என் பெயர் ஆறுமுகம்தான், காலையில் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் வரை…."ம்…மே…" என்று கத்த வேண்டும் போலிருந்தது, கத்தினேன். சப்தமே வரவில்லை..காலையில் கண் விழித்தபோது, ஏதோ ஆட்டுப் புழுக்கை வாடை அடித்தது – படுக்கையறையில் ஆட்டுப்புழுக்கை எப்படி? எழுந்து உட்கார்ந்து பார்த்தபோது, ஏசி ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் செல்வி இழுத்துப்போர்த்திய போர்வைக்குள், சரிந்து கிடந்த மூட்டையாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள்.."ம்..மே…" – இப்போதும் குரல் வரவில்லை..சப்தம் செய்யாமல் மெதுவாக எழுந்து, குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று, இடது பக்கச் சுவற்றில் ஒட்டியிருந்த கண்ணாடியின் முன் நின்றேன். திடுக்கிட்டு கண்களை ஒருமுறை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தேன். சந்தேகமே இல்லை, கழுத்துக்கு மேல் என் முகம் ஒரு ஆட்டின் முகமாக மாறியிருந்தது – இரண்டு சிறிய கொம்புகள், நீளமான மூஞ்சி, பக்கவாட்டில் இரண்டு பெரிய கருப்பு விழிகளுடன் கண்கள், மூக்கின் மேல் வெள்ளைத் திட்டு, கறுப்பு நிறத்தில் ஆட்டு முகம்! மேலும் கீழும் தலையை ஆட்டினேன். ஆடு, மரக்கிளையிலிருந்து தழைகளைத் தின்பதற்கு வாயைத் திறந்து கிளையை மேலும் கீழுமாக அசைப்பதுபோல இருந்தது..ஐயோ, என்ன கொடுமை இது?."ம்..மே…" சத்தம் வரவில்லை. இன்னொரு படுக்கையறையிலிருந்த கண்ணாடிக்கருகே ஓடினேன். அந்தக் கண்ணாடியும் ஆட்டு முகத்தையே காண்பித்தது. கண்ணாடியைக் கழற்றி, இடமும் வலமுமாக சுழற்றிப் பார்த்தேன் – ஆறுமுகம்தான், ஆடுமுகமாக மாறியிருந்தேன்!.அவசரமாகத் திரும்பி வந்து, பிரஷில் பற்பசையைப் பிதுக்கி உதடுகளை விரித்து பல் விளக்கினேன் – எகிரே தெரியாமல், சோழிகளைப்போல இருந்தன பற்கள்! வாய்க் கொப்பளித்து, முகத்தைத் துடைத்துக்கொண்டு, எதிரே கண்ணாடியில் பயந்தபடியே பார்த்தேன். ஆடு, கண்களை விரித்து, உதடுகளைப் பிதுக்கி, 'ஏப்பம்' விடுவதைப்போல, சத்தமின்றி "ம்..மே…" என்றது…. மிரண்டு போய் வெளியே வந்து விட்டேன்..சப்தம் கேட்டு எழுந்து வந்த செல்வி, "ஏன் அதுக்குள்ள எழுந்துட்டீங்க?" என்றபடி கண்ணாடிமுன் நான் நிற்பதைப் பார்த்து, "என்ன ஆச்சு? முகம் ஒரு மாதிரியா வெளிறினாப்போல இருக்கு?" என்றாள்.."ஒன்றுமில்லை, தூக்கம் வரவில்லை, எழுந்து விட்டேன்" என்று அவள் முகத்தைப் பார்த்தேன். செல்வியின் முகம்தான்!.தன் தலையை முடிந்துகொண்டு, காபி தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றவளைப் பார்த்தபடி நின்றேன். 'என் ஆட்டு முகம் அவளுக்குப் பிடிக்குமா?'."திரு திரு" வென்று முழித்தபடி, மேஜையின் மேலிருந்த அன்றைய பேப்பரில் கவனம் செலுத்த முயன்றேன். நகரில், உலக சதுரங்க ஆட்டப் போட்டியின் விளம்பரம். குதிரை ஒன்று வணக்கம் செய்தபடி, வேட்டி கட்டி, நின்று கொண்டிருந்தது. சதுரங்க விளையாட்டில் 'ஆடு' கிடையாது, இருந்திருந்தால், என்னைப் போல இருந்திருக்கும்!.ஆவி பறக்கக் காபி கொண்டு வைத்தவள், "என்ன பலமான யோசனை? முகமே சரியில்லையே. ஒங்க மானேஜர் கூட இன்னைக்கு இல்லைன்னீங்களே – ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கிறீங்க?" என்றபடி, தன் காபியை உறிஞ்சினாள்.."ஒரு யோசனையும் இல்லே" என்று, முகவாயைத் தடவினேன். ஆட்டுத் தாடி இல்லாமல், மனித தாடி கையில் சொர சொரத்தது. "ஆபீசுக்குக் கொஞ்சம் சீக்கிரமாப் போகணும்" என்று சொல்லி, குளியலறைக்குள் சென்றேன். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. இன்று முகச் சவரம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். மனதிற்குள் 'ஆடுகளுக்கு யார் முகச்சவரம் செய்துவிடுவார்கள்' என்றெண்ணியபடி, விரைவாகக் குளித்து, உடையணிந்து, டிபன் முடித்து அலுவலகம் கிளம்பினேன்..ஆடு நடப்பதைப்போல, தலையை ஆட்டி ஆட்டி, ஓட்டமும் நடையுமாக நடந்து, பஸ் நிறுத்தம் வந்தேன். சுற்றி நின்றிருந்தவர்கள், என் முகத்தையே பார்ப்பதுபோல் தோன்றியது. கையிலிருந்த செய்திதாளை, முகத்தை மறைத்தாற்போல வைத்துக்கொண்டேன்..பஸ்ஸில் ஏறுவதற்கு ஒரே கூட்டம். முட்டி, மோதி ஒருவாறு ஏறிவிட்டேன். ஓட்டுனர், நடத்துனர், கூடையுடன் கிழிந்த புடவையில் ஒரு பெண்மணி, குடையுடன் ஒரு பெரியவர், ஆடியபடி பேப்பர் படிக்கும் 'டிப் டாப்' ஆசாமி, குனிந்து செல்போனை முறைத்துக் கொண்டிருந்த இளம் பெண் – வித விதமான முகங்கள், கொம்புகள், தாடியில்லாத மனித முகங்கள்!.செல்லில் காமிரா லென்ஸை என் பக்கம் திருப்பிப் பார்த்தேன் – திரையில் அதே ஆட்டு மூஞ்சி! 'க்ளிக்', ஒரு செல்ஃபி எடுத்தேன். கழுத்துக்குமேல் தெளிவற்ற, சோகமான என் மூஞ்சி! ஆடுகள் கவலைப்படுமா என்ன? நேஷனல் ஜியாகிரஃபி சானலில் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..அலுவலகத்தில் பியூன் பரமு முதல், பக்கத்து சீட் பத்மா வரை என்னை உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றியது.."ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க? எப்பவும் இருக்கிற மகிழ்ச்சியான முகம் இல்லையே?" எல்லோரும் கேட்டார்கள். டெஸ்பாட்ச் மணிக்கு எப்பவும் கிண்டல்தான், "என்னடா பலிகிடா மாதிரி முழிக்கறே?" என்றான்.."நல்லாத்தான் இருக்கேன். இரவு சரியாத் தூங்கல. ராப்பூரா கரண்ட் இல்லே" என்று சொன்னேன். சத்தமில்லாத "ம்..மே…"!.எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்க, நான் மட்டும் அங்கும் இங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முகத்திலிருந்து, கழுத்து, உடம்பு, கால்கள் என நான் முழு ஆடாக மாறிவிடுவதைப் போலத் தோன்றியது. பின்னால் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் – வால் ஒன்றும் இல்லை!.'தலைவலி' என்று அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு – ஆட்டுக்குத் தலைவலிக்குமா? – அலுவலகம் விட்டு வெளியே வந்து, எதிரில் இருக்கும் கடற்கரையைப் பார்த்தபடி நின்றேன். ஓய்வின்றி அலைகள் கரையை முத்தமிட்டுச் சென்றுகொண்டிருந்தன. ஆடுகள் முத்தம் கொடுக்குமா? உதடுகளைக் குவித்துப் பார்த்தேன்…. "ம்..மே…"..கையில் வண்ணக் கொடிகளுடன், கோஷமிட்டபடி ஒரு கூட்டம் என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. உடன் பந்தோபஸ்துக்காக போலீஸ்காரர்களும்! 'வாழ்க', 'ஒழிக' எனக் கூவியபடி, ஐநூறுக்கும் அதிகமான மனிதர்கள் – ஆட்டு மந்தை போல நெருக்கியடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். போகிறபோக்கில் என்னையும் கூட்டத்துள் இழுத்துவிடுவார்களோ எனப் பயந்து, அவசரமாக அந்தப் பக்கம் வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஏறி, பெயர் தெரியா இடத்தில் இறங்கினேன். புறநகர்ப் பகுதி. வறண்ட ஏரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தனித் தனி வீடுகள்! இங்கு எப்படி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றெண்ணியபடி நடந்தேன்..பத்துப் பதினைந்து ஆடுகளை ஓட்டியபடி வந்த முதியவர், நான் தனியாக நிற்பதைப் பார்த்துச் சிரிப்பதைப் போல இருந்தது. ஆடுகள் கண்டும் காணாததுபோல, ஓடிக்கொண்டிருந்தன. சில ஆடுகள் முன்னங்கால்களைத் தூக்கி, 'ம்மே' என்று கத்தின. "வா என்கூட, போகலாம். பசுந்தழை வீட்டிலெ இருக்கு. போடறேன்" என்று முதியவர் அழைப்பதைப்போல இருந்தது..தலையைச் சிலுப்பிக்கொண்டு, யாரும் கழுத்தில் மாலையிட்டு, கயிற்றைக் கட்டி இழுத்துப்போகுமுன், பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்..வழியெங்கும் ஆட்டுச் சிந்தனைகள் என்னை அலைக்கழித்தன. ஏன் ஆட்டு முகம்? சிங்க முகமாக இருந்தால் பரவாயில்லையோ என நினைத்தேன்!."என்ன ஆச்சு? சீக்கிரமே வந்துட்டீங்க, உடம்புக்கு சுகமில்லையா?" கரிசனத்துடன் கேட்டாள் செல்வி. 'மகாத்மா காந்தி, ஆட்டுப்பாலும், வேர்க்கடலையும் சாப்பிடுவார்' என்று டிவி சிறுவர் நிகழ்ச்சியில் குறுந்தாடியுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.."ஒண்ணுமில்லே செல்வி, கொஞ்சம் தலைவலி"."சரி, சூடா ஒரு கப் காபி தர்றேன். குடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, சரியாய்டும்"."நம்ம வீட்ல கவர் பால்தானே?" அனிச்சையாகக் கேட்டேன்.."ம்..ம்" முறைத்தாள் செல்வி. "டி.வி. பார்த்திட்டு, ஆட்டுப்பால் காபி குடுப்பேன்னு நெனச்சீங்களாக்கும்?" என்றபடி சமையலறைக்குள் மறைந்தாள்..கண்ணாடியில் முகத்தைப் பார்க்கலாம் என்று எழுந்த எண்ணத்தை புறந்தள்ளினேன். கையில் காபியுடன் வந்த செல்வியிடம், "உனக்கு என் முகத்துல ஏதாவது வித்தியாசம் தெரியுதா?" என்றேன்.."வித்தியாசம்ன்னா…?" கேட்டபடி காபியைக் கையில் கொடுத்தாள்.."எப்பவும் போலத்தான் இருக்குது. ஏதோ கொஞ்சம் பயந்த மாதிரி, வெளிறி கிடக்குது. என்ன ஆச்சுங்க?".சொன்னேன்..••• ••• •••.மாலை அந்த மருத்துவமனையில் அமர்ந்திருந்தோம். வரவேற்பறையில் டி.வி.யில் மலேசியா வாசுதேவன் சன்னமாகப் பாடிக்கொண்டிருந்தார்; "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு… கோழிக்குஞ்சு வந்ததின்னு..". முகத்தைத் திருப்பிக்கொண்டேன்..வீட்டருகில் மட்டன் ஸ்டால் வைத்திருக்கும் பஷீர் பாய், லுங்கி, மல் ஜிப்பாவில் என் எதிரில் அமர்ந்திருந்தார். "நல்லா இருக்கீயளா?" என்று கேட்டார். தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். "நல்லாயிருந்தா ஏன் இங்கே வர்றோம்?" என்று கேட்க நினைத்தேன். அவர் கடைக் கத்தி நினைவுக்கு வரவே, வாய்மூடி அமைதியானேன்!.டாக்டருக்காகக் காத்திருந்தவர்கள் எல்லோரும், பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். காரிலிருந்து இறங்கிய டாக்டர் கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப்பை மாலையாகப் போட்டுக்கொண்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்துத் தலையை ஆட்டியவாறு உள்ளே சென்றார்..பெரிய ஆடு ஒன்று, கழுத்தில் மாலையுடன் உள்ளே சென்றது போலவும், காத்திருந்தவர்கள் எல்லாம் சிறிய ஆடுகள் போல தலையை அசைத்தசைத்து என்னைப் பார்ப்பது போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?."ம்.. மே…" என் தொண்டையிலிருந்து வந்த சப்தம் கேட்டு, என்னை மிரட்சியுடன் பார்த்தாள் செல்வி!
என் பெயர் ஆறுமுகம்தான், காலையில் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் வரை…."ம்…மே…" என்று கத்த வேண்டும் போலிருந்தது, கத்தினேன். சப்தமே வரவில்லை..காலையில் கண் விழித்தபோது, ஏதோ ஆட்டுப் புழுக்கை வாடை அடித்தது – படுக்கையறையில் ஆட்டுப்புழுக்கை எப்படி? எழுந்து உட்கார்ந்து பார்த்தபோது, ஏசி ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் செல்வி இழுத்துப்போர்த்திய போர்வைக்குள், சரிந்து கிடந்த மூட்டையாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள்.."ம்..மே…" – இப்போதும் குரல் வரவில்லை..சப்தம் செய்யாமல் மெதுவாக எழுந்து, குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று, இடது பக்கச் சுவற்றில் ஒட்டியிருந்த கண்ணாடியின் முன் நின்றேன். திடுக்கிட்டு கண்களை ஒருமுறை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தேன். சந்தேகமே இல்லை, கழுத்துக்கு மேல் என் முகம் ஒரு ஆட்டின் முகமாக மாறியிருந்தது – இரண்டு சிறிய கொம்புகள், நீளமான மூஞ்சி, பக்கவாட்டில் இரண்டு பெரிய கருப்பு விழிகளுடன் கண்கள், மூக்கின் மேல் வெள்ளைத் திட்டு, கறுப்பு நிறத்தில் ஆட்டு முகம்! மேலும் கீழும் தலையை ஆட்டினேன். ஆடு, மரக்கிளையிலிருந்து தழைகளைத் தின்பதற்கு வாயைத் திறந்து கிளையை மேலும் கீழுமாக அசைப்பதுபோல இருந்தது..ஐயோ, என்ன கொடுமை இது?."ம்..மே…" சத்தம் வரவில்லை. இன்னொரு படுக்கையறையிலிருந்த கண்ணாடிக்கருகே ஓடினேன். அந்தக் கண்ணாடியும் ஆட்டு முகத்தையே காண்பித்தது. கண்ணாடியைக் கழற்றி, இடமும் வலமுமாக சுழற்றிப் பார்த்தேன் – ஆறுமுகம்தான், ஆடுமுகமாக மாறியிருந்தேன்!.அவசரமாகத் திரும்பி வந்து, பிரஷில் பற்பசையைப் பிதுக்கி உதடுகளை விரித்து பல் விளக்கினேன் – எகிரே தெரியாமல், சோழிகளைப்போல இருந்தன பற்கள்! வாய்க் கொப்பளித்து, முகத்தைத் துடைத்துக்கொண்டு, எதிரே கண்ணாடியில் பயந்தபடியே பார்த்தேன். ஆடு, கண்களை விரித்து, உதடுகளைப் பிதுக்கி, 'ஏப்பம்' விடுவதைப்போல, சத்தமின்றி "ம்..மே…" என்றது…. மிரண்டு போய் வெளியே வந்து விட்டேன்..சப்தம் கேட்டு எழுந்து வந்த செல்வி, "ஏன் அதுக்குள்ள எழுந்துட்டீங்க?" என்றபடி கண்ணாடிமுன் நான் நிற்பதைப் பார்த்து, "என்ன ஆச்சு? முகம் ஒரு மாதிரியா வெளிறினாப்போல இருக்கு?" என்றாள்.."ஒன்றுமில்லை, தூக்கம் வரவில்லை, எழுந்து விட்டேன்" என்று அவள் முகத்தைப் பார்த்தேன். செல்வியின் முகம்தான்!.தன் தலையை முடிந்துகொண்டு, காபி தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றவளைப் பார்த்தபடி நின்றேன். 'என் ஆட்டு முகம் அவளுக்குப் பிடிக்குமா?'."திரு திரு" வென்று முழித்தபடி, மேஜையின் மேலிருந்த அன்றைய பேப்பரில் கவனம் செலுத்த முயன்றேன். நகரில், உலக சதுரங்க ஆட்டப் போட்டியின் விளம்பரம். குதிரை ஒன்று வணக்கம் செய்தபடி, வேட்டி கட்டி, நின்று கொண்டிருந்தது. சதுரங்க விளையாட்டில் 'ஆடு' கிடையாது, இருந்திருந்தால், என்னைப் போல இருந்திருக்கும்!.ஆவி பறக்கக் காபி கொண்டு வைத்தவள், "என்ன பலமான யோசனை? முகமே சரியில்லையே. ஒங்க மானேஜர் கூட இன்னைக்கு இல்லைன்னீங்களே – ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கிறீங்க?" என்றபடி, தன் காபியை உறிஞ்சினாள்.."ஒரு யோசனையும் இல்லே" என்று, முகவாயைத் தடவினேன். ஆட்டுத் தாடி இல்லாமல், மனித தாடி கையில் சொர சொரத்தது. "ஆபீசுக்குக் கொஞ்சம் சீக்கிரமாப் போகணும்" என்று சொல்லி, குளியலறைக்குள் சென்றேன். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. இன்று முகச் சவரம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். மனதிற்குள் 'ஆடுகளுக்கு யார் முகச்சவரம் செய்துவிடுவார்கள்' என்றெண்ணியபடி, விரைவாகக் குளித்து, உடையணிந்து, டிபன் முடித்து அலுவலகம் கிளம்பினேன்..ஆடு நடப்பதைப்போல, தலையை ஆட்டி ஆட்டி, ஓட்டமும் நடையுமாக நடந்து, பஸ் நிறுத்தம் வந்தேன். சுற்றி நின்றிருந்தவர்கள், என் முகத்தையே பார்ப்பதுபோல் தோன்றியது. கையிலிருந்த செய்திதாளை, முகத்தை மறைத்தாற்போல வைத்துக்கொண்டேன்..பஸ்ஸில் ஏறுவதற்கு ஒரே கூட்டம். முட்டி, மோதி ஒருவாறு ஏறிவிட்டேன். ஓட்டுனர், நடத்துனர், கூடையுடன் கிழிந்த புடவையில் ஒரு பெண்மணி, குடையுடன் ஒரு பெரியவர், ஆடியபடி பேப்பர் படிக்கும் 'டிப் டாப்' ஆசாமி, குனிந்து செல்போனை முறைத்துக் கொண்டிருந்த இளம் பெண் – வித விதமான முகங்கள், கொம்புகள், தாடியில்லாத மனித முகங்கள்!.செல்லில் காமிரா லென்ஸை என் பக்கம் திருப்பிப் பார்த்தேன் – திரையில் அதே ஆட்டு மூஞ்சி! 'க்ளிக்', ஒரு செல்ஃபி எடுத்தேன். கழுத்துக்குமேல் தெளிவற்ற, சோகமான என் மூஞ்சி! ஆடுகள் கவலைப்படுமா என்ன? நேஷனல் ஜியாகிரஃபி சானலில் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..அலுவலகத்தில் பியூன் பரமு முதல், பக்கத்து சீட் பத்மா வரை என்னை உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றியது.."ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க? எப்பவும் இருக்கிற மகிழ்ச்சியான முகம் இல்லையே?" எல்லோரும் கேட்டார்கள். டெஸ்பாட்ச் மணிக்கு எப்பவும் கிண்டல்தான், "என்னடா பலிகிடா மாதிரி முழிக்கறே?" என்றான்.."நல்லாத்தான் இருக்கேன். இரவு சரியாத் தூங்கல. ராப்பூரா கரண்ட் இல்லே" என்று சொன்னேன். சத்தமில்லாத "ம்..மே…"!.எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்க, நான் மட்டும் அங்கும் இங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முகத்திலிருந்து, கழுத்து, உடம்பு, கால்கள் என நான் முழு ஆடாக மாறிவிடுவதைப் போலத் தோன்றியது. பின்னால் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் – வால் ஒன்றும் இல்லை!.'தலைவலி' என்று அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு – ஆட்டுக்குத் தலைவலிக்குமா? – அலுவலகம் விட்டு வெளியே வந்து, எதிரில் இருக்கும் கடற்கரையைப் பார்த்தபடி நின்றேன். ஓய்வின்றி அலைகள் கரையை முத்தமிட்டுச் சென்றுகொண்டிருந்தன. ஆடுகள் முத்தம் கொடுக்குமா? உதடுகளைக் குவித்துப் பார்த்தேன்…. "ம்..மே…"..கையில் வண்ணக் கொடிகளுடன், கோஷமிட்டபடி ஒரு கூட்டம் என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. உடன் பந்தோபஸ்துக்காக போலீஸ்காரர்களும்! 'வாழ்க', 'ஒழிக' எனக் கூவியபடி, ஐநூறுக்கும் அதிகமான மனிதர்கள் – ஆட்டு மந்தை போல நெருக்கியடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். போகிறபோக்கில் என்னையும் கூட்டத்துள் இழுத்துவிடுவார்களோ எனப் பயந்து, அவசரமாக அந்தப் பக்கம் வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஏறி, பெயர் தெரியா இடத்தில் இறங்கினேன். புறநகர்ப் பகுதி. வறண்ட ஏரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தனித் தனி வீடுகள்! இங்கு எப்படி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றெண்ணியபடி நடந்தேன்..பத்துப் பதினைந்து ஆடுகளை ஓட்டியபடி வந்த முதியவர், நான் தனியாக நிற்பதைப் பார்த்துச் சிரிப்பதைப் போல இருந்தது. ஆடுகள் கண்டும் காணாததுபோல, ஓடிக்கொண்டிருந்தன. சில ஆடுகள் முன்னங்கால்களைத் தூக்கி, 'ம்மே' என்று கத்தின. "வா என்கூட, போகலாம். பசுந்தழை வீட்டிலெ இருக்கு. போடறேன்" என்று முதியவர் அழைப்பதைப்போல இருந்தது..தலையைச் சிலுப்பிக்கொண்டு, யாரும் கழுத்தில் மாலையிட்டு, கயிற்றைக் கட்டி இழுத்துப்போகுமுன், பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்..வழியெங்கும் ஆட்டுச் சிந்தனைகள் என்னை அலைக்கழித்தன. ஏன் ஆட்டு முகம்? சிங்க முகமாக இருந்தால் பரவாயில்லையோ என நினைத்தேன்!."என்ன ஆச்சு? சீக்கிரமே வந்துட்டீங்க, உடம்புக்கு சுகமில்லையா?" கரிசனத்துடன் கேட்டாள் செல்வி. 'மகாத்மா காந்தி, ஆட்டுப்பாலும், வேர்க்கடலையும் சாப்பிடுவார்' என்று டிவி சிறுவர் நிகழ்ச்சியில் குறுந்தாடியுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.."ஒண்ணுமில்லே செல்வி, கொஞ்சம் தலைவலி"."சரி, சூடா ஒரு கப் காபி தர்றேன். குடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, சரியாய்டும்"."நம்ம வீட்ல கவர் பால்தானே?" அனிச்சையாகக் கேட்டேன்.."ம்..ம்" முறைத்தாள் செல்வி. "டி.வி. பார்த்திட்டு, ஆட்டுப்பால் காபி குடுப்பேன்னு நெனச்சீங்களாக்கும்?" என்றபடி சமையலறைக்குள் மறைந்தாள்..கண்ணாடியில் முகத்தைப் பார்க்கலாம் என்று எழுந்த எண்ணத்தை புறந்தள்ளினேன். கையில் காபியுடன் வந்த செல்வியிடம், "உனக்கு என் முகத்துல ஏதாவது வித்தியாசம் தெரியுதா?" என்றேன்.."வித்தியாசம்ன்னா…?" கேட்டபடி காபியைக் கையில் கொடுத்தாள்.."எப்பவும் போலத்தான் இருக்குது. ஏதோ கொஞ்சம் பயந்த மாதிரி, வெளிறி கிடக்குது. என்ன ஆச்சுங்க?".சொன்னேன்..••• ••• •••.மாலை அந்த மருத்துவமனையில் அமர்ந்திருந்தோம். வரவேற்பறையில் டி.வி.யில் மலேசியா வாசுதேவன் சன்னமாகப் பாடிக்கொண்டிருந்தார்; "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு… கோழிக்குஞ்சு வந்ததின்னு..". முகத்தைத் திருப்பிக்கொண்டேன்..வீட்டருகில் மட்டன் ஸ்டால் வைத்திருக்கும் பஷீர் பாய், லுங்கி, மல் ஜிப்பாவில் என் எதிரில் அமர்ந்திருந்தார். "நல்லா இருக்கீயளா?" என்று கேட்டார். தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். "நல்லாயிருந்தா ஏன் இங்கே வர்றோம்?" என்று கேட்க நினைத்தேன். அவர் கடைக் கத்தி நினைவுக்கு வரவே, வாய்மூடி அமைதியானேன்!.டாக்டருக்காகக் காத்திருந்தவர்கள் எல்லோரும், பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். காரிலிருந்து இறங்கிய டாக்டர் கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப்பை மாலையாகப் போட்டுக்கொண்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்துத் தலையை ஆட்டியவாறு உள்ளே சென்றார்..பெரிய ஆடு ஒன்று, கழுத்தில் மாலையுடன் உள்ளே சென்றது போலவும், காத்திருந்தவர்கள் எல்லாம் சிறிய ஆடுகள் போல தலையை அசைத்தசைத்து என்னைப் பார்ப்பது போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?."ம்.. மே…" என் தொண்டையிலிருந்து வந்த சப்தம் கேட்டு, என்னை மிரட்சியுடன் பார்த்தாள் செல்வி!