சிறுகதை : ச. வாணி.ஓவியம் : லலிதா.நடுநிசிக்கு இன்னும் நான்கைந்து நிமிடங்களே இருந்தன. எங்கோ தொலைவில் நாய் ஒன்று ஊளையிடுவது அருவமாகக் கேட்டது. அறையின் மின்சார விடிவிளக்கோ அவ்வப்போது கண்களைச் சிமிட்டி, சிமிட்டி தன் இருப்பைக் காண்பித்தது. காற்றாடி தன் ஒரு சுழற்சியை முடிக்க பூமி சூரியனைச் சுற்றி வரும் காலம் ஆகும் போல! அத்தனை மெதுவாய் சுழன்றது. பத்து நாட்களுக்கு ஒரு முறையேனும் இதுபோல் 'டிம் சப்ளை' வருவது வழக்கம்தான். சூர்யாவுக்குக் காற்று போதாமையால் தூக்கம் கலைந்ததோடு கொசுக்கடியும் சேர்த்து எழுப்பவே தண்ணீராவது குடிக்கலாம் என நினைத்து எழ எத்தனிக்கும் சமயம்தான் அவளின் பெற்றோரான சந்திரனும், கலாவும் பேசிக்கொண்டிருப்பது செவிகளில் விழுந்தது.."இவ ஒரு நானூறு மார்க்காவது வாங்கி இருந்தா சீட்டு கெடச்சிருக்கும். இல்ல நாமாவது தாழ்ந்த சாதியா இருந்திருந்தா கோட்டாவுலயாவது சீட்டு கெடச்சிருக்கும்… என்ன பண்றது? எதுக்கும் இல்லாம போச்சு. நாலஞ்சு வருஷத்துல ஐந்து சவரனாவது போட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருவோம். அவ தலையெழுத்து அதுதான்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். காலேஜ் படிப்பெல்லாம் நம்மள மாதிரி ஏழைபாழைக்கு வேண்டும்ன்னு நெனக்கிறது பேராசை கலா, விட்டுத் தள்ளு" என விரக்தியோடு தன் தந்தை சந்திரன், தாய் கலாவிடம் புலம்பியது நன்றாகக் கேட்டது.."என்னங்க, ஏதாவது முயற்சி பண்ணிப் பாருங்க. பாவங்க சூர்யா. இவளவிட மார்க் கொறவா எடுத்த இவ ப்ரெண்ட்ஸ் ஆனந்தி, சுகந்திக்குக்கூட காலேஜ்ல சீட்டு கெடச்சிருச்சாங்க. நாலு நாள் முன்னாடிதான் கவுன்சிலிங்குக்கு வரச் சொல்லி லெட்டர் வந்ததையும், போய்ட்டு சீட்டு கெடச்சதையும் சொல்லிட்டு, சூர்யாவ விசாரிச்சிட்டு போனாங்க. புள்ள மொகமே வாடி போயிருச்சிங்க. எனக்கு மனசே கேக்கலங்க" என விசும்பத் தொடங்கினாள் கலா.."விடும்மா. நீ அழறதுனால ஏதாவது நடக்கப் போகுதா என்ன? அந்தக் கடவுள் கண்ண தொறந்தாதான் நமக்கெல்லாம் விடிவு காலம். காலம்பற எழுந்து வேலைக்குப் போகணும். மனச போட்டுக் குழம்பிக்காத தூங்கு. இதுவும் கடந்து போகும். அழாதம்மா" என மனைவி கலாவைச் சமாதானப் படுத்தினான் சந்திரன்..தம் பெற்றோரின் இந்த சம்பாஷனைகள் சூர்யாவுக்குள் ஏதேதோ செய்தது. "கடைசி நேரத்துல டி.வி., கீ.வி பாக்காம இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல மார்க் வாங்கி இருக்கலாம். ப்ரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்த நேரத்துல, டீச்சர் சொன்னபடி படிச்சிருந்தா இப்போ நமக்கு இந்த நெலம வந்திருக்காது. நம்ம அப்பா, அம்மா நம்மள நெனச்சி எவ்ளோ வருத்தப்படறாங்க," என நினைக்கும் போதே அவளின் விழியருவி தலையணையை நனைத்தது..புரண்டு புரண்டு படுத்திருந்தவள் எப்போது உறங்கிப் போனாள் என அவளுக்கே தெரியவில்லை..கண் விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தின் பெரிய முள் மிகச் சரியாக பன்னிரண்டை வந்து தழுவ, உள்ளிருந்து ஒரு குருவி வந்து 6 முறை கீச்சிட்டது. சூர்யாவின் பிறந்த நாளுக்கு தோழிகள் யாவரும் சேர்ந்து அன்பளிப்பாய் அளித்தது அந்தக் கடிகாரம்..அதைப் பார்த்ததும் மீண்டும் நண்பர்கள், பள்ளி, கல்லூரி என மனம் நடை போட்டுக்கொண்டே சென்றது. விழியோரம் துளிர்த்த நீர்த் துளிகளை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டு எழுந்து வந்த சூர்யா கொல்லைப்புறம் சென்று காலைக்கடன்களில் மூழ்கினாள்..சூர்யாவைக் கண்டதும் தொழுவத்தில் இருந்த பசு அம்மா… அம்மா… என அழைத்தது. "வரேன் இரு" எனக் குரல் கொடுத்தபடி தன் தினசரி அலுவலில் மூழ்கினாள் சூர்யா..சூர்யாவின் கொள்ளுத் தாத்தா காலத்தில் இந்தத் தெரு முதல் பின் தெரு வரை இருந்த வீட்டில் பாதிக்குப் பாதி மாடுகளால் நிறைந்த தொழுவம்தான். கிட்டத்தட்ட 30 பசுமாடுகளும், 3 ஜோடி உழவு மாடுகளான காளைகளும், கன்றுகுட்டிகளுமாக பெரிய பண்ணையே இருந்தது. இங்கிருந்து பக்கத்து சிவன் கோயிலுக்கு நாள் தவறாமல் 3 படி பால் அபிஷேகத்துக்குச் செல்வது வழக்கம்..இன்றோ காற்று போன பலூனாக வீடு சுருங்கிற்று. தொழுவத்தில் ஒரு பசுவும் கன்றுக்குட்டியுமே மிச்சம். ஆனால் வழக்கம் மட்டும் மாறாமல் இன்றும் ஒரு சொம்பு அபிஷேகத்திற்குத் தடையில்லாமல் செல்கிறது..சூர்யா மனதிற்குள் மானசீகமாக சிவனிடம் உருகினாள். "எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா ஒனக்குப் பால் கொண்டு வந்து தரேனே. அதுக்காவது என் மேல கருண காட்டக்கூடாதா?" என உள்ளமுருகி வேண்டியதைக் கலா எப்படித்தான் ஸ்கேன் செய்து பார்த்தாளோ என்னவோ. "சூர்யா… கடவுளே ஆனாலும் கையேந்தக் கூடாதும்மா. உண்மையா, நேர்மையா, கடினமா, விடாமுயற்சியோட உழைச்சா. கடவுள் நமக்குன்னு உரியத கண்டிப்பா கொடுப்பாரும்மா. போ, போய் வேலையா பாரு" எனச் சொல்ல, சூர்யா ஓட்டமும் நடையுமாக பால் சொம்பைக் கோயிலுக்குள் 6.30 மணிக்கெல்லாம் கொண்டு சேர்த்தாள்..திரும்பி வருகையில் புது சுடிதார், புது பேக் சகிதமாய் சுகந்தியும், ஆனந்தியும் பேருந்து ஏற காத்து நின்றதைக் கண்ட சூர்யா, "ஹாய்" எனக் குரல் கொடுத்தாள்.."ஹாய்… சூர்யா, இன்னைக்குத்தான் காலேஜ் ஃபஸ்ட் டே. நாங்க ரெண்டு பேருமே ஒரே கிளாஸ்தான். பி.ஏ… தமிழ்-லதான் சேர்ந்திருக்கோம். நீயும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பேருந்து வர, இருவரும் ஏறிச் சென்றுவிட்டனர்..சூர்யாவின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. நீயும் வந்திருந்தா… நீயும் வந்திருந்தா… என்ற சொற்கள்.."நான் மட்டும் என்ன தவறு செய்தேன்? அவர்களை விட ஐம்பத்திரண்டு மதிப்பெண்கள் அதிகம். முந்நூற்று எண்பத்தேழு. ஆனால், எனக்குக்காலேஜ்-ல இருந்து ஒரு லெட்டர் கூட வரல. இதெல்லாம் நியாயமே இல்ல. கடவுளே நீயே சொல்லு. இதெல்லாம் சரியா? முறையா?" என விவாதம் புரிந்துகொண்டே, வீடு நோக்கி நடைபோட்டாள். வழியில் எதிர்ப்பட்ட மனிதர்கள் எவருமே கண்களுக்குப் புலப்படவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தாள்..அவள் வீட்டில் நுழையவும், கலா வெளியில் வரவும் சரியாக இருந்தது. "இந்தாம்மா, இத நாய்க்கும், காக்காவுக்கும் வச்சிருடா. டைம் ஆகுது. நான் வேலைக்குக் கெளம்பறேன்" எனக் கூறியபடியே கையிலிருந்த சோற்றுத் தட்டை சூர்யாவிடம் கொடுத்துவிட்டு, நூறு நாள் வேலை திட்டத்தில் இணைந்திருந்த கலா, கையில் மண்வெட்டி, கைப்பிடி அருவா, பாண்டு சகிதமாய் புறப்பட்டு விட்டாள்.."கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" எனப் பக்கத்து பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தது தெளிவாய்க் கேட்டது..கடந்த இருபத்தைந்து நாளாக, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்தது முதல் இதுதான் வழக்கம் என்றாலும் மனம் ஏனோ இன்று மிகவும் முரண்டு பிடிக்கிறது. கவனம் முழுவதும் கல்லூரியைச் சுற்றி சுற்றியே வட்டமிடுகிறது. நீயும் வந்திருந்தா… நீயும் வந்திருந்தா… எனச் சுகந்தி சொல்லியதே காதுகளில் ஒலிக்கிறது..கா…கா… கா… என கரைந்து காகத்தை அழைத்து ஒரு கவளம் அதற்கிட்டுவிட்டு, ச்ச்ச்… என நாயை அழைத்து அதற்கும் ஒரு கவளம் சோறிட்டுவிட்டு திரும்புகையில் 'அம்மா…' என்ற அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் சூர்யா..தொடர்ந்து நான்கைந்து வீடுகளில் ஆள் அரவமே கிடையாது. அனைவரும் பள்ளிக்கும், பணிக்கும் சென்று விட்டனர். அப்படியிருக்க இந்த அலறல் யாருடையது எனச் சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே வித்தியாசமாகப் படவில்லை. ஆனால், அலறல் மட்டும் நின்றபாடில்லை..குரலின் தொனியை வைத்துப் பார்த்தால் மூன்றாவது வீட்டு முனிகாந்தம்மாள் போல இருந்தது. எதற்கும் போய் பார்ப்போம் என்று பார்க்கையில் அவரேதான். வீட்டின் புறமாய் இருந்த தோட்டத்தில் கைத்தடி தொலைவில் கிடக்க குப்புற விழுந்து கிடந்தாள்..பதறிய சூர்யா, "என்னாச்சு ஆயா…?" எப்படி விழுந்தீங்க?" எனக் கேட்டுக்கொண்டே அவளைத் தூக்கி அமர வைத்து கீழே விழுந்திருந்த கைத்தடியையும், கண்ணாடியையும் கொண்டு வந்து கொடுத்து, கால்களை நீவி விட்டு குடிக்கத் தண்ணீர் கொடுத்து, முகத்தில் விழுந்திருந்த முடிகளைப் பின்னுக்குத் தள்ளி, கோதிவிட்டு, முதுகைத் தடவிக் கொடுத்து, "சாப்பீட்டீங்களா ஆயா? சாப்பிட ஏதாவது கொண்டு வரவா? மயக்கம் வந்திருச்சா? மாத்திரை போட்டீங்களா? வீட்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டுக்கொண்டே அவள் செய்த பணிவிடைகளில் உருகிப் போனாள் முனிகாந்தம்மாள்..கண்ணாடியை மூக்கிலே செருகிக்கொண்டே, சந்திரன் மவ(ள்) சூர்யாதான நீ…? என வினவினாள்.."ஆமாம் ஆயா சூர்யாதான். ஆமா… சரஸ்வதி எங்க?" என வினவினாள் சூர்யா..சரஸ்வதிக்கும் சூர்யா வயதுதான். எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்டவள். "ஆமாண்டி, அந்த நன்றி கெட்டவதான், என் கைல இருந்த சுருக்குப் பையைப் புடுங்கிட்டு, என்னைத் தள்ளிவிட்டுட்டுஓடிட்டா… " என கண்களில் நீர் மல்க பதிலளித்தாள்.."அச்சச்சோ… நான் வேணும்னா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லவா ஆயா?" என்றாள் சூர்யா.."வேணாம்மா. எல்லாம் கூட்டுக் களவாணிங்கதான். இதுங்கள போய் வம்சம், வாரிசுன்னு நெனச்சி நான் பண்ண பாரு உனக்குத் துரோகம்… என்னைச் சொல்லணும்," என்றாள் முனிகாந்தம் அம்மாள் பாட்டி.."என்னது? எனக்குத் துரோகமா?" எனக் குழப்பத்தடன் வியந்து நோக்கினாள் சூர்யா.."ஆமாம் சூர்யா. என் பேத்திக்குப் படிப்பு எட்டல. எட்டாவதோட நின்னுட்டா. ஆனால், உனக்கு நல்லா படிப்பு வருது. காலேஜ் படிப்பெல்லாம் படிக்க திராணி இருக்குது."."எங்க ஆயா… நானாவது காலேஜாவது… எனக்கு கவுன்சிலிங்குக்கு லெட்டர் கூட வரல ஆயா…" என மிகுந்த வருத்தத்தோட பதிலிருத்தாள் சூர்யா.."இல்ல இல்ல… சூர்யா… உனக்கு அண்ட வீட்டு செண்பகம் மகன் கைலாஷ் படிக்கிறானே அந்த காலேஜில இருந்து கடுதாசி வந்திச்சி. அப்ப உங்க வீட்ல யாருமே இல்ல. வந்தவன் புது போஸ்ட்மேன். எங்கிட்ட வந்து தான் விலாசம் விசாரிச்சான். நான்தான் கடுதாசியை வாங்கின. ஆனா… எம் பேத்தி படிக்காத படிப்பு, நீ படிக்கக்கூடாதுன்னு நெனச்சி அந்தா இருக்கு பாரு வெத்தல பொட்டி. அதுல மடிச்சி வச்சிட்டேன்மா… என் கெட்ட புத்திக்கு ஆண்டவன் எனக்குச் சரியான தண்டனை கொடுத்துட்டான். எம் பேத்தியும், மவளும் எப்படிப்பட்டவங்கன்னு இப்பல்ல புரியுது. மன்னிச்சிரு தாயி… மன்னிச்சிரு" எனக் கூறியபடியே வெற்றிலை பெட்டியில் இருந்த கலந்தாய்வுக்கான கடிதத்தை எடுத்து சூர்யாவிடம் நீட்டினாள் முனிகாந்தம்மாள்..பக்கத்துப் பள்ளியில் இருந்து….வருந்தி அழைத்தாலும் வராதன வாராபொருந்துவன போமின் என்றால் போகாபொருந்துவன போமின் என்றால் போகாபொருந்துவன போமின் என்றால் போகா…என ஒலித்துக்கொண்டே இருந்தது.
சிறுகதை : ச. வாணி.ஓவியம் : லலிதா.நடுநிசிக்கு இன்னும் நான்கைந்து நிமிடங்களே இருந்தன. எங்கோ தொலைவில் நாய் ஒன்று ஊளையிடுவது அருவமாகக் கேட்டது. அறையின் மின்சார விடிவிளக்கோ அவ்வப்போது கண்களைச் சிமிட்டி, சிமிட்டி தன் இருப்பைக் காண்பித்தது. காற்றாடி தன் ஒரு சுழற்சியை முடிக்க பூமி சூரியனைச் சுற்றி வரும் காலம் ஆகும் போல! அத்தனை மெதுவாய் சுழன்றது. பத்து நாட்களுக்கு ஒரு முறையேனும் இதுபோல் 'டிம் சப்ளை' வருவது வழக்கம்தான். சூர்யாவுக்குக் காற்று போதாமையால் தூக்கம் கலைந்ததோடு கொசுக்கடியும் சேர்த்து எழுப்பவே தண்ணீராவது குடிக்கலாம் என நினைத்து எழ எத்தனிக்கும் சமயம்தான் அவளின் பெற்றோரான சந்திரனும், கலாவும் பேசிக்கொண்டிருப்பது செவிகளில் விழுந்தது.."இவ ஒரு நானூறு மார்க்காவது வாங்கி இருந்தா சீட்டு கெடச்சிருக்கும். இல்ல நாமாவது தாழ்ந்த சாதியா இருந்திருந்தா கோட்டாவுலயாவது சீட்டு கெடச்சிருக்கும்… என்ன பண்றது? எதுக்கும் இல்லாம போச்சு. நாலஞ்சு வருஷத்துல ஐந்து சவரனாவது போட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருவோம். அவ தலையெழுத்து அதுதான்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். காலேஜ் படிப்பெல்லாம் நம்மள மாதிரி ஏழைபாழைக்கு வேண்டும்ன்னு நெனக்கிறது பேராசை கலா, விட்டுத் தள்ளு" என விரக்தியோடு தன் தந்தை சந்திரன், தாய் கலாவிடம் புலம்பியது நன்றாகக் கேட்டது.."என்னங்க, ஏதாவது முயற்சி பண்ணிப் பாருங்க. பாவங்க சூர்யா. இவளவிட மார்க் கொறவா எடுத்த இவ ப்ரெண்ட்ஸ் ஆனந்தி, சுகந்திக்குக்கூட காலேஜ்ல சீட்டு கெடச்சிருச்சாங்க. நாலு நாள் முன்னாடிதான் கவுன்சிலிங்குக்கு வரச் சொல்லி லெட்டர் வந்ததையும், போய்ட்டு சீட்டு கெடச்சதையும் சொல்லிட்டு, சூர்யாவ விசாரிச்சிட்டு போனாங்க. புள்ள மொகமே வாடி போயிருச்சிங்க. எனக்கு மனசே கேக்கலங்க" என விசும்பத் தொடங்கினாள் கலா.."விடும்மா. நீ அழறதுனால ஏதாவது நடக்கப் போகுதா என்ன? அந்தக் கடவுள் கண்ண தொறந்தாதான் நமக்கெல்லாம் விடிவு காலம். காலம்பற எழுந்து வேலைக்குப் போகணும். மனச போட்டுக் குழம்பிக்காத தூங்கு. இதுவும் கடந்து போகும். அழாதம்மா" என மனைவி கலாவைச் சமாதானப் படுத்தினான் சந்திரன்..தம் பெற்றோரின் இந்த சம்பாஷனைகள் சூர்யாவுக்குள் ஏதேதோ செய்தது. "கடைசி நேரத்துல டி.வி., கீ.வி பாக்காம இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல மார்க் வாங்கி இருக்கலாம். ப்ரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்த நேரத்துல, டீச்சர் சொன்னபடி படிச்சிருந்தா இப்போ நமக்கு இந்த நெலம வந்திருக்காது. நம்ம அப்பா, அம்மா நம்மள நெனச்சி எவ்ளோ வருத்தப்படறாங்க," என நினைக்கும் போதே அவளின் விழியருவி தலையணையை நனைத்தது..புரண்டு புரண்டு படுத்திருந்தவள் எப்போது உறங்கிப் போனாள் என அவளுக்கே தெரியவில்லை..கண் விழித்துப் பார்த்தபோது கடிகாரத்தின் பெரிய முள் மிகச் சரியாக பன்னிரண்டை வந்து தழுவ, உள்ளிருந்து ஒரு குருவி வந்து 6 முறை கீச்சிட்டது. சூர்யாவின் பிறந்த நாளுக்கு தோழிகள் யாவரும் சேர்ந்து அன்பளிப்பாய் அளித்தது அந்தக் கடிகாரம்..அதைப் பார்த்ததும் மீண்டும் நண்பர்கள், பள்ளி, கல்லூரி என மனம் நடை போட்டுக்கொண்டே சென்றது. விழியோரம் துளிர்த்த நீர்த் துளிகளை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டு எழுந்து வந்த சூர்யா கொல்லைப்புறம் சென்று காலைக்கடன்களில் மூழ்கினாள்..சூர்யாவைக் கண்டதும் தொழுவத்தில் இருந்த பசு அம்மா… அம்மா… என அழைத்தது. "வரேன் இரு" எனக் குரல் கொடுத்தபடி தன் தினசரி அலுவலில் மூழ்கினாள் சூர்யா..சூர்யாவின் கொள்ளுத் தாத்தா காலத்தில் இந்தத் தெரு முதல் பின் தெரு வரை இருந்த வீட்டில் பாதிக்குப் பாதி மாடுகளால் நிறைந்த தொழுவம்தான். கிட்டத்தட்ட 30 பசுமாடுகளும், 3 ஜோடி உழவு மாடுகளான காளைகளும், கன்றுகுட்டிகளுமாக பெரிய பண்ணையே இருந்தது. இங்கிருந்து பக்கத்து சிவன் கோயிலுக்கு நாள் தவறாமல் 3 படி பால் அபிஷேகத்துக்குச் செல்வது வழக்கம்..இன்றோ காற்று போன பலூனாக வீடு சுருங்கிற்று. தொழுவத்தில் ஒரு பசுவும் கன்றுக்குட்டியுமே மிச்சம். ஆனால் வழக்கம் மட்டும் மாறாமல் இன்றும் ஒரு சொம்பு அபிஷேகத்திற்குத் தடையில்லாமல் செல்கிறது..சூர்யா மனதிற்குள் மானசீகமாக சிவனிடம் உருகினாள். "எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா ஒனக்குப் பால் கொண்டு வந்து தரேனே. அதுக்காவது என் மேல கருண காட்டக்கூடாதா?" என உள்ளமுருகி வேண்டியதைக் கலா எப்படித்தான் ஸ்கேன் செய்து பார்த்தாளோ என்னவோ. "சூர்யா… கடவுளே ஆனாலும் கையேந்தக் கூடாதும்மா. உண்மையா, நேர்மையா, கடினமா, விடாமுயற்சியோட உழைச்சா. கடவுள் நமக்குன்னு உரியத கண்டிப்பா கொடுப்பாரும்மா. போ, போய் வேலையா பாரு" எனச் சொல்ல, சூர்யா ஓட்டமும் நடையுமாக பால் சொம்பைக் கோயிலுக்குள் 6.30 மணிக்கெல்லாம் கொண்டு சேர்த்தாள்..திரும்பி வருகையில் புது சுடிதார், புது பேக் சகிதமாய் சுகந்தியும், ஆனந்தியும் பேருந்து ஏற காத்து நின்றதைக் கண்ட சூர்யா, "ஹாய்" எனக் குரல் கொடுத்தாள்.."ஹாய்… சூர்யா, இன்னைக்குத்தான் காலேஜ் ஃபஸ்ட் டே. நாங்க ரெண்டு பேருமே ஒரே கிளாஸ்தான். பி.ஏ… தமிழ்-லதான் சேர்ந்திருக்கோம். நீயும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பேருந்து வர, இருவரும் ஏறிச் சென்றுவிட்டனர்..சூர்யாவின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. நீயும் வந்திருந்தா… நீயும் வந்திருந்தா… என்ற சொற்கள்.."நான் மட்டும் என்ன தவறு செய்தேன்? அவர்களை விட ஐம்பத்திரண்டு மதிப்பெண்கள் அதிகம். முந்நூற்று எண்பத்தேழு. ஆனால், எனக்குக்காலேஜ்-ல இருந்து ஒரு லெட்டர் கூட வரல. இதெல்லாம் நியாயமே இல்ல. கடவுளே நீயே சொல்லு. இதெல்லாம் சரியா? முறையா?" என விவாதம் புரிந்துகொண்டே, வீடு நோக்கி நடைபோட்டாள். வழியில் எதிர்ப்பட்ட மனிதர்கள் எவருமே கண்களுக்குப் புலப்படவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தாள்..அவள் வீட்டில் நுழையவும், கலா வெளியில் வரவும் சரியாக இருந்தது. "இந்தாம்மா, இத நாய்க்கும், காக்காவுக்கும் வச்சிருடா. டைம் ஆகுது. நான் வேலைக்குக் கெளம்பறேன்" எனக் கூறியபடியே கையிலிருந்த சோற்றுத் தட்டை சூர்யாவிடம் கொடுத்துவிட்டு, நூறு நாள் வேலை திட்டத்தில் இணைந்திருந்த கலா, கையில் மண்வெட்டி, கைப்பிடி அருவா, பாண்டு சகிதமாய் புறப்பட்டு விட்டாள்.."கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" எனப் பக்கத்து பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தது தெளிவாய்க் கேட்டது..கடந்த இருபத்தைந்து நாளாக, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்தது முதல் இதுதான் வழக்கம் என்றாலும் மனம் ஏனோ இன்று மிகவும் முரண்டு பிடிக்கிறது. கவனம் முழுவதும் கல்லூரியைச் சுற்றி சுற்றியே வட்டமிடுகிறது. நீயும் வந்திருந்தா… நீயும் வந்திருந்தா… எனச் சுகந்தி சொல்லியதே காதுகளில் ஒலிக்கிறது..கா…கா… கா… என கரைந்து காகத்தை அழைத்து ஒரு கவளம் அதற்கிட்டுவிட்டு, ச்ச்ச்… என நாயை அழைத்து அதற்கும் ஒரு கவளம் சோறிட்டுவிட்டு திரும்புகையில் 'அம்மா…' என்ற அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் சூர்யா..தொடர்ந்து நான்கைந்து வீடுகளில் ஆள் அரவமே கிடையாது. அனைவரும் பள்ளிக்கும், பணிக்கும் சென்று விட்டனர். அப்படியிருக்க இந்த அலறல் யாருடையது எனச் சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே வித்தியாசமாகப் படவில்லை. ஆனால், அலறல் மட்டும் நின்றபாடில்லை..குரலின் தொனியை வைத்துப் பார்த்தால் மூன்றாவது வீட்டு முனிகாந்தம்மாள் போல இருந்தது. எதற்கும் போய் பார்ப்போம் என்று பார்க்கையில் அவரேதான். வீட்டின் புறமாய் இருந்த தோட்டத்தில் கைத்தடி தொலைவில் கிடக்க குப்புற விழுந்து கிடந்தாள்..பதறிய சூர்யா, "என்னாச்சு ஆயா…?" எப்படி விழுந்தீங்க?" எனக் கேட்டுக்கொண்டே அவளைத் தூக்கி அமர வைத்து கீழே விழுந்திருந்த கைத்தடியையும், கண்ணாடியையும் கொண்டு வந்து கொடுத்து, கால்களை நீவி விட்டு குடிக்கத் தண்ணீர் கொடுத்து, முகத்தில் விழுந்திருந்த முடிகளைப் பின்னுக்குத் தள்ளி, கோதிவிட்டு, முதுகைத் தடவிக் கொடுத்து, "சாப்பீட்டீங்களா ஆயா? சாப்பிட ஏதாவது கொண்டு வரவா? மயக்கம் வந்திருச்சா? மாத்திரை போட்டீங்களா? வீட்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டுக்கொண்டே அவள் செய்த பணிவிடைகளில் உருகிப் போனாள் முனிகாந்தம்மாள்..கண்ணாடியை மூக்கிலே செருகிக்கொண்டே, சந்திரன் மவ(ள்) சூர்யாதான நீ…? என வினவினாள்.."ஆமாம் ஆயா சூர்யாதான். ஆமா… சரஸ்வதி எங்க?" என வினவினாள் சூர்யா..சரஸ்வதிக்கும் சூர்யா வயதுதான். எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்டவள். "ஆமாண்டி, அந்த நன்றி கெட்டவதான், என் கைல இருந்த சுருக்குப் பையைப் புடுங்கிட்டு, என்னைத் தள்ளிவிட்டுட்டுஓடிட்டா… " என கண்களில் நீர் மல்க பதிலளித்தாள்.."அச்சச்சோ… நான் வேணும்னா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லவா ஆயா?" என்றாள் சூர்யா.."வேணாம்மா. எல்லாம் கூட்டுக் களவாணிங்கதான். இதுங்கள போய் வம்சம், வாரிசுன்னு நெனச்சி நான் பண்ண பாரு உனக்குத் துரோகம்… என்னைச் சொல்லணும்," என்றாள் முனிகாந்தம் அம்மாள் பாட்டி.."என்னது? எனக்குத் துரோகமா?" எனக் குழப்பத்தடன் வியந்து நோக்கினாள் சூர்யா.."ஆமாம் சூர்யா. என் பேத்திக்குப் படிப்பு எட்டல. எட்டாவதோட நின்னுட்டா. ஆனால், உனக்கு நல்லா படிப்பு வருது. காலேஜ் படிப்பெல்லாம் படிக்க திராணி இருக்குது."."எங்க ஆயா… நானாவது காலேஜாவது… எனக்கு கவுன்சிலிங்குக்கு லெட்டர் கூட வரல ஆயா…" என மிகுந்த வருத்தத்தோட பதிலிருத்தாள் சூர்யா.."இல்ல இல்ல… சூர்யா… உனக்கு அண்ட வீட்டு செண்பகம் மகன் கைலாஷ் படிக்கிறானே அந்த காலேஜில இருந்து கடுதாசி வந்திச்சி. அப்ப உங்க வீட்ல யாருமே இல்ல. வந்தவன் புது போஸ்ட்மேன். எங்கிட்ட வந்து தான் விலாசம் விசாரிச்சான். நான்தான் கடுதாசியை வாங்கின. ஆனா… எம் பேத்தி படிக்காத படிப்பு, நீ படிக்கக்கூடாதுன்னு நெனச்சி அந்தா இருக்கு பாரு வெத்தல பொட்டி. அதுல மடிச்சி வச்சிட்டேன்மா… என் கெட்ட புத்திக்கு ஆண்டவன் எனக்குச் சரியான தண்டனை கொடுத்துட்டான். எம் பேத்தியும், மவளும் எப்படிப்பட்டவங்கன்னு இப்பல்ல புரியுது. மன்னிச்சிரு தாயி… மன்னிச்சிரு" எனக் கூறியபடியே வெற்றிலை பெட்டியில் இருந்த கலந்தாய்வுக்கான கடிதத்தை எடுத்து சூர்யாவிடம் நீட்டினாள் முனிகாந்தம்மாள்..பக்கத்துப் பள்ளியில் இருந்து….வருந்தி அழைத்தாலும் வராதன வாராபொருந்துவன போமின் என்றால் போகாபொருந்துவன போமின் என்றால் போகாபொருந்துவன போமின் என்றால் போகா…என ஒலித்துக்கொண்டே இருந்தது.