கவிதைத் துறல்!

கவிதைத் துறல்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– பவானி, திருச்சி

 சிறப்பு

மெளன அஞ்சலி செலுத்த
ஊரே
திரண்டு வந்தால்
இறப்பும் பெறுகிறது
சிறப்பு.
…………………………………………………

 வாழ்க்கை

இழப்பதற்கு
ஒன்றும் இல்லை
என்றான பிறகுதான்
பலருக்குப் புரிகிறது
வாழ்க்கையின்
அர்த்தம்.
…………………………………………………

வீராப்பு

ட்டுப் புடைவையோ
பருத்தி ஆடையோ
குறுக்கே
எதை வைத்தாலும்
வெட்டுவேன்
வீராப்பு காட்டுகிறது
கத்தரிக்கோல்.
…………………………………………………

வில்லன்

ணம்
கதாநாயகன் ஆகியதும்
வில்லன் பாத்திரம்
ஏற்கிறது
குணம்.
…………………………………………………

குணம்

றுவது சினம்
ஆறாதது மன ரணம்
ஆறறிவு கொண்டு
ஆராய்வது
குணம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com