கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– நிலா, திருச்சி

அஃறினண அறிவு
ண்டை போட்டு
எங்களிடம் பேச மறுக்கும்
பக்கத்து வீட்டுக்காரரின்
மரம் எங்கள் வீட்டில்
பூக்கள் தூவுகிறது.
………………………………………………….

அறியாமை

கோயில் மரங்களில்
ஆடும் சிறு மரத் தொட்டில்கள்
அறிவதில்லை!
குழந்தையுடன் ஆடும்
அனாதை ஆசிரம
தொட்டில்களை!
………………………………………………….

முன்பே

ஞாயிறு
முழு ஊரடங்கால்
சனிக்கிழமையே
மரணம்
வந்துவிடுகிறது!
பிராய்லர் கோழிக்கு.
………………………………………………….

பிரசாதம்

குழந்தைகள்
சாப்பிடும்போது
சிந்தும் பால்சோற்று
பருக்கைகள்
பிரசாதமாகிவிடுகிறது
எறும்புகளுக்கு!
………………………………………………….

சூதாட்டம்

வீன சகுனிகள்
தன்னைத் தானே
தோற்கடித்துக் கொள்கிறார்கள்
ஆன் லைன்
ரம்மி விளையாடி…!
………………………………………………….

குழந்தை

ரு கரை அன்னையாக
மறுக் கரை தந்தையாக
நடுவில் நடை போடுகிறது
நதிக்குழந்தை!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com