நாமக்கல் எம்.வேலு.ஓவியம்: பிள்ளை.மூன்று மணி இருக்கும், ஆபிஸ் நண்பர் ஒருவரை போய் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தனர் இருவரும். பிரசாத் மொபெட்டை ஒட்ட, அவனது இடுப்பை வளைத்துக்கொண்டு பின்னால் உட்கார்ந்திருந்தாள் ஜானு. வாட்டர் டேங்க் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருப்பதைப் பார்த்துவிட்டாள் ஜானு..அவசரமாய், "ஏங்க… ஏங்க… வண்டியை நிறுத்துங்க. பிள்ளையார் கோயில் இருக்கு, போயிட்டு வந்துடலாம்" என்று முதுகில் தட்டினாள்..சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான் பிரசாத். ஒரு காலை ஊன்றி நின்றுக்கொண்டு அவளை இறக்கிவிட்டான். இறங்கி சேலையை சரி செய்துகொண்டு நான்கு எட்டு வைத்தவள், சட்டென திரும்பி, "இந்தாங்க…" என்று அவனைக் கூப்பிட்டாள். அவன் இன்னும் ஒரு காலை ஊன்றியபடியே திரும்பிப் பார்த்தான்.."வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்களேன்…" என்றாள். டாட்டா காட்டுவதுபோல காட்டிக்கொண்டு, "என்னை ஏன் கூப்பிடறே, நீ போய் சட்டுன்னு கும்பிட்டிட்டு வா…" என்றான் புன்னகைத்தபடி.."சரி… ஒரு அம்பது ரூபா கொடுங்க…" என்று அவனிடம் கை நீட்டினாள். அன்புடன் முறைத்துக்கொண்டே பணத்தை எடுத்து நீட்டினான்..இவன் எப்போதுமே இப்படித்தான். கோயிலுக்கு வரமாட்டான். ஆனால் யாராவது கோயிலுக்கு நன்கொடை கேட்டால் தயங்கியபடியே கொடுத்து விடுவான். வீட்டிலும் விபூதித் தட்டை நீட்டினால், கும்பிட மாட்டான். வேறு வழியின்றி, அவளாகவே விபூதியை இட்டு விடுவாள்..கோயில் திறக்கவில்லை. கும்பலும் இல்லை. கிரில் கேட்டுக்கு பின்னால் பிள்ளையார் அலங்காரத்தில் உட்கார்ந்திருந்தார். தோப்புக்கரணம் போட்டுவிட்டு, கோயிலைச் சுற்றி வந்தாள். அவன் ரோடில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான். வாங்களேன் என்பது போல ஒரு தடவை சைகை செய்தாள். பதிலுக்கு நீ கும்பிட்டுவிட்டு வா என்பது போல் அவனும் சைகை செய்தான். மூன்றாவது முறை சுற்றிவந்தவள் கொடிமரத்திற்கு கீழே விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்து விரலிடுக்கில் வைத்திருந்த பணத்தை உண்டியலில் போட்டாள். அது உள்ளே போகாமல் மாட்டிக்கொண்டு நின்றிருந்தது. விரல்களை உள்ளே விட்டு அதைத் தள்ளினாள். நோட்டு உள்ளே விழுந்தது. ஆனால், விரல்களை வெளியே எடுக்க முடியவில்லை..பதறிக்கொண்டு ரோடைப்பார்த்தாள், இவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பிரசாத். "ஏங்க விரல் மாட்டிக்கிச்சுங்க. ஓடி வாங்க" என்று சத்தம் போட்டாள். சைகையும் செய்தாள். ஓடி வந்தவன் முகத்தை சுளித்தபடி விரல்களை எடுத்து விட்டான்.."உனக்கு இது தேவையா. விரலை உள்ளே விடாம காணிக்கையைப் போட்டிருக்கக் கூடாதா…" என்று அன்புடன் கடிந்துக்கொண்டான்.."அப்புறம், உங்களை நான் எப்படித்தான் கோயிலுக்கு வரவைக்கிறது…" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள். "என்ன சொன்னே…" என்றான். "இல்லே வந்தது வந்தீங்க, கன்னத்துல போட்டுக்கோங்க…" என்றாள் புன்னகைத்தபடி.
நாமக்கல் எம்.வேலு.ஓவியம்: பிள்ளை.மூன்று மணி இருக்கும், ஆபிஸ் நண்பர் ஒருவரை போய் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தனர் இருவரும். பிரசாத் மொபெட்டை ஒட்ட, அவனது இடுப்பை வளைத்துக்கொண்டு பின்னால் உட்கார்ந்திருந்தாள் ஜானு. வாட்டர் டேங்க் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருப்பதைப் பார்த்துவிட்டாள் ஜானு..அவசரமாய், "ஏங்க… ஏங்க… வண்டியை நிறுத்துங்க. பிள்ளையார் கோயில் இருக்கு, போயிட்டு வந்துடலாம்" என்று முதுகில் தட்டினாள்..சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான் பிரசாத். ஒரு காலை ஊன்றி நின்றுக்கொண்டு அவளை இறக்கிவிட்டான். இறங்கி சேலையை சரி செய்துகொண்டு நான்கு எட்டு வைத்தவள், சட்டென திரும்பி, "இந்தாங்க…" என்று அவனைக் கூப்பிட்டாள். அவன் இன்னும் ஒரு காலை ஊன்றியபடியே திரும்பிப் பார்த்தான்.."வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்களேன்…" என்றாள். டாட்டா காட்டுவதுபோல காட்டிக்கொண்டு, "என்னை ஏன் கூப்பிடறே, நீ போய் சட்டுன்னு கும்பிட்டிட்டு வா…" என்றான் புன்னகைத்தபடி.."சரி… ஒரு அம்பது ரூபா கொடுங்க…" என்று அவனிடம் கை நீட்டினாள். அன்புடன் முறைத்துக்கொண்டே பணத்தை எடுத்து நீட்டினான்..இவன் எப்போதுமே இப்படித்தான். கோயிலுக்கு வரமாட்டான். ஆனால் யாராவது கோயிலுக்கு நன்கொடை கேட்டால் தயங்கியபடியே கொடுத்து விடுவான். வீட்டிலும் விபூதித் தட்டை நீட்டினால், கும்பிட மாட்டான். வேறு வழியின்றி, அவளாகவே விபூதியை இட்டு விடுவாள்..கோயில் திறக்கவில்லை. கும்பலும் இல்லை. கிரில் கேட்டுக்கு பின்னால் பிள்ளையார் அலங்காரத்தில் உட்கார்ந்திருந்தார். தோப்புக்கரணம் போட்டுவிட்டு, கோயிலைச் சுற்றி வந்தாள். அவன் ரோடில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான். வாங்களேன் என்பது போல ஒரு தடவை சைகை செய்தாள். பதிலுக்கு நீ கும்பிட்டுவிட்டு வா என்பது போல் அவனும் சைகை செய்தான். மூன்றாவது முறை சுற்றிவந்தவள் கொடிமரத்திற்கு கீழே விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்து விரலிடுக்கில் வைத்திருந்த பணத்தை உண்டியலில் போட்டாள். அது உள்ளே போகாமல் மாட்டிக்கொண்டு நின்றிருந்தது. விரல்களை உள்ளே விட்டு அதைத் தள்ளினாள். நோட்டு உள்ளே விழுந்தது. ஆனால், விரல்களை வெளியே எடுக்க முடியவில்லை..பதறிக்கொண்டு ரோடைப்பார்த்தாள், இவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பிரசாத். "ஏங்க விரல் மாட்டிக்கிச்சுங்க. ஓடி வாங்க" என்று சத்தம் போட்டாள். சைகையும் செய்தாள். ஓடி வந்தவன் முகத்தை சுளித்தபடி விரல்களை எடுத்து விட்டான்.."உனக்கு இது தேவையா. விரலை உள்ளே விடாம காணிக்கையைப் போட்டிருக்கக் கூடாதா…" என்று அன்புடன் கடிந்துக்கொண்டான்.."அப்புறம், உங்களை நான் எப்படித்தான் கோயிலுக்கு வரவைக்கிறது…" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள். "என்ன சொன்னே…" என்றான். "இல்லே வந்தது வந்தீங்க, கன்னத்துல போட்டுக்கோங்க…" என்றாள் புன்னகைத்தபடி.