– ஸ்ருதி.அண்மையில் தொலைத் தொடர்பு சேவைத் துறைக்கான 5 ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால், அரசு எதிர்பார்த்ததைவிட குறைவான தொகையே கிடைத்திருப்பதால் முறைகேடு நடந்திருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா..அது என்ன 5 ஜி ?.ஒரு விஷயத்தை இணையத்தில் தேடும்போது 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தினால், முடிவுகள் கிடைக்க 10 விநாடிகள் ஆகும். 4ஜியில் இது 5 விநாடிகளாகக் குறையும். ஆனால், 5ஜியில் இது வெறும் ஒரு விநாடியில் கிடைக்கும். அது மட்டுமில்லை செல்போன்களில் படங்களை வீடியோக்களை பாடல்களை அதிவேகமாகத் தரவிறக்கம் செய்ய முடியும்4 ஜி சேவையைவிட 5 ஜி சேவையில் இணையத்தை பத்து மடங்கு வேகத்தில் பயன்படுத்த முடியும்..ஏழு நாட்களாக நடந்த ஏலத்தில் 40 சுற்றுகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. இதில் ஜியோ நிறுவனம் ஒட்டுமொத்தமாக 24,740 MHz அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 19,867.8 MHz அலைக்கற்றைகளை 43,084 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. நிதிச் சிக்கலில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, 6,228 MHz அலைக்கற்றைகளை 18,799 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. புதிய நிறுவனமான அதானி டேடா நெட்வொர்க்ஸ் தனது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக 400 MHz அலைக் கற்றையை 212 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது..இந்த 5 ஜி வசதி மூலம் பல கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன் பெறுவார்கள் எனச் சொல்லுகிறது ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத்துறை..அரசியல்.நினைவிருக்கிறதா? 2010ஆம் ஆண்டில் இந்திய தலைமைக் கணக்காளரின் அறிக்கையில், 2ஜி அலைக்கற்றைகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டதால், இந்தியாவுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தொடர்புபடுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமில்லையென்றுகூறி 2017ல் அவர்களை விடுவித்தது..இப்போது இந்த அலைகற்றை ஏலத்தில் "ஊழல் நடந்திருக்கிறது" என்கிறார் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா..2010ஆம் ஆண்டின் சிஏஜி அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஏலத்தின் காரணமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் அப்போதைய தலைமைக் கணக்காயர் வினோத் ராய் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஆ. ராசா, அதைவிட மிக சக்திவாய்ந்த அலைக்கற்றைகளுக்கு, மிகக் குறைவான விலை கிடைத்திருப்பது எப்படி? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.."ட்ராய் அளித்த பரிந்துரைகளின்படி நான் வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தபோது, 1,76,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது. ஆனால், இப்போது 51 கிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கு அதைவிட மிகக் குறைவான விலையான 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் சென்றிருக்கிறது"."அந்தத் திறனோடு ஒப்பிட்டால், 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 5 அல்லது 6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்து மத்திய அரசும் இந்தச் சதியில் ஈடுபட்டதா என்பது தெரியவில்லை என்கிறார்..உண்மையிலேயே மக்களுக்கு இது பயன் தருமா?.இந்த ஏலத்தைப் பொறுத்தவரை, முதல் முறையாக 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சேவையை அளிக்க முடியும் என்பதோடு, மிக உயர்ந்த வேகம் தேவைப்படும் சேவைகளை இந்த மெகாஹெர்ட்ஸைப் பயன்படுத்தி அளிக்கலாம். என்பது உண்மை..ஆனால், இப்போது 95% மக்கள் பயன்படுத்துவது 3 ஜி அல்லது 4 ஜி அலைவரிசைகளைப் பெறும் செல்போன்கள் தான். இந்த சேவையைப் பயன்படுத்தத்தக்க வகையில், மொபைல் போன்கள் பெரும் எண்ணிக்கையில் பயன்பாட்டில் இல்லை. 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்டால் இத்தனை மக்களும் தங்கள் போன்களை மாற்றவேண்டும்..அதனால், உருவாகப்போகும் புதிய மார்க்கெட்டை பயன்படுத்தி ஆயிரம் கோடிகளில் செல்போன் நிறுவனங்கள் தங்கள் விற்பனையைப் பெருக்கி லாபம் பெறும். புதிய இறக்குமதி கொள்கைகள், ஜி.எஸ்.டி போன்றவற்றால் சராசரியாக ஒரு போனின் விலை 20000த்தை நெருங்கும்..மலிவு விலையில் பல கோடி இந்தியர்களுக்கு செல்போன் வசதி தந்து உதவிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இந்த 5 உரிமம் வழங்கப்படவில்லை. (4ஜியே இன்னும் முழு அளவுக்கு தரப்படவில்லை என்பது தனித்துயரம்) இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனம் முழுவதுமாக அழியும் நிலை உருவாகும்..புதிய அலைக்கற்றை அறிமுகம் ஆகும்போதெல்லாம் அரசியல் அலைகள் எழுகிறது..அரசியல் கட்சிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயன் பெறுகின்றன..சாமானியன் கடனாளியாகிறான்.
– ஸ்ருதி.அண்மையில் தொலைத் தொடர்பு சேவைத் துறைக்கான 5 ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால், அரசு எதிர்பார்த்ததைவிட குறைவான தொகையே கிடைத்திருப்பதால் முறைகேடு நடந்திருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா..அது என்ன 5 ஜி ?.ஒரு விஷயத்தை இணையத்தில் தேடும்போது 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தினால், முடிவுகள் கிடைக்க 10 விநாடிகள் ஆகும். 4ஜியில் இது 5 விநாடிகளாகக் குறையும். ஆனால், 5ஜியில் இது வெறும் ஒரு விநாடியில் கிடைக்கும். அது மட்டுமில்லை செல்போன்களில் படங்களை வீடியோக்களை பாடல்களை அதிவேகமாகத் தரவிறக்கம் செய்ய முடியும்4 ஜி சேவையைவிட 5 ஜி சேவையில் இணையத்தை பத்து மடங்கு வேகத்தில் பயன்படுத்த முடியும்..ஏழு நாட்களாக நடந்த ஏலத்தில் 40 சுற்றுகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. இதில் ஜியோ நிறுவனம் ஒட்டுமொத்தமாக 24,740 MHz அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 19,867.8 MHz அலைக்கற்றைகளை 43,084 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. நிதிச் சிக்கலில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, 6,228 MHz அலைக்கற்றைகளை 18,799 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. புதிய நிறுவனமான அதானி டேடா நெட்வொர்க்ஸ் தனது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக 400 MHz அலைக் கற்றையை 212 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது..இந்த 5 ஜி வசதி மூலம் பல கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன் பெறுவார்கள் எனச் சொல்லுகிறது ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத்துறை..அரசியல்.நினைவிருக்கிறதா? 2010ஆம் ஆண்டில் இந்திய தலைமைக் கணக்காளரின் அறிக்கையில், 2ஜி அலைக்கற்றைகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டதால், இந்தியாவுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தொடர்புபடுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமில்லையென்றுகூறி 2017ல் அவர்களை விடுவித்தது..இப்போது இந்த அலைகற்றை ஏலத்தில் "ஊழல் நடந்திருக்கிறது" என்கிறார் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா..2010ஆம் ஆண்டின் சிஏஜி அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஏலத்தின் காரணமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் அப்போதைய தலைமைக் கணக்காயர் வினோத் ராய் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஆ. ராசா, அதைவிட மிக சக்திவாய்ந்த அலைக்கற்றைகளுக்கு, மிகக் குறைவான விலை கிடைத்திருப்பது எப்படி? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.."ட்ராய் அளித்த பரிந்துரைகளின்படி நான் வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தபோது, 1,76,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது. ஆனால், இப்போது 51 கிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கு அதைவிட மிகக் குறைவான விலையான 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் சென்றிருக்கிறது"."அந்தத் திறனோடு ஒப்பிட்டால், 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 5 அல்லது 6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்து மத்திய அரசும் இந்தச் சதியில் ஈடுபட்டதா என்பது தெரியவில்லை என்கிறார்..உண்மையிலேயே மக்களுக்கு இது பயன் தருமா?.இந்த ஏலத்தைப் பொறுத்தவரை, முதல் முறையாக 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சேவையை அளிக்க முடியும் என்பதோடு, மிக உயர்ந்த வேகம் தேவைப்படும் சேவைகளை இந்த மெகாஹெர்ட்ஸைப் பயன்படுத்தி அளிக்கலாம். என்பது உண்மை..ஆனால், இப்போது 95% மக்கள் பயன்படுத்துவது 3 ஜி அல்லது 4 ஜி அலைவரிசைகளைப் பெறும் செல்போன்கள் தான். இந்த சேவையைப் பயன்படுத்தத்தக்க வகையில், மொபைல் போன்கள் பெரும் எண்ணிக்கையில் பயன்பாட்டில் இல்லை. 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்டால் இத்தனை மக்களும் தங்கள் போன்களை மாற்றவேண்டும்..அதனால், உருவாகப்போகும் புதிய மார்க்கெட்டை பயன்படுத்தி ஆயிரம் கோடிகளில் செல்போன் நிறுவனங்கள் தங்கள் விற்பனையைப் பெருக்கி லாபம் பெறும். புதிய இறக்குமதி கொள்கைகள், ஜி.எஸ்.டி போன்றவற்றால் சராசரியாக ஒரு போனின் விலை 20000த்தை நெருங்கும்..மலிவு விலையில் பல கோடி இந்தியர்களுக்கு செல்போன் வசதி தந்து உதவிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இந்த 5 உரிமம் வழங்கப்படவில்லை. (4ஜியே இன்னும் முழு அளவுக்கு தரப்படவில்லை என்பது தனித்துயரம்) இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனம் முழுவதுமாக அழியும் நிலை உருவாகும்..புதிய அலைக்கற்றை அறிமுகம் ஆகும்போதெல்லாம் அரசியல் அலைகள் எழுகிறது..அரசியல் கட்சிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயன் பெறுகின்றன..சாமானியன் கடனாளியாகிறான்.