத்தில் பளிங்கு போல் காட்சி தந்த பனிப்படலத்தில் தனது பிம்பத்தைக் காண்கிறார் சிவபெருமான். ஆம்! ஒன்றானவன் அங்கே இரண்டாகக் காட்சியளித்தான். தமது சுந்தர அழகில் தாமே மயங்கி எதிரில் தோன்றிய தம் பிம்பத்தை 'சுந்தரா! வா' என அழைக்க, அந்த பிம்பம் உயிர் பெற்று தனது நிஜ உருவான ஈசனை நோக்கி வந்தது. மகிழ்ந்த ஈசன் தம் அழகிய உருவில் தோன்றியதால் அழகன் எனும் பொருள்தரும் சுந்தரன் எனும் திருநாமத்தில் அழைத்து தம் அருகில் அணுக்கத்தொண்டராய் அதை அமர்த்திக் கொண்டார்..அதுசமயம் பாற்கடலைக் கடைந்ததால் அதிலிருந்து வந்தக் கொடிய ஆலகால விஷம் தேவர்களையும், அசுரர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. அந்த நஞ்சு வெளியே வந்தால் வையகமே அழிந்து விடும் என்ற நிலையில் அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். அப்போது சிவபெருமான் தம் அருகிலிருந்த சுந்தரனை நோக்க, புரிந்துகொண்ட சுந்தரர் உடனே பாற்கடல் சென்று அங்கு மிதந்த ஆலகால விஷத்தைத் திரட்டி, உருட்டி சிறு பந்து போல ஆக்கி சிவபெருமானிடம் உண்ணக் கொடுக்கிறார். இப்படி தேவர்களும் அருகில் செல்ல பயந்த ஆலகால விஷத்தை ஈசனுக்குக் கொடுத்ததால் சுந்தரன் அன்றுமுதல் ஆலாலசுந்தரர் ஆனார்..ஒரு நாள் சிவ பூஜைக்காக பூப்பறிக்க நந்தவனத்திற்குச் சென்றார் ஆலாலசுந்தரர். அங்கே பூ பறித்துக்கொண்டிருந்த கமிலினி, அனிந்ததை எனும் பார்வதி தேவியின் தோழியர்கள்பால் அவரது கவனம் சென்றது. அப்பெண்களும் ஆலாலசுந்தரர் மீது நாட்டம் கொண்டனர். இதனைக் கண்ட ஈசன் தம் அடியவர்களான ஆலாலசுந்தரர், கமிலினி, அனிந்ததை மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து வாழ்ந்து பின்னர் திருக்கயிலாயம் வந்தணையும்படி அருளினார். உடனே ஆலாலசுந்தரர் ஈசனை வேண்டி, 'தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ளவும்' என விண்ணப்பித்தார். ஈசனும் சம்மதிக்க, பூலோகத்தில் திருநாவலூரில் சடையனார்-இசைஞானியார் எனும் தம்பதிகளுக்கு நம்பி ஆரூரர் எனும் திருநாமத்தில் வந்துதித்து, அப்பகுதியின் மன்னனான நரசிங்கமுனையர் வளர்ப்பில் வளர்ந்தார்..அவரது பதினாறாவது அகவையில் அருகிலுள்ள புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் பெண்ணை மணம் முடிக்கப் பேசினர். இத்திருமணத்தை நிறுத்தவேண்டிய சூழல் ஈசனுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், தக்க சமயத்தில் தன்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என சுந்தரர் ஈசனிடம் திருக்கயிலையில் வேண்டுதல் வைத்திருந்ததால் அதன் பொருட்டு சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஓர் அந்தணக் கிழவராக வடிவெடுத்து திருமணம் நடைபெறப்போகும் புத்தூர் திருத்தலத்திற்கு ஈசன் வந்தார். நம்பி ஆரூரரான சுந்தரரைப் பார்த்துவிட்டு அருகில் நின்றோரிடம், 'இவன் என் அடிமை. எனவே இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்விக்காதீர்கள். இவனது பாட்டன் எழுதிக்கொடுத்த ஓலையில் அவனும், அவனது சந்ததியினரும் இந்த திருவெண்ணைய்நல்லூர் அந்தணனுக்கு அடிமை' என்று கூறி சுந்தரரின் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை அங்கிருந்த பெரியவர்களிடம் கொடுத்தார்..இதனைப் பார்த்த சுந்தரர், 'உமக்கு என்ன பித்தா பிடித்திருக்கிறது' என அம்முதியவரிடம் கேட்டு அவரது கரத்தில் இருந்த அடிமை ஓலையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. 'இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய்நல்லூருக்குச் செல்வோம் வா! அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்' என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர். சுந்தரரோ, 'அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்த பின்னரே நான் இங்கு வந்து மணம் முடிப்பேன்' எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்..இந்த வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே, அங்கிருந்த மறையவர்கள் சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என அறிவித்து தீர்ப்பளித்து, சுந்தரரை அந்த முதியவரிடம் ஒப்படைத்தனர். சுந்தரரும் ஒப்புக்கொண்டு அந்த முதியவருடன் நடக்கலானார். இதனால்தான். 'தீராத வழக்குக்கு திருவெண்ணெய் நல்லூர் தீர்ப்பு' என்று சொல்வார்கள்..அப்போது முதியவரிடம் சுந்தரர், 'அய்யா! உமது வீடு திருவெண்ணைய்நல்லூரில் எங்கு இருக்கிறது?' என வினவினார். உடனே அந்த முதியவர், 'அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது' என திருவெண்ணைய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார். 'அய்யா! அங்கே தெரிவது திருவெண்ணைய்நல்லூர் ஆலயம் அன்றோ?' என சுந்தரர் மீண்டும் கேட்க, முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணைய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் அழைத்துச் சென்று சிவலிங்கத்துக்கு முன்பு தமது பாதக்குறடுகளைக் கழற்றி விட்டு, சிவலிங்கத்துக்குள் சென்று மறைந்தார்..சுந்தரருக்கு ஒன்றும் புரியாமல் திகைக்க, அப்போது கருவறை லிங்கத்தில் இருந்து சிவபெருமான், 'சுந்தரா! நீ நம் பிம்பத்தில் இருந்து திருக்கயிலையில் தோன்றியவன். அங்கு உமையவள் தோழியர் இருவர் பால் மையல் கொண்டீர். எனவே உன்னை யாம் பூலோகத்தில் அப்பெண்களுடன் வாழ்ந்து பின்னர் திருக்கயிலாயம் வரும்படி பணித்தோம். அதுசமயம் நீ உன்னை தக்கச் சமயத்தில் பூலோகத்தில் தடம் மாறி, தடுமாறும்போது வந்து ஆட்கொண்டு அருள விண்ணப்பித்தாய். அதன்படி யாம் தற்போது உன்னை தடுத்தாட்கொண்டோம். இனி நம்மை உன் சுந்தரத் தமிழால் பாடிடுக! பூவுலகில் உனக்காகத் தோன்றி வளர்ந்திருக்கும் நம் உமையவளின் தோழிகளான திருஆரூர் பரவையையும், திருஒற்றியூர் சங்கிலியையையும் மனம் போல் மணம் முடித்து நம்மை வந்தணைக. அதுமட்டுமல்ல; எம்முடன் நீ வம்புகள் செய்ததால் உனக்கு, 'வன்தொண்டர்' என்ற பெயரையும் வழங்குகிறேன்' என அருளினார்..ஆனந்தித்த சுந்தரர், 'அய்யனே! உம்மை எப்படித் துவங்கிப் பாடுவேன்?' என வியந்து சொல்ல, 'எம்மை நீ முதலில் திட்டி அழைத்த, 'பித்தா' எனும் சொல்லையே முதலாய் கொண்டு எம்மைப் பாடிடுக' என அருளி சிவலிங்கத்துக்குள் மறைந்தார்..'பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.'.என சுந்தரர் தனது முதல் பதிகத்தைப் பாடத் தொடங்கினார். சுந்தரரை ஈசன் வலியச் சென்று தாமே தோழனாக்கிக் கொண்டதால் சுந்தரர் 'தம்பிரான் தோழர்' என்றும் அழைக்கப்பட்டார். பின்னர் திருநாவலூர், திருத்துறையூர், சீர்காழி எனப் பல சிவத்தலங்களைத் தரிசித்து ஈசனைப் பதிகம் பாடித் துதித்து அற்புதங்கள் பல நிகழ்த்தினார். பொன், பொருள் பெற்றார்..திருவதிகையில் திருவடி தீட்சை பெற்று, திருவாரூரில் பரவையாரையும், திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணக்க ஈசனையே தூதுவிட்டு இருமணம் புரிந்துகொண்டார் சுந்தரர். கூடவே சேரமான் பெருமானையும் நட்பாக்கிக்கொண்டு ஒரு ஆடி மாத சுவாதி நட்சத்திர நாளில் ஈசன் அனுப்பிய அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் யானையில் தாம் திருக்கயிலை செல்லும்போது தம்முடன் சேரமான் பெருமானையும் அழைத்துச்சென்று திருக்கயிலாயம் சென்றடைந்தார் சுந்தரர் என்பது வரலாறு. திருவெண்ணைய்நல்லூரில் ஈசன் சுந்தரருடன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணைய்நல்லூரில் உள்ளது..தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என்கிறார்கள். சடையப்ப வள்ளல் கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணிய பூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார் சிவஞான போதம் அருளிய திருத்தலமும் இதுவேயாம். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் வரப்பிரசாதி ஆவார். பேச்சு சரியாக வராத குழந்தைகள் இவரைத் தொடர்ந்து வழிபட்டுவர பேச்சு வரும் என்கிறார்கள்..முருகப்பெருமான் தேவர்களுக்கும், அருணகிரிநாதருக்கும் இங்கு மயில் மீது நடனக்காட்சி நல்கியுள்ளார். இத்தல மங்களாம்பிகை சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் யாவும் கிட்டும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பு. அறுபத்து மூவர், சப்த கன்னியர் சன்னிதிகளும் உள்ளன..இத்தல ஈசனின் திருநாமம் கிருபாபுரீஸ்வரர். இங்கு கருவறையில் சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் உள்ளது. தடுத்தாட்கொண்ட நாதர் என்ற பெயரும் இவருக்குண்டு. சுந்தரரின் திருமணத்தை முதியவர் வேடத்தில் சென்று தடுத்து அவரை ஆட்கொண்டதால் இத்தல ஈசன் தடுத்தாட்கொண்ட நாதர் ஆனார்..வறுமை, தரித்திரம், தடைபட்ட மற்றும் சிக்கலான திருமணம், குழந்தை பாக்கியத் தடை, கொடிய வியாதி, மனநிலை பாதிப்புகள் போன்ற முன்ஜன்ம வினைப்பயன், பித்ரு தோஷம், குலதெய்வ பூஜை வழிபாடு செய்யாமையால் உண்டான பிரச்னைகளை அகற்றி, நல்லொளி வழங்கி திருவெண்ணைநல்லூர் ஈசன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் தங்கள் ஜாதகத்தையும், தங்களைச் சார்ந்தோர் ஜாதகத்தையும் ஈசன் சன்னிதியில் வைத்து தொடர்ந்து 11 திங்கட்கிழமைகளில் கருவறைத் தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து வழிபடவேண்டும்..இத்தலத்திலுள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கும் வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள். கூடவே இத்தல சுந்தரரின் 'பித்தா பிறைசூடி' எனும் திருப்பாட்டையும் அனுதினமும் பாராயணம் செய்துவர, வெகு விரைவில் தங்கள் பிரச்னைகள் சூரியனைக் கண்ட பனிபோல விலகிடக் காணலாம். இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்டுள்ளனர். அர்ச்சுனன் வழிபட்ட விஜய லிங்கம் இங்குள்ளது. சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. திருமால் வழிபட்ட சங்கர லிங்கமும் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதி லிங்கமும் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு. இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில் மேலே சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார்..ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குரு பூஜை விழா இங்கு இரு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இங்குள்ள வழக்குரைத்த மண்டபத்தில் சுந்தரரின் திருமணத்தை ஈசன் ஓலையுடன் சென்று தடுத்தாட்கொண்டது, சுந்தரருக்கு ஈசன் உமையவளுடன் காட்சி கொடுத்தது, பின்னர் ஆலயக் குளத்தில் முதலை உண்ட பாலகனை அவிநாசியில் மீட்டது என அனைத்து நிகழ்வுகளும் பெரியபுராணம் வழியில் பாவனையாக நடத்திக்காட்டப்படுகிறது..மகாசிவராத்திரி இத்தலத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அன்று நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. இன்று விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர பிரம்மோத்ஸவமும் வெகு சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகிறது. இன்று கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபடுவதால் குலதெய்வ வழிபாடு செய்யாமையால் உண்டான பாவங்கள், தோஷங்கள் அகலும்..அமைவிடம்: விழுப்புரத்தில் இருந்து அரசூர் வழியில் 19 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது.