வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க….வெள்ளரிக்காய் கிச்சடி.தேவை: வெள்ளரிக்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 5, சீரகம் – 1 ஸ்பூன், கெட்டித் தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவி பச்சை மிளகாய், சீரகம் இவற்றைச் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். புளிப்பில்லாத கெட்டித் தயிரில் அரைத்த விழுதைச் சேர்த்து வேக வைத்த வெள்ளரியையும் கலந்து அடுப்பில் வைக்க வேண்டும். அடுப்பில் வைத்த கலவையை அதிகமாகக் கொதிக்க விடாமல் பொங்கி வந்தவுடன் இறக்கி விட வேண்டும். தேவையானால் கடுகு தாளிக்கலாம்..————————–.பாகற்காய் கிச்சடி.தேவை: பாகற்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 5, புளித்த தயிர் – 1, உப்பு – தேவையான அளவு..செய்முறை: பாகற்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி விதைகளை எடுத்து விட வேண்டும். பாகற்காய்த் துண்டுகளை வெறும் வாணலியில் பத்து நிமிடம் வறுத்து எடுக்க வேண்டும். சிறிது எண்ணெய்விட்டு பாகற்காயை மேலும் ஐந்து நிமிடம் வறுக்க வேண்டும். தேங்காயைத் துருவிப் பச்சை மிளகாயோடு சேர்த்துக் கெட்டியாக அரைத்துத் தயிரோடு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் வறுத்து பாகற்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்தவுடன் இறக்க வேண்டும். தேவையானால் கடுகு தாளிக்கலாம்..————————–.உருளைக்கிழங்குப் பச்சடி.தேவை: உருளைக்கிழங்கு – 300 கிராம், எலுமிச்சை – 1, பச்சை மிளகாய் – 6, இஞ்சி – 1 துண்டு, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக்கி வேக வைத்து எடுக்க வேண்டும். தயிரில் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கோடு கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றைத் தாளித்து தயாரித்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும்..————————–.நெல்லிக்காய்ப் பச்சடி.தேவை: நாட்டு நெல்லிக்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 6, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: நெல்லிக்காயைத் தண்ணீர் விட்டு வேகவைத்து கொட்டையை எடுத்து விட வேண்டும். தேங்காயைத் துருவிப் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்த நெல்லிக்காயோடு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுத்து தயிரோடு கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கும் சமயத்தில் கடுகு தாளிக்கலாம்.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.————————–.வடகறி.வடகறி – சென்னையில் பிரபலமான ஒரு உணவாகும். இதனை இப்படி செய்தால் இன்னும் அசத்தலாக இருக்கும்..வடகறி (வடைகறி) சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப் பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடகறியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..தேவை: கடலைப்பருப்பு – 1 கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டுப்பல் – 1, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – கால் லிட்டர், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், லவங்கம் – 5, பட்டை – 1 துண்டு, பிரிஞ்சி இலை – 1, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, புதினா – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், தேங்காய் – 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 3, கசகசா – 1/2 ஸ்பூன்..செய்முறை: வடகறி செய்வதற்கு ஒரு கப் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 1 சின்ன வெங்காயம், 1 பல் பூண்டு, 2 காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் ஊறவைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரை முற்றிலுமாக வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். அதனை மசால் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும்..நன்றாக வெந்து ஓரளவு பொன்னிறமாக ஆனதும் எண்ணையை வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு, 5 லவங்கம், 1 துண்டு பட்டை, 1 பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாகிப் பொறித்து, 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்._.வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். அதனுடன் 1 பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மல்லித்தூள், மற்றும் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்..நன்றாக கொதித்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள வடைகளை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் துருவிய தேங்காய் 3 முந்திரி பருப்பு மற்றும் 1/2 ஸ்பூன் கசகசா சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதை வடகறியுடன் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விடவும். சுவையான வடகறி தயாராகிவிடும்.– கவிதாபாலாஜிகணேஷ், சிதம்பரம்.
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க….வெள்ளரிக்காய் கிச்சடி.தேவை: வெள்ளரிக்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 5, சீரகம் – 1 ஸ்பூன், கெட்டித் தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவி பச்சை மிளகாய், சீரகம் இவற்றைச் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். புளிப்பில்லாத கெட்டித் தயிரில் அரைத்த விழுதைச் சேர்த்து வேக வைத்த வெள்ளரியையும் கலந்து அடுப்பில் வைக்க வேண்டும். அடுப்பில் வைத்த கலவையை அதிகமாகக் கொதிக்க விடாமல் பொங்கி வந்தவுடன் இறக்கி விட வேண்டும். தேவையானால் கடுகு தாளிக்கலாம்..————————–.பாகற்காய் கிச்சடி.தேவை: பாகற்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 5, புளித்த தயிர் – 1, உப்பு – தேவையான அளவு..செய்முறை: பாகற்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி விதைகளை எடுத்து விட வேண்டும். பாகற்காய்த் துண்டுகளை வெறும் வாணலியில் பத்து நிமிடம் வறுத்து எடுக்க வேண்டும். சிறிது எண்ணெய்விட்டு பாகற்காயை மேலும் ஐந்து நிமிடம் வறுக்க வேண்டும். தேங்காயைத் துருவிப் பச்சை மிளகாயோடு சேர்த்துக் கெட்டியாக அரைத்துத் தயிரோடு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் வறுத்து பாகற்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்தவுடன் இறக்க வேண்டும். தேவையானால் கடுகு தாளிக்கலாம்..————————–.உருளைக்கிழங்குப் பச்சடி.தேவை: உருளைக்கிழங்கு – 300 கிராம், எலுமிச்சை – 1, பச்சை மிளகாய் – 6, இஞ்சி – 1 துண்டு, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக்கி வேக வைத்து எடுக்க வேண்டும். தயிரில் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கோடு கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றைத் தாளித்து தயாரித்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும்..————————–.நெல்லிக்காய்ப் பச்சடி.தேவை: நாட்டு நெல்லிக்காய் – 250 கிராம், தேங்காய் – 1 மூடி, பச்சை மிளகாய் – 6, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு..செய்முறை: நெல்லிக்காயைத் தண்ணீர் விட்டு வேகவைத்து கொட்டையை எடுத்து விட வேண்டும். தேங்காயைத் துருவிப் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்த நெல்லிக்காயோடு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுத்து தயிரோடு கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கும் சமயத்தில் கடுகு தாளிக்கலாம்.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.————————–.வடகறி.வடகறி – சென்னையில் பிரபலமான ஒரு உணவாகும். இதனை இப்படி செய்தால் இன்னும் அசத்தலாக இருக்கும்..வடகறி (வடைகறி) சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப் பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடகறியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..தேவை: கடலைப்பருப்பு – 1 கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டுப்பல் – 1, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – கால் லிட்டர், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், லவங்கம் – 5, பட்டை – 1 துண்டு, பிரிஞ்சி இலை – 1, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, புதினா – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், தேங்காய் – 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 3, கசகசா – 1/2 ஸ்பூன்..செய்முறை: வடகறி செய்வதற்கு ஒரு கப் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 1 சின்ன வெங்காயம், 1 பல் பூண்டு, 2 காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் ஊறவைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரை முற்றிலுமாக வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். அதனை மசால் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு கொள்ளவும்..நன்றாக வெந்து ஓரளவு பொன்னிறமாக ஆனதும் எண்ணையை வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு, 5 லவங்கம், 1 துண்டு பட்டை, 1 பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாகிப் பொறித்து, 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்._.வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். அதனுடன் 1 பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மல்லித்தூள், மற்றும் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்..நன்றாக கொதித்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள வடைகளை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் துருவிய தேங்காய் 3 முந்திரி பருப்பு மற்றும் 1/2 ஸ்பூன் கசகசா சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதை வடகறியுடன் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விடவும். சுவையான வடகறி தயாராகிவிடும்.– கவிதாபாலாஜிகணேஷ், சிதம்பரம்.