கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.கல்லூரியில் (சுஜாதாவின் எழுத்தை மட்டுமே அதிகம்) படித்துக்கொண்டிருந்த காலத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. சொல்கிறேன்..கல்கி, குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளில் 'சுஜாதா' என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தால் அதை அப்படியே அபகரித்துவிடுவேன். ஒரு நாள் கல்லூரி நண்பன் "கணையாழி படிப்பீர்களா தேசிகன்" என்றான்..சீதை அனுமார் மூலமாக ராமருக்குக் கொடுத்து அனுப்பியதைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை.."கணையாழியா ?" என்றேன்.."சுஜாதா அதில் ரொம்ப காலமாக கடைசிப் பக்கம் எழுதுகிறார்" என்று காஷுவலாக கூறியபோது அதிர்ச்சியில் உறைந்தேன். அவன் கையில் வைத்திருந்த 'கணையாழியை' என்னிடம் தந்தான். அதில் கடைசிப் பக்கத்தில் சுஜாதா இருந்தார்..இந்தக் கடைசிப் பக்கக் கணையாழிகளை எப்படித் தேடுவேன் என்ற கவலைதான் அதிர்ச்சிக்குக் காரணம்.."எங்கே கிடைக்கும் ?"."சென்னையில் வாங்கிவந்தேன். திருச்சியில் தேட வேண்டும்".ஆழ் மனதில் கணையாழி கடைசிப் பக்கங்களைத் தேடி படிக்க வேண்டும் என்ற காம வேட்கை புகுந்துகொண்டது..கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு சென்னைக்கு வந்து சேர்ந்து, சுஜாதாவுடன் பரிச்சயம் ஏற்பட்டு 'கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே' வாசகன், நண்பனாகி… அவருடைய எழுத்துக்கள் எல்லாம் என்னிடம் பாதுகாப்பாக இருந்தது. கணையாழி கடைசிப் பக்கங்களைத் தவிர!.தேடியபோது 'கடைசிப் பக்கம்', 'நீர்க்குமிழிகள்' என்று 72 பக்கம் கொண்ட இரு தொகுப்புகள் கிடைத்தது. அவற்றைக் குறித்து சுஜாதாவிடம் கேட்ட போது "அந்த சமயம் என்னிடம் கைவசம் இருந்த கணையாழி பக்கங்களின் தொகுப்பு அது" என்றார்.."மற்ற பக்கங்கள் கிடைக்குமா ?" என்றபோது "இம்பாசிபிள்" என்றார்..1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை அவர் அதில் எழுதியிருக்கிறார். அதாவது நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிலிருந்து நான் சென்னைக்கு வேலைக்கு வரும் வரை! மொத்தம் 33 வருட எழுத்தை எப்படி, எங்கே தேடுவேன் என்ற நினைப்பே குளுக்கோஸ் குடிக்க வேண்டும் போல இருந்தது..கூகிள், சமூக ஊடகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் அதைத் தேட ஆரம்பித்தேன். பழைய கடைகள், பிளாட்பாரங்களில் கிடைக்கும் கணையாழிகளை 'பிளாக் டிக்கெட்' போல் வாங்கினேன். பிறகு ஒரு கட்டத்தில் தேடுதல் வேட்டையைத் தீவிரமாக்கினேன். சனி, ஞாயிறுகளில் பைக்கை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்தேன்.."வீட்டுப் பரணில் இருக்கு… சாவகாசமாக இன்னொரு நாள் வாங்க எடுத்து வைக்கிறேன்" என்றவர்களிடம்,."இந்த ஸ்டூலை பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர்கள் வீட்டு வாழும் பல்லிகளை ஓடவிட்டு, (அப்படியே லைட்டா அந்த ஒட்டடையும்)… பரணை சுத்தம் செய்து கீழடி மன்னிக்கவும் மேலடி அகழ்வாராய்ச்சியில் சில பிரதிகளைத் தேடி எடுத்தேன்..பழைய புத்தக வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட எழுத்துக்களை 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது மிகுந்த மனநிறை கொடுத்தது. நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், நக்கல் நையாண்டி என்று எந்த ஓர் எழுத்தாளரிடமும் இல்லாதஒரு 'broad spectrum' த்தை அவரிடம் கண்டேன்..நான் தேடியதைக் குறிப்பிட்டு "கணையாழி கடைசிப் பக்கம் அத்தனையும் உ.வே.சா ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்தது போல் என் நண்பர் தேசிகன் ஓடி ஓடிச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்" என்று ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..கணையாழி கடைசிப் பக்கம் தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.."கணையாழியின் ஆரம்பக் காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதைச் சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவில்லாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத்தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்.".இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கி ஆசிரியர் திரு ரமணன் அவர்கள் என்னை கல்கியில் 'கடைசிப் பக்கம்' எழுத வேண்டும் என்றபோது கொஞ்சம் தயங்கினேன். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது பெரிய சாதனை இல்லை, ஆனால், தொடர்ந்து எழுத்துக்கு இது பயிற்சியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. கல்கி குழுமத்திற்கும், அதன் ஆசிரியருக்கும், தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கும் என் நன்றிகள்..சொல்ல மறந்துவிட்டேனே. சுஜாதாவின் கடைசிப் பக்கம் குறித்த இந்த கடைசிப் பக்கம் "என் 100வது கல்கி கடைசிப் பக்கம் !"
கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.கல்லூரியில் (சுஜாதாவின் எழுத்தை மட்டுமே அதிகம்) படித்துக்கொண்டிருந்த காலத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. சொல்கிறேன்..கல்கி, குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளில் 'சுஜாதா' என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தால் அதை அப்படியே அபகரித்துவிடுவேன். ஒரு நாள் கல்லூரி நண்பன் "கணையாழி படிப்பீர்களா தேசிகன்" என்றான்..சீதை அனுமார் மூலமாக ராமருக்குக் கொடுத்து அனுப்பியதைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை.."கணையாழியா ?" என்றேன்.."சுஜாதா அதில் ரொம்ப காலமாக கடைசிப் பக்கம் எழுதுகிறார்" என்று காஷுவலாக கூறியபோது அதிர்ச்சியில் உறைந்தேன். அவன் கையில் வைத்திருந்த 'கணையாழியை' என்னிடம் தந்தான். அதில் கடைசிப் பக்கத்தில் சுஜாதா இருந்தார்..இந்தக் கடைசிப் பக்கக் கணையாழிகளை எப்படித் தேடுவேன் என்ற கவலைதான் அதிர்ச்சிக்குக் காரணம்.."எங்கே கிடைக்கும் ?"."சென்னையில் வாங்கிவந்தேன். திருச்சியில் தேட வேண்டும்".ஆழ் மனதில் கணையாழி கடைசிப் பக்கங்களைத் தேடி படிக்க வேண்டும் என்ற காம வேட்கை புகுந்துகொண்டது..கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு சென்னைக்கு வந்து சேர்ந்து, சுஜாதாவுடன் பரிச்சயம் ஏற்பட்டு 'கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே' வாசகன், நண்பனாகி… அவருடைய எழுத்துக்கள் எல்லாம் என்னிடம் பாதுகாப்பாக இருந்தது. கணையாழி கடைசிப் பக்கங்களைத் தவிர!.தேடியபோது 'கடைசிப் பக்கம்', 'நீர்க்குமிழிகள்' என்று 72 பக்கம் கொண்ட இரு தொகுப்புகள் கிடைத்தது. அவற்றைக் குறித்து சுஜாதாவிடம் கேட்ட போது "அந்த சமயம் என்னிடம் கைவசம் இருந்த கணையாழி பக்கங்களின் தொகுப்பு அது" என்றார்.."மற்ற பக்கங்கள் கிடைக்குமா ?" என்றபோது "இம்பாசிபிள்" என்றார்..1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை அவர் அதில் எழுதியிருக்கிறார். அதாவது நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிலிருந்து நான் சென்னைக்கு வேலைக்கு வரும் வரை! மொத்தம் 33 வருட எழுத்தை எப்படி, எங்கே தேடுவேன் என்ற நினைப்பே குளுக்கோஸ் குடிக்க வேண்டும் போல இருந்தது..கூகிள், சமூக ஊடகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் அதைத் தேட ஆரம்பித்தேன். பழைய கடைகள், பிளாட்பாரங்களில் கிடைக்கும் கணையாழிகளை 'பிளாக் டிக்கெட்' போல் வாங்கினேன். பிறகு ஒரு கட்டத்தில் தேடுதல் வேட்டையைத் தீவிரமாக்கினேன். சனி, ஞாயிறுகளில் பைக்கை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்தேன்.."வீட்டுப் பரணில் இருக்கு… சாவகாசமாக இன்னொரு நாள் வாங்க எடுத்து வைக்கிறேன்" என்றவர்களிடம்,."இந்த ஸ்டூலை பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர்கள் வீட்டு வாழும் பல்லிகளை ஓடவிட்டு, (அப்படியே லைட்டா அந்த ஒட்டடையும்)… பரணை சுத்தம் செய்து கீழடி மன்னிக்கவும் மேலடி அகழ்வாராய்ச்சியில் சில பிரதிகளைத் தேடி எடுத்தேன்..பழைய புத்தக வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட எழுத்துக்களை 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது மிகுந்த மனநிறை கொடுத்தது. நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், நக்கல் நையாண்டி என்று எந்த ஓர் எழுத்தாளரிடமும் இல்லாதஒரு 'broad spectrum' த்தை அவரிடம் கண்டேன்..நான் தேடியதைக் குறிப்பிட்டு "கணையாழி கடைசிப் பக்கம் அத்தனையும் உ.வே.சா ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்தது போல் என் நண்பர் தேசிகன் ஓடி ஓடிச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்" என்று ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..கணையாழி கடைசிப் பக்கம் தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.."கணையாழியின் ஆரம்பக் காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதைச் சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவில்லாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத்தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்.".இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கி ஆசிரியர் திரு ரமணன் அவர்கள் என்னை கல்கியில் 'கடைசிப் பக்கம்' எழுத வேண்டும் என்றபோது கொஞ்சம் தயங்கினேன். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது பெரிய சாதனை இல்லை, ஆனால், தொடர்ந்து எழுத்துக்கு இது பயிற்சியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. கல்கி குழுமத்திற்கும், அதன் ஆசிரியருக்கும், தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கும் என் நன்றிகள்..சொல்ல மறந்துவிட்டேனே. சுஜாதாவின் கடைசிப் பக்கம் குறித்த இந்த கடைசிப் பக்கம் "என் 100வது கல்கி கடைசிப் பக்கம் !"