பட்டிக்காடு பட்டணமாச்சு!

பட்டிக்காடு பட்டணமாச்சு!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
கவிதை!

– நிவேதிதா, சென்னை
ஓவியம்: தமிழ்

பட்டிணம்தான் வந்து நானும் பத்து
வருஷம் ஆகிப்போச்சே!_  ஆனா
பாழாப்போன  மனசு  மட்டும்
பட்டிக்காட்ட தேடிப்  போச்சே!

கேப்பங்கூழு  ருசிக்கு ஏங்கி என்
நாக்கு  செத்துப் போச்சே!_  திண்ண
கத  நூறு கேக்க பலமைலு
தூரம்  இதோ பயணமாச்சே!

வயக்காடு கடக்கையிலே ஏறு
மாடும்  காணலையே!_  டிராக்டர்
வண்டி  பாக்கையில  சீவனில்லா
தொழிற்சால  போல தோணுதலே!

ஆத்தோரம்  போகையில தம்பட்டம்
தண்ணிகுடமும்  காணலையே!_  குப்பகுளம்
பன்னிக்கூட்டம் பாக்கையில
உசுரே நின்னு போகுதலே!

மஞ்சதாவணி  மல்லி  மணமும்
மனச விட்டு நீங்கலேயே!_  சுடிதாரு
நயிட்டி  பண்ணும்  அட்டகாசம்
ரத்த  கொதிப்பு  கூடுதலே !

வீரனாரு  கதசொல்ல  அப்பத்தா
திண்ண  பக்கம்  காணலயே!_  அவுகக்கூட
மர்மதேசம்  தேடி  அந்த  பெட்டி
முன்ன தவமா கெடக்குதலே!

எத எதயோ தேடி நானும்
ஊருபக்கம் வந்தேனலே! கொட்டிகிடந்த
அம்புட்டு அழகயும்  பாழாப்போன
நாகரீகம் களவாடி போனதுலே!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com