நாடக விமரிசனம்.ரசித்து எழுதியிருப்பவர் : பத்மினி பட்டாபிராமன்.ஓரு மாபெரும் காப்பியத்தின் காட்சிகள் மேடையில் அரங்கேறும்போது நாமும் அதன் ஒரு அங்கமாக மாறி அங்கேயே இருப்பது போன்ற உணர்வைத் தந்த விதத்தில் தாரிணி கோமல் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறார்..முதல் காட்சியில் திரௌபதி கோயில், அடுத்து திரௌபதியின் தந்தை துருபதன் நடத்தும் யாகத்திலிருந்து திரௌபதி சக்தியின் வடிவமாகத் தோன்றுவது என்று, யாக நெருப்பு எரியும் தந்திரக் காட்சிகளும், பின்னணித் திரையில் LED Projection மூலம் கோயில், யாகசாலை இவற்றை முப்பரிமாண அமைப்பில் கொண்டுவந்திருப்பதும் ஆரம்பத்திலேயே பிரமிப்பைத் தருகின்றன. அது இறுதிக் காட்சி வரை அடங்கவில்லை என்பது நிஜம்..திரௌபதி எப்படி இருந்திருப்பாள் என்று நம் கண் முன்னே வாழ்ந்து காட்டுகிற கிருத்திகா சுர்ஜித் அவர்கள், ஒவ்வொரு காட்சியிலும், கவிதை நடை வசனங்களைப் பாவத்தோடு, உணர்ச்சியோடு. சொல்வதில், நடிப்பதில், இவருக்கு இனி யாரும் ஈடு செய்ய முடியாத உச்சத்தைத் தொட்டுவிட்டார். இவர் நடனக் கலைஞரும் இனிய நட்புக்கு இலக்கணமாக இருப்பவருமான ராதிகா சுர்ஜித் அவர்களின் புதல்வி..ஒரு பெண் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறாள், பகடைக்காய் ஆக்கப்படுகிறாள், பின்னர் தர்மத்தை எப்படி நிலை நாட்டுகிறாள் என்பதை எல்லாம் திரௌபதி பாத்திரம் மூலம் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார் தாரிணி..முதல் காட்சியிலேயே ஒரு நாட்டிய நாடகம்.. அதில் சுழன்றாடும் நடனக் கலைஞர் ஆடி முடித்ததும் நரபலி (அரவானாக ஒரு Life size Effigy) கொடுத்தல் என ஆரம்பமே அசத்தல்..அக்கினி புத்ரியாகப் பிறந்த திரௌபதி, அரண்மனையில் ஆடல் பாடல், வாள்வீச்சு என ஆயகலைகள் அனைத்தும் கற்று, அழகே வடிவாக வளர்ந்திருக்கிறாள். ஆடம்பரமான துருபதன் அரண்மனைப் பின்னணியில் கிருத்திகாவின் ஆடல், பாடல், வாள் சண்டை பிரமாதம்..பகவான் கிருஷ்ணர் சொன்னபடி, திரெளபதியின் சுயம்வரத்திற்கும், வில் வித்தை போட்டிக்கும் அவளது அண்ணன் திருஷ்டியத்தும்மனும் தந்தையும் ஏற்பாடு செய்கிறார்கள். அவளைத் தன் தோழியாகப் பாவிக்கும் கிருஷ்ணரை தன் மூச்சிலே, உயிரிலே கலந்த தெய்வமாகப் போற்றுபவள் திரௌபதி..சுயம்வரம், அதில் நடக்கும் போட்டி,யில் பங்கேற்க துரியோதன் துச்சாதனன், கர்ணன், மற்ற தேசத்து அரசர்கள் வருகிறார்கள். அந்தணர்களாக வேடமிட்டு பாண்டவர்களும் வருகிறார்கள். எல்லோருடைய ஆடை, ஆபரணங்கள் வெகு நேர்த்தி. யாராலும் வில்லில் நாணேற்றி வெல்ல முடியவில்லை. அங்க தேசத்து அரசனான கர்ணனும் போட்டியிட முயற்சிக்க, பிறப்பால் அரசராக இருப்பவர்கள் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று திரௌபதி தடுக்க, அவனது கோபத்துக்கு ஆளாகிறாள்..அம்பு எய்யும் போட்டியில் அர்ஜுனன் (போட்டிக்கான செட் அருமை) வென்று, சகோதரர்களுடன் திரெளபதியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். வேலையாக இருக்கும் தாய் குந்தி தேவி, கவனிக்காமல் சொல்லும் ஒரு வார்த்தை அவளை ஐந்து பேருக்கும் மனைவியாக்குகிறது. அப்போது திரௌபதி, குந்தி மற்றும் அர்ஜுனன் பேசும் வசனங்கள், பெண்மையின் உயர்வுக்கு இலக்கணம். தன் தெய்வம் கண்ணனிடமும் முறையிடுகிறாள் திரெளபதி..பஞ்சபூதங்களின் சக்தியாக, துணிவு மிக்க பெண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கப் போவதாக சமாதானம் செய்கிறான் கண்ணன். இந்த காட்சிகளில் எல்லாம் கவிதை நடையில் வசனங்களைப் அற்புதமாக எழுதியிருக்கிறார் திரு.சதீஷ் குமார். அவருக்குத் தனி பாராட்டுகள்..ராஜ்குமார் பாரதியின் பின்னணி இசையும், பாடலும், பின்னணியில் ஒலிக்கும் இளங்கோ குமணன் குரல் இவையெல்லாம் நம்மைக் காலம் கடந்த உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன..அனந்து, வசுதா ரவி சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வசனங்கள், மற்றும் இசைக்கவி ரமணனின் குரலில் காலத்தின் நிகழ்வுகள் என எல்லாமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன..ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக அரசாள்வதைப் பொறுக்காத துரியோதனன், மாமா சகுனி சொல் கேட்டு பாண்டவர்களைத் தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து சூதாட வைக்கிறான்..எல்லோரும் அறிந்த கதை என்றாலும், ஒவ்வொரு முறை யுதிஷ்ட்ரர் தோற்கும்போதும் துரியோதனன் உள்ளிட்ட அனைவரும் கெக்கலி காட்டி அட்டகாசமாகச் சிரிப்பதும், இறுதியில் பாஞ்சாலியையும் பந்தயம் வைத்து தோற்றபின் அவளை துச்சாதனன் இழுத்து வருவதும், அரங்கம் அதிர கைகள் தட்டப் படும் காட்சிகள்!.தலைகுனிந்து நிற்கும் பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் இவர்களிடம் நியாயம் கேட்கிறாள் பாஞ்சாலி. பாரதியாரின் வசனங்கள்.."பாண்டவர் மார்பிலேந்தும் சீரையுங் களைவாய்; தையல் சேலையுங் களைவாய்" என்னும் வரிகள் பதைபதைக்க வைக்கின்றன. மானபங்கப்படுத்த முயல்கையில், உயரத்திலிருந்து கிருஷ்ணர் ஆடை கொடுப்பதும், திறமையாக அமைக்கப்பட்ட தந்திரக் காட்சி..பாஞ்சாலியின் சபதம், போரில் பாண்டவர்கள் வெல்வது, அவள் சபதம் முடிப்பது, கிருஷ்ணரிடம் தன் பிறப்பு, வாழ்க்கை குறித்து அவள் ஆதங்கப்படுவது அதற்கு பகவான் அளிக்கும் பதில்கள் அனைத்துமே பாஞ்சாலிக்கு மட்டுமின்றி, பெண் குலத்துக்கே பெருமை சேர்ப்பவை..இனி நடிகர்களைப் பற்றி...திரௌபதி மட்டுமல்ல ஒவ்வொருவரும் தம் கதாபாத்திரத்தில் வாழ்கிறார்கள்..துரியோதனனாக வரும் விக்னேஷ் செல்லப்பன், அட்டகாசம். கேலி,கொதிப்பு,பொறாமை இவற்றைத் தன் உடல் மொழியாலும், குரல்வளத்தாலும் வெளிப்படுத்தி மேடையை ஆள்கிறார்..சகுனியாக நடித்த கண்ணன் ருத்ராபதியின் தலைசாய்த்த வஞ்சகப் பார்வை, கெந்தி நடக்கும் நடை துரியோதனனைத் தூண்டிவிட்டு நிற்பது, தருமரை சூதாட்டத்தில் வஞ்சகமாக வெல்வது என்று சகுனியை மறக்க முடியாமல் செய்து விடுகிறார்..கிருஷ்ணராக வரும் நடனக் கலைஞர் பாலகுருனாதன், ஜமாய்த்துவிட்டார். அந்தக் கால என். டி. ராமாராவை நினைவுபடுத்துவது போல் அருமையான உடல் பாவம், உச்சரிப்பு, நிதானம், மேக் அப் என்று பிரமாதம். இன்னும் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரர், துருபதன், அவர் மகன், கர்ணன், குந்தி எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து இயக்கிய தாரிணி கோமல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..எத்தனை கால உழைப்பு, திட்டமிடுதல் இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும்!
நாடக விமரிசனம்.ரசித்து எழுதியிருப்பவர் : பத்மினி பட்டாபிராமன்.ஓரு மாபெரும் காப்பியத்தின் காட்சிகள் மேடையில் அரங்கேறும்போது நாமும் அதன் ஒரு அங்கமாக மாறி அங்கேயே இருப்பது போன்ற உணர்வைத் தந்த விதத்தில் தாரிணி கோமல் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறார்..முதல் காட்சியில் திரௌபதி கோயில், அடுத்து திரௌபதியின் தந்தை துருபதன் நடத்தும் யாகத்திலிருந்து திரௌபதி சக்தியின் வடிவமாகத் தோன்றுவது என்று, யாக நெருப்பு எரியும் தந்திரக் காட்சிகளும், பின்னணித் திரையில் LED Projection மூலம் கோயில், யாகசாலை இவற்றை முப்பரிமாண அமைப்பில் கொண்டுவந்திருப்பதும் ஆரம்பத்திலேயே பிரமிப்பைத் தருகின்றன. அது இறுதிக் காட்சி வரை அடங்கவில்லை என்பது நிஜம்..திரௌபதி எப்படி இருந்திருப்பாள் என்று நம் கண் முன்னே வாழ்ந்து காட்டுகிற கிருத்திகா சுர்ஜித் அவர்கள், ஒவ்வொரு காட்சியிலும், கவிதை நடை வசனங்களைப் பாவத்தோடு, உணர்ச்சியோடு. சொல்வதில், நடிப்பதில், இவருக்கு இனி யாரும் ஈடு செய்ய முடியாத உச்சத்தைத் தொட்டுவிட்டார். இவர் நடனக் கலைஞரும் இனிய நட்புக்கு இலக்கணமாக இருப்பவருமான ராதிகா சுர்ஜித் அவர்களின் புதல்வி..ஒரு பெண் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறாள், பகடைக்காய் ஆக்கப்படுகிறாள், பின்னர் தர்மத்தை எப்படி நிலை நாட்டுகிறாள் என்பதை எல்லாம் திரௌபதி பாத்திரம் மூலம் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார் தாரிணி..முதல் காட்சியிலேயே ஒரு நாட்டிய நாடகம்.. அதில் சுழன்றாடும் நடனக் கலைஞர் ஆடி முடித்ததும் நரபலி (அரவானாக ஒரு Life size Effigy) கொடுத்தல் என ஆரம்பமே அசத்தல்..அக்கினி புத்ரியாகப் பிறந்த திரௌபதி, அரண்மனையில் ஆடல் பாடல், வாள்வீச்சு என ஆயகலைகள் அனைத்தும் கற்று, அழகே வடிவாக வளர்ந்திருக்கிறாள். ஆடம்பரமான துருபதன் அரண்மனைப் பின்னணியில் கிருத்திகாவின் ஆடல், பாடல், வாள் சண்டை பிரமாதம்..பகவான் கிருஷ்ணர் சொன்னபடி, திரெளபதியின் சுயம்வரத்திற்கும், வில் வித்தை போட்டிக்கும் அவளது அண்ணன் திருஷ்டியத்தும்மனும் தந்தையும் ஏற்பாடு செய்கிறார்கள். அவளைத் தன் தோழியாகப் பாவிக்கும் கிருஷ்ணரை தன் மூச்சிலே, உயிரிலே கலந்த தெய்வமாகப் போற்றுபவள் திரௌபதி..சுயம்வரம், அதில் நடக்கும் போட்டி,யில் பங்கேற்க துரியோதன் துச்சாதனன், கர்ணன், மற்ற தேசத்து அரசர்கள் வருகிறார்கள். அந்தணர்களாக வேடமிட்டு பாண்டவர்களும் வருகிறார்கள். எல்லோருடைய ஆடை, ஆபரணங்கள் வெகு நேர்த்தி. யாராலும் வில்லில் நாணேற்றி வெல்ல முடியவில்லை. அங்க தேசத்து அரசனான கர்ணனும் போட்டியிட முயற்சிக்க, பிறப்பால் அரசராக இருப்பவர்கள் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று திரௌபதி தடுக்க, அவனது கோபத்துக்கு ஆளாகிறாள்..அம்பு எய்யும் போட்டியில் அர்ஜுனன் (போட்டிக்கான செட் அருமை) வென்று, சகோதரர்களுடன் திரெளபதியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். வேலையாக இருக்கும் தாய் குந்தி தேவி, கவனிக்காமல் சொல்லும் ஒரு வார்த்தை அவளை ஐந்து பேருக்கும் மனைவியாக்குகிறது. அப்போது திரௌபதி, குந்தி மற்றும் அர்ஜுனன் பேசும் வசனங்கள், பெண்மையின் உயர்வுக்கு இலக்கணம். தன் தெய்வம் கண்ணனிடமும் முறையிடுகிறாள் திரெளபதி..பஞ்சபூதங்களின் சக்தியாக, துணிவு மிக்க பெண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கப் போவதாக சமாதானம் செய்கிறான் கண்ணன். இந்த காட்சிகளில் எல்லாம் கவிதை நடையில் வசனங்களைப் அற்புதமாக எழுதியிருக்கிறார் திரு.சதீஷ் குமார். அவருக்குத் தனி பாராட்டுகள்..ராஜ்குமார் பாரதியின் பின்னணி இசையும், பாடலும், பின்னணியில் ஒலிக்கும் இளங்கோ குமணன் குரல் இவையெல்லாம் நம்மைக் காலம் கடந்த உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன..அனந்து, வசுதா ரவி சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வசனங்கள், மற்றும் இசைக்கவி ரமணனின் குரலில் காலத்தின் நிகழ்வுகள் என எல்லாமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன..ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக அரசாள்வதைப் பொறுக்காத துரியோதனன், மாமா சகுனி சொல் கேட்டு பாண்டவர்களைத் தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து சூதாட வைக்கிறான்..எல்லோரும் அறிந்த கதை என்றாலும், ஒவ்வொரு முறை யுதிஷ்ட்ரர் தோற்கும்போதும் துரியோதனன் உள்ளிட்ட அனைவரும் கெக்கலி காட்டி அட்டகாசமாகச் சிரிப்பதும், இறுதியில் பாஞ்சாலியையும் பந்தயம் வைத்து தோற்றபின் அவளை துச்சாதனன் இழுத்து வருவதும், அரங்கம் அதிர கைகள் தட்டப் படும் காட்சிகள்!.தலைகுனிந்து நிற்கும் பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் இவர்களிடம் நியாயம் கேட்கிறாள் பாஞ்சாலி. பாரதியாரின் வசனங்கள்.."பாண்டவர் மார்பிலேந்தும் சீரையுங் களைவாய்; தையல் சேலையுங் களைவாய்" என்னும் வரிகள் பதைபதைக்க வைக்கின்றன. மானபங்கப்படுத்த முயல்கையில், உயரத்திலிருந்து கிருஷ்ணர் ஆடை கொடுப்பதும், திறமையாக அமைக்கப்பட்ட தந்திரக் காட்சி..பாஞ்சாலியின் சபதம், போரில் பாண்டவர்கள் வெல்வது, அவள் சபதம் முடிப்பது, கிருஷ்ணரிடம் தன் பிறப்பு, வாழ்க்கை குறித்து அவள் ஆதங்கப்படுவது அதற்கு பகவான் அளிக்கும் பதில்கள் அனைத்துமே பாஞ்சாலிக்கு மட்டுமின்றி, பெண் குலத்துக்கே பெருமை சேர்ப்பவை..இனி நடிகர்களைப் பற்றி...திரௌபதி மட்டுமல்ல ஒவ்வொருவரும் தம் கதாபாத்திரத்தில் வாழ்கிறார்கள்..துரியோதனனாக வரும் விக்னேஷ் செல்லப்பன், அட்டகாசம். கேலி,கொதிப்பு,பொறாமை இவற்றைத் தன் உடல் மொழியாலும், குரல்வளத்தாலும் வெளிப்படுத்தி மேடையை ஆள்கிறார்..சகுனியாக நடித்த கண்ணன் ருத்ராபதியின் தலைசாய்த்த வஞ்சகப் பார்வை, கெந்தி நடக்கும் நடை துரியோதனனைத் தூண்டிவிட்டு நிற்பது, தருமரை சூதாட்டத்தில் வஞ்சகமாக வெல்வது என்று சகுனியை மறக்க முடியாமல் செய்து விடுகிறார்..கிருஷ்ணராக வரும் நடனக் கலைஞர் பாலகுருனாதன், ஜமாய்த்துவிட்டார். அந்தக் கால என். டி. ராமாராவை நினைவுபடுத்துவது போல் அருமையான உடல் பாவம், உச்சரிப்பு, நிதானம், மேக் அப் என்று பிரமாதம். இன்னும் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரர், துருபதன், அவர் மகன், கர்ணன், குந்தி எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து இயக்கிய தாரிணி கோமல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..எத்தனை கால உழைப்பு, திட்டமிடுதல் இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும்!