அழகோ அழகு – 10.– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா..தலைமுடி : ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி உதிர்வது. இதற்கான காரணம், ஆண்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (ANDROGENETIC ALOPECIA) எனப்படும் நிலையாகும். (ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (ANDROGENIC ALOPECIA) என்றும் கூறலாம்) அதிக முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை நிலை இது. மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தலை முடியை மோசமாக பாதிக்கும். மேலும், கணிசமாக மெலிந்துபோகச் செய்து விடும். பெண்களுக்கு வயது ஏற ஏற, முடி உதிர்வது அதிகமாக இருக்கும். குறிப்பாக, பிரசவம் ஆன பெண்களுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் அவர்கள் உடலில் ஏற்படும்..ஊட்டச்சத்து குறைவின் காரணமாக முடி அதிகம் உதிரும். அதிர்ச்சிகரமான, துக்ககரமான சம்பவங்களினாலோ அல்லது கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதினாலோ கூட முடி உதிர்வது அதிகரிக்கும். இது தவிர, நம் உடலே, உடம்பின் எதிர்ப்புச் சக்தியை உடைத்து, முடி வளர விடாமல் செய்யும். அலோபீசியா அரீட்டா (ALOPECIA AREATA) என்ற ஒருவித ஆட்டோ இம்யூன் முடி உதிர்தல் நோய் கூட காரணமாக இருக்கலாம்..நாம் ஏற்கெனவே பார்த்தது போல், தலைமுடிக்கு மிகச் சிறந்தது தேங்காய் எண்ணெய். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கும். மற்றுமொரு இயற்கை நிவாரணி வெந்தயம். முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தயிர் கலந்து முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி கொட்டுவது அடியோடு நிற்கும்..இறந்த செல்கள் சேர்வதால் ஏற்படுவது பொடுகு. பொடுகைப் போக்குவதற்கென்றே கிடைக்கும் மருத்துவ ஷாம்பூ பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லை நீங்கும் வரை மட்டுமே இத்தகைய ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது. க்ரீன் டீயை நீரில் நன்கு கொதிக்கவிட்டு ஆறிய பின் அந்தச் சாற்றை தலையில் பூசி அலசினால் பொடுகு போய்விடும். தேங்காய் எண்ணெயில் இரண்டு மூன்று துளிகள் தேயிலை மர எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம்..சருமம் : சருமப் பாதுகாப்புக்கு இயற்கை முறையில் நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கலாம்..க்ளென்சிங் (CLEANSING) : காய்ச்சாத பச்சைப் பாலில் பஞ்சை நனைத்து சருமத்தைத் துடைத்து, முக்கியமாக முகத்தை சுத்தம் செய்யும்போது இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பளபளக்கும். பாலில் உள்ள LACTIC அமிலத்தின் சிறப்பு சக்தி இது.ஸ்க்ரப் / டோனர் : நன்கு பொடித்த பாதாம் பவுடருடன் பாதாம் எண்ணெய், தயிர் கலந்த கலவையை ஒரு மெல்லிய துணியில் முடிந்து சருமத்தில் மசாஜ் செய்வது போல ஒற்றி எடுக்கவும். இதற்கு POTLI மசாஜ் என்று பெயர். எண்ணெய் சருமம் உடையவர்கள் தக்காளிப் பழத்தை நறுக்கி சர்க்கரையில் தோய்த்து சருமத்தில் தடவி, உடனே வாஷ் செய்து விடலாம். சாமந்தி, ரோஜா போன்ற வாசனை மலர்கள் ஒரு கைப்பிடி எடுத்து, 100மி.லி. நீரில் கொதிக்க வைத்து மூடி, ஆறிய பின் அந்த எசென்ஸை (ESSENCE) சருமத்தில் தடவ, நல்ல பலன் கிடைக்கும். சருமத்திற்கான மிகச் சிறந்த டோனர் இது.மசாஜ் : சரும மசாஜ் செய்வதற்கு கத்தாழை போல் சிறந்தது வேறில்லை. இரண்டு, மூன்று டீஸ்பூன் கத்தாழை சாறுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கலக்க க்ரீம் பதத்தில் வரும். இக்கலவையால் மசாஜ் செய்யும்போது குளிர்ச்சியாகவும் புத்துணர்வுடனும் சருமம் பொலிவு பெறும். எந்த வகை சருமம் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.ஃபேஸ் பேக் (FACE PACK) : முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் தலா இரண்டு டீஸ்பூன், கால் டீஸ்பூன் கிளிசரின் ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு கலந்து பேக் போடலாம். பேக் போட்டு இருபது நிமிடங்கள் கழித்து நன்கு துடைத்த பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் இதை செய்யலாம்.சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்க, தேன் மிகச் சிறந்தது. தேனைத் தடவி பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முழு உடலுக்கும் இதனைச் செய்யலாம். நல்லெண்ணெய், நலங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள் எல்லாமே இயற்கையில் கிடைக்கக்கூடிய சரும நிவாரணிகள்.கைகள் : கைகளில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால் எளிதில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுகின்றன. தற்போது அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டி இருப்பதால் கைகள் சீக்கிரத்தில் வறண்டு விடுகிறது. சானிடைசர் பயன்படுத்திய பின் கைகளை நன்கு சுத்தம் செய்து, துடைத்து பின் க்ரீம் உபயோகிக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் தடவி, சிறிது நேரம் ஊறிய பின் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு கொண்டு சுத்தம் செய்யலாம். கூடுமானவரை கைகளில் க்ளவுஸ் (GLOVES) போட்டுக்கொண்டு வேலை செய்தால் சுருக்கங்கள், கோடுகளைத் தவிர்த்து, கைகளை பட்டுப் போல் பாதுகாக்கலாம்..கால்கள் : கால்களில் வலி, ஆடு சதையில் வலி, பித்த வெடிப்புக்கான ஹெர்பல் ட்ரீட்மென்ட் – ஒரு வாளியில் மிதமான சூட்டில் நீர் விட்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கல் உப்பு, இருபது துளிகள் லாவண்டர், ரோஜா போன்ற வாசனை எண்ணெய் மற்றும் ஒரு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அந்த நீரில் காலை வைத்து ஊறிய பின் ஷாம்பூ கலந்து நம் கைகளாலேயே கால்களை நன்கு மசாஜ் செய்யும்போது, கால் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வாரத்தில் இதை இரு நாட்கள் செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்கள் பராமரிப்புக்கு தனிக்கவனம் செலுத்துவது அவசியம். முழு உடம்பு : நான்கைந்து டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் செடர் வினிகர் மூன்றையும் சிறிது தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, உடல் முழுதும் மசாஜ் பண்ணிய பின், வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்தால் கழுத்து மடிப்பு, அக்குள் மற்றும் தொடைகளுக்கிடையில் ஏற்படும் கருமை முற்றிலும் நீங்கி உடல் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேற்சொன்ன எல்லாமே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய இயற்கைத் தீர்வுகள். இவற்றைப் பயன்படுத்தி உச்சி முதல் பாதம் வரை முறையாகப் பராமரித்தால் நம் உடம்பு நம்மை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.உங்கள் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்.
அழகோ அழகு – 10.– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா..தலைமுடி : ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி உதிர்வது. இதற்கான காரணம், ஆண்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (ANDROGENETIC ALOPECIA) எனப்படும் நிலையாகும். (ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (ANDROGENIC ALOPECIA) என்றும் கூறலாம்) அதிக முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை நிலை இது. மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தலை முடியை மோசமாக பாதிக்கும். மேலும், கணிசமாக மெலிந்துபோகச் செய்து விடும். பெண்களுக்கு வயது ஏற ஏற, முடி உதிர்வது அதிகமாக இருக்கும். குறிப்பாக, பிரசவம் ஆன பெண்களுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் அவர்கள் உடலில் ஏற்படும்..ஊட்டச்சத்து குறைவின் காரணமாக முடி அதிகம் உதிரும். அதிர்ச்சிகரமான, துக்ககரமான சம்பவங்களினாலோ அல்லது கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதினாலோ கூட முடி உதிர்வது அதிகரிக்கும். இது தவிர, நம் உடலே, உடம்பின் எதிர்ப்புச் சக்தியை உடைத்து, முடி வளர விடாமல் செய்யும். அலோபீசியா அரீட்டா (ALOPECIA AREATA) என்ற ஒருவித ஆட்டோ இம்யூன் முடி உதிர்தல் நோய் கூட காரணமாக இருக்கலாம்..நாம் ஏற்கெனவே பார்த்தது போல், தலைமுடிக்கு மிகச் சிறந்தது தேங்காய் எண்ணெய். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கும். மற்றுமொரு இயற்கை நிவாரணி வெந்தயம். முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தயிர் கலந்து முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி கொட்டுவது அடியோடு நிற்கும்..இறந்த செல்கள் சேர்வதால் ஏற்படுவது பொடுகு. பொடுகைப் போக்குவதற்கென்றே கிடைக்கும் மருத்துவ ஷாம்பூ பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லை நீங்கும் வரை மட்டுமே இத்தகைய ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது. க்ரீன் டீயை நீரில் நன்கு கொதிக்கவிட்டு ஆறிய பின் அந்தச் சாற்றை தலையில் பூசி அலசினால் பொடுகு போய்விடும். தேங்காய் எண்ணெயில் இரண்டு மூன்று துளிகள் தேயிலை மர எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம்..சருமம் : சருமப் பாதுகாப்புக்கு இயற்கை முறையில் நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கலாம்..க்ளென்சிங் (CLEANSING) : காய்ச்சாத பச்சைப் பாலில் பஞ்சை நனைத்து சருமத்தைத் துடைத்து, முக்கியமாக முகத்தை சுத்தம் செய்யும்போது இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பளபளக்கும். பாலில் உள்ள LACTIC அமிலத்தின் சிறப்பு சக்தி இது.ஸ்க்ரப் / டோனர் : நன்கு பொடித்த பாதாம் பவுடருடன் பாதாம் எண்ணெய், தயிர் கலந்த கலவையை ஒரு மெல்லிய துணியில் முடிந்து சருமத்தில் மசாஜ் செய்வது போல ஒற்றி எடுக்கவும். இதற்கு POTLI மசாஜ் என்று பெயர். எண்ணெய் சருமம் உடையவர்கள் தக்காளிப் பழத்தை நறுக்கி சர்க்கரையில் தோய்த்து சருமத்தில் தடவி, உடனே வாஷ் செய்து விடலாம். சாமந்தி, ரோஜா போன்ற வாசனை மலர்கள் ஒரு கைப்பிடி எடுத்து, 100மி.லி. நீரில் கொதிக்க வைத்து மூடி, ஆறிய பின் அந்த எசென்ஸை (ESSENCE) சருமத்தில் தடவ, நல்ல பலன் கிடைக்கும். சருமத்திற்கான மிகச் சிறந்த டோனர் இது.மசாஜ் : சரும மசாஜ் செய்வதற்கு கத்தாழை போல் சிறந்தது வேறில்லை. இரண்டு, மூன்று டீஸ்பூன் கத்தாழை சாறுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கலக்க க்ரீம் பதத்தில் வரும். இக்கலவையால் மசாஜ் செய்யும்போது குளிர்ச்சியாகவும் புத்துணர்வுடனும் சருமம் பொலிவு பெறும். எந்த வகை சருமம் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.ஃபேஸ் பேக் (FACE PACK) : முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் தலா இரண்டு டீஸ்பூன், கால் டீஸ்பூன் கிளிசரின் ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு கலந்து பேக் போடலாம். பேக் போட்டு இருபது நிமிடங்கள் கழித்து நன்கு துடைத்த பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் இதை செய்யலாம்.சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்க, தேன் மிகச் சிறந்தது. தேனைத் தடவி பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முழு உடலுக்கும் இதனைச் செய்யலாம். நல்லெண்ணெய், நலங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள் எல்லாமே இயற்கையில் கிடைக்கக்கூடிய சரும நிவாரணிகள்.கைகள் : கைகளில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால் எளிதில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுகின்றன. தற்போது அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டி இருப்பதால் கைகள் சீக்கிரத்தில் வறண்டு விடுகிறது. சானிடைசர் பயன்படுத்திய பின் கைகளை நன்கு சுத்தம் செய்து, துடைத்து பின் க்ரீம் உபயோகிக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் தடவி, சிறிது நேரம் ஊறிய பின் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு கொண்டு சுத்தம் செய்யலாம். கூடுமானவரை கைகளில் க்ளவுஸ் (GLOVES) போட்டுக்கொண்டு வேலை செய்தால் சுருக்கங்கள், கோடுகளைத் தவிர்த்து, கைகளை பட்டுப் போல் பாதுகாக்கலாம்..கால்கள் : கால்களில் வலி, ஆடு சதையில் வலி, பித்த வெடிப்புக்கான ஹெர்பல் ட்ரீட்மென்ட் – ஒரு வாளியில் மிதமான சூட்டில் நீர் விட்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கல் உப்பு, இருபது துளிகள் லாவண்டர், ரோஜா போன்ற வாசனை எண்ணெய் மற்றும் ஒரு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அந்த நீரில் காலை வைத்து ஊறிய பின் ஷாம்பூ கலந்து நம் கைகளாலேயே கால்களை நன்கு மசாஜ் செய்யும்போது, கால் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வாரத்தில் இதை இரு நாட்கள் செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்கள் பராமரிப்புக்கு தனிக்கவனம் செலுத்துவது அவசியம். முழு உடம்பு : நான்கைந்து டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் செடர் வினிகர் மூன்றையும் சிறிது தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, உடல் முழுதும் மசாஜ் பண்ணிய பின், வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்தால் கழுத்து மடிப்பு, அக்குள் மற்றும் தொடைகளுக்கிடையில் ஏற்படும் கருமை முற்றிலும் நீங்கி உடல் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேற்சொன்ன எல்லாமே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய இயற்கைத் தீர்வுகள். இவற்றைப் பயன்படுத்தி உச்சி முதல் பாதம் வரை முறையாகப் பராமரித்தால் நம் உடம்பு நம்மை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.உங்கள் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்.