காதலர் தினம் – பிப் – 14

காதலர் தினம் – பிப் – 14
Published on
சுவையான தகவல்கள்.
  • காதலர் தினத்தின் அடையாளம் வில்-அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர் கியூபிட்.
  • உலகிலேயே மிக நீண்ட காதல் கடிதம் 1875ஆம் ஆண்டு 'மார்செல் டீ லெக்லூர்' என்ற ஃப்ரெஞ்ச் ஓவியர் தன் காதலிக்கு எழுதியதுதான். அந்தக் கடிதத்தில் 56,25,000 சொற்கள் இருந்தன.
  • காதல் தியாகம் நிறைந்தது என்பதால் காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.
  • 1415 ஆம் ஆண்டு இங்கிலாந்தி்ன் 'டியூக் ஆப் ஆர்லீன்ஸ்,' பிரான்ஸ் நாட்டிலிருந்த தன் மனைவிக்கு தானே வாழ்த்து அட்டை தயார் செய்து அதில் ஒரு காதல் கவிதையை எழுதி அனுப்பினார். இதுதான் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை.
  • காதலர் தினத்தன்று காதலர்கள் பரிசளித்து மகிழ்வார்கள். வேல்ஸ் நாட்டில் மரத்தாலான காதல் கரண்டி சிறப்பு. அதில் பூட்டும் சாவியும் செதுக்கப்பட்டு இருக்கும். சில நாடுகளில் கைக்குட்டை பரிசளித்துக் கொள்வர். மேலை நாடுகளில் விலையுயர்ந்த மதுபுட்டிகளைப் பரிசளிப்பது உண்டு.
புகழ் பெற்ற காதல் மொழிகள்!

காதல் ஒரு தீப்பந்தம். அது இ்ல்லையெனில் உலகம் அனணந்தே போய்விடும். – பாரதியார்
காதலெனும் நீருற்று என்றும் மாசு படியாதது, பரிசுத்தமானது.
– ஷேக்ஸ்பியர் 

காதல் நான்கு கண்கள் காணும் ஒரே கனவு – மு. மேத்தா
போர் வாளின்றி தன் சாம்ராஜ்யத்தை ஆள்வது காதல்
– கவிஞர் கண்ணதாசன்
காதல் பேச முற்பட்டுவிட்டால் ஊமைகூட புரிந்துகொள்வான்
– ஸ்விப்ட்
காதல் அடிமேல் அடிவைத்து மெல்ல வருகிறது. போகும்போது கதவை பலமாக சாத்திவிட்டுச் செல்கிறது.
– ராபர்ட் லெம்ப்கே
காதல் அனைத்தையும் படைத்திடும் ஆற்றல் மிக்கது. எல்லோரும் விரும்புவது. அழகானது.
– பைரன்
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

கவிஞரின் காதல்!

கார்ல் வின்ஹெல் என்பவர் ஜெர்மன் ராஜதந்திரி. அவர் கவிஞரும்கூட. இவர் தனது கவிதையாற்றலை காதல் மனைவியின் புகழ் பாடவே பயன்படுத்தினார். தினம் நூறு வரி கொண்ட கவிதையை தன் மனைவி மீது இயற்றி வந்தார். அவருக்கு ஆறு வருடங்கள் முன்னதாக மனைவி இறந்துவிட்டாள். ஆயினும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. வழக்கப்படி நூறு வரி எழுதி கல்லறை மீது போட்டு வந்தார். மனைவி மீது அவர் இப்படி கவிதை எழுதியது எவ்வளவு காலம் தெரியுமா? 44 வருடங்கள்.

இப்படியும் ஒரு நம்பிக்கை!

த்தாலியில் திருமணம் ஆகாத இளம்பெண்கள் காதலர் தினம் அன்று சூரியன் உதிக்கும் முன் எழுந்து ஜன்னலருகில் நின்று வெளியே பார்ப்பர். அவர்கள் சாலையில் முதலில் பார்க்கும் ஆண்மகன் அவர்களின் மணமகன் ஆவதுடன் திருமணமும் ஒரு ஆண்டில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் அங்கு உண்டு.
-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com