உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
முகநூல் பக்கம்
சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து…

 

சை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது.

பியானோவில் அவனது விரல்கள் அசுர வேகத்தில் தாவுவதை பிரமித்து ரசிக்க முடிகிறது. ஆனால் – கண்ணைக் கட்டிக் கொண்டு பியானா வாசிப்பது, இரண்டு கருவிகளை வைத்துக் கொண்டு பக்கவாட்டில் திரும்பி இரண்டு கைகளால் வாசிப்பது போன்றவையெல்லாம் கிம்மிக்ஸ் மாதிரி தொிகின்றன. "இம்மாதிரியான சர்க்கஸ் வித்தைகள் ஒரு நல்ல இசைக்கலைஞனுக்கு அழகா" என்று தொியவில்லை.

'கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடுவது மாதிரியான' நிகழ்வுகளைத்தான் பொதுஜனம் 'ஆ'வென்று பார்த்து பிரமித்து கைத்தட்டும் என்பது உண்மைதான். ஆனால் உன்னதனமான இசைக்கலைஞர்கள் இவற்றைச் செய்ய மாட்டார்கள். என்னுடைய அபிப்ராயம் சரியா, இல்லையா என்பதை இசை அறிந்தவர்கள் சொன்னால் திருத்திக்கொள்வேன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com