
பூமி
இடி, மின்னல்,
மழையுடன்
மனிதர்களையும்
தாங்குவேன்
பொறுமையின் சின்னம்
பூமி!
*****
சோம்பேறி
பொறுப்பை
தட்டிக்கழிக்கும்
சோம்பேறிக்கு
பிடித்த வாசகம்,
'மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்!'
*****
தமிழ்
உறவு
துறவு
ஒரு எழுத்து மாறி
வாழ்க்கைப் பாடத்தையே
புரட்டிப் பார்க்கிறது
தமிழ்!
– எஸ்.பவானி, திருச்சி
——————–
*****
நினைவு
மிட்டாய் நினைவில்
கைசூப்பும் குழந்தை
மாதக் கடைசி!
*****
உதவி!
தலைமகன்
தராததை
தபால்காரர் தருகிறார்
முதியோர் உதவித் தொகை!
– நிலா, திருச்சி