கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய 'பூவே செம்பூவே' பாடலில் ஆரம்பத்தில் வரும் இசையைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டுவிட்டு இந்தக் கட்டுரையைப் படிப்பது உத்தமம். ( கேட்க விரும்புகிறவர்களுக்கு இங்கே தொடுப்பு https://www.youtube.com/watch?v=f_5WFGpneZE ) ஏன் என்பதைக் கடைசியில் சொல்லுகிறேன்..எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மருத்துவமனையில் இருந்த சமயம் அவரை நலம் விசாரிக்க சென்றிருந்தேன். அத்தனை கஷ்டத்திலும் "என்ன தேசிகன் எப்படி இருக்கீங்க? இன்னிக்கு என்ன கிழமை? கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?" என்றார்..பேசிக்கொண்டிருந்தபோது "எப்படி சார் பொழுது போகிறது?" என்றேன்.."தினமும் ஒரே செய்திதான். ராத்திரி தூக்கம் வரமாடேங்குது.F M ரேடியோவில் இரைச்சல் இல்லாமல் நல்ல நல்ல பழைய பாட்டு வருது" என்றவர், இந்த ஹெட் போன் வயர் சின்னதா இருக்கு. ரொம்ப நேரம் காதுல மாட்டிண்டா காது வலிக்குது" என்றார்..'இயர் பட்' வராத காலத்தில் "புளூ டூத் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். இல்லை நல்லதா வேற வாங்கித் தருகிறேன்" என்று அவரிடம் விடைபெற்றுச் சென்றபின் அவருடைய உடல்நலம் மோசமடைந்து… மற்றவை பற்றி எழுதி உங்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பவில்லை..கடைசியாக அவருக்குப் பழைய பாடல் கேட்க "புது ஹெட் செட் வாங்கித் தரமுடியவில்லையே" என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு..சென்ற வாரம் சென்னை விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் 'யேசுதாஸ் சோக கீதங்கள்' என்ற தொகுப்பை காரில் ஓடவிட்டேன். ஒவ்வொரு சோக பாடலும் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது..ஏன் என்று யோசித்தபோது பலர் இதைப் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்கள். பல்வேறு ஆய்வுகளின்படி சோக இசை நம் மனநிலையை நிலைப்படுத்தி, எதிர்மறையான உணர்ச்சிகளை நீக்கி, நமக்கு ஆதரவான உணர்ச்சியை நம் மூளைக்குக் கொடுத்து, நம் மீது நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. நம் உள் ஏதோ ஓர் அடக்க முடியாத ஏக்கத்தை அது போக்குவதாக இருக்கிறது..நம் வாழ்கையில் ஏதோ ஓர் இழப்பை அனுபவிக்கும்போது அல்லது மற்றொருவரின் வலியை உணரும்போது, அந்த வலியைச் சமாளிக்க ப்ரோலாக்டின், ஆக்ஸிடாஸின் (prolactin oxytocin ) போன்ற ஹார்மோன்கள் நமக்குள் சுரந்து அந்த மனவலியைச் சமாளிக்க உதவுகிறது..நாம் சோகமான இசையைக் கேட்கும்போது, ஏதோ சோகமான விஷயம் நடந்ததாக நம் மூளையை 'தந்திரமாக' நினைக்க வைக்கிறோம். இதனால் ப்ரோலாக்டின் சுரந்து உண்மையான சோக உணர்வுகள் இல்லாமல், ப்ரோலாக்டின் உற்பத்தியாகி வெறுமனே ஒரு குறிப்பிடத்தக்க இனிமையான நிலையை ஏற்படுத்தும். இந்த நிலை ஏற்படும்போது நம் மனதுக்கு அமைதி, ஆறுதல், ஆதரவை உணர வைத்து, சில சமயம் (திருமணத்துக்கு) முன் நிகழ்ந்த பல பசுமையான, இனிமையான நினைவுகளை ( nostalgia ) ஏற்படுத்துகிறது..குடும்பத்தை விட்டு சில காலம் நான் வெளிநாட்டில் இருந்தபோது நான் கேட்ட பாடல்கள் பெரும்பாலானவை சோக கீதங்கள்தான். அதன் காரணத்தை இப்போது உணர்கிறேன்..சங்க காலத்தில் போருக்குச் சென்ற வீரர்களுக்கு முரசு, தாரை, தப்பட்டை போன்ற கருவிகளைக் கொண்டு அனிருத் மாதிரி இசை அமைத்து அவர்களை உசுப்பேற்றி (உற்சாகப்படுத்தி என்றும் கூறலாம்) போருக்கு அனுப்பினார்கள். சென்றவர்கள் வரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது குழல், யாழ் என்று இன்னொரு குழு அவர்கள் மனைவிமார்களுக்கு ஆறுதல் கூற!.கோவிட் தாண்டவம் ஆடிய போது மனச்சோர்வில் பலர் சஹஸ்ரநாமம் சொல்லிவிட்டு சோகப் பாடல்களை 'ரிப்போட்டில்' ஓட விட்டார்கள். (விஷ் யூ ஹேப்பி நியூ இயர்…'இளமை இதோ இதோ' பாடலை ஜனவரி -1 அன்று மட்டும் கேட்கிறோம். மற்ற நாட்களில் ? ) சினிமாவில் சோக கீதங்கள் குறித்துத் தேடியபோது கிடைத்த பட்டியல் எக்கச்சக்கம். (பார்க்க படம்).ஆரம்பத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய 'பூவே செம்பூவே' பாடலில் கடைசியில் அந்த இசையைக் கேட்டிருக்கிறீர்களா ? பாடல் ஆரம்பிக்கும் போதும் அதை முடிக்கும் போதும் ஒரே இசையுடன் ஒருவிதமான மோபியஸ் ஸ்டிரிப் (Möbius strip) வகை. சுழற்சியில் கேட்டுக்கொண்டே சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.
கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய 'பூவே செம்பூவே' பாடலில் ஆரம்பத்தில் வரும் இசையைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டுவிட்டு இந்தக் கட்டுரையைப் படிப்பது உத்தமம். ( கேட்க விரும்புகிறவர்களுக்கு இங்கே தொடுப்பு https://www.youtube.com/watch?v=f_5WFGpneZE ) ஏன் என்பதைக் கடைசியில் சொல்லுகிறேன்..எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மருத்துவமனையில் இருந்த சமயம் அவரை நலம் விசாரிக்க சென்றிருந்தேன். அத்தனை கஷ்டத்திலும் "என்ன தேசிகன் எப்படி இருக்கீங்க? இன்னிக்கு என்ன கிழமை? கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?" என்றார்..பேசிக்கொண்டிருந்தபோது "எப்படி சார் பொழுது போகிறது?" என்றேன்.."தினமும் ஒரே செய்திதான். ராத்திரி தூக்கம் வரமாடேங்குது.F M ரேடியோவில் இரைச்சல் இல்லாமல் நல்ல நல்ல பழைய பாட்டு வருது" என்றவர், இந்த ஹெட் போன் வயர் சின்னதா இருக்கு. ரொம்ப நேரம் காதுல மாட்டிண்டா காது வலிக்குது" என்றார்..'இயர் பட்' வராத காலத்தில் "புளூ டூத் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். இல்லை நல்லதா வேற வாங்கித் தருகிறேன்" என்று அவரிடம் விடைபெற்றுச் சென்றபின் அவருடைய உடல்நலம் மோசமடைந்து… மற்றவை பற்றி எழுதி உங்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பவில்லை..கடைசியாக அவருக்குப் பழைய பாடல் கேட்க "புது ஹெட் செட் வாங்கித் தரமுடியவில்லையே" என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு..சென்ற வாரம் சென்னை விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் 'யேசுதாஸ் சோக கீதங்கள்' என்ற தொகுப்பை காரில் ஓடவிட்டேன். ஒவ்வொரு சோக பாடலும் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது..ஏன் என்று யோசித்தபோது பலர் இதைப் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்கள். பல்வேறு ஆய்வுகளின்படி சோக இசை நம் மனநிலையை நிலைப்படுத்தி, எதிர்மறையான உணர்ச்சிகளை நீக்கி, நமக்கு ஆதரவான உணர்ச்சியை நம் மூளைக்குக் கொடுத்து, நம் மீது நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. நம் உள் ஏதோ ஓர் அடக்க முடியாத ஏக்கத்தை அது போக்குவதாக இருக்கிறது..நம் வாழ்கையில் ஏதோ ஓர் இழப்பை அனுபவிக்கும்போது அல்லது மற்றொருவரின் வலியை உணரும்போது, அந்த வலியைச் சமாளிக்க ப்ரோலாக்டின், ஆக்ஸிடாஸின் (prolactin oxytocin ) போன்ற ஹார்மோன்கள் நமக்குள் சுரந்து அந்த மனவலியைச் சமாளிக்க உதவுகிறது..நாம் சோகமான இசையைக் கேட்கும்போது, ஏதோ சோகமான விஷயம் நடந்ததாக நம் மூளையை 'தந்திரமாக' நினைக்க வைக்கிறோம். இதனால் ப்ரோலாக்டின் சுரந்து உண்மையான சோக உணர்வுகள் இல்லாமல், ப்ரோலாக்டின் உற்பத்தியாகி வெறுமனே ஒரு குறிப்பிடத்தக்க இனிமையான நிலையை ஏற்படுத்தும். இந்த நிலை ஏற்படும்போது நம் மனதுக்கு அமைதி, ஆறுதல், ஆதரவை உணர வைத்து, சில சமயம் (திருமணத்துக்கு) முன் நிகழ்ந்த பல பசுமையான, இனிமையான நினைவுகளை ( nostalgia ) ஏற்படுத்துகிறது..குடும்பத்தை விட்டு சில காலம் நான் வெளிநாட்டில் இருந்தபோது நான் கேட்ட பாடல்கள் பெரும்பாலானவை சோக கீதங்கள்தான். அதன் காரணத்தை இப்போது உணர்கிறேன்..சங்க காலத்தில் போருக்குச் சென்ற வீரர்களுக்கு முரசு, தாரை, தப்பட்டை போன்ற கருவிகளைக் கொண்டு அனிருத் மாதிரி இசை அமைத்து அவர்களை உசுப்பேற்றி (உற்சாகப்படுத்தி என்றும் கூறலாம்) போருக்கு அனுப்பினார்கள். சென்றவர்கள் வரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது குழல், யாழ் என்று இன்னொரு குழு அவர்கள் மனைவிமார்களுக்கு ஆறுதல் கூற!.கோவிட் தாண்டவம் ஆடிய போது மனச்சோர்வில் பலர் சஹஸ்ரநாமம் சொல்லிவிட்டு சோகப் பாடல்களை 'ரிப்போட்டில்' ஓட விட்டார்கள். (விஷ் யூ ஹேப்பி நியூ இயர்…'இளமை இதோ இதோ' பாடலை ஜனவரி -1 அன்று மட்டும் கேட்கிறோம். மற்ற நாட்களில் ? ) சினிமாவில் சோக கீதங்கள் குறித்துத் தேடியபோது கிடைத்த பட்டியல் எக்கச்சக்கம். (பார்க்க படம்).ஆரம்பத்தில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய 'பூவே செம்பூவே' பாடலில் கடைசியில் அந்த இசையைக் கேட்டிருக்கிறீர்களா ? பாடல் ஆரம்பிக்கும் போதும் அதை முடிக்கும் போதும் ஒரே இசையுடன் ஒருவிதமான மோபியஸ் ஸ்டிரிப் (Möbius strip) வகை. சுழற்சியில் கேட்டுக்கொண்டே சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.