கவிதைத் தூறல்!  

கவிதைத் தூறல்!  
Published on
மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
பத்துப் பொருத்தம்  

ணப் பொருத்தம்
எல்லாம் பார்த்த
பெற்றோர், வீட்டாரின்
குணப் பொருத்தத்தை
பார்க்காததால்
மகள் இன்று வீட்டோடு.
……………………………………………………..

சிக்கனம்  

சேமிப்பு பற்றிப் பேச
அரசியல்வாதி வந்தார்
தனி விமானத்தில்.
……………………………………………………..

 தூக்கம்

ள்ளிக்குச் சென்ற
பக்கத்து வீட்டு குட்டிப்
பெண் பாதியில்
தூங்கிவிட்டாள்
ஆன்லைன் கிளாஸ்
ஞாபகத்தில்.
……………………………………………………..

நிஜம்  

சிறிதெனினும்
நிழல் பெரிது
நிஜம் நிழலாகவும்
நிழல் நிஜமாகவும்
காட்சி மாறி
கண்ணீர் விடுகிறது.
……………………………………………………..

மணம்

லர்ந்தாலும்
உதிர்ந்தாலும்
கீழே கிடந்தாலும்
நிறம் மாறாத
பூக்கள் போல
நீ என்ன செய்தாலும்
மலரென என் மனதில்
மணம் பரப்புகிறாய்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com