-தனுஜா ஜெயராமன்.ஓவியம்: பிரபுராம்.நள்ளிரவு பனிரெண்டு மணி. திடீரென விழிப்பு வந்துவிட்டது க்ருத்திகாவிற்கு. சுவர் கடிகாரம் 'ட்டொயிங் என சத்தத்துடன் வேகமாக அடித்தது… அதை தொடர்ந்த 'டிக் டிக் என்ற ஓசை அந்த நள்ளிரவு மயான அமைதியை கிழித்தபடி தெளிவாகக் கேட்க பூனை ஒன்று 'மியாவ்' என்ற சத்தத்துடன் எதையோ உருட்டியபடி ஓடியது. கும்மிருட்டில் அதன் பளபளக்கும் விழியில் எதையோ கண்டு பயந்து ஓடியது தெளிவாகத் தெரிந்தது..கட்டிலில் கையைத் துழாவி பக்கத்தில் ஷ்யாமை தேடினாள். வெறுமையாக இருந்தது. வழக்கமாக அவன் இந்நேரம் வந்துவிடுபவன். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் சத்தமில்லாமல் கதவைத் திறந்து அமைதியாக வந்து படுத்துவிடுவான். இன்று மாலை ஏதோ பார்ட்டி என போன் செய்தான். இன்னும் வரவில்லை போல என நினைத்துக்கொண்டாள். ஜன்னல் கதவுகள் வேறு காற்றில் 'படீர் படீரென' அடிக்கத் தொடங்கியது. அது அணிந்திருந்த திரைசீலைகளும் காற்றில் பறந்து பயம் காட்டியது ..க்ருத்திகா பயத்துடன் கட்டிலிலிருந்து இறங்கி, ஜன்னல் கொக்கியை இழுத்து சாத்தினாள். படீரென மின்னல் ஒன்று சர சரவென சாரைபாம்பு போல வானத்திலிருந்து இறங்கியபடி மின்னி மறைவது ஜன்னல் கண்ணாடியில் தெரிந்தது. அதை தொடர்ந்து 'டமால்' என்ற பலத்த இடியோசை காதை கிழிக்க 'சோ' என பொழியும் மழை படபடவென ஜன்னல் கண்ணாடியில் தெறித்து பீதியைக் கூட்டியது..பயந்து போனவளாக கட்டிலில் வந்து அமர்ந்தாள். மதியானம் டி.வி. யில் பார்த்த பேய்படம் நினைவில் வந்துபோனது. திடீரென வெளியே யாரோ பெண்குரல் ஒன்று பயங்கரமாகச் சிரிக்கும் சத்தம் ஈரக்குலை நடுங்க பயத்தில் உலர்ந்து போனாள்..சற்று நேரம் அமைதி தவழ மறுபடியும் ஏதோ பேச்சுக்குரல். அதை தொடர்ந்து கரகரத்த ஆண்குரல் கர்ஜித்தது. க்ருத்திகாவிற்கு சர்வ நாடியும் ஒடுங்கி போனது. வெளியே சென்று பார்க்கலாமா என தோன்றிய சிந்தனையைக் கைவிட்டாள்..இப்போது மறுபடியும் ஏதேதோ பல குரல்களின் பேச்சு சத்தம் மாறி மாறி கேட்டது… அவள் மனது துடிக்கும் லப் டப் ஓசை அவளுக்கே கேட்டது. "காக்க காக்க கனகவேல் காக்க" என கந்தர் சஷ்டி கவசத்தை நடுக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்..சற்று பயம் குறைந்தது போல தோன்ற தைரியத்தை வரவழைத்துகொண்டு கதவைத் திறந்து மெதுவாக படிகளில் இறங்கி கீழே ஹாலுக்கு வந்தாள். கீழே அவள் கண்ட காட்சி அவளுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. அவன் சோபாவில் படுத்து உருண்டபடி உளறிக்கொண்டிருந்தான். குடியின் தாக்கம் அவனை நிதானமிழக்கச் செய்திருந்தது..டி.வி. ரிமோட்டை அவன் கைகளிலிருந்து பிடுங்கி டி.வி.யை ஆப் செய்து கோபமாக வீசிவிட்டு… இரு கைகளால் அவனை மொத்தத் தொடங்கினாள்.
-தனுஜா ஜெயராமன்.ஓவியம்: பிரபுராம்.நள்ளிரவு பனிரெண்டு மணி. திடீரென விழிப்பு வந்துவிட்டது க்ருத்திகாவிற்கு. சுவர் கடிகாரம் 'ட்டொயிங் என சத்தத்துடன் வேகமாக அடித்தது… அதை தொடர்ந்த 'டிக் டிக் என்ற ஓசை அந்த நள்ளிரவு மயான அமைதியை கிழித்தபடி தெளிவாகக் கேட்க பூனை ஒன்று 'மியாவ்' என்ற சத்தத்துடன் எதையோ உருட்டியபடி ஓடியது. கும்மிருட்டில் அதன் பளபளக்கும் விழியில் எதையோ கண்டு பயந்து ஓடியது தெளிவாகத் தெரிந்தது..கட்டிலில் கையைத் துழாவி பக்கத்தில் ஷ்யாமை தேடினாள். வெறுமையாக இருந்தது. வழக்கமாக அவன் இந்நேரம் வந்துவிடுபவன். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் சத்தமில்லாமல் கதவைத் திறந்து அமைதியாக வந்து படுத்துவிடுவான். இன்று மாலை ஏதோ பார்ட்டி என போன் செய்தான். இன்னும் வரவில்லை போல என நினைத்துக்கொண்டாள். ஜன்னல் கதவுகள் வேறு காற்றில் 'படீர் படீரென' அடிக்கத் தொடங்கியது. அது அணிந்திருந்த திரைசீலைகளும் காற்றில் பறந்து பயம் காட்டியது ..க்ருத்திகா பயத்துடன் கட்டிலிலிருந்து இறங்கி, ஜன்னல் கொக்கியை இழுத்து சாத்தினாள். படீரென மின்னல் ஒன்று சர சரவென சாரைபாம்பு போல வானத்திலிருந்து இறங்கியபடி மின்னி மறைவது ஜன்னல் கண்ணாடியில் தெரிந்தது. அதை தொடர்ந்து 'டமால்' என்ற பலத்த இடியோசை காதை கிழிக்க 'சோ' என பொழியும் மழை படபடவென ஜன்னல் கண்ணாடியில் தெறித்து பீதியைக் கூட்டியது..பயந்து போனவளாக கட்டிலில் வந்து அமர்ந்தாள். மதியானம் டி.வி. யில் பார்த்த பேய்படம் நினைவில் வந்துபோனது. திடீரென வெளியே யாரோ பெண்குரல் ஒன்று பயங்கரமாகச் சிரிக்கும் சத்தம் ஈரக்குலை நடுங்க பயத்தில் உலர்ந்து போனாள்..சற்று நேரம் அமைதி தவழ மறுபடியும் ஏதோ பேச்சுக்குரல். அதை தொடர்ந்து கரகரத்த ஆண்குரல் கர்ஜித்தது. க்ருத்திகாவிற்கு சர்வ நாடியும் ஒடுங்கி போனது. வெளியே சென்று பார்க்கலாமா என தோன்றிய சிந்தனையைக் கைவிட்டாள்..இப்போது மறுபடியும் ஏதேதோ பல குரல்களின் பேச்சு சத்தம் மாறி மாறி கேட்டது… அவள் மனது துடிக்கும் லப் டப் ஓசை அவளுக்கே கேட்டது. "காக்க காக்க கனகவேல் காக்க" என கந்தர் சஷ்டி கவசத்தை நடுக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்..சற்று பயம் குறைந்தது போல தோன்ற தைரியத்தை வரவழைத்துகொண்டு கதவைத் திறந்து மெதுவாக படிகளில் இறங்கி கீழே ஹாலுக்கு வந்தாள். கீழே அவள் கண்ட காட்சி அவளுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. அவன் சோபாவில் படுத்து உருண்டபடி உளறிக்கொண்டிருந்தான். குடியின் தாக்கம் அவனை நிதானமிழக்கச் செய்திருந்தது..டி.வி. ரிமோட்டை அவன் கைகளிலிருந்து பிடுங்கி டி.வி.யை ஆப் செய்து கோபமாக வீசிவிட்டு… இரு கைகளால் அவனை மொத்தத் தொடங்கினாள்.