கவிதைத் தூறல்

கவிதைத் தூறல்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விவசாயி
விளை நிலங்களில்
வீடுகள் வந்துவிட்டதால்
விவசாயம் நடக்கிறது
வீட்டு மாடியில்!

—————-

வெற்றிக்கு வழி
மவுனத்தை
கடைபிடித்துப் பாருங்கள்!
நியாயம் உங்களுக்குக்
கிடைக்கும்!
வார்த்தைகள்
சாதிக்க முடியாததை
பல இடங்களில்
மவுனம் சாதித்து விடுகின்றன!
-பி.சி.ரகு, பள்ளிச்சேரி

—————-

மதிய உணவு
பள்ளிகள்
திறந்துவிட்டன!
இனி,
காக்கைகளுக்கும்
அணில்களுக்கும்
மதிய உணவாய்
கிடைக்கலாம்
நூடுல்ஸும்
சிப்ஸும்!

—————-

வரம்
கொடுத்து
வைத்த ரோஜா!
சிறு செடியை
இழந்து
உன் கூந்தல் காடையே
சொந்தமாக்கிக்
கொண்டதே!

—————-

விளைச்சல்
நெல் போட்டு
அரிசி விளையாத
நிலத்தில்
கல் போட்டு
கட்டடம்
அமோகமாய்
விளைந்து நிற்கிறது!

—————-

பிளிறல்
தனிமைப்படுத்தி,
காலில் சங்கிலியிட்டு,
நன்நீரால் நீராட்டி,
சந்தன, குங்குமம்
அலங்காரம் செய்யும்
உன் தெய்வீகம் வேண்டாம்!
வனத்தோடு,
என் இனத்தோடு,
தேங்கியிருக்கும்
குட்டை நீரின் சேற்றை
பூசிக்கொள்ளும்
சுதந்திரமே வேண்டும்!

—————-

முரண்
தெருக்கூத்தில்
கர்ணன்
வேஷம் கட்டியவன்,
காட்சி
முடிந்ததும்
துண்டேந்தி
வருகிறான்!
– நிலா, திருச்சி

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com