வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.முள்ளங்கி ஊறுகாய்.தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: கடுகைப் பொடி செய்து, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியடன் கலக்கவேண்டும். முள்ளங்கியுடன் உப்பைச் சேர்த்து சில மணி நேரம் வைக்கவேண்டும். பிறகு தண்ணீரைப் பிழிந்து எடுத்துவிட்டு பொடிகளுடன் நன்றாய் கலந்து எண்ணெய் விட்டு ஜாடியில் போடவேண்டும். கெட்டியாக மூடி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும்..—————————–.மிளகாய் ஊறுகாய்.தேவை: நீள மிளகாய்கள் – 200 கிராம், சுக்குப் பொடி – 50 கிராம், மாங்காய்ப்பொடி – 100 கிராம், எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையானது..செய்முறை: ஒரு அங்குலத் துண்டுகளாக மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சுக்குப் பொடி, மாங்காய்ப் பொடி, உப்பு முதலியவற்றைப் போட்டு மிளகாய்த் துண்டுகளையும் போட்டு மெதுவான தீயில் வதக்க வேண்டும். நன்றாக வதங்கி மிருதுவானபின் இறக்கி ஜாடியில் போட்டு மூடி வைக்கவேண்டும்..—————————–.தூதுவளைக் கீரைத் துவையல்.தேவை: தூதுவளைக் கீரை – 100 கிராம், மிளகாய் வற்றல் – 4, பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், பூண்டு – 2 பல், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், புளி – ஒரு சிறு உருண்டை, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், உளுத்தம் ப:ருப்பு, பெருங்காயம், பூண்டு, சுத்தம் செய்த தூதுவளைக் கீரை, புளி இவற்றுடன் உப்பும், சேர்த்து வதக்கிய பின்பு அரைக்கவேண்டும்..—————————–.பீட்ரூட் துவையல்.தேவை: பீட்ரூட் –1, உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன், பூண்டு –4 பல், தேங்காய் –3 கீற்று, புளி – ஒரு சிறு உருண்டை, மிளகாய் வற்றல் –5, கறிவேப்பிலை- சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய், பீட்ரூட், பூண்டு, கறிவேப்பிலை, புளி,உப்பு சேர்த்து வதக்கிய பிறகு அரைக்க வேண்டும்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.முள்ளங்கி ஊறுகாய்.தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: கடுகைப் பொடி செய்து, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியடன் கலக்கவேண்டும். முள்ளங்கியுடன் உப்பைச் சேர்த்து சில மணி நேரம் வைக்கவேண்டும். பிறகு தண்ணீரைப் பிழிந்து எடுத்துவிட்டு பொடிகளுடன் நன்றாய் கலந்து எண்ணெய் விட்டு ஜாடியில் போடவேண்டும். கெட்டியாக மூடி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும்..—————————–.மிளகாய் ஊறுகாய்.தேவை: நீள மிளகாய்கள் – 200 கிராம், சுக்குப் பொடி – 50 கிராம், மாங்காய்ப்பொடி – 100 கிராம், எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையானது..செய்முறை: ஒரு அங்குலத் துண்டுகளாக மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சுக்குப் பொடி, மாங்காய்ப் பொடி, உப்பு முதலியவற்றைப் போட்டு மிளகாய்த் துண்டுகளையும் போட்டு மெதுவான தீயில் வதக்க வேண்டும். நன்றாக வதங்கி மிருதுவானபின் இறக்கி ஜாடியில் போட்டு மூடி வைக்கவேண்டும்..—————————–.தூதுவளைக் கீரைத் துவையல்.தேவை: தூதுவளைக் கீரை – 100 கிராம், மிளகாய் வற்றல் – 4, பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், பூண்டு – 2 பல், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், புளி – ஒரு சிறு உருண்டை, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், உளுத்தம் ப:ருப்பு, பெருங்காயம், பூண்டு, சுத்தம் செய்த தூதுவளைக் கீரை, புளி இவற்றுடன் உப்பும், சேர்த்து வதக்கிய பின்பு அரைக்கவேண்டும்..—————————–.பீட்ரூட் துவையல்.தேவை: பீட்ரூட் –1, உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன், பூண்டு –4 பல், தேங்காய் –3 கீற்று, புளி – ஒரு சிறு உருண்டை, மிளகாய் வற்றல் –5, கறிவேப்பிலை- சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய், பீட்ரூட், பூண்டு, கறிவேப்பிலை, புளி,உப்பு சேர்த்து வதக்கிய பிறகு அரைக்க வேண்டும்.