– ஆதித்யா.'ஒரு பேனா, வாளை விட வலிமையானது' என்பது உலகெங்கும் அறியப்பட்ட ஒரு வாசகம். அமெரிக்க நாட்டு தலைநகர் வாஷிங்டன் நகரிலுள்ள லிபர்ட்டி ஹாலில் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்..அரசியல் மாற்றங்கள் நிகழ, ஆட்சி செய்தவர்கள் காணாமல் போக, சுதந்திரம் மலர எழுத்தாளர்களின் பேனாக்கள் வலிமையான ஆயுதமாயிருந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த வலிமையான பேனாவைப் பிடித்த எழுத்தாளர்களை வன்முறையாளர்களின் வெறிச் செயல்களிலிருந்து காப்பாற்ற முடியாமல் அரசுகள் வலிமையில்லாமல் தானிருக்கிறது என்பதை அண்மையில் மீண்டும் ஒருமுறை உலக வரலாறு பதிவு செய்திருக்கிறது..The Satanic Verses என்ற பிரச்னைக்குரிய நூலை எழுதி உலகெங்கும் இருந்து பயமுறுத்தல்களை எதிர்கொண்ட நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி,(75) அண்மையில் நியூயார்க் நகரில் உரையாற்ற வந்தபோது, அவரை ஒரு தீவிரவாதி கத்தியால் பலமுறை குத்தி கொல்ல முயன்றான். அவரின் கழுத்தில் கத்திக் குத்து பலமாக விழுந்தது..அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளச் செய்தார். இப்போது நலத்துடன் இருப்பதாக அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன..எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் அமெரிக்க நாட்டில் எழுத்து சுதந்திரம் குறித்து அதிகம் பேசி வந்த ருஷ்டி, ஒரு கொலை முயற்சிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது ஒரு சுடும் உண்மை..கொலை முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் எவராலும் எளிதில் யூகிக்க கூடிய காரணம் தான் அது..The Satanic Verses என்ற நூலை எழுதியதற்காக 1989 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் அதிபர் அயதுல்லா கொமேனி இவரைக் கண்ட இடத்தில் கொலை செய்திடுமாறு ஆணையிட்டார். ரஷ்டி தலையைக் கொய்து வரும் ஃபாத்வாவை பிறப்பித்தார். வெற்றிகரமாக கொன்று போடுபவருக்கு மூன்று மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டது. 2013ல் இந்த பரிசுத்தொகை அதிகமாக்கப்பட்டது..இவரை தலைமறைவாயிருக்கச் செய்த . இந்த நாவலை வெளியிட்ட நார்வே நாட்டை சேர்ந்தவரைக் கொலை செய்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நூலை மொழி பெயர்த்த ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர் கொல்லப்பட்டார். இந்தியாவில் தொடக்க காலத்திலேயே இந்நூல் அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. இன்றும் தடை தொடர்கிறது..அவர் வசித்து வந்த இங்கிலாந்தில் கத்தியும் கையுமாக இளைஞர்கள் தெருத்தெருவாக உலவத் துவங்கினார்கள். பிரிட்டிஷ் உளவுத் துறையின் பாதுகாப்பில் ரஷ்டி தலைமறைவானார். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தன் ரகசிய இருப்பிடம் மாற்றப்பட்டு வந்தது என்று தனது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் தலைமறைவு வாழ்வு வாழ நேர்ந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் சல்மான் ருஷ்டி வெளியே வந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் கொஞ்சம் மென்மையாக மாறி ரஷ்டி மீதான ஃபாத்வா காலாவதியாகி விட்டதாக அறிவித்தது. அதன் காரணமாக ஆபத்து நீங்கிவிட்டதாக நினைத்து பாதுகாப்புகள் இன்றி கொஞ்சம் சுதந்திரமாகவே உலவிக் கொண்டிருந்திருக்கிறார். அது தான் இப்போது நிகழ்ந்திருக்கும் வன்முறைக்குக் காரணம்..ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அமைதி பத்வாக்கள், காலாவதியானாலும் அமைதி படையினரால் நிறைவேற்றப்படும். காரணம் அது அந்த மத கடவுளின் புனித நூலில் உள்ள அமைதி கட்டளை. என்பதை இஸ்லாம் அடிப்படி வாதிகள் நம்புகின்றனர்..1988 ல் சல்மான் ருஷ்டியின் நாவலான "சாத்தானின் வசனங்கள்" வெளியான போது அடிப்படைவாத முல்லாக்களால் அது உலகம் முழுக்க சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட விஷயம். இதில் வேடிக்கை என்னவென்றால் சர்ச்சையைக் கிளப்பிய பெரும்பாலானோர் அதைப் படிக்கவில்லை என்பதே. நிச்சயமாக மரணதண்டனை அறிவித்த கொமேனி கூட அதை படிக்கவில்லை என்பதே உண்மை. உயிர்ப்பலி வாங்க துடிக்கும் அளவிற்கு அந்த நாவலில் அப்படி எதுவுமில்லை என்பதை அதைப் படித்த விமர்சகர்கள், ஒரு சில இஸ்லாமிய பேராசிரியர்கள் கூட பேசியிருக்கிறார்கள் அல்லது எழுதியிருக்கிறார்கள்..இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி. பின்னர் அமெரிக்கப் பிரிட்டிஷ் பிரஜையானார். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர். எழுத்து, பேச்சு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் PEN – International Association of Poets, Playwrights, Editors, Essayists, and Novelists. என்னும் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். 1981ல் இவர் எழுதி வெளியிட்ட, புக்கர் பரிசு பெற்ற, Midnight's Children என்னும் நாவலுக்காக அதிகம் பேசப்பட்டார். அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியினரான பத்மா லஷ்மி என்ற தமிழ்ப் பெண் இவர் மனைவி. இருவரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர்..ஒரு நூலை எழுதியதற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக. வாழ்க்கை முழுதும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் அபாயத்துடனும் அச்சத்துடனும் நாட்களைக் கடத்துவது எவ்வளவு கொடூரமானது?.யோசித்து பாருங்கள். பேனா, வாளைவிட வலிமையானதாக எப்போதும் இருப்பதில்லை. நிஜ வாழ்வில் எந்நேரமும் ஜோசப் ஆன்டன் என்று வேடம் தரித்து அலையும் சபிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் படைப்பாளியை தாக்குதலிருந்து எந்த வலிமையான வாளும் வந்து காப்பாற்றவில்லை. அவனது வாழக்கைமுறை அவன் படைப்பூக்கத்தைப் பாதித்தது..சல்மான் ருஷ்டி, சென்னையை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளார். "தி நியூயார்க்கர்" இதழில் அவர் எழுதிய "இன் தி சவுத்" என்ற சிறுகதையில், சென்னையிலுள்ள பெசன்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் கதை நிகழ்கிறது. அடுத்த நாவல் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. அந்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. புத்தகம் எந்தளவில் இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை..அவருடைய கண்களில் ஒன்றில் பார்வையும், ஒரு கையும் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்திகள் சொல்லுகின்றன. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன தண்டனை கொடுத்துவிடமுடியும்..இஸ்லாத்தை இழிவுபடுத்தி எழுதியதாகச் சொல்லி சல்மான் ருஷ்டிக்கு எதிராகக் கலவரங்களை முன்னெடுத்தவர்கள், அவரைக் கொல்ல இங்கிலாந்தில் கத்தியுடன் அலைந்தவர்கள் மற்றும் இப்போது அவரை வெற்றிகரமாக குத்தியிருப்பவன் , இவர்கள்தான் உண்மையில் இஸ்லாத்தைப் படு கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.பேனா, வாளைவிட வலிமையானது. ஆனால், மதவெறி "பேனாவைவிட வலிமையானது.".ஓவியம்: ஶ்ரீதர்
– ஆதித்யா.'ஒரு பேனா, வாளை விட வலிமையானது' என்பது உலகெங்கும் அறியப்பட்ட ஒரு வாசகம். அமெரிக்க நாட்டு தலைநகர் வாஷிங்டன் நகரிலுள்ள லிபர்ட்டி ஹாலில் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்..அரசியல் மாற்றங்கள் நிகழ, ஆட்சி செய்தவர்கள் காணாமல் போக, சுதந்திரம் மலர எழுத்தாளர்களின் பேனாக்கள் வலிமையான ஆயுதமாயிருந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த வலிமையான பேனாவைப் பிடித்த எழுத்தாளர்களை வன்முறையாளர்களின் வெறிச் செயல்களிலிருந்து காப்பாற்ற முடியாமல் அரசுகள் வலிமையில்லாமல் தானிருக்கிறது என்பதை அண்மையில் மீண்டும் ஒருமுறை உலக வரலாறு பதிவு செய்திருக்கிறது..The Satanic Verses என்ற பிரச்னைக்குரிய நூலை எழுதி உலகெங்கும் இருந்து பயமுறுத்தல்களை எதிர்கொண்ட நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி,(75) அண்மையில் நியூயார்க் நகரில் உரையாற்ற வந்தபோது, அவரை ஒரு தீவிரவாதி கத்தியால் பலமுறை குத்தி கொல்ல முயன்றான். அவரின் கழுத்தில் கத்திக் குத்து பலமாக விழுந்தது..அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளச் செய்தார். இப்போது நலத்துடன் இருப்பதாக அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன..எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் அமெரிக்க நாட்டில் எழுத்து சுதந்திரம் குறித்து அதிகம் பேசி வந்த ருஷ்டி, ஒரு கொலை முயற்சிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது ஒரு சுடும் உண்மை..கொலை முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் எவராலும் எளிதில் யூகிக்க கூடிய காரணம் தான் அது..The Satanic Verses என்ற நூலை எழுதியதற்காக 1989 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் அதிபர் அயதுல்லா கொமேனி இவரைக் கண்ட இடத்தில் கொலை செய்திடுமாறு ஆணையிட்டார். ரஷ்டி தலையைக் கொய்து வரும் ஃபாத்வாவை பிறப்பித்தார். வெற்றிகரமாக கொன்று போடுபவருக்கு மூன்று மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டது. 2013ல் இந்த பரிசுத்தொகை அதிகமாக்கப்பட்டது..இவரை தலைமறைவாயிருக்கச் செய்த . இந்த நாவலை வெளியிட்ட நார்வே நாட்டை சேர்ந்தவரைக் கொலை செய்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நூலை மொழி பெயர்த்த ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர் கொல்லப்பட்டார். இந்தியாவில் தொடக்க காலத்திலேயே இந்நூல் அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. இன்றும் தடை தொடர்கிறது..அவர் வசித்து வந்த இங்கிலாந்தில் கத்தியும் கையுமாக இளைஞர்கள் தெருத்தெருவாக உலவத் துவங்கினார்கள். பிரிட்டிஷ் உளவுத் துறையின் பாதுகாப்பில் ரஷ்டி தலைமறைவானார். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தன் ரகசிய இருப்பிடம் மாற்றப்பட்டு வந்தது என்று தனது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் தலைமறைவு வாழ்வு வாழ நேர்ந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் சல்மான் ருஷ்டி வெளியே வந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் கொஞ்சம் மென்மையாக மாறி ரஷ்டி மீதான ஃபாத்வா காலாவதியாகி விட்டதாக அறிவித்தது. அதன் காரணமாக ஆபத்து நீங்கிவிட்டதாக நினைத்து பாதுகாப்புகள் இன்றி கொஞ்சம் சுதந்திரமாகவே உலவிக் கொண்டிருந்திருக்கிறார். அது தான் இப்போது நிகழ்ந்திருக்கும் வன்முறைக்குக் காரணம்..ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அமைதி பத்வாக்கள், காலாவதியானாலும் அமைதி படையினரால் நிறைவேற்றப்படும். காரணம் அது அந்த மத கடவுளின் புனித நூலில் உள்ள அமைதி கட்டளை. என்பதை இஸ்லாம் அடிப்படி வாதிகள் நம்புகின்றனர்..1988 ல் சல்மான் ருஷ்டியின் நாவலான "சாத்தானின் வசனங்கள்" வெளியான போது அடிப்படைவாத முல்லாக்களால் அது உலகம் முழுக்க சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட விஷயம். இதில் வேடிக்கை என்னவென்றால் சர்ச்சையைக் கிளப்பிய பெரும்பாலானோர் அதைப் படிக்கவில்லை என்பதே. நிச்சயமாக மரணதண்டனை அறிவித்த கொமேனி கூட அதை படிக்கவில்லை என்பதே உண்மை. உயிர்ப்பலி வாங்க துடிக்கும் அளவிற்கு அந்த நாவலில் அப்படி எதுவுமில்லை என்பதை அதைப் படித்த விமர்சகர்கள், ஒரு சில இஸ்லாமிய பேராசிரியர்கள் கூட பேசியிருக்கிறார்கள் அல்லது எழுதியிருக்கிறார்கள்..இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி. பின்னர் அமெரிக்கப் பிரிட்டிஷ் பிரஜையானார். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர். எழுத்து, பேச்சு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் PEN – International Association of Poets, Playwrights, Editors, Essayists, and Novelists. என்னும் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். 1981ல் இவர் எழுதி வெளியிட்ட, புக்கர் பரிசு பெற்ற, Midnight's Children என்னும் நாவலுக்காக அதிகம் பேசப்பட்டார். அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியினரான பத்மா லஷ்மி என்ற தமிழ்ப் பெண் இவர் மனைவி. இருவரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர்..ஒரு நூலை எழுதியதற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக. வாழ்க்கை முழுதும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் அபாயத்துடனும் அச்சத்துடனும் நாட்களைக் கடத்துவது எவ்வளவு கொடூரமானது?.யோசித்து பாருங்கள். பேனா, வாளைவிட வலிமையானதாக எப்போதும் இருப்பதில்லை. நிஜ வாழ்வில் எந்நேரமும் ஜோசப் ஆன்டன் என்று வேடம் தரித்து அலையும் சபிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் படைப்பாளியை தாக்குதலிருந்து எந்த வலிமையான வாளும் வந்து காப்பாற்றவில்லை. அவனது வாழக்கைமுறை அவன் படைப்பூக்கத்தைப் பாதித்தது..சல்மான் ருஷ்டி, சென்னையை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளார். "தி நியூயார்க்கர்" இதழில் அவர் எழுதிய "இன் தி சவுத்" என்ற சிறுகதையில், சென்னையிலுள்ள பெசன்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் கதை நிகழ்கிறது. அடுத்த நாவல் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. அந்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. புத்தகம் எந்தளவில் இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை..அவருடைய கண்களில் ஒன்றில் பார்வையும், ஒரு கையும் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்திகள் சொல்லுகின்றன. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிட வேறு என்ன தண்டனை கொடுத்துவிடமுடியும்..இஸ்லாத்தை இழிவுபடுத்தி எழுதியதாகச் சொல்லி சல்மான் ருஷ்டிக்கு எதிராகக் கலவரங்களை முன்னெடுத்தவர்கள், அவரைக் கொல்ல இங்கிலாந்தில் கத்தியுடன் அலைந்தவர்கள் மற்றும் இப்போது அவரை வெற்றிகரமாக குத்தியிருப்பவன் , இவர்கள்தான் உண்மையில் இஸ்லாத்தைப் படு கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.பேனா, வாளைவிட வலிமையானது. ஆனால், மதவெறி "பேனாவைவிட வலிமையானது.".ஓவியம்: ஶ்ரீதர்