– பார்ட்னர்ஷிப்.– உஷா ராம்கி.திருமணமாவதற்கு முன் மனதுக்குள் நிறைய டூயட் பாடல்கள் ஓடும்; திருமணத்துக்குப் பின், 'ஜாலியா தனியாவே இருந்திருக்கலாம், அவசரப்பட்டுட்டோமோ' என்று தோன்றும். யதார்த்தம் என்னவென்றால், பெர்ஃபெக்ட் திருமண வாழ்க்கை என்பது பொய்; சவால்களைத் தாண்டி வாழ்க்கையைப் பகிர்ந்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று யோசிப்பதே மெய்..இதோ, கெத்தாய் இணைந்து வாழ 10 டிப்ஸ்:.எல்லா விதத்திலும் ஒத்துப்போய், செம கெமிஸ்ட்ரி, செம வேவ்லெந்த் என்ற ரீதியில் வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, நம் வீட்டுக்கும் பொறுந்தும் தான். இருவரும் வேறு வேறு மாதிரி இருந்தால் வாழ்க்கையின் சுவை கூடும்.திருமண வாழ்க்கை என்பது இன்றைய தேதியில் வாழ்க்கையின் ஒரு அங்கம். இதில் எப்போதுமே இணைந்த பாதையில் செல்ல முயன்றால் மூச்சுத் திணறும், அடிதடியில் கூட முடியும். அவரவர்க்கென தனித்தனிப் பாதையும் அவசியம்; இணைந்த கனவுகள், லட்சியங்களும் அவசியம். தத்தம் நட்பு வட்டம், பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் என்ற தனிப்பாதைகள், ஒரே பாதையாக இணையும்போது பொலிவை சேர்க்கக் கூடியவை..என்றுமே மாறாத ஒரு விஷயம் பரஸ்பரம் அன்பு, காதல், நம்பிக்கை, நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருப்பது, மரியாதை போன்றவை. உடல், உள்ளம், உணர்ச்சி எல்லாம் இணைவது இந்த ஒர் அழகான உறவில். இதைப் போற்றுவது old fashioned ஆகாது.குடும்பத்தைத் தாண்டி மனைவிக்கு, குறிப்பாக முழு நேரக் குடும்பத் தலைவிக்கு, தனக்கென நேரமும், பிடித்ததை செய்ய வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுப்பது அவள் சுய மரியாதையைக் கூட்டுவதோடு, தனக்குப் பிடித்ததை செய்ய ஊக்குவிக்கும் கணவரை இன்னும் பிடிக்கச் செய்யும். வீட்டில் அடுத்தவரது பாத்திரத்தையும், பொறுப்பையும் பெருமையாக நினைத்து மதிப்பது, பந்தத்தை சூப்பராக பலப்படுத்தும்.இருவரும் வேலை பார்க்கும் நிலையில், நீயா-நானா போட்டி இல்லாமல், குடும்பப் பொறுப்புகளை பகிர்வதும், உத்தியோகத்தில் சிறக்க உதவுவதும் நட்புணர்ச்சியைக் காட்டும் விஷயங்கள். பிள்ளைகள் வளர வளர அவர்களையும் வீட்டுவேலையில் பங்கெடுக்கச் செய்வது நன்று. யார் சம்பாதிக்கிறோம் அல்லது யார் அதிகம் சம்பாதிக்கிறோம் என்பதைப் பேசுவதால் இந்த உறவு கொச்சைப்படும்.கணவன் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும், தனக்காக மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து கோபப்படக்கூடாது. இதெல்லாம் வற்புறுத்தி வரும் விஷயம் அல்ல. அவர் பெற்றோர், அவர் நட்பு, அவரது பொழுது போக்கு இவற்றை மதித்தால், தன்னை மதிக்கும் மனைவியை அவரும் மதிக்கத் தொடங்குவார்.குழந்தைகள் பெற ஆசைப்பட்டால், முதலில் 'என்ன ஆனாலும் பாத்துக்கலாம்' என்று இணைந்து முடிவெடுத்து பிள்ளைகளின் மகிழ்ச்சியான பிராயத்துக்கு பிரதான இடம் தரத் தயாராய் இருக்க வேண்டும். நாமே இணைந்து வாழ்வது நிச்சயமில்லை என்ற சூழ்னிலையில், இளம் பிஞ்சுகளை தண்டிக்கக் கூடாது.வயதான பெற்றோர் இரண்டாவது செட் குழந்தைகள் ஆகி விடுகிறார்கள். பொறுமையிருந்தால் இணைந்து வாழலாம்; இல்லையென்றால் அவர்கள் அமைதியாக வாழ வழி செய்து தரலாம். பெரியவர்கள் வயோதிகத்தில் உதாசீனப்படுத்தப் படுவதும் தவறு, பெற்றோருக்காக, திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதும் தவறு. இரண்டிலும் எல்லாருக்குமே மனச் சுமைதான்.கருத்து வேறுபாடுகள் வரும்போது, வாக்குவாதத்தில், எப்படியும் தான் ஜெயிக்க வேண்டும் என்று செயல்படாமல், என்ன செய்தால் வாழ்க்கையில் நாம் வெல்லாம் என்று யோசிப்பது அவர்கள் வாழ்க்கையையும் குழந்தைகள் வாழ்க்கையையும் காப்பாற்றும். மன்னிப்பு கேட்பது, நன்றி சொல்வது, வாய்விட்டுப் பாராட்டுவது, நல்ல குணங்களை மெச்சுவது, இவையெல்லாம் பேதங்கள் வரும்போது நல்ல தருணங்களை நினைவுபடுத்திக் கொள்ள உதவும்..நெகடிவ் உணர்ச்சிகள் உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும்போது, வார்த்தைகள் வலுக்காமல் இருக்க, இடத்தை விட்டு அகல்வது உத்தமம். சின்ன வாக்குவாதங்கள், மனவேற்றுமைகள் விவாகரத்து வரை செல்வது தவிர்க்கப்படலாம். வெட்டவெளி, சில்லென்ற காற்று, இதமான இசை என்று எதிலாவது மனதை செலுத்தி, மறுநாள் மனத்தெளிவு இருக்கும்போது பேச்சுவார்த்தையைத் தொடர்வது நல்ல பலனைத் தரும்.உலகம் பூராவும், அது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கிறோம்; அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து நிம்மதியைக் கெடுப்பதைப் பற்றியும் பேசுகிறோம் – அதுதான் தொழில்நுட்பம், இணையம். இது இல்லாத தனிமையான நேரத்தைத் தம்பதிகள் கொடுத்துக் கொள்ள முயற்சி எடுத்தாலே பந்தம் ஏற்படும். உண்ணும் நேரமும், படுக்கும் நேரமும் இந்த வில்லனை கொஞ்சம் தள்ளி வைப்பது பலன் தரும். குடும்பம் விரிவடைந்தாலும், திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும், நீங்கள் இருவர் மட்டும் அவ்வப்போது தனிமையான நேரம் அல்லது சின்ன விடுமுறை ஏற்படுத்திக் கொள்வது மஸ்ட். இது மனம் திறந்து பேசவும், புதிய திட்டங்கள் தீட்டவும் வகை செய்யும். இந்த நேரங்களில் செல்ஃபீ எடுப்பதிலும் வ்ளாக் போஸ்ட் செய்வதிலும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாம்..அன்பான குடும்பங்கள் = ஆரோக்கியமான சமுதாயம்.
– பார்ட்னர்ஷிப்.– உஷா ராம்கி.திருமணமாவதற்கு முன் மனதுக்குள் நிறைய டூயட் பாடல்கள் ஓடும்; திருமணத்துக்குப் பின், 'ஜாலியா தனியாவே இருந்திருக்கலாம், அவசரப்பட்டுட்டோமோ' என்று தோன்றும். யதார்த்தம் என்னவென்றால், பெர்ஃபெக்ட் திருமண வாழ்க்கை என்பது பொய்; சவால்களைத் தாண்டி வாழ்க்கையைப் பகிர்ந்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று யோசிப்பதே மெய்..இதோ, கெத்தாய் இணைந்து வாழ 10 டிப்ஸ்:.எல்லா விதத்திலும் ஒத்துப்போய், செம கெமிஸ்ட்ரி, செம வேவ்லெந்த் என்ற ரீதியில் வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, நம் வீட்டுக்கும் பொறுந்தும் தான். இருவரும் வேறு வேறு மாதிரி இருந்தால் வாழ்க்கையின் சுவை கூடும்.திருமண வாழ்க்கை என்பது இன்றைய தேதியில் வாழ்க்கையின் ஒரு அங்கம். இதில் எப்போதுமே இணைந்த பாதையில் செல்ல முயன்றால் மூச்சுத் திணறும், அடிதடியில் கூட முடியும். அவரவர்க்கென தனித்தனிப் பாதையும் அவசியம்; இணைந்த கனவுகள், லட்சியங்களும் அவசியம். தத்தம் நட்பு வட்டம், பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் என்ற தனிப்பாதைகள், ஒரே பாதையாக இணையும்போது பொலிவை சேர்க்கக் கூடியவை..என்றுமே மாறாத ஒரு விஷயம் பரஸ்பரம் அன்பு, காதல், நம்பிக்கை, நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருப்பது, மரியாதை போன்றவை. உடல், உள்ளம், உணர்ச்சி எல்லாம் இணைவது இந்த ஒர் அழகான உறவில். இதைப் போற்றுவது old fashioned ஆகாது.குடும்பத்தைத் தாண்டி மனைவிக்கு, குறிப்பாக முழு நேரக் குடும்பத் தலைவிக்கு, தனக்கென நேரமும், பிடித்ததை செய்ய வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுப்பது அவள் சுய மரியாதையைக் கூட்டுவதோடு, தனக்குப் பிடித்ததை செய்ய ஊக்குவிக்கும் கணவரை இன்னும் பிடிக்கச் செய்யும். வீட்டில் அடுத்தவரது பாத்திரத்தையும், பொறுப்பையும் பெருமையாக நினைத்து மதிப்பது, பந்தத்தை சூப்பராக பலப்படுத்தும்.இருவரும் வேலை பார்க்கும் நிலையில், நீயா-நானா போட்டி இல்லாமல், குடும்பப் பொறுப்புகளை பகிர்வதும், உத்தியோகத்தில் சிறக்க உதவுவதும் நட்புணர்ச்சியைக் காட்டும் விஷயங்கள். பிள்ளைகள் வளர வளர அவர்களையும் வீட்டுவேலையில் பங்கெடுக்கச் செய்வது நன்று. யார் சம்பாதிக்கிறோம் அல்லது யார் அதிகம் சம்பாதிக்கிறோம் என்பதைப் பேசுவதால் இந்த உறவு கொச்சைப்படும்.கணவன் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும், தனக்காக மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து கோபப்படக்கூடாது. இதெல்லாம் வற்புறுத்தி வரும் விஷயம் அல்ல. அவர் பெற்றோர், அவர் நட்பு, அவரது பொழுது போக்கு இவற்றை மதித்தால், தன்னை மதிக்கும் மனைவியை அவரும் மதிக்கத் தொடங்குவார்.குழந்தைகள் பெற ஆசைப்பட்டால், முதலில் 'என்ன ஆனாலும் பாத்துக்கலாம்' என்று இணைந்து முடிவெடுத்து பிள்ளைகளின் மகிழ்ச்சியான பிராயத்துக்கு பிரதான இடம் தரத் தயாராய் இருக்க வேண்டும். நாமே இணைந்து வாழ்வது நிச்சயமில்லை என்ற சூழ்னிலையில், இளம் பிஞ்சுகளை தண்டிக்கக் கூடாது.வயதான பெற்றோர் இரண்டாவது செட் குழந்தைகள் ஆகி விடுகிறார்கள். பொறுமையிருந்தால் இணைந்து வாழலாம்; இல்லையென்றால் அவர்கள் அமைதியாக வாழ வழி செய்து தரலாம். பெரியவர்கள் வயோதிகத்தில் உதாசீனப்படுத்தப் படுவதும் தவறு, பெற்றோருக்காக, திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதும் தவறு. இரண்டிலும் எல்லாருக்குமே மனச் சுமைதான்.கருத்து வேறுபாடுகள் வரும்போது, வாக்குவாதத்தில், எப்படியும் தான் ஜெயிக்க வேண்டும் என்று செயல்படாமல், என்ன செய்தால் வாழ்க்கையில் நாம் வெல்லாம் என்று யோசிப்பது அவர்கள் வாழ்க்கையையும் குழந்தைகள் வாழ்க்கையையும் காப்பாற்றும். மன்னிப்பு கேட்பது, நன்றி சொல்வது, வாய்விட்டுப் பாராட்டுவது, நல்ல குணங்களை மெச்சுவது, இவையெல்லாம் பேதங்கள் வரும்போது நல்ல தருணங்களை நினைவுபடுத்திக் கொள்ள உதவும்..நெகடிவ் உணர்ச்சிகள் உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும்போது, வார்த்தைகள் வலுக்காமல் இருக்க, இடத்தை விட்டு அகல்வது உத்தமம். சின்ன வாக்குவாதங்கள், மனவேற்றுமைகள் விவாகரத்து வரை செல்வது தவிர்க்கப்படலாம். வெட்டவெளி, சில்லென்ற காற்று, இதமான இசை என்று எதிலாவது மனதை செலுத்தி, மறுநாள் மனத்தெளிவு இருக்கும்போது பேச்சுவார்த்தையைத் தொடர்வது நல்ல பலனைத் தரும்.உலகம் பூராவும், அது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கிறோம்; அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து நிம்மதியைக் கெடுப்பதைப் பற்றியும் பேசுகிறோம் – அதுதான் தொழில்நுட்பம், இணையம். இது இல்லாத தனிமையான நேரத்தைத் தம்பதிகள் கொடுத்துக் கொள்ள முயற்சி எடுத்தாலே பந்தம் ஏற்படும். உண்ணும் நேரமும், படுக்கும் நேரமும் இந்த வில்லனை கொஞ்சம் தள்ளி வைப்பது பலன் தரும். குடும்பம் விரிவடைந்தாலும், திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும், நீங்கள் இருவர் மட்டும் அவ்வப்போது தனிமையான நேரம் அல்லது சின்ன விடுமுறை ஏற்படுத்திக் கொள்வது மஸ்ட். இது மனம் திறந்து பேசவும், புதிய திட்டங்கள் தீட்டவும் வகை செய்யும். இந்த நேரங்களில் செல்ஃபீ எடுப்பதிலும் வ்ளாக் போஸ்ட் செய்வதிலும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாம்..அன்பான குடும்பங்கள் = ஆரோக்கியமான சமுதாயம்.