ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிரபுராம்

"மன்னருக்கும் மகாராணிக்கும் ஏதாவது பிரச்சனையா? ஆளுக்கொரு வாள் எடுத்துக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு  இருக்காங்க."

 "அதெல்லாம்   ஒண்ணுமில்ல. அண்டை நாட்டு மன்னர் போருக்கு வருவதா ஓலை அனுப்பியிருக்கார். கொஞ்சமாவது பயிற்சி எடுத்துக்கணும்ல."

-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

—————————-

"மன்னரை புகழ்ந்து பாடுவதற்கு முன்பே சன்மானத்தை கேட்கிறாரே புலவர். ஏன்?"

" மன்னரின் கஜானா காலியாயிருப்பதை தெரிந்து கொண்டார் போல."

-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை

—————————-

"சின்ன வயசுல காப்பி அடிச்சு பரீட்சை எழுதுவானே பாலு… இப்போ என்ன பண்றான்?"

"தெரு முனையில ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.""

-ஆர். யோகமித்ரா, சென்னை

—————————-

"நாலு நாளுக்கு முன்னாடி காணாமல் போன கணவரை கண்டுபிடிச்சு தரச் சொல்லி இப்ப வந்து  கம்ப்ளைன்ட் தரீங்க?"

"பாத்திரம், பண்டம் போட்டது போட்டபடி கிடக்குது. அதுவும் இல்லாம அரைச்ச மாவு காலியாயிடுச்சு சார்!"

மணிவண்ணன், சங்கராபுரம்

—————————-

"டாக்டர் எனக்கு நிமோனியா வந்திருக்கு. நேர்ல வந்தா மருந்து குடுப்பீங்களா ?"

" ஏன்யா  இப்படி மார்க்கெட் போன வியாதியை எல்லாம்  கட்டிக்கிட்டு திரியறே? கொரோனாவா இருந்தா வா – இல்லேன்னா  வராதே !"

-ஆர்.சுந்தரராஜன்,  சிதம்பரம்.

—————————-

"என்ன உன் புருசன் எதுவுமே பேசமாட்டேங்கிறார்? "

"இப்ப அவரை சைலண்ட் மோடுல போட்டிருக்கேன் "

-ஆர்.சுந்தரராஜன்,  சிதம்பரம்

—————————-

மாப்பிள்ளை மெகா சீரியலை பார்த்துக் கெட்டுப் போயிட்டார்னு எப்படி சொல்றீங்க?

முதலிரவை பத்து நாள் கொண்டாடனும்னு சொல்றாரு!

-எம். ராஜதிலகா, அரவக்குறிஞ்சிப்பட்டி

—————————-

"சரியான தீனிப் பண்டாரம் சார் அவரு!"

"எப்படி சொல்றீங்க?"

"வீட்டுக்கு வழி கேட்டா, ஹோட்டல் பேரைத்தான் லேண்ட் மார்க்கா சொல்லுவாரு!"

  –வி. ரேவதி, தஞ்சை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com