தனி மனித நிதி மேலாண்மை!

தனி மனித நிதி மேலாண்மை!
Published on
முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

னி மனித நிதி மேலாண்மை என்பது ஒரு தனி மனிதனின் நிதி நிலைமையை வளமாக்குவது. எவ்வாறு நாட்டுக்கு நிதி அமைச்சர், அரசாங்கத்தின் திட்டங்களுக்கு, எதிர்காலத்திற்கு நிதியை ஒதுக்கி, அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துகிறாரோ, அதைப் போலவே,வீட்டுக்கு நீங்கள்தான் நிதி அமைச்சர். வீட்டின் எதிர்காலக் குறிக்கோள்களுக்கு, எதிர்கால நிதி நிலைமைக்கு நீங்கள்தான் திட்டமிட வேண்டும்.

தனி மனித நிதியை மேம்படுத்த கெத்தான பத்து விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

  1. வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்: செலவுகளை வரவுக்குள் வைத்திருங்கள். உங்களுக்கு ஒரு பொருளை வாங்குவதற்கான பணம் இல்லையென்றால், சேமித்து வைத்துவிட்டு வாங்குங்கள். கடன் வாங்கி, பொருட்களை வாங்காதீர்கள்.
  2. அவசர கால நிதி (Emergency Fund) என்பது மிக மிக முக்கியம்: து பிறரிடம் கையேந்தாமல், கடன் வாங்காமல், எதிர்கால முதலீடுகளை பாதிக்காமல், அவசரத் தேவைகளை நீங்களே சமாளிப்பதற்கு உதவுவது. குறைந்தபட்சம் ரூபாய் 10,000ல் ஆரம்பித்து, உங்களுடைய மாத செலவைப்போல் 3 அல்லது, 6 அல்லது 12 மடங்குங்கள் வரை சேமித்து வைத்திருப்பது நலம். இதனை முதலீடு செய்ய வேண்டாம். அவசர காலத்தில் எடுக்குமாறு வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கப் படவேண்டும். அவசர கால நிதி பயன்படுத்தினால், மறுபடி பழைய நிலைக்கு கொண்டுவாருங்கள். அடுத்த அவசர காலத்திற்கு அது உதவும்.
  3. கடன் வேண்டவே வேண்டாம்; எந்த ஒரு வடிவத்திலும் கடன் வேண்டாம். கடன் என்பது மிகவும் அபாயகரமானது: டன் மூலம், வட்டி என்ற வகையில், பணம் வீணாகிறது. வீட்டுக்கடன், மேல் படிப்பிற்கான கடன், தொழிற்கடன் போன்றவை விதிவிலக்குகள். வீடு என்பது அத்தியாவசியமானத் தேவை. அரசும் வரிவிலக்கு அளிக்கிறது. மேல்படிப்பு, தொழிற்கடன் போன்றவை எதிர்காலத்தில் பணத்தைப் பெருக்கிக் கொடுக்கும். இவற்றையும்கூட எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அடைக்கப்பாருங்கள்.
  4. சேமிப்பு வேறு. முதலீடு வேறு: சேமிப்பு என்பது செலவு போக, வரவினை சேமித்து வைத்திருப்பது. பணவீக்க சமூகத்தில், சேமிப்பு என்பது போதாது. சேமித்த பணத்திலிருந்து முதலீடு செய்வது மிக முக்கியம்.
  5. மாத வருமானத்தில்: வ்வளவு தூரம் அதிகமாக சேமித்து, அதை முதலீடு செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் செய்யப்பாருங்கள். குறைந்தபட்சம் 10% முதல் 15% சேமித்து, முதலீடு செய்யப்பாருங்கள். உங்களுடைய செலவுகளைப் பட்டியலிட்டு, எவ்வாறு குறைப்பது, எவ்வாறு அதிகமாக சேமிப்பது என்று வழிமுறைகளை யோசியுங்கள். மாத வருவாயில் 75% முதலீடு செய்பவர்கள் கூட உள்ளனர்.
  6. காப்பீட்டுத் திட்டத்தை (Insurance) முதலீட்டுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்: காப்பீட்டுத் திட்டமென்பது, குடும்பத்தின் நிதி நிலைமையைக் காப்பது. முதலீடு என்பது குடும்பத்தின் நிதி நிலைமையைப் பெருக்குவது.

சேமிப்பு, முதலீடு, காப்பீடு என்றால் என்ன? இவற்றிற்கான வித்தியாசங்கள் என்ன? பயன்கள் என்ன? இதோ இக்கட்டுரை ஆசிரியர் வெங்கட்ராமன் சொல்வதைக் கேளுங்கள்… கல்கி ஆன்லைன் வெளியிட்ட Podcast வழியாக…

  1. வீடு மற்றும் சிற்றுந்து என்ற இரண்டும்தான், ஒரு மனிதன் தனது வாழ்நாளில் செய்யும் பெரிய செலவுகள். அவை இரண்டிலும், உங்களது தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளுங்கள். மகிழ்வுந்து என்பது மதிப்பு குறையும் ஒரு சொத்து. கண்டிப்பாக தேவை என்றால் மட்டுமே வாங்குங்கள். அதையும், பணம் சேமித்து வாங்குங்கள். வீடும் உங்களின் தேவையைச் சார்ந்து வாங்குங்கள். இரண்டு படுக்கை அறை வீடு போதுமெனில், அதையே வாங்குங்கள். பெரிய வீடு, பெரிய கடன் என்று மாட்டிக்கொள்ளாதீர்கள்.
  2. கூட்டு வட்டியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்: கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்க, எவ்வளவு சீக்கிரம் முதலீடு தொடங்குகிறோமா, அவ்வளவு நல்லது.

ஒருவர் ரூபாய், 10 லட்சம் அவரது 16 வயதில், 9% கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் எனில்,

16 வயது = 10 லட்சம்

24 வயது = 20 லட்சம்

32 வயது = 40 லட்சம்

40 வயது = 80 லட்சம்

48 வயது = 1 கோடியே 60 லட்சம்

56 வயது = 3 கோடியே 20 லட்சம்

64 வயது = 6 கோடியே 40 லட்சம்

72 வயது = 12 கோடியே 80 லட்சம்

எனவே, எவ்வளவு சீக்கிரம் கூட்டு வட்டியில் முதலீடு தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கரம் கூட்டு வட்டியின் பயன் நமக்கு அதிகமாக கிடைக்கும். இதனை, நன்கு பயன்படுத்திக்கொண்டு, பொது சேமநல நிதி (PPF), சுகன்யா சம்ருத்தி திட்டம் (SSY) போன்ற கூட்டுவட்டி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

  1. உங்களது எதிர்கால நிதிக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம்;
  • அதிகமாக சம்பாதிப்பது; திகமாக சம்பாதிப்பதற்கு, மற்றொரு வகையில் வருமானத்தை ஈட்ட முடியுமா என்று பாருங்கள். மனைவியும் வேலைக்கு செல்லலாம், மற்றொரு தொழிலை இரண்டாவது வருமானத்திற்கு தொடங்கலாம்.
  • சிக்கனமாக வாழ்வது;வ்வொரு செலவையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். அதிகமாக பணத்தை சேமிக்கப் பாருங்கள். அதிகமாக சம்பாதிப்பதை விடவும், இது எளிதானது.
  1. நாம் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு சேமித்து, முதலீடு செய்து, எதிர்காலத்திற்கு நிதியைத் திட்டமிடுகிறோம். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
  • நிதி ரீதியான சுதந்திரம்; ப்போது நீங்கள் நிதி ரீதியான சுதந்திரத்தை அடைகிறீர்களோ, அப்போது முதல், நீங்கள் நிம்மதியை உணரலாம். உங்களது கடைசிகாலம் வரையிலான தொகையை நீங்கள் அடையும் பட்சத்தில், வேலையில் உங்கள் மேலதிகாரி கொடுக்கும் அச்சுறுத்தல் களுக்கு பயப்பட வேண்டியதில்லை. இன்னும் சொல்லப் போனால், உங்களுக்கு பிடித்த தொழிலுக்கு கூட நீங்கள் மாறலாம்.
  • பாரம்பரியத்தை விட்டுச் செல்வது; நீங்கள் இந்த உலகில் ஏதாவது பாரம்பரியத்தை விட்டுச் செல்ல வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு சிறந்த அறக்கட்டளையைத் தொடங்கலாம். ஒரு சிறப்பான, சமுதாய பணியைச் செய்யலாம். திட்டமிட்டு நிதி பெருக்கிய பட்சத்தில், உங்களிடமுள்ள அதிக பணத்தினை நீங்கள் ஈகையின் மூலம், பாரம்பரியத்தை விட்டுச் செல்லலாம். உங்கள் குழந்தைகளுக்கும் கூட, ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுச்செல்லலாம்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com